Wednesday, June 10, 2015

துரியனிடம் பேசிய கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 124

Krishna spoke to Duryodhana! | Udyoga Parva - Section 124 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –53)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் தான் சொல்வதைக் கேட்க மாட்டான் என்றும், அவனுக்குப் புத்தி கூறுமாறும் திருதராஷ்டிரன் கிருஷ்ணனிடம் கூறியது; கிருஷ்ணன் துரியோதனனுக்குப் போரினால் உண்டாகும் பாதகங்களைக்  எடுத்துரைத்தது; பாண்டவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுத்து அவர்களுடன் சமாதானம் பேண வேண்டும் என்று கிருஷ்ணன் சொன்னது...

திருதராஷ்டிரன் {நாரதரிடம்} சொன்னான், "ஓ! புனிதமானவரே, ஓ! நாரதரே, நீர் சொல்வது போலத்தான் இருக்கிறது. துல்லியமாக இதுவே எனது விருப்பமுமாகும். ஆனால், ஓ! புனிதமானவரே {நாரதரே}, (அவற்றை முன்னெடுத்துச் செல்ல) என்னிடம் சக்தி இல்லை" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நாரதரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குரு மன்னன் {திருதராஷ்டிரன்}, பிறகு, கிருஷ்ணனிடம், "ஓ! கேசவா, சொர்க்கத்திற்கு வழிநடத்தவல்லதும், உலகத்திற்கு நன்மை செய்வதும், அறத்திற்கு இசைவானதும், பகுத்தறிவு நிறைந்ததுமான வார்த்தைகளை நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ! ஐயா, நான் சுதந்திரமானவன் இல்லை. எனக்கு ஏற்புடைய எதையும் துரியோதனன் செய்வதில்லை. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, எனது கட்டளைக்குக் கீழ்ப்படியாதவனும், மூடனும், தீயவனுமான எனது மகனைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்வாயாக.


ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, காந்தாரி, விதுரன் மற்றும் பீஷ்மரின் தலைமையிலான பிற நண்பர்களின் நன்மை மிக்க வார்த்தைகளுக்கு இவன் {துரியோதனன்} செவி கொடுப்பதே இல்லை. எனவே, தீய மனநிலையும், பாவம் நிறைந்த இதயமும், கோணல் புத்தியும், அறிவிலாத் தன்மையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த இளவரசனுக்கு {துரியோதனனுக்கு} நீயே ஆலோசனை வழங்குவாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இதைச் செய்வதால், ஒரு நண்பன் எப்போதும் செய்ய வேண்டிய உன்னதச் செயலைச் செய்தவனாவாய்" என்றான் {திருதராஷ்டிரன்}.

இப்படிச் சொல்லப்பட்டவனும், அறம் {தர்மம்} மற்றும் பொருள் {அர்த்தம்} குறித்த உண்மைகளை அறிந்தவனுமான விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, எப்போதும் கோபம் நிறைந்திருக்கும் துரியோதனனிடம் நெருங்கி, இனிய வார்த்தைகளால் அவனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, ஓ! குருக்களில் சிறந்தவனே, உனது நன்மைக்காகவும், உனது தொண்டர்களின் நன்மைக்காகவும் நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. பெரும் ஞானத்திற்காகத் தனித்துவமாக அறியப்படும் ஒரு குலத்தில் நீ பிறந்திருக்கிறாய். நான் குறிப்பிடுவது போல நீதியுடன் செயல்படுவதே உனக்குத் தகும். கல்வியும், அற்புதமான நடத்தையும் கொண்ட நீ, அற்புதப் பண்புகள் அனைத்தையும் கொண்டிருக்கிறாய்.

இழிவான குடும்பங்களில் பிறந்தவர்களோ, தீய ஆன்மா படைத்தவர்களோ, கொடூரர்களோ, வெட்கங்கெட்டவர்களோதான், ஓ! ஐயா {துரியோதனா}, உனக்கு ஏற்புடைய வழியில் செயல்படுவார்கள். இவ்வுலகில், நீதிமிக்கவர்களின் விருப்பங்கள் மட்டுமே, அறம் மற்றும் பொருளின் விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன. எனினும், நீதியற்றவர்களின் செயல்களோ விபரீதமாக {வக்கிரமாகத்} தெரிகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நீ மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் மனநிலை விபரீத {வக்கிர} வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. இது போன்ற செயல்களில் தொடர்வது, பாவம் நிறைந்ததும், அச்சம் நிறைந்ததும், மிகவும் பொல்லாததும், மரணத்திற்கே வழிவகுப்பதுமாகும். ஓ! பாரதா {துரியோதனா}, அது தவிர, இது காரணமற்றதாகவும், நீண்ட காலம் உன்னால் கடைப்பிடிக்க முடியாததாகவும் இருக்கிறது.

கேடு மட்டுமே விளைவிக்கக் கூடிய இதை நீ தவிர்த்தால், உனது சொந்த நன்மையை அடையலாம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ உன் சகோதரர்கள், தொண்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் செய்யும் பாவம் நிறைந்த, மதிப்பில்லாத செயல்களில் இருந்து தப்புவாயானால், ஓ! மனிதர்களில் புலியே, ஓ! பாரதர்களில் காளையே {துரியோதனா}, பெரும் ஞானமும், பெரும் முயற்சியுடன் கூடிய பெரும் வீரமும், பெரும் கல்வியும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ சமாதானம் செய்து கொள்வாயாக.

இத்தகு நடத்தையே பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரருக்கும், பெரும்பாட்டனுக்கும் (பீஷ்மருக்கும்), துரோணருக்கும், உயர்ஆன்ம கிருபருக்கும், சோமதத்தனுக்கும், ஞானமுள்ள பாஹ்லீகனுக்கும், அஸ்வத்தாமனுக்கும், விகர்ணனுக்கும், சஞ்சயனுக்கும், விவிம்சதிக்கும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, உனது பல்வேறு உறவினர்களுக்கும், பல்வேறு நண்பர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும்.

ஓ! ஐயா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது தந்தை மற்றும் தாயின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. நல்ல மகன்கள் எப்போதும் தங்கள் தந்தையின் கட்டளைகளையே நன்மையானதாகக் கருதுவார்கள். உண்மையில், பேரிடர் ஏற்பட்டால், ஒவ்வொருவரும் தனது தந்தையின் தலையீடுகளையே நினைவுகூர்வார்கள். ஓ! ஐயா, உனது தந்தை {திருதராஷ்டிரர்} பாண்டவர்களுடன் சமாதானத்தையே விரும்புகிறார். எனவே, ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, உனது ஆலோசகர்களுடன் கூடிய நீயும் அதையே விரும்புவாயாக.

தனது நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகும் ஒரு மனிதன் அதன்படி நடக்கவில்லையென்றால், அந்த அலட்சியத்தின் விளைவாக அவன் கிம்பகம் என்று அழைக்கப்படும் கனியை {எட்டிக் கொட்டையை} விழுங்கியவன் போல இறுதியில் எரிந்து போவான். மூடத்தனத்தால் நன்மையான ஆலோசனைகளை ஏற்காத ஒருவன், காலம் தாழ்த்துவதால் பதட்டமடைந்து, தனது நோக்கத்தை அடைய முடியாமல், இறுதியில் வருந்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான். மறுபுறம், நன்மையான ஆலோசனைகளைக் கேட்ட பிறகு, அதை உடனே ஏற்று, தனது கருத்தைக் கைவிடுபவன், எப்போதும் உலகில் மகிழ்ச்சியை அடைகிறான். நல்ல அறிவுடைய நண்பர்களின் வார்த்தைகளைப் புறந்தள்ளி, அவை தனக்கும், தனது விருப்பத்துக்கும் எதிரானவையெனக் கருதுபவன், தனக்கு எதிரான வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதால், விரைவில் தனது எதிரிகளால் அடக்கப்படுகிறான்.

நீதிமான்களின் கருத்துகளை அலட்சியம் செய்து, தீயோரின் கருத்துகளுக்குக் கீழ்ப்படிபவன், தான் துயரில் மூழ்குவதன் விளைவாக விரைவில் தனது நண்பர்களை அழச் செய்கிறான். மேன்மையான ஆலோசகர்களை விட்டு, தாழ்ந்தவர்களிடம் ஆலோசனை கோருபவன், விரைவில் பெரும் துயரத்தில் வீழ்ந்து, தன்னைக் காத்துக் கொள்வதில் வெல்ல முடியாமல் போகிறான். போலியாக நடந்து கொண்டு, நல்ல நண்பர்கள் பேசுவதைக் கேளாதவனும், அந்நியர்களை மதித்து, தனது சொந்தங்களை வெறுப்பவனுமான பாவிகளின் தோழன், ஓ! பாரதா {துரியோதனா}, விரைவில் இந்தப் பூமியால் தள்ளப்படுவான்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, (பாண்டுவின் மகன்களிடம்) சண்டையிட்டு வரும் நிலையில், நீ பாவம் நிறைந்தவர்கள், இயலாதவர்கள் மற்றும் மூடர்களான பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். சக்ரனைப் {இந்திரனைப்} போன்றவர்களும், வலிமைமிக்கத் தேர் வீரர்களுமான உனது சொந்தங்கள் அனைவரையும் அவமதித்து, அந்நியர்களிடம் உதவியையும் பாதுகாப்பையும் நாடும் வேறெந்த மனிதன் உன்னைத் தவிர இருக்கிறான்? குந்தியின் மகன்களை நீ அவர்கள் பிறந்ததில் இருந்தே துன்புறுத்தி வந்திருக்கிறாய். அவர்கள் உன்னிடம் கோபமடையவில்லை. ஏனெனில், பாண்டுவின் மகன்கள் அனைவரும் உண்மையில் அறம்சார்ந்தவர்களாவர்.

அவர்களுடைய பிறப்பு முதலே நீ பாண்டவர்களிடம் வஞ்சகமாக நடந்து வந்திருந்தாலும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அந்தப் புகழ்வாய்ந்தவர்கள் {பாண்டவர்கள்} உன்னிடம் தாராளமாகவே நடந்து வந்திருக்கிறார்கள். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த உனது முக்கிய உறவினர்களிடம், உனக்குச் சமமாக, பெருந்தன்மையுடன் நீ நடந்து கொள்வதே உனக்குத் தகும். கோபத்தின் ஆளுகைக்கு இடங்கொடுக்காதே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஞானமுள்ளோரின் முயற்சிகள் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கும்.

உண்மையில், இவை மூன்றையும் அடைய முடியவில்லை என்றாலும், மனிதர்கள் அறம் மற்றும் பொருளையாவது பின்தொடர்கிறார்கள். மேலும், இவை மூன்றும் தனித்தனியாகக் கடைப்பிடிக்கப்பட்டால், தங்கள் இதயத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அறத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; நல்லவர்களுமில்லாமல், கெட்டவர்களாகவும் இல்லாமல் நடுநிலையில் இருப்பவர்கள் எப்போதும் சர்ச்சைக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; அதே வேளையில் மூடர்கள் இன்பத்தைத் தணிப்பதையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது காணப்படுகிறது.

மயக்கத்தால் அறத்தைக் கைவிடும் மூடன், பொருளையும் இன்பத்தையும் நீதியற்ற வழிகளில் அடைந்து, விரைவில் தனது அறிவால் அழிவை அடைகிறான். பொருள் மற்றும் இன்பத்தைக் குறித்துப் பேசுபவர்கள், முதலில் அறத்தையே பயில வேண்டும். ஏனெனில், பொருளோ {அர்த்தமோ}, இன்பமோ {காமமோ} (உண்மையில்) அறத்தில் இருந்து விலகி இருப்பது இல்லை. ஓ! மன்னா {துரியோதனா}, அறம் மட்டுமே அந்த {அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய) மூன்றுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், மூன்றையும் அடைய முயல்பவன், அறத்தின் துணை கொண்டு மட்டுமே காய்ந்த புற்குவியலைப் பற்றும் நெருப்பு போல வளர்கிறான்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஓ! ஐயா, செழிப்பில் மலர்ச்சியடைந்திருப்பதும், பூமியின் ஏகாதிபதிகள் அனைவராலும் அறியப்பட்டதுமான பரந்த பேரரசை நீதியற்ற வழியில் அடைய நீ முயல்கிறாய். ஓ! மன்னா {துரியோதனா}, நீதிமிக்க நடத்தையுடன் வாழ்வோரிடம் போலியாக நடந்து கொண்டால், கோடரியைக் கொண்டு காட்டை அறுப்பதுபோல, நிச்சயம் நீயே உன்னை அறுத்துக் கொள்வாய். எவனுடைய வீழ்ச்சியை {அவமானத்தை} ஒருவன் விரும்பவில்லையோ, அவனுடைய புத்தியை அவன் கலங்கச் செய்யக்கூடாது. ஏனெனில், ஒருவனது புத்தி கலங்கடிக்கப்பட்டால், அவன் நன்மையானது எதுவோ அதில் தனது கவனத்தை அர்ப்பணிக்க முடியாது.

தனது ஆன்மாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன், மூவுலகங்களில் எவரையும் அவமதிக்க மாட்டான். சாதாரண உயிர்களைக் கூட ஒருவன் அவமதிக்கக் கூடாது எனும்போது, மனிதர்களில் காளையரான பாண்டுவின் மகன்களை அவமதிக்கவே கூடாது. கோபத்தின் ஆளுகைக்கு அடிபணிபவன், சரி தவறு என்பதில் தனது புத்தியை இழக்கிறான். படர்ந்து வளர்பவை எப்போதும் வெட்டப்பட வேண்டும். ஓ! பாரதா {துரியோதனா}, பார், இதுவே {பிரமாணமே} சாட்சியாகும். தற்போது, ஓ! ஐயா, தீயவர்களுடன் சேர்வதைவிட, பாண்டவர்களுடன் சேர்வதே உனக்குச் சிறந்தது. நீ அவர்களுடன் சாமாதானம் செய்து கொண்டால், உனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறிவன் ஆவாய்.

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பாண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பேரரசை அனுபவித்துக் கொண்டு, அந்தப் பாண்டவர்களையே அலட்சியம் செய்துவிட்டு, நீ பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். ஓ! பாரதா {துரியோதனா}, துச்சாசனன், துர்விஷஹன், கர்ணன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} உனது மாநிலத்தின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, உன் செழிப்புத் தொடரும் என்று நீ விரும்புகிறாய். எனினும், பாண்டவர்களின் அறிவுக்கும், அறத்திற்கும், செல்வத்தை அடையும் திறனுக்கும், ஆற்றலுக்கும்  முன்னிலையில் இவர்கள் மிகச் சிறியவர்களாவர். உண்மையில், ஓ! பாரதா {துரியோதனா}, (நான் சொன்ன நால்வரையும் கூட விட்டு விடு. அவர்களைத் தவிர) உன்னைத் தலைமையாகக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் போர்க்களத்தில் கோபத்துடன் இருக்கும் பீமனின் முகத்தைக் காணக்கூடத் திறனற்றவர்கள் ஆவர்.

ஓ! ஐயா, பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொண்ட இந்தப் படை, உண்மையில் உனது கையில் இருக்கின்றது. பீஷ்மர், துரோணர், இந்தக் கர்ணன், கிருபர், பூரிஸ்ரவஸ், சோமதத்தன், அஸ்வத்தாமன் மற்றும் ஜயத்ரதன் ஆகியோரும் அதில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கூடி வந்தால் கூட, இவர்களால் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகப் போரிடமுடியாது. உண்மையில், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள் என அனைவராலும் வீழ்த்தப்பட முடியாதவன் அர்ஜுனன் ஆவான். போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே. அர்ஜுனனுடன் போரிட்டு வீட்டுக்குப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் திரும்பிய ஒரு மனிதனை, இந்தப் பூமியின் அரச இனங்களில் எதிலும் நீ கண்டிருக்கிறாயா? ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உலகளாவிய படுகொலையால் கிடைக்கும் பலன்தான் என்ன?

யாரை வீழ்த்திவிட்டால் வெற்றி உனதாகுமோ அந்த அர்ஜுனனை வீழ்த்தவல்ல ஒரு தனி மனிதனைக் காட்டிவிடு பார்ப்போம்? கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரையும் காண்டவப் பிரஸ்தத்தில் வீழ்த்திய அந்தப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போர்க்களத்தில் எவன் மோதுவான்? விராட நகரத்தில் ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த ஆச்சரியமிக்கப் போர் கேள்விப்படப்படுகிறது. இதுவே போதுமான சாட்சியில்லையா? தேவர்களுக்குத் தேவனான சிவனையே போரில் மனநிறைவு கொள்ளச் செய்த வீரனும், கோபம் தூண்டப்பட்டால் ஒப்பிலாதவனும், தடுக்கப்பட முடியாதவனும், எப்போதும் வெல்பவனும், அழிவடையாதவனுமான அர்ஜுனனை வீழ்த்திவிடலாம் என்று நீ நம்புகிறாயா?

என்னைத் துணையாகக் கொண்டு பிருதையின் மகன் {அர்ஜுனன்}, எதிரியை நோக்கிப் போர்க்களத்தில் முன்னேறும் போது, அவனுக்கு {அர்ஜுனனுக்கு} சவால் விடக்கூடிய அளவு தகுதிவாய்ந்தவன் எவன் இருக்கிறான்? புரந்தரனாலும் {இந்திரனாலும்} அவ்வாறு செய்ய இயலுமா? அர்ஜுனனைப் போரில் வீழ்த்தவல்லவன், தனது கரங்களால் பூமியைத் தாங்கவல்லவனாக இருப்பான், கோபத்தில் பூமியின் மொத்த மக்கள் தொகையையும் எரித்துவிடவல்லவனாக இருப்பான், சொர்க்கத்தில் இருந்து தேவர்களையே கூடத் தூக்கிவீசவல்லவனாக இருப்பான். உனது மகன்களையும், சகோதரர்களையும், சொந்தங்களையும், உறவினர்களையும் பார். உன் நிமித்தமாகப் பாரதக் குலத்தின் இந்தத் தலைவர்கள் அனைவரும் அழிவடைய வேண்டாம். கௌரவக் குலம் நிர்மூலமாக்கப்பட வேண்டாம்.

ஓ! மன்னா {துரியோதனா}, உனது குலத்தை அழித்தவன் என்றும், அதன் சாதனைகளை அழித்தவன் என்றும் மக்கள் உன்னைச் சொல்ல வேண்டாம். (சமாதானத்திற்கு உடன்பட்டால்) வலிய தேர்வீரர்களான அந்தப் பாண்டவர்கள் உன்னை யுவராஜாவாகவும் {Yuvaraja = பட்டத்து இளவரசனாகவும்}, மனிதர்களின் தலைவரான உனது தந்தை திருதராஷ்டிரரை, இந்தப் பரந்த பேரரசின் ஆட்சியாளராகவும் நிறுவுவார்கள். ஓ! ஐயா, நிச்சயமாகக் கிடைப்பதும், உனக்காகக் காத்திருப்பதுமான செழிப்பை அலட்சியம் செய்யாதே. பிருதையின் மகன்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} பாதி நாட்டை அளித்து, பெரும் செழிப்பை வெல்வாயாக. பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு, உனது நண்பர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டு, அவர்களுடன் இன்புற்றிருக்கும் நீ, எப்போதும் நன்மையையே அடைந்திருப்பாய்" என்றான் {கிருஷ்ணன்}. 


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்