Friday, June 12, 2015

பங்குதர மறுத்த துரியோதனன்! - உத்யோக பர்வம் பகுதி 127

Duryodhana refused to give the share! | Udyoga Parva - Section 127 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –56)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர், துரோணர், விதுரர் மற்றும் கிருஷ்ணனின் பேச்சுகளை ஏற்க முடியாத துரியோதனன், கிருஷ்ணனிடம், தன் பக்கம் எந்தத் தவறும் இல்லையென்றும், தன்னால் ஊசிமுனை அளவு இடமும் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்றும் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தனக்கு ஏற்பில்லாத வார்த்தைகள் குருக்களின் சபையில் பேசப்படுவதைக் கேட்ட துரியோதனன், வலிய கரங்களைக் கொண்டவனும், பெரும் புகழ்வாய்ந்தவனுமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, அனைத்துச் சூழ்நிலைகளையும் சிந்தித்த பிறகு பேசுவதே உனக்குத் தகும். உண்மையில், எக்காரணமும் இன்றி இத்தகு கடுமையான வார்த்தைகள் பேசும் நீ, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என்னிடம் மட்டுமே குறை கண்டுபிடித்து, எப்போதும் பிருதையின் மகன்களை {குந்தியின் மகன்களான பாண்டவர்களை} உயர்வாக மதிக்கிறாய். ஆனால், (இரு தரப்புகளின்) பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்த பிறகுதான் நீ என்னைக் கண்டிக்கிறாயா?


உண்மையில், நீ, க்ஷத்திரி {விதுரர்}, மன்னர் {திருதராஷ்டிரர்}, ஆசான் {துரோணர்}, பெரும்பாட்டன் {பிதாமஹரான பீஷ்மர்} ஆகிய அனைவரும் வேறு எந்த ஏகாதிபதியையும் {பாண்டவர்களை} நிந்திக்காமல் என்னை மட்டுமே நிந்திக்கிறீர்கள். எனினும், என்னால் என்னிடம் எந்தச் சிறு குறையையும் காணமுடியவில்லை. இருப்பினும், (முதிய) மன்னன் {திருதராஷ்டிரர்} உட்பட நீங்கள் அனைவரும் என்னை வெறுக்கிறீர்கள். ஓ! எதிரிகளை அடக்குபவனே {கிருஷ்ணா}, ஆழ்ந்து சிந்தித்தபிறகும் கூட, நான் என்னிடம் எந்தப் பெரிய குறையையும் காணவில்லை, அல்லது ஓ! கேசவா {கிருஷ்ணா} மிகச் சிறிய குறையைக்கூட நான் காணவில்லை.

பாண்டவர்களால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பகடையாட்டத்தில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அவர்கள் வீழ்த்தப்பட்டு, அவர்களது நாட்டைச் சகுனி வென்றார். அதைப் {பகடையாட்டத்தைப்} பொறுத்தவரை என்னுடையது என்று என்ன குற்றம் இருக்க முடியும்?

மறுபுறம், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பாண்டவர்களிடம் வென்ற செல்வத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுக்கும்படி நானே கட்டளையிட்டேன். ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, வெல்லப்படமுடியாத பாண்டவர்கள் மீண்டும் ஒருமுறை பகடையில் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் காட்டுக்குப் போக வேண்டி வந்ததில் எங்களுடைய தவறு ஏதும் இருக்க முடியாது.

குற்றம் சுமத்தும் அளவுக்கு எங்களிடம் உள்ள என்ன தவறைக் கண்டு, அவர்கள் {பாண்டவர்கள்} எங்களைத் தங்கள் எதிரிகளாகக் கருதுகின்றனர்? ஓ! கிருஷ்ணா, (உண்மையில்) பலவீனமாக இருந்தாலும், ஏதோ தாங்கள் பலமானவர்கள் போல, ஏன் பாண்டவர்கள் இவ்வளவு உற்சாகமாக எங்களிடம் சண்டைக்கு முனைகிறார்கள்? நாங்கள் அவர்களுக்கு என்ன {குற்றத்தைச்} செய்தோம்? (அவர்களுக்கு) இழைக்கப்பட்ட எந்தத் தீங்குக்காக, சிருஞ்சயர்களுடன் {பாஞ்சாலர்களுடன்} கூடிய பாண்டுவின் மகன்கள், திருதராஷ்டிரர் மகன்களைக் கொல்ல முயல்கிறார்கள்?

எந்தக் கடும் செயலின் விளைவாலோ, (அவர்களது) வார்த்தைகளாலோ (அதற்கு அஞ்சியோ), அறிவை இழந்து அச்சத்தால் அவர்களை வணங்கமாட்டோம். பாண்டுவின் மகன்களை விட்டுவிடு, நாங்கள் இந்திரனையேகூட (அப்படி) வணங்கமாட்டோம். ஓ! கிருஷ்ணா, ஓ எதிரிகளைக் கொல்பவனே, போரில் எங்களை வெல்லத் தலைப்படுபவனும், க்ஷத்திரிய அறங்களைக் கடைப்பிடிப்பவனுமான எந்த ஒரு மனிதனையும் நான் காணவில்லை.

பாண்டவர்களை விட்டுவிடு, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பீஷ்மர், கிருபர், துரோணர் மற்றும் கர்ணன் ஆகியோரை தேவர்களாலும் கூடப் போரில் வீழ்த்த முடியாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, போரில் ஆயுதங்களால் வெட்டும் நாங்கள், எங்கள் வகைக்குரிய நடைமுறைகளை நோற்கிறோம் என்றால், எங்கள் முடிவு வரும்போது, அதுவும் எங்களைச் சொர்க்கத்திற்கே வழிநடத்திச் செல்லும். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் அம்புப்படுக்கையில் எங்களைக் கிடத்திக் கொள்ள வேண்டும் என்ற இதுவும் க்ஷத்திரியர்களான எங்களின் உயர்ந்த கடமையே ஆகும்.

எங்கள் எதிரிகளுக்குத் தலைவணங்காத எங்களுக்கு, போரில் அம்புப்படுக்கையே கிடைக்குமென்றாலும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, நாங்கள் அதற்காக வருந்த மாட்டோம். உன்னதக் குலத்தில் பிறந்து, க்ஷத்திரிய நடைமுறைகளை உறுதி செய்யும் எவன், தனது உயிரைக் காத்துக்கொள்ள மட்டும் விரும்பி, அச்சத்தால் எதிரியிடம் தலைவணங்குவான்? "(க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை), ஒருவன் எப்போதும் நிமிர்ந்திருக்க வேண்டும், {யாரையும்} எப்போதும் வணங்கக் கூடாது, ஏனெனில் உழைப்பு மட்டுமே ஆண்மையாகும்; வளைவதைவிட, ஒருவன் கணுக்களில் உடைந்தேவிடலாம்" {கணுவில் முறிந்தாலும் முறியலாம். இவ்வுலகில் ஒருவனிடமும் வணங்கக்கூடாது} என்ற மாதங்கருடைய வார்த்தைகளை, தங்கள் சுய நன்மையை விரும்பும் க்ஷத்திரியர்கள் மதிப்புடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

என்னைப் போன்ற ஒருவன் {க்ஷத்திரியன்} வேறு யாரையும் கருதிப் பாராமல் {வணங்காமல்}, பக்திக்காக அந்தணர்களை மட்டுமே வணங்க வேண்டும். (அந்தணர்கள் தவிர்த்த பிறரிடம்) ஒருவன் தனது வாழ்நாள் முழுவதும் மாதங்கரின் சொல்படியே செயல்பட வேண்டும். இதுவே க்ஷத்திரியர்களின் கடமையாகும்; இதுவே எனது கருத்துமாகும்.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, முன்பு அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} என் தந்தை {திருதராஷ்டிரர்} அளித்த நாட்டின் பங்கை, நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களால் {பாண்டவர்களால்} திரும்பப் பெறவே முடியாது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மன்னர் திருதராஷ்டிரர் வாழும் வரை, நாங்கள் மற்றும் அவர்கள் ஆகிய இருதரப்பும் ஆயுதங்களை உறையிலிட்டு விட்டு, ஓ! மாதவா {கிருஷ்ணா} அவரைச் சார்ந்தே வாழ வேண்டும். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் சிறுவனாகவும், பிறரைச் சார்ந்தவனாகவும் இருந்த போது, அறியாமையாலோ, அச்சத்தாலோ கொடுக்கப்பட்டதும், மீண்டும் கொடுக்கப்பட முடியாததுமான நாட்டை, ஓ! விருஷ்ணி குலத்திற்கு மகிழ்ச்சியை அளிப்பவனே {கிருஷ்ணா}, பாண்டவர்களால் மீண்டும் அடைய முடியாது.

தற்போது, ஓ! வலிய கரங்களைக் கொண்ட கேசவா {கிருஷ்ணா}, நான் வாழும்வரை, எங்கள் நிலத்தில் ஒரு கூர்மையான ஊசியின் முனையால் மூடப்படும் பகுதியைக்கூடப் பாண்டவர்களுக்கு எங்களால் வழங்க முடியாது" என்றான் {துரியோதனன்}".


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்