Wednesday, June 17, 2015

ஜெயம் எனும் வரலாறு! - உத்யோக பர்வம் பகுதி 136

The history called Jaya! | Udyoga Parva - Section 136 | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் – 65) {விதுலோபாக்யானம் - 4}

பதிவின் சுருக்கம் : நண்பர்களின் துணையால் கிட்டும் நன்மையை விதுலை சொல்வது; சஞ்சயன் அறியாத பல பொக்கிஷ அறைகள் உண்டென்றும், அதைத் தான் மட்டுமே அறிந்திருப்பதாகவும் விதுலை சொன்னது; தனது தாயின் வார்த்தைகளைக் கேட்ட சஞ்சயன், தனது துயரில் இருந்து விடுபடுவது; விதுலை சஞ்சயன் உரையாடல் அடங்கிய வரலாற்றைக் கேட்பதனால் உண்டாகும் பலனைக் குந்தி சொன்னது...

தாய் விதுலை - மகன் சஞ்சயன்
அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்} சொன்னாள், "ஒரு மன்னன் எந்தவிதமான ஆபத்தில் தோல்வியுற்றாலும், அவன் அதைக் காட்டிக் கொள்ளக்கூடாது {அதற்கு அஞ்சக்கூடாது}. அச்சத்தால் பாதிக்கப்படும் மன்னனைக் கண்டு, படை, ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் முழு நாடும் அச்சம் அடைந்து, குடிமக்கள் அனைவரும் {கருத்தில்} ஒற்றுமையற்றவர்களாக ஆகிறார்கள். சிலர் சென்று எதிரியின் தரப்பை அரவணைப்பார்கள்; பிறரோ எளிதாக மன்னனைக் கைவிட்டுவிடுவார்கள்; ஏற்கனவே {மன்னனிடம்} அவமானத்தை அடைந்த மேலும் பிறர், தாக்குவதற்கே கூட முயல்வார்கள்.


எனினும், நெருக்கமான நண்பர்கள், அவனது தரப்பில் எப்போதும் காத்திருக்கிறார்கள். அவனது நன்மையை அவர்கள் விரும்பினாலும், எதையும் செய்ய இயலாமல், கட்டி வைக்கப்பட்டுள்ள கன்றுக்காகக் காத்திருக்கும் மாட்டைப் போல ஆதரவற்ற நிலையில் காத்திருக்கிறார்கள். துயரத்தில் மூழ்கியிருக்கும் நண்பர்களுக்காக வருந்தும் நண்பர்களைப் போல, துயரத்தில் மூழ்கி இருக்கும் தங்கள் தலைவனைக் கண்டு நலன்விரும்பிகளும் வருந்துவார்கள்.

முன்பு நீயும், உன்னால் வழிபடப்பட்ட பல நண்பர்களை கொண்டிருந்தாய். உனது நாட்டுக்காக உனது இதயத்தை உணர்பவர்களும், உனது துன்பங்களைத் தங்கள் துன்பமாகவே எடுத்துக் கொள்பவர்களுமான பல நண்பர்களை நீயும் கொண்டிருக்கிறாய். அந்த நண்பர்களை நீ அச்சுறுத்தாதே. நீ அச்சத்திலிருப்பதைக் கண்டு அவர்கள் உன்னைக் கைவிடும் நிலையை அனுபவிக்காதே.

உனது பலம், ஆண்மை, புரிதல் {புத்தி} ஆகியவற்றைச் சோதிப்பதற்காகவும், உனக்கு உற்சாகமூட்ட விரும்பியும், உனது சக்தியை அதிகரிக்கவுமே நான் இவை அனைத்தையும் உன்னிடம் சொல்கிறேன். நான் சொன்னது உனக்குப் புரிந்தால், நான் சொன்னது முறையானதாகவும், போதுமானதாகவும் உனக்குத் தோன்றினால், ஓ! சஞ்சயா, உனது பொறுமையைத் திரட்டி, வெற்றிக்காக உனது இடுப்புக் கச்சையை இறுகக் கட்டுவாயாக.

நீ அறியாதவையும், பெரும் எண்ணிக்கையும் கொண்ட, பல கருவூல வீடுகள் {பொக்கிஷ அறைகள்} நமக்குண்டு. அதன் இருப்பை வேறு யாரும் அறியமாட்டார்கள்; நான் மட்டுமே அறிவேன். அவை அனைத்தையும் நான் உனக்கு அளிக்கிறேன்.

ஓ! சஞ்சயா, உன் மகிழ்ச்சி மற்றும் துயரங்களில் உனக்கு ஆதரவாக இருப்பவர்களும், ஓ! வீரா {சஞ்சயா}, போர்க்களத்தில் இருந்து பின்வாங்காதவர்களுமான ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் உனக்கு உண்டு. ஓ! எதிரிகளை வாட்டுபவனே, இது போன்ற கூட்டாளிகள், தனது நன்மையை விரும்பி, தனக்கு ஏற்புடையதைச் செய்யும் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களாகத் தங்கள் பங்கை எப்போதும் சரியாகச் செய்வார்கள்" என்றாள் {விதுலை}."

குந்தி {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தாள், "அற்புதமான வார்த்தைகளும், அறிவும் நிரம்பிய தனது தாயின் {தாய் விதுலையின்} பேச்சைக் கேட்டதும், அந்த இளவரசன் சஞ்சயன், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவனாக இல்லாவிடினும், அவனது இதயத்தில் இருந்த துயரம் உடனே விலகியது. அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "என் எதிர்கால நலனை கவனிக்கும் உன்னை எனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் நான், நிச்சயம் எனது தந்தைவழி நாட்டை மீட்பேன், அல்லது அந்த முயற்சியில் அழிந்து போவேன். உனது சொற்பொழிவின் போது நான் கிட்டத்தட்ட அமைதியாகக் கேட்பவனாகவே இருந்தேன். அக்காரியம் குறித்து நான் அதிகம் கேட்க வேண்டும் என்பதற்காகவும், {அது குறித்து} உன்னை மேலும் விரிவாகப் பேச வைப்பதற்காகவுமே அப்போதைக்கப்போது ஒரு வார்த்தையை இடையிடையில் நான் கேட்டேன் {பேசினேன்}. அமுதத்தைக் குடிப்பவன் போதும் என்று சொல்லாதது போல, உனது வார்த்தைகளும் எனக்குப் போதுமெனத் தோன்றவில்லை. எந்தக் கூட்டாளிகளிடமிருந்தாவது ஆதரவைப் பெற்று, எனது இடைக்கச்சைகளை இறுகக் கட்டிக் கொண்டு, எதிரிகளை ஒடுக்கி நான் வெற்றியடைவதைப் பார்" என்றான் {சஞ்சயன்}."

குந்தி {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தாள், "தனது தாயின் {தாய் விதுலையின்} வார்த்தை அம்புகளால் துளைக்கப்பட்ட மகன், பெருமைமிக்க இனத்தைச் சேர்ந்த குதிரையைப் போல எழுந்து, தனது தாய் சுட்டிக்காட்டியவை அனைத்தையும் சாதித்தான்.

சக்தியை மேம்படுத்தி, பலத்தை ஈர்க்கும் இந்த அற்புத வரலாற்றை, எதிரிகளால் பாதிப்படைந்து, துயரத்தில் மூழ்கியிருக்கும் தனது மன்னனை, அவனது அமைச்சர் ஒருவர் கேட்கச் செய்ய வேண்டும். உண்மையில், இந்த வரலாறு ஜெயம் என்று அழைக்கப்படுகிறது. இது வெற்றி விரும்பும் அனைவராலும் கேட்கப்பட வேண்டும்.

உண்மையில், இதைக் கேட்கும் ஒருவன், தனது எதிரிகளைக் கலக்கி இந்த முழு உலகையும் விரைவில் அடக்கி விடுவான். இந்த வரலாறு ஒரு பெண் வீரமகனை ஈன்றெடுக்கச் செய்யும். இதைத் திரும்பத் திரும்பக் கேட்ட ஒரு பெண், நிச்சயமாக ஒரு வீரனையே ஈன்றெடுப்பாள்.

இதைக் கேட்கும் {இந்த வரலாற்றைக் கேட்கும்} ஒரு க்ஷத்திரியப் பெண், தடுக்கமுடியா ஆற்றல் கொண்டவனாக, கல்வியில் முதன்மையானவனாக, தவத்துறவுகளில் முதன்மையானவனாக, தயாளத்தில் முதன்மையானவனாக, தவத்துக்குத் தன்னை அர்ப்பணிப்பவனாக, பிரம்ம அழகுடன் சுடர்விடுபவனாக, எண்ணற்ற நன்மைகள் கொண்டவனாக, பிரகாசத்தில் ஒளிர்பவனாக, பெரும் பலம் கொண்டவனாக, அருளப்பட்டவனாக, (போரில்) தாங்கிக்கொள்ளப்பட முடியாதவனாக, எப்போதும் வெல்பவனாக, ஒற்றப்பற்றவனாக, தீயவர்களைத் தண்டிப்பவனாக, அறம் பயில்வோர் அனைவரையும் பாதுகாப்பவனாக ஒரு மகனை ஈன்றெடுப்பாள்" என்றாள் {குந்தி}".


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்