Tuesday, June 09, 2015

துரியோதனனை அறிவுறுத்திய நாரதர்! - உத்யோக பர்வம் பகுதி 123

Narada's instruction to Duryodhana! | Udyoga Parva - Section 123 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –52)

பதிவின் சுருக்கம் : சொர்க்கத்தில் வரவேற்கப்படும் யயாதி; பிரம்மனிடம் தனது சந்தேகத்துக்கான விளக்கத்தைப் பெற்ற யயாதி; யயாதி மற்றும் காலவரின் கதையினூடே நாரதர் துரியோதனனுக்கு உரைத்த நீதி...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "தங்கள் வேள்விக் கொடைகளின் ஈகையால் தனித்துவம்பெற்ற அந்த நீதிமிக்க மன்னர்களால் சொர்க்கத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டவனும், தனது மகளின் {மாதவியின்} மகன்களைக் {தௌஹித்ரர்களைக்} கொண்டவனுமான யயாதி, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தேவலோகத்தை அடைந்தான். தனது மகளின் {மாதவியின்} மகன்களுடைய தகுதிகளின் {புண்ணியங்களின்} மூலம் நித்திய உலகை அடைந்த யயாதி, தனது சொந்த செயல்களால் அலங்கரிக்கப்பட்டு, மணமிக்க இனிய தென்றலால் அரவணைக்கப்பட்ட நறுமணமிக்க மலர்மாரியில் குளித்துப் பெரும் அழகுடன் ஒளிர்ந்தான்.


துந்துபி ஒலிகளுடன் சொர்க்கத்தில் உற்சாகமாக வரவேற்கப்பட்ட அவன் {யயாதி}, பல்வேறு கந்தர்வர்கள் மற்றும் அசுர இனங்களைச் சேர்ந்தவர்களின் ஆடல் பாடல்களின் மூலம் உற்சாகமூட்டப்பட்டான். தெய்வீக முனிகளும், அரச முனிகளும், சாரணர்களும் அவனை {யயாதியைத்} துதிக்கத் தொடங்கினர். தேவர்கள் அவனுக்கு {யயாதிக்கு} அற்புதமான ஆர்கியாவைக் கொடுத்து, பிற வெகுமதிகளையும் கொடுத்து அவனை {யயாதியை} மகிழ்ச்சியடையச் செய்தனர்.

சொர்க்கத்தில் தனது நிலையையும், இதய அமைதியையும் மீண்டும் அடைந்து, கவலையில் இருந்து விடுபட்ட அவனிடம் {யயாதியிடம்}, பெருந்தகப்பன் {பிரம்மன்}, "உனது பூலோகச் செயல்களால் நீ {அறத்தின் பலனான} புண்ணியத்தை முழுமையான அளவு ஈட்டிவிட்டாய். சொர்க்கத்தில் உண்டான உனது செயலைப் போலவே, (நீ வென்ற) இந்தப் பகுதி நித்தியமானது. எனினும், ஓ! அரசமுனியே {யயாதியே}, உனது உடைமைகள் அனைத்தையும் உன் வீண் தற்பெருமையால் அழித்துக் கொண்டு, உன்னை யாரும் அடையாளம் காணாத வண்ணம் சொர்க்கவாசிகள் அனைவரின் இதயத்தையும் இருளில் மூழ்கச் செய்துவிட்டாய். நீ அடையாளம் காணப்படாததாலேயே {இங்கிருந்து} வீசப்பட்டாய்! உனது மகளின் {மாதவியின்} மகன்களுடைய {தௌஹித்ரர்களுடைய} அன்பு மற்றும் பாசத்தால் மீண்டும் காக்கப்பட்டு, இங்கே மீண்டும் வந்தடைந்து, உனது செயல்களால் நீ ஏற்கனவே வென்றிருந்த மாற்றமில்லாத, நித்தியமான, புனிதமான, அற்புதமான, நிலையான, அழிவற்ற பகுதியை அடைந்துவிட்டாய்", என்றான் {பிரம்மன்}.

இப்படிச் சொல்லப்பட்ட யயாதி {பிரம்மனிடம்}, "ஓ புனிதமானவனே {பிரம்மாவே}, எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அதை விலக்குவதே உமக்குத் தகும். ஓ! அனைத்துலகங்களின் பெரும்பாட்டனே {பிரம்மனே}, இதை நான் வேறு எவரிடமும் கேட்க முடியாது. நான் ஆயிரக்கணக்கான வருடங்களாக எனது குடிமக்களை (அறம்சார்ந்து) ஆண்டதால் அடையப்பட்டதும், எண்ணற்ற வேள்விகளாலும், எனது கொடைகளாலும் வெல்லப்பட்டதுமான எனது தகுதி பெரிதாகவே இருந்தது. அவ்வளவு பெரிய தகுதி {புண்ணியம்), எப்படி இவ்வளவு விரைவாகத் தீர்ந்து போய் நான் வீசப்பட்டேன்? ஓ! புனிதமானவனே {பிரம்மாவே}, எனக்காக உண்டாக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் நித்தியமானவை என்பதை நீ அறிவாய். ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {பிரம்மாவே}, அந்த எனது பகுதிகள் அனைத்தும் ஏன் அழிக்கப்பட்டன?" என்று கேட்டான் {யயாதி}.

அதற்குப் பெரும்பாட்டன் {பிரம்மன் யயாதியிடம்}, "ஆயிரக்கணக்கான வருடங்கள் உனது குடிமக்களை (அறம்சார்ந்து) ஆண்டதால் உன்னால் அடையப்பட்டதும், எண்ணற்ற வேள்விகளாலும், உனது கொடைகளாலும் உன்னால் வெல்லப்பட்டதுமான உனது தகுதி, ஒரே ஒரு குறையால் தீர்ந்து போயிற்று, அதன் காரணமாகவே நீ (இந்தப் பகுதியில் இருந்து) வீசப்பட்டாய். ஓ! மன்னர்களின் மன்னா {யயாதி}, உனது வீண் தற்பெருமையே அந்தக் குறை. அதன் காரணமாகவே நீ சொர்க்கவாசிகளின் கண்டனங்களுக்கு ஆட்பட்டாய்.

ஓ! அரச முனியே {யயாதியே}, தற்பெருமையாலோ, பலத்தின் மீது கொண்ட செருக்காலோ, அற்பத்தனத்தாலோ, வஞ்சனையாலோ, இந்தப் பகுதி நித்தியமானதாகி விடாது. உனக்குத் தாழ்ந்தவர்களையோ, உயர்ந்தவர்களையோ, நடு நிலையில் இருப்பவர்களையோ {உனக்குச் சரிசமமாக இருப்பவர்களையோ} ஒருபோதும் அவமதிக்காதே. தற்பெருமை எனும் நெருப்பால் எரிக்கப்படுபவனை விடப் பெரிய பாவி எவனுமில்லை. இப்படி நீ விழுந்து, மீண்டும் உயர்ந்த இதைக் குறித்து உரையாடுபவர்கள், பெரும் ஆபத்தில் மூழ்கியிருந்தாலும் காக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை" என்றார் {பிரம்மா}.

நாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, தற்பெருமையின் விளைவால் விழுந்த யயாதியின் துயரம் இப்படியே இருந்தது. பிடிவாதத்தால் துயரில் விழுந்த காலவரின் துயரும் இப்படியே இருந்தது. தங்கள் சொந்த நன்மையை விரும்புபவர்கள், தங்கள் நன்மையை விரும்பும் நண்பர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். பிடிவாதத்தை எப்போதும் ஊக்கப்படுத்தக் கூடாது, ஏனெனில் பிடிவாதமே எப்போதும் அழிவின் வேராக இருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, தற்பெருமையையும் கோபத்தையும் கைவிட்டு, பாண்டு மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சமாதானம் கொள்வாயாக.

ஓ! மன்னா {துரியோதனா}, கோபத்தைத் தவிர்ப்பாயாக. கொடுக்கப்படும் தானம், செய்யப்படும் செயல், பயிலப்படும் தவம், நெருப்பில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகள் ஆகிய இவற்றில் எதுவும் அழிவடைவதோ, குறைவடைவதோ இல்லை. இவற்றைச் செய்பவனைத் தவிர வேறு யாரும் அவற்றின் கனிகளை {பலன்களை} அடைவதும் இல்லை. இந்த மேன்மையான அற்புதமான வரலாற்றைப் புரிந்து கொள்வதில் வெல்பவர்கள், கோபம் மற்றும் காமத்தில் இருந்து விடுபட்டு பெரும் கல்வி கற்றவர்களின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்டவர்கள், சாத்திரங்கள் மற்றும் பகுத்தறிவின் பல்வேறு குறிப்புகளை அமலாக்குபவர்கள் ஆகியோர் அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றின் அறிவை அடைந்து, முழு உலகத்தின் அரசுரிமையையும் அனுபவிக்கிறார்கள்" என்றார் {நாரதர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்