Tuesday, May 19, 2015

மாதலி கண்ட வருணலோகம்! - உத்யோக பர்வம் பகுதி 98

Varunaloka that matali saw! | Udyoga Parva - Section 98 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –27)

பதிவின் சுருக்கம் : இந்திரனின் தேரோட்டி மாதலி தனது மகள் குணகேசிக்கு மணமகன் தேட நாகலோகம் சென்றுகொண்டிருந்த போது,  மாதலியை நாரதர் வருணனிடம் அழைத்துச் செல்வது; மாதலிக்கு நாரதர் வருணலோகத்தைச் சுற்றிக் காட்டி விளக்குவது; காண்டீவத்தின் முன்னோடியான ஒரு வில்லை நாரதர் மாதலிக்குக் காட்டியது...

{முனிவர்} கண்வர் {துரியோதனனிடம்} சொன்னார், "மாதலி தனது வழியில் சென்று கொண்டிருந்தபோது, வருணனை (நீர் நிலைகளின் தேவனைச்) சந்திக்கச் சென்று கொண்டிருந்த பெரும் முனிவரான நாரதரைக் கண்டான். மாதலியைக் கண்ட நாரதர், "எங்கே செல்கிறாய்? ஓ! தேரோட்டி {சூதா} {மாதலி}, சொந்த காரியமாகச் செல்கிறாயா? அல்லது இந்த உனது பயணம் சதக்கிரதுவின் {இந்திரனின்} கட்டளையா?" என்று கேட்டார்.

தன் {தான் விரும்பும்} இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நாரதரால், வழியில் இப்படிக் கேட்கப்பட்ட மாதலி, தனது பயண நோக்கத்தை அவரிடம் {நாரதரிடம்} முறையாகச் சொன்னான். அனைத்தையும் அறிந்து கொண்ட அந்த முனிவர் {நாரதர்}, மாதலியிடம், "நாம் இருவரும் சேர்ந்தே செல்லலாம். என்னைப் பொறுத்தவரை, விண்ணுலகில் இருந்து வந்த நான் நீர்நிலைகளின் தலைவனை {வருணனைத்} தேடி பாதாள உலகத்திற்குச் செல்கிறேன். நான் உனக்கு அனைத்தையும் சொல்கிறேன். ஓ! மாதலி, நன்கு தேடிய பிறகு, நாம் மணமகனைத் தேர்ந்தெடுக்கலாம்" என்றார்.


பிறகு பாதாள உலகத்திற்குள் நுழைந்த ஒப்பற்ற இணையான மாதலியும், நாரதரும், அங்கே லோகபாலகனான நீர்நிலைகளின் தலைவனைக் {வருணனைக்} கண்டனர். அங்கே தெய்வீக முனிவருக்குரிய வழிபாட்டை நாரதர் பெற்றார், பெரும் இந்திரனுக்கு நிகரான வழிபாட்டை மாதலி பெற்றான். காரியத்தில் நிபுணர்களான அந்த இருவரும், தாங்கள் வந்த நோக்கத்தைத் தெரிவித்து, அவனிடம் {வருணனிடம்} விடைபெற்றுக் கொண்டு, நாகர்களின் உலகத்தினுள் உலவத் தொடங்கினர். பாதாள உலகத்தில் வசிப்பவர்கள் அனைவரையும் அறிந்த நாரதர், தன் தோழனுக்கு {மாதலிக்கு} நாகலோகவாசிகள் குறித்து விரிவாக விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.

நாரதர் {மாதலியிடம்}, "ஓ! தேரோட்டி {சூதா} {மாதலி}, மகன்களாலும், பேரப்பிள்ளைகளாலும் சூழப்பட்டிருந்த வருணனை நீ கண்டாய். நீர்நிலைகளின் தலைவனுடைய {வருணனின்} ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பார். இது சுற்றிலும், இனிமை நிறைந்ததாக, செல்வங்கள் நிறைந்ததாக இருக்கிறது. கடலின் தலைவனான வருணனின் மகன் புஷ்கரன், தனது நடத்தையாலும், மனநிலையாலும், புனிதத்தாலும் தனித்துவமானவன் ஆவான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய அந்தப் புஷ்கரன் {வருணனின் மகன்}, வருணனின் பெரும் விருப்பத்திற்குரிய மகனும், பெரும் அழகுடையவனும், காண்பதற்கு இனிமையானவனும் ஆவான்.

சோமனின் மகள் {சந்திரனின்மகள்} அவனையே தனது கணவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஸ்ரீக்கு {லட்சுமிக்கு} இணையான அழகுடையவளும், இரண்டாவது ஸ்ரீயைப் போன்றவளுமான சோமனின் அந்த மகள், ஜோதஸ்நாகாலி {ஜ்யோதஸ்நாகாலி} என்ற பெயரால் அறியப்படுகிறாள். உண்மையில், முன்னர் ஒரு முறை அவள் {ஜோதஸ்நாகாலி}, அதிதியின் மகன்களில் முதன்மையானவனான அவர்களில் மூத்தவனைத் {தத்ரி} [1] தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தேவர்கள் தலைவனின் தோழா {மாதலியே}, வருணி [2] என்றழைக்கப்படும் மது நிறைந்ததும், முழுக்க முழுக்கத் தங்கத்தாலானதுமான இந்த வசிப்பிடத்தைப் பார். உண்மையில் அந்த மதுவை அடைந்த பிறகுதான், தேவர்கள் தங்கள் தெய்வத்தன்மையை அடைந்தனர்.

[1] http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section65.html
[2] வருணி அல்லது வருணனி என்பது வருணனின் மனைவியாவாள், அமுதத்துக்காகப் பாற்கடல் கடையப்படுகையில் வெளிவந்த இவளை வருணன் பெற்றுக் கொண்டான். இவள் அமுதத்தைப் பிரதிபலிக்கிறாள். எல்லை கடந்த ஞானத்தைச் செயல்படுத்துபவள் இவள் {வருணி} என்றும் கூறப்படுகிறது. இவள் மதம் என்றும் சுரா என்றும் அழைக்கப்படுகிறாள்.

நீ காணும் பல வகைகளிலான இந்தச் சுடர்மிகும் ஆயுதங்கள் அனைத்தும், ஓ! மாதலி, தங்கள் அரசுரிமையை இழந்த தைத்தியர்களுக்குச் சொந்தமானதே. இந்த ஆயுதங்கள் சிதைவடையாதனவும், எதிரியின் மீது ஏவப்பபட்டால் மீண்டும் ஏவியவர் கரங்களுக்கே எப்போதும் திரும்புவனவுமாகும். போரில் தேவர்களுக்குக் கிடைத்த செல்வங்களான இவற்றை, எதிரிகள் மீது பயன்படுத்த கணிசமான மன ஆற்றல் தேவை. பழங்காலத்தில் பல்வேறு வகைகளிலான தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட ராட்சசர்கள் மற்றும் தைத்தியர்கள் ஆகியோரின் {அசுரர்களின்} பல குலங்கள் இங்கே வசித்திருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் தேவர்களால் வீழ்த்தப்பட்டனர். அங்கே, சுடர்மிகும் தழல்களைக் கொண்ட அந்த நெருப்பையும் {அக்னியையும்}, கடும்வெப்பத்தால் உண்டான பளபளக்கும் பிரகாசத்தால் சூழப்பட்டிருக்கும் *விஷ்ணுவின் சக்கரத்தையும் பார்.

உலகத்தின் அழிவுக்காக உருவாக்கப்பட்டதும், சிக்கலான முடிச்சுகள் நிறைந்ததுமான வில் [2] அங்கே கிடப்பதைப் பார். எப்போதும் தேவர்களின் பெரிய கண்காணிப்பினால் அது {அந்த வில்} பாதுகாக்கப்படுகிறது. அர்ஜுனன் தாங்கியிருக்கும் வில்லின் பெயர் {காண்டீவம் என்ற பெயர்} இதில் இருந்தே பெறப்பட்டது. நூறாயிரம் {ஒரு லட்சம்} விற்களின் பலத்தைக் கொண்ட அது, போர்க்காலத்தில் வகிக்கும் சக்தி, வர்ணிக்க இயலாத பெருமை உடையதாகும். தண்டிக்கத்தகுந்த அனைத்துத் தீயவர்களையும், ராட்சச இயல்பு கொண்ட மன்னர்களையும் அது தண்டிக்கும். இந்தக் கடுமையான *வில் {காண்டீவம்} வேதங்களை உச்சரிப்பவரான பிரம்மனால் முதலில் படைக்கப்பட்டது. பெரும் ஆசானான சுக்ரன் {சுக்ராச்சாரியார்}, மன்னர்கள் அனைவருக்கும் இது பயங்கரமானதாகும் என்று சொல்லியிருக்கிறார். பெரும் சக்தியுடைய இது {காண்டீவம்}, நீர் நிலைகளின் தலைவனுடைய {வருணனின்} மகன்களால் தாங்கப்படுகிறது.

[2] காண்டீ என்கிற கடக மிருகத்தின் கொம்பினால் செய்யப்பட்ட வில் என்று ஒரு பதிப்புக் கூறுகிறது.

வருணனின் குடை அந்தக் குடை அறைக்குள் இருப்பதை அங்கே பார். அது மேகங்களைப் போன்ற புத்துணர்வூட்டும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கிறது. அந்தக் குடையில் இருந்து விழும் நீர், சந்திரனைப் போலத் தூய்மையாக இருந்தாலும், யாரும் காணமுடியாத அளவுக்கு இருளால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஓ! மாதலி, இந்த இடங்களில், எண்ணிலடங்கா அற்புதங்களைக் காணலாம். எனினும், இங்கே மேலும் காலத்தைச் செலவிட்டால், உன் காரியத்துக்குப் பாதிப்பேற்படும். எனவே, நாம் இந்த இடைத்தை விட்டு விரைந்து செல்வோம்" என்றார் {நாரதர்}.
..........................................................................................................................................................

 *விஷ்ணுவின் சக்கரத்தையும்; *வில் {காண்டீவம்} 
மேலும் விபரங்களுக்கு:
ஆயுதங்கள் கேட்ட அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 226
கிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்