Thursday, June 11, 2015

பீஷ்மர் துரோணர் அறிவுரை! - உத்யோக பர்வம் பகுதி 126

The advice of Bhishma and Drona! | Udyoga Parva - Section 126 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –55)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் பேசிய பேச்சைக் கேட்டு, அவன் மேல் பரிவு கொண்ட பீஷ்மரும் துரோணரும் மேலும் பேசியது; துரியோதனனுக்கு அறிவுரை கூறிய அவர்கள், பாண்டவர்களோடு ஒற்றுமையாக இருக்கும்படி சொன்னது; போர் ஏற்படுவதற்கு முன்னரே பாண்டவர்களுடன் சமாதானம் எட்டப்படட்டும் என்று துரியோதனனிடம், பீஷ்மரும் துரோணரும் வேண்டியது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்டு, அந்த முதிய மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} பரிவு கொண்ட பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், கீழ்ப்படியாதவனான துரியோதனனிடம் மீண்டும், "இரண்டு கிருஷ்ணன்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} கவசம் தரிக்காத போதே, காண்டீவம் செயல்படாமல் ஓய்வெடுக்கும்போதே, போர் நெருப்பில் நீர்க்காணிக்கைகளை ஊற்றி எதிரிகளின் பலத்தைத் தௌமியர் எரிக்காத போதே, பணிவைத் தனது ஆபரணமாகக் கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான யுதிஷ்டிரன் உனது துருப்புகளின் மீது தனது கோபப் பார்வையைச் செலுத்தாதபோதே பகைமை தணிந்து போகட்டும்.


வலிமைமிக்க வில்லாளியும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பீமசேனன் தனது பிரிவின் நடுவே நிற்காதபோதே பகைமை தணிந்து போகட்டும். கையில் கதாயுதத்துடன், போர்களத்தின் மத்தியில் திரிந்து (பகைப்) பிரிவுகளைப் பீமசேனன் அடிக்காத போதே, பாண்டவர்களுடன் சமாதானம் ஏற்படட்டும். வீரர்களைக் கொல்லும் கதாயுதத்தால், தங்கள் பருவகாலத்தில் பழுத்த பனம்பழங்களைப் போல, யானைகளின் முதுகில் இருந்து போரிடும் வீரர்களின் தலைகளைப் போர்க்களத்தில் பீமன் உருளச் செய்யாத போதே பகைமை தணிந்து போகட்டும்.

ஆயுதங்களை நன்கு அறிந்த நகுலனும், சகாதேவனும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும், விராடனும், சிகண்டியும், சிசுபாலனின் மகனும் {திருஷ்டகேதுவும்} கவசம் தரித்து, பெரும் முதலைகள் ஆழ்ந்து போவது போல, உனது படையணிகளுக்குள் ஊடுருவித் தங்கள் கணைகளை மழையாகப் பொழியாத போதே பகைமை தணிந்து போகட்டும்.

கூடியிருக்கும் மன்னர்களின் மென்மையான உடல்களின் மேல் கடும் சிறகுகள் கொண்ட கணைகள் விழாத போதே பகைமை தணிந்து போகட்டும். ஆயுதங்களில் நற்திறன் வாய்ந்தவர்களும், வேகமான கரங்களைக் கொண்டவர்களும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அடிக்க வல்லவர்களுமான வலிமைமிக்க வில்லாளிகளால் இரும்பாலும், உருக்காலும் ஆன ஆயுதங்கள் குறிதவறாமல் அடிக்கப்பட்டு, சந்தனமும், நறுமணத் தைலங்களும் பூசப்பட்டவையும், தங்க மாலைகளாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையுமான வீரர்களின் மார்பைத் துளைக்காத போதே பகைமை தணிந்து போகட்டும்.

தலைவணங்கும் உன்னை, மன்னர்களில் யானையும், நீதிமானுமான யுதிஷ்டிரன் ஆரத்தழுவி வரவேற்கட்டும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, வேள்விக் கொடைகளின் ஈகையால் தனித்துவம் கொண்ட அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, கொடி {துவஜம்} மற்றும் அங்குசம் ஆகிய குறிகளால் அடையாளம் காணப்படும் உள்ளங்கையைக் கொண்ட தனது வலது கையை உனது தோளில் வைக்கட்டும். நீ அமர்ந்திருக்கும்போது, சிவந்திருப்பதும், ரத்தினங்களால் குறிக்கப்பட்டதும், விரல்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது கைகளால் உனது முதுகை அவன் {யுதிஷ்டிரன்} தட்டிக் கொடுக்கட்டும்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஆச்சா {சால} மரத்தைப் போன்ற தோள்களையுடையவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்} உன்னை ஆரத்தழுவியபடி சமாதானத்திற்காக உன்னிடம் மென்மையாகப் பேசட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, அர்ஜுனன் மற்றும் இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகிய மூவராலும் மரியாதையாக வணங்கப்பட்டு, அவர்களது தலையை நீ முகர்ந்து, பாசத்துடன் அவர்களிடம் உரையாடுவாயாக.

உனது வீரச் சகோதரர்களான பாண்டுவின் மகன்களுடன் இணைந்திருக்கும் உன்னைக் கொண்டு இந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் சிந்தட்டும். உங்கள் நட்பிணைப்பின் செய்தி, இந்த மன்னர்கள் அனைவரின் நகரங்களிலும் பிரகடனம் செய்யப்படட்டும். (உனது இதயத்தில்) சகோதரப் பாசத்துடன் கூடிய உணர்வுகளோடு இந்தப் பூமி உன்னால் ஆளப்படட்டும். (பொறாமை மற்றும் கோபம்) எனும் நோயில் இருந்து உனது இதயம் விடுபடட்டும்" என்றனர்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்