Thursday, June 11, 2015

துரியோதனனிடம் பெரியோரின் மன்றாடல்! - உத்யோக பர்வம் பகுதி 125

The plead of elders to Duryodhana! | Udyoga Parva - Section 125 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –54)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குப் பீஷ்மர் நல்வார்த்தைகளைச் சொல்வது; பீஷ்மரைத் தொடர்ந்து துரோணரும் சொல்வது; துரியோதனனுக்காக வருந்தவில்லை, காந்தாரிக்காகவும் திருதராஷ்டிரனுக்காகவுமே தான் வருந்துவதாக விதுரன் சொன்னது; இறுதியாகத் திருதராஷ்டிரன், துரியோதனனிடம் கிருஷ்ணனின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், பழியுணர்ச்சியுடைய துரியோதனனிடம், "சொந்தங்களுக்குள் சமாதானத்தைக் கொண்டு வரவே கிருஷ்ணன் உன்னிடம் பேசியிருக்கிறான். ஓ! ஐயா, அந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவாயாக, கோபத்தின் ஆளுகைக்கு ஆட்படாதே. ஓ! ஐயா, உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளின்படி நீ செயல்படவில்லை என்றால் உனக்கு நன்மையைக் கொடுக்கும் செழிப்பையோ, மகிழ்ச்சியையோ எப்போதும் நீ அடைய மாட்டாய். ஓ! ஐயா, அறம் மற்றும் பொருளுக்கு இசைவானதையே வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} உன்னிடம் சொன்னான். அந்த நோக்கத்தை நீ ஏற்பாயாக. 


ஓ! மன்னா {துரியோதனா}, உலகத்தில் வாழும் மக்களை அழித்துவிடாதே. ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {துரியோதனா}, கேசவன் {கிருஷ்ணன்}, உனது தந்தை {திருதராஷ்டிரன்}, ஞானம் கொண்ட விதுரன் ஆகியோரால் சொல்லப்பட்டவையும், உனக்கு நன்மை நிறைந்தவையும், சத்தியத்துக்கு இசைவானவையுமான வார்த்தைகளை நீ மீறுவாயெனில், அந்த உனது துர்க்குணத்தால், பூமியின் மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் பிரகாசமாக இருக்கும் இந்தப் பாரதர்களின் செழிப்பை, திருதராஷ்டிரனின் வாழ்நாளிலேயே நீ அழித்துவிடுவாய். இந்த ஆணவ மனநிலையுடனேயே நீ இருந்தால், உனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்}, மகன்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் உயிரையும் நீ பறித்துவிடுவாய். உனது குலத்தை அழிப்பவனாக ஆகிவிடாதே! பொல்லாதவனாக இராதே; உனது இதயம் பாவம் நிறைந்ததாக இருக்க வேண்டாம்; நீதியற்றவர்களின் பாதையில் நடக்காதே. உனது தந்தை மற்றும் தாயைத் துன்பக்கடலில் மூழ்கச் செய்யாதே" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மர் முடித்த பின்னர், துரோணரும், கோபம் நிறைந்து பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த துரியோதனனிடம், "ஓ! ஐயா, கேசவன் {கிருஷ்ணன்} உன்னிடம் சொன்ன வார்த்தைகள் அறம் மற்றும் பொருள் நிறைந்தவையாகும். சந்தனுவின் மகனான பீஷ்மரும் இதையேதான் சொன்னார். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அவ்வார்த்தைகளை ஏற்பாயாக.

அவர்கள் இருவரும் {கிருஷ்ணனும், பீஷ்மரும்} ஞானிகளும், பெரும் புத்திக்கூர்மையுள்ளவர்களும், ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், உனது நன்மைக்கானவற்றைச் செய்ய விரும்புபவர்களும், பெரும் கல்வி கற்றவர்களும் ஆவர். எது நன்மையோ அதையே அவர்கள் சொன்னார்கள். ஓ! மன்னா, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {துரியோதனா}, கிருஷ்ணன், பீஷ்மர் ஆகிய இருவரின் வார்த்தைகளை ஏற்று, அவர்கள் சொன்னது போலச் செயல்படுவாயாக. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, புரிதலில் உண்டாகும் மாயையினால் மாதவனை {கிருஷ்ணனை} அலட்சியம் செய்யாதே.

உன்னை எப்போதும் ஊக்குவித்து வருபவர்கள், வெற்றியைக் கொடுக்கவல்லவர்களல்ல. போர்க்காலத்தில் அவர்கள் வெறுப்பின் சுமையைத் தூக்கி மற்றவர்கள் கழுத்தில் வீசுவார்கள் [1]. பூமியில் வாழும் மக்களைப் படுகொலை செய்யாதே. உனது மகன்களையும், சகோதரர்களையும் கொன்றுவிடாதே. வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் எந்தப் படைக்கு மத்தியில் இருக்கிறார்களோ, அந்தப் படையை யாராலும் வெல்ல முடியாது. ஓ! பாரதா {துரியோதனா}, உனது நண்பர்கள், கிருஷ்ணன் மற்றும் பீஷ்மர் ஆகியோரின் உண்மைநிறைந்த வார்த்தைகளை நீ ஏற்கவில்லையென்றால், ஓ! ஐயா, நீ நிச்சயம் வருந்த வேண்டியிருக்கும்.

[1] தாங்கள் செய்ய வேண்டியதைப் பிறர் செய்யும்படி விட்டுவிடுவார்கள்.

ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} சொன்னதைவிட அர்ஜுனன் இன்னும் பெரியவனாவான். தேவகியின் மகனான கிருஷ்ணனைப் பொறுத்தவரை, அவன் தேவர்களாலும் எதிர்க்க இயலாதவன் ஆவான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, இன்பத்தையும், நன்மையையும் உண்மையில் அளிப்பனவற்றை உனக்குச் சொல்வதால் என்ன பயன்? அனைத்தும் இப்போது உனக்குச் சொல்லப்பட்டுவிட்டது. நீ விரும்பியதைச் செய்வாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, மேலும் எதையும் உனக்குச் சொல்ல நான் விரும்பவில்லை" என்றார் {துரோணர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "துரோணர் நிறுத்தியதும், க்ஷத்ரி {க்ஷத்தா} என்றும் அழைக்கப்படும் விதுரன், துரியோதனன் மீது கண்களைச் செலுத்தி, பழியுணர்ச்சி கொண்ட அந்தத் திருதராஷ்டிரரின் மகனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, ஓ! பாரத்குலத்தின் காளையே, நான் உனக்காக வருந்தவில்லை. எனினும், காந்தாரி மற்றும் உனது தந்தை {திருதராஷ்டிரர்} ஆகிய இந்த முதிய இணைக்காக நான் வருந்துகிறேன். (யாரை விரைவில் இழக்கப் போகிறார்களோ, அந்தத்) தீய ஆன்மா கொண்ட உன்னைத் தங்கள் பாதுகாவலனாகக் கொண்ட அவர்கள் {காந்தாரியும் திருதராஷ்டிரரும்}, தங்கள் நண்பர்களையும் ஆலோசகர்களையும் இழந்து, சிறகிழந்த பறவை இணை ஒன்றைப் போலத் தங்களைப் பார்த்துக்கொள்ள எவனுடனும் திரிவார்களே. தன் குலத்தை அழித்துக் கொள்பவனான தீய மகனைப் பெற்றதால், ஐயோ, இவர்கள் இருவரும் கவலையுடன் பூமியெங்கும் பிச்சைக்காரர்களாகத் திரியப் போகிறார்களே" என்றான் {விதுரன்}.

அதன்பிறகு, மன்னர்கள் சூழ தனது தம்பிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்த துரியோதனனிடம் பேசிய மன்னன் திருதராஷ்டிரன், "ஓ! துரியோதனா, உயர் ஆன்ம சௌரி {கிருஷ்ணன்} சொன்னவற்றைக் கேள். நித்தியமானவையும், மிகுந்த பயனுள்ளவையும், உயர்ந்த நன்மைக்கு உகந்தவையுமான அந்த வார்த்தைகளை ஏற்பாயாக. களங்கமற்ற செயல்களையுடைய கிருஷ்ணனின் துணையுடன், மன்னர்கள் அனைவரின் மத்தியிலும், நாம் அனைவரும் நமது நோக்கங்கள் நிறைவேறியவர்கள் ஆவோம்.

ஓ! ஐயா, கேசவன் {கிருஷ்ணன்} மூலமாக உறுதியாக இணைந்து யுதிஷ்டிரனிடம் சமரசம் செய்து கொள்வாயாக. அமைதிக்கான ஆடி விழாவைப் போல { like unto an august ceremony of propitiation = மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய பிரம்மாண்டமான நிவர்த்தி [சமாதான] விழாவைப் போலப்}  பாரதர்களுக்கான பெரும் நன்மையை நாடுவாயாக. வாசுதேவனை {கிருஷ்ணனை} உபாயமாகக் கொண்டு பாண்டவர்களுடன் நெருக்கமாகப் பிணைவாயாக. அதற்கான நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாதே. எனினும், நன்மையை அடைய வேண்டிய உன்னிடம் சமாதானத்தை வேண்டும் கேசவனை {கிருஷ்ணனை} நீ அலட்சியம் செய்வாயெனில், எப்போதுமே வெற்றி உனதாகாது." என்றான் {திருதராஷ்டிரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்