Saturday, June 13, 2015

"துரியோதனனைக் கட்டுங்கள்" என்ற கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 128

"Bind Duryodhana" said Krishna! | Udyoga Parva - Section 128 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –57)

பதிவின் சுருக்கம் : துரியோதனனை நிந்தித்த கிருஷ்ணன், பாண்டவர்களுக்கு அவன் செய்த தீமைகளைச் சுட்டிக் காட்டியது; சமாதானம் செய்யவில்லையெனில் துரியோதனனைக் கௌரவர்களே கட்டிப் போட்டுப் பாண்டவர்களிடம் ஒப்படைப்பார்கள் என்று துரியோதனனிடம் துச்சாசனன் சொன்னது; கௌரவச்சபையை விட்டு துரியோதனன் வெளியேறியது; குலத்தின் நன்மைக்காகத் துரியோதனனைக் கட்டி பாண்டவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சமாதானத்தை நிறுவுவதே நல்லது எனக் கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கோபத்தில் சிவந்த கண்களுடன் இருந்த தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, (ஒரு கணம்) சிந்தித்து, குருக்களின் சபையில் இருந்த துரியோதனனிடம், "வீரர்களின் படுக்கையை நீ விரும்புகிறாயா? அதை உன் ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்த்து நிச்சயமாக நீ அடைவாய். (சிறிது காலம்) காத்திரு, இதைத் தொடர்ந்து பெரும் அழிவு வரப்போகிறது. ஓ! சிறு புத்தி கொண்டவனே {துரியோதனா}, நீ பாண்டவர்களுக்கு எக்குற்றமும் இழைக்கவில்லை என்றா கருதுகிறாய்? (கூடியிருக்கும்) ஏகாதிபதிகளே அதைத் தீர்மானிக்கட்டும்.


ஓ! பாரதா {துரியோதனா}, உயர் ஆன்ம பாண்டவர்களின் செழிப்பைக் கண்டு வருந்திய நீ, சூதாட்டப் போட்டி குறித்துத் திட்டமிட்டு, சுபலனின் மகனுடன் {சகுனியுடன்} சேர்ந்து சதி செய்தாய். ஓ! ஐயா, அறம்சார்ந்தவர்களும், நேர்மையானவர்களும், மேன்மையானவர்களுமான உனது சொந்தங்களால் {பாண்டவர்களால்}, கபடமுள்ள சகுனி போல எப்படி (வேறுவகையில்) தீச்செயலில் ஈடுபட முடியும்?

ஓ! பெரும் அறிவுடையவனே {துரியோதனா}, நல்லோரின் அறிவையும் சூதாட்டம் திருடிவிடும், மேலும், தீயோரைப் பொறுத்தவரையில், பிளவும், கொடிய விளைவுகளுமே அதிலிருந்து {சூதாட்டத்தில் இருந்து} எழும். நீதிமிக்க நடத்தை கொண்டோரிடம் கலந்தாலோசியாமல், உன் பொல்லாத ஆலோசகர்களைக் {அமைச்சர்களைக்} கொண்டு சூதாட்டப் போட்டியின் வடிவில் பெரும் ஆபத்துக்கான அந்தப் பயங்கர ஊற்றுக்கண்ணை நீயே திட்டமிட்டு உற்பத்தி செய்தாய்.

ஒரு சகோதரனின் மனைவியை அவமதிக்கவோ, அல்லது சபைக்கு இழுத்து வந்து, திரௌபதியை நோக்கி நீ பயன்படுத்திய மொழிகளைப்போல அவளிடம் {சகோதரனின் மனைவியிடம்} பேசவோ இயன்றவன் உன்னைப் போல வேறு எவன் இருக்கிறான்? உன்னதமான பெற்றோரைக் கொண்டவளும், அற்புதமான நடத்தை கொண்டவளும், தங்கள் உயிரைவிட அன்புக்குரியவளுமான பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} பட்டத்து ராணியை {திரௌபதியை} நீ இப்படியே {மேற்சொன்னது போலவே} நடத்தினாய்.

எதிரிகளைத் தண்டிப்பவர்களான குந்தியின் மகன்கள் காட்டுக்குப் புறப்பட்ட போது, அவர்களது சபையில் துச்சாசனன் என்ன வார்த்தைகளைச் சொன்னான் என்பதைக் கௌரவர்கள் அனைவரும் அறிவார்களே.

எப்போதும் தங்கள் நடத்தையில் சரியாக இருப்பவர்களும், பேராசையால் கறைபடியாதவர்களும், அறம்பயில்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், நேர்மையானவர்களுமான தனது சொந்தங்களிடமே, இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள இயன்றவன் {உன்னைத் தவிர} வேறு எவன் இருக்கிறான்?

கர்ணன், துச்சாசனன் மற்றும் நீ ஆகியோர், இதயமற்றவர்களும், இழிவானவர்களும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொழியையே திரும்பத்திரும்பப் பேசினீர்கள்.

பாண்டுவின் மகன்கள் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களது தாயோடு {குந்தியோடு} சேர்த்து வாரணாவதத்தில் வைத்து அவர்களை உயிருடன் எரிக்க நீ மிகுந்த சிரமப்பட்டாய். எனினும், அந்த உனது முயற்சி வெற்றியால் மகுடம் சூட்டப்படவில்லை. {உனது அந்த முயற்சி பலிக்கவில்லை}. அதன் பிறகு, தங்கள் தாயுடன் கூடிய பாண்டவர்கள், ஏகசக்கரம் எனும் நகரில், ஓர் அந்தணன் வீட்டில், நீண்ட நாள் மறைந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உனது திட்டமிடல்கள் ஒன்றும் வெற்றியடையவில்லை எனினும், விஷம், பாம்புகள், கயிறுகள் என எல்லா வழிகளிலும் நீ பாண்டவர்களை அழிக்க முயன்றிருக்கிறாய். இப்படிப்பட்ட உணர்வுகளுடன், அவர்களிடம் இவ்வளவு வஞ்சகமாக நடந்து கொண்ட நீ, அந்த உயர் ஆன்ம பாண்டவர்களுக்கு எதிராக எக்குற்றத்தையும் நீ செய்யவில்லை என்று எப்படிச் சொல்கிறாய்?

ஓ! பாவியே {துரியோதனா}, அவர்கள் உன்னிடம் இரந்து {கெஞ்சிக்} கேட்டாலும், அவர்களது தந்தை வழி பங்கான நாட்டை அவர்களுக்குக் கொடுக்க நீ விரும்பவில்லை. செழிப்பை எல்லாம் இழந்து, நீ கீழே கிடத்தப்பட்ட பிறகே, அவர்களுக்கு அதைக் கொடுப்பாய்.

இதயமற்றவன் போலப் பாண்டவர்களுக்கு எண்ணிலடங்கா குற்றங்களை இழைத்துவிட்டு, அவர்களிடம் வஞ்சகமாக நடந்து கொண்டு, வேறுவகையான ஆடையில் {தோற்றத்தில்} தோன்ற இப்போது முயல்கிறாய்.

உனது பெற்றோர், பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரால் மீண்டும் மீண்டும் சமாதானம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும், ஓ! மன்னா {துரியோதனா}, நீ இன்னும் சமாதானத்தைச் செய்து கொள்ளவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கும் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவருக்கும் சமாதானத்தால் உண்டாகும் பயன் பெரியதாகும். எனினும், அமைதி, உனக்குத் தன்னைப் பரிந்துரைக்கவில்லை. {அமைதியை நீ விரும்பவில்லை}. இதில் புத்தி குறைவைக் காட்டிலும் வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

உனது நண்பர்களின் வார்த்தைகளை மீறிய நீ, உனது நன்மைக்கான எதையும் எப்போதும் அடைய முடியாது. ஓ! மன்னா {துரியோதனா}, நீ செய்யப்போகும் செயல், பாவம் நிறைந்ததும் மதிப்பற்றதுமாகும்" என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது, பழியுணர்ச்சி கொண்ட துரியோதனனிடம் பேசிய துச்சாசனன், குருக்களுக்கு மத்தியில் இவ்வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! மன்னா {துரியோதனரே}, நீர் விருப்பத்துடன் பாண்டவர்களிடம் சமாதானம் செய்து கொள்ளவில்லை எனில், உம்மைக் (உமது கையையும் காலையும்) கட்டி, நிச்சயம் கௌரவர்களே அந்தக் குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} ஒப்படைத்துவிடுவார்கள். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனரே}, பீஷ்மர், துரோணர் மற்றும் உமது (சொந்த) தந்தை ஆகியோர், விகர்த்தனன் மகனையும் {கர்ணன்}, உம்மையும், மற்றும் என்னையும் சேர்த்து, நம் மூவரையும், பாண்டவர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள்" என்றான் {துச்சாசனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தீயவனும், வெட்கங்கெட்டவனும், கீழ்ப்படியாதவனும், மரியாதை தெரியாதவனும், வீணனுமான சுயோதனன் {துரியோதனன்}, தனது தம்பியின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, பெரும்பாம்பு போலப் பெருமூச்சுவிட்டு, கோபத்தால் தனது இருக்கையை விட்டு எழுந்து, விதுரன், திருதராஷ்டிரன், பெரும் மன்னனான பாஹ்லீகன், கிருபர், சோமதத்தன், பீஷ்மர், துரோணர், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஆகியோரையும், ஏன், உண்மையில் அவர்கள் {அங்கிருந்தவர்கள்}  அனைவரையும் அவமதிக்கும் வகையில் சபையை விட்டு வெளியேறினான் {துரியோதனன்}. அந்த மனிதர்களில் காளையானவன் {துரியோதனன்}, சபையை விட்டு வெளியேறுவதைக் கண்ட, அவனது தம்பி {துச்சாசனன்}, அவனது அனைத்து ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் அனைத்து மன்னர்கள் ஆகியோர் அவனைப் {துரியோதனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.

கோபத்தில் எழுந்து தனது தம்பிகளுடன் சபையை விட்டு வெளியேறிய துரியோதனனைக் கண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், "அறம் மற்றும் பொருள் ஆகியவற்றைத் தள்ளிவிட்டு கோபத்தின் தூண்டுதலைப் பின்பற்றுபவனுடைய எதிரிகள், அவன் விரைவில் துன்பத்தில் மூழ்குவதைக் கண்டு மகிழ்கிறார்கள். திருதராஷ்டிரனின் இந்தத் தீய மகன் {துரியோதனன்}, (தனது நோக்கங்களை அடைய) உண்மையான வழிகளை அறியாதவனும், தனது ஆட்சியுரிமையை வீணடிக்கும் மூடனும், கோபம் மற்றும் பேராசையின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிபவனுமாவன். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, க்ஷத்திரியர்கள் அனைவரின் {அழிவு} நேரமும் வந்துவிட்டதை நான் காண்கிறேன். ஏனெனில், அந்த மன்னர்கள் அனைவரும் மாயையால் தங்கள் ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} துரியோதனனைப் பின்பற்றிச் செல்கிறார்களே" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் சக்திகளை உடையவனுமான தாமரைக் கண்ணனான தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் (இன்னும் அங்கே) இருந்தோரிடம், "குரு குல முதியவர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக்கும் இதுவும் ஒரு பெரிய அத்துமீறலே. ஏனெனில், அவர்கள் {குரு குலத்தின் பெரியோர்}, அரசுரிமையின் இன்பத்தில் திளைக்கும் அந்தத் தீய மன்னனைப் {துரியோதனனைப்} பலவந்தமாகப் பிடித்துக் கட்டிப் போடவில்லையே.

எதிரிகளைத் தண்டிப்பவர்களே, இதைச் செய்ய நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். இது செய்யப்பட்டால் {துரியோதனன் கட்டப்பட்டால்}, அது நல்ல பலனைக் கொடுக்கக்கூடும். பாவமற்றவர்களே, உண்மையில், உங்கள் சம்மதத்தின் விளைவால், நான் சொல்வதை நீங்கள் ஏற்றால், ஓ! பாரதர்களே, நான் பேசும் வார்த்தைகள் விரைவில் நல்ல விளைவுகளை உண்டாக்கும்.

முதிய போஜ மன்னரால் {உக்ரசேனரால்} தவறாக நெறிபடுத்தப்பட்ட அவரது தீய மகன் {கம்சன்}, தனது தந்தையின் அரசுரிமையை, அவரது வாழ்நாளிலேயே பறித்துக் கொண்டு, மரணத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டான். உண்மையில், உக்ரசேனரின் மகனான கம்சன் தனது உறவினர்கள் அனைவராலும் கைவிடப்பட்டு, சொந்தங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய என்னால், ஒரு பெரும் மோதலில் கொல்லப்பட்டான். எங்கள் சொந்தங்களுடன் கூடிய நாங்கள், ஆஹுகரின் மகனான உக்ரசேனருக்கு உரிய மரியாதையைச் செலுத்தி, போஜர்களின் அரசைப் பெருக்குபவரான அவரை {உக்ரசேனரை மீண்டும்} அரியணையில் நிறுவினோம். யாதவர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகிய அனைவரும், அவர்களது முழு இனத்திற்காகவும், கம்சன் என்ற தனி மனிதனைக் கைவிட்டு, செழிப்பையும், மகிழ்ச்சியையும் அடைந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்களும் அசுரர்களும் போருக்காக அணிவகுத்து, ஆயுதங்களை உயர்த்திய போது, அனைத்து உயிரினங்களின் தலைவனான பரமேஷ்டின் {பிரம்மா} (நம்மிடையே உள்ள இந்த வழக்கிற்கும் பொருந்தும்படி) இப்படியே சொன்னான். உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உலகத்தில் வசித்தோர் அனைவரும் இரு கட்சிகளாகப் பிரிந்து, கொல்லப்படும்போது, தெய்வீகமானவனும், அண்டம் தோன்ற புனிதக் காரணனுமான அந்தப் படைப்பாளன் {பிரம்மன்}, {தனக்குள்} "{இந்தப் போரில்} தானவர்களுடன் கூடிய அசுரர்களும் தைத்தியர்களும் வீழ்த்தப்படுவார்கள். ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள் மற்றும் தேவலோகவாசிகள் வெல்வார்கள். உண்மையில், தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும், கந்தர்வர்களும், நாகர்களும், ராட்சசர்களும் இந்தப் போரில் கோபத்தால் ஒருவரை ஒருவர் கொல்வார்கள்" என்றான் {என்று நினைத்தான்}.

இப்படி நினைத்தவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவனுமான பரமேஷ்டின் {பிரம்மா}, தர்மனை {தர்மதேவனை} நோக்கி, "தைத்தியர்களையும், தானவர்களையும் கட்டிப்போட்டு, அவர்களை வருணனிடம் ஒப்படைப்பாயாக" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தர்மன், பரமேஷ்டினின் {பிரம்மனின்} கட்டளையின் பேரால் தைத்தியர்களையும் தானவர்களையும் கட்டி வருணனிடம் ஒப்படைத்தான். நீர்நிலைகளின் தலைவனான வருணன், தர்மனின் {யமனின்} பாசக்கயிராலும், தன்னுடைய பாசக் கயிறாலும் அந்தத் தானவர்களைக் கட்டி, கடலின் ஆழங்களில் அவர்களை வைத்துக் கவனமாகப் பாதுகாத்தான்.

அதே வழியில் துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் சகுனி, துச்சாசனன் ஆகியோரைக் கட்டி பாண்டவர்களிடம் ஒப்படைப்பீராக. ஒரு குடும்பத்துக்காக, தனிப்பட்ட ஒருவனைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமத்திற்காக, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம். ஒரு மாகாணத்திற்காக {நாட்டிற்காக}, ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம். இறுதியாக, ஒருவனின் சுயத்துக்காக, முழுப் பூமியையும் தியாகம் செய்யலாம். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் கட்டிப் போட்டு, பாண்டவர்களுடன் சமாதானம் செய்வீராக. ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, உம் நிமித்தமாக க்ஷத்திரிய குலம் முழுமையும் கொல்லப்படாதிருக்கட்டும்" என்றான் {கிருஷ்ணன்}". 


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்