Tuesday, June 09, 2015

சொர்க்கத்திற்கு உயர்ந்த யயாதி! - உத்யோக பர்வம் பகுதி 122

Yayati ascended to Heaven ! | Udyoga Parva - Section 122 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –51)

பதிவின் சுருக்கம் : மாதவியின் மகன்களான வசுமனஸ், பிரதர்த்தனன், சிபி மற்றும் அஷ்டகன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக  தங்கள் புண்ணியங்களை யயாதிக்கு அளிப்பது; அவர்களது புண்ணியங்களைப் பெற்றுக் கொண்ட யயாதி சொர்க்கத்திற்கு உயர்வது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "மனிதர்களில் காளையான அந்த மன்னன் யயாதி அந்த அறம்சார்ந்த மனிதர்களை அடையாளம் கண்டுகொண்ட பிறகு, பூமியின் பரப்பைத் தொட வேண்டிய அவசியமே இல்லாமல் மீண்டும் சொர்க்கத்திற்கு எழுந்தான். அவன் {யயாதி} தனது தேவ உருவை மீண்டும் அடைந்து, கவலைகள் அனைத்தில் இருந்தும் முழுமையாக விடுபட்டான். தெய்வீக மாலைகள், அங்கிகள், தெய்வீக ஆபரணங்கள் ஆகியவை பூட்டப்பட்டு, தெய்வீக நறுமணப் பொருட்கள் தெளிக்கப்பட்டு, தெய்வீகப் பண்புகள் நிறைந்து, பூமியைத் தனது காலால் தொட வற்புறுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் மீண்டும் எழுந்தான்.


அதே வேளையில், ஈகைகுணத்துக்காக உலகத்தில் கொண்டாடப்படும் வசுமனஸ், உரத்த குரலில், அந்த மன்னனிடம் {யயாதியிடம்} முதலில் பேசினான். அவன் {வசுமனஸ் யயாதியிடம்}, "அனைத்து வகை மனிதர்களிடமும் பழியற்ற வகையில் நடந்து கொண்டு, நான் வென்ற தகுதியை {புண்ணியத்தை} உமக்குத் தருகிறேன். ஓ! மன்னா {யயாதியே}, அது முழுமையாக உமதே ஆகட்டும். ஈகை மற்றும் மன்னிக்கும் குணம் {பொறுமை} ஆகியவற்றால் ஒருவன் அடையும் தகுதி {புண்ணியம்}, நான் செய்த வேள்விகளின் விளைவாக நான் அடைந்த தகுதி ஆகியவை அனைத்தும் உமதாகட்டும்" என்றான் {வசுமனஸ்}.

அதன் பிறகு, க்ஷத்திரியர்களில் காளையான பிரதர்த்தனன் {யயாதியிடம்}, "போரைப் போலவே அறத்திற்கும் எப்போதும் அர்ப்பணிப்புடன், ஒரு க்ஷத்திரியனானதன் விளைவால், வீரனாக நான் அடைந்த புகழ் (உண்மையில் நான் எதற்காக அறியப்படுகிறேனோ அந்தப் புகழ்) அனைத்தும் உமதாகட்டும்" என்றான் {பிரதர்த்தனன்}.

அதன் பிறகு, உசீநரனின் புத்திசாலி மகனான சிபி, இனிய வார்த்தைகளில் {யயாதியிடம்}, "கேலிக்காகக் குழந்தைகளிடமோ பெண்களிடமோ, ஆபத்திலோ, துயரிலோ, பகடையிலோ நான் பொய் பேசியதே இல்லை. நான் தியாகம் செய்யாத அந்த உண்மையை {சத்தியத்தைக்} கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. ஓ! மன்னா {யயாதியே}, என்னால், ஆசைக்குகந்த, இன்பத்துக்குகந்த பொருட்கள் அனைத்தையும் கைவிட முடியும். எனது நாட்டையே ஏன் உயிரையும் கூடக் கைவிட முடியும், ஆனால் உண்மையை {சத்தியத்தை} ஒருபோதும் கைவிடேன். அந்த உண்மையைக் கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. எந்த உண்மையைக் கொண்டு தர்மனையும் {தர்மதேவனையும்}, எந்த உண்மையைக் கொண்டு அக்னியையும், எந்த உண்மையைக் கொண்டு நூறு வேள்விகள் செய்தவனையும் {இந்திரனையும்} நான் மன நிறைவு கொள்ளச் செய்தேனோ, அந்த உண்மையைக் கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக", என்றான் {மன்னன் சிபி சக்கரவர்த்தி}.

இறுதியாக, குசிகரின் மகன் {விஸ்வாமித்ரர்} மற்றும் மாதவியின் மகனும், அரச முனியுமான அஷ்டகன், பல நூறு வேள்விகளைச் செய்த நகுஷனின் மகன் யயாதியிடம், "ஓ! தலைவா, புண்டரீகம், கோசவம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை நான் நூற்றுக் கணக்கில் செய்திருக்கிறேன். அந்தத் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் நீர் எடுத்துக் கொள்ளும். வேள்விகள் செய்வதற்காக நான் செல்வம், ரத்தினங்கள், ஆடைகள் ஆகிய எதையும் விட்டு வைத்ததில்லை. அந்த உண்மையைக் {சத்தியத்தைக்} கொண்டு நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக" என்றான் {விஸ்வாமித்திரர் மகன் அஷ்டகன்}.

பூமியை விட்டு அகன்ற அந்த மன்னன் {யயாதி}, தனது மகளின் {மாதவியின்} மகன்கள் ஒருவர் பின் ஒருவராக இவ்வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல மேலும் மேலும் சொர்க்கத்தை நோக்கி உயரத் தொடங்கினான்.

இப்படியே சொர்க்கத்தில் இருந்து வீசப்பட்ட யயாதியை, தங்கள் நற்செயல்கள் மூலம் அந்த மன்னர்கள் விரைவாகக் காத்தனர். இப்படியே நான்கு அரச மரபுகளில் பிறந்தவர்களும், {யயாதியின்} மகளின்  மகன்களும் {மகள் வழிப் பேரன்களும்}, தங்கள் குலத்தைப் பெருக்குபவர்களுமான அந்த மன்னர்கள் தங்கள் அறங்கள், வேள்விகள், கொடைகள் மூலமாகத் தங்கள் தாய்வழி பாட்டனை {யயாதியை} மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்த்தினார்கள். அந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஒருமித்தபடி, "அரசப் பண்புகள் மற்றும் அனைத்து அறங்களையும் கொண்ட நாங்கள், ஓ! மன்னா {யயாதி}, உமது மகளின் {மாதவியின்} மகன்களாவோம் {தௌஹித்ரர்களாவோம் - மகள்வழிப் பேரன்களாவோம்}. (எங்கள் நற்செயல்களின் புண்ணியத்தால்) நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக" என்றனர்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்