Wednesday, May 27, 2015

யயாதியைச் சந்தித்த கருடனும் காலவரும்! - உத்யோக பர்வம் பகுதி 114

Garuda and Galava met Yayati | Udyoga Parva - Section 114 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –43)

பதிவின் சுருக்கம் : கருடன் தனது நண்பனான யயாதி குறித்துக் காலவரிடம் சொன்னது; காலவரை  யயாதியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து, காலவர் கேட்கும் குதிரைகளைத் தானமாகக் கொடுக்கும்படி யயாதியிடம் கேட்டது....

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு, சிறகு படைத்த உயிரினங்களில் முதன்மையானவனான கருடன், உற்சாகமற்றிருந்த காலவரிடம், "பூமிக்கடியில் அக்னியினால் உண்டாக்கப்பட்டு, வாயுவினால் சோதிக்கப்படுவதாலும், பூமியே ஹிரண்மயமாயிருக்கிறது என்று சொல்லப்படுவதாலும், அந்தச் செல்வம் {தங்கம்} ஹிரண்யம் என்று அழைக்கப்படுகிறது. அந்தச் செல்வமே {தங்கமே} உலகத்தைத் தாங்கி வாழ்வை நிலைக்க வைக்கிறது. எனவே, அது தனம் என்று அழைக்கப்படுகிறது.


இத்தனை சேவைகளுக்காகவே அந்தத் தனம் {செல்வம்}, ஆதியில் இருந்து மூவுலகிலும் நிலைத்திருக்கிறது. குபேரனின் கையிருப்பை அதிகரிக்கும்பொருட்டு, பூரட்டாதியும் உத்திரட்டாதியும் கூடிய வெள்ளிக்கிழமையில் அக்னி தனது விருப்பத்தின் ஆணையால் செல்வத்தை உண்டாக்கி மனிதர்களிடம் அளித்தான். பூமிக்கடியில் இருக்கும் அந்தச் செல்வம் அஜைகபாதர்கள் மற்றும் அஹிர்ப்புதனியர் என்று அழைக்கப்படும் தேவர்களாலும், குபேரனாலும் காக்கப்படுகிறது. எனவே, ஓ! அந்தணர்களில் காளையே {காலவா}, அடைவதற்கு அரிதான அது மிக அரிதாகவே அடையப்படுகிறது. செல்வமில்லாமல், நீ வாக்குறுதியளித்திருக்கும் குதிரைகளை அடைவது இயலாது. எனவே, அரச முனிவர்களின் குலத்தில் பிறந்திருப்பவனும், தனது குடிமக்களை ஒடுக்காதவனுமான ஏதாவது ஒரு மன்னனிடம் {செல்வத்தை} இரந்து கேட்டு நமது நோக்கத்தில் வெற்றியடைவாயாக.

சந்திர குலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் எனது நண்பனாக இருக்கிறான். நாம் அவனிடம் செல்வோம். ஏனெனில், பூமியில் உள்ளோர் அனைவரை விடவும், அவனே பெரும் செல்வத்தைக் கொண்டிருக்கிறான். அந்த அரச முனி யயாதி என்ற பெயரால் அறியப்படுகிறான். அவன் நகுஷனின் மகனுமாவான். அவனது ஆற்றல் கலங்கடிக்கப்பட முடியாததாக இருக்கிறது. நேரடியாக நீ கேட்டு, நானும் அதை நிர்பந்தித்தால், நாம் கேட்பதை அவன் {யயாதி} கொடுப்பான். ஏனெனில், பொக்கிஷத்தலைவனான குபேரன் கொண்டுள்ளதற்கு நிகரான அளவு அபரிமிதமான செல்வத்தை அவன் {யயாதி} கொண்டிருக்கிறான். ஓ! கற்றவனே, இப்படியே கொடையை ஏற்று, உனது ஆசானின் கடனை அடைப்பாயாக" என்றான் {கருடன்}.

இப்படியே பேசிக்கொண்டு, என்ன செய்யப்பட வேண்டும் என்பதைச் சிந்தித்த கருடனும் காலவனும், பிரதிஷ்டானம் என்று அழைக்கப்படும் தனது தலைநகரில் இருந்த மன்னன் யயாதியிடம் சேர்ந்தே சென்றனர். விருந்தோம்பலுடன் அவர்களை வரவேற்ற அந்த மன்னன் {யயாதி} அவர்களுக்கு அற்புதமான ஆர்கியாவையும், அவர்களது பாதங்களைக் கழுவி கொள்ள நீரையும் கொடுத்தான். பிறகு அந்த மன்னன் அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டான்.

அதன்பேரில் கருடன், "ஓ! நகுஷனின் மகனே {யயாதி}, காலவன் என்று அழைக்கப்படும் இந்தத் தவக்கடல் எனது நண்பனாவான். ஓ! ஏகாதிபதி, இவன் {காலவன்} விஸ்வாமித்ரரிடம் பல்லாயிரம் வருடங்களாகச் சீடனாக இருந்தான். இந்தப் புனித அந்தணன் {காலவன்}, தான் செல்ல விரும்பும் இடத்திற்கு விடைகொடுத்து விஸ்வாமித்ரரால் அனுப்பப்பட்ட போதும், அந்நேரத்தில் தனது ஆசானிடம், தனது குருதட்சணையைக் கொடுத்துவிட்டுச் செல்வதாகச் சொன்னான்.

இவனது  ஏழ்மையை அறிந்து கொண்ட விஸ்வாமித்ரர் இவனிடம் {காலவனிடம்} எதையும் கேட்கவில்லை. ஆனால் இந்த அந்தணன் {காலவன்} மீண்டும் மீண்டும் கல்விக் கட்டணத்தைக் குறித்துச் சொன்னதும், சற்றே கோபப்பட்ட அந்த ஆசான் {விஸ்வாமித்திரர்}, "நல்ல வம்சாவளியைக் கொண்டதும், சந்திரப் பிரகாசம் கொண்டதும், ஒரு காதில் மட்டும் கருப்பு நிறம் கொண்டதுமான எண்ணூறு {800} குதிரைகளை எனக்குக் கொடு. ஓ! காலவா, நீ உனது ஆசானுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், இதையே நீ கொடுப்பாயாக", என்று சொல்லிவிட்டார். இப்படியே தவத்தைச் செல்வமாகக் கொண்ட விசுவாமித்ரர் இவனிடம் கோபத்தில் சொல்லிவிட்டார்.

அதனால், இந்த அந்தணர்களில் காளை {காலவன்} பெரும் துயரத்தில் இருக்கிறான். தனது ஆசானின் {விஸ்வாமித்ரரின்} ஆணையை நிறைவேற்ற முடியாததால், இப்போது உனது பாதுகாப்பை நாடி வந்திருக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {யயாதி}, அவற்றை உன்னிடம் இருந்து பிச்சையாகப் பெற்று, மீண்டும் மகிழ்ச்சியை அடைந்து, தனது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய கடனை அடைத்து, தன்னை இவன் தவநோன்புகளுக்கு அர்ப்பணித்துக் கொள்வான். 

எனவே, அரச முனியாக இருக்கும் உனக்கு, தான் கொண்டிருக்கும் தவச் செல்வத்தில் ஒரு பகுதியைக் கொடுப்பதால், அவ்வகைச் செல்வத்தில் மேலும் செல்வந்தனாக இந்த அந்தணன் உன்னை ஆக்குவான். ஓ! மனிதர்களின் தலைவா, ஒரு குதிரையின் உடலில் எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ, ஓ! பூமியின் ஆட்சியாளா, அவ்வளவு அருள் உலகங்களையும், ஒரு குதிரையைக் கொடுப்பவன் அடைவான். இவன் {காலவன்} உன்னிடம் கொடை பெறுவதற்குத் தகுதியுடையவன் ஆவான். எனவே, சங்குக்குள் சேகரிக்கப்பட்ட பாலைப் போல உனது கொடை இந்த நேரத்தில் அவனுக்கு அமையட்டும்" என்றான் {கருடன்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்