Wednesday, June 17, 2015

எதிரியின் எதிரிகளை ஒன்று சேர்! - உத்யோக பர்வம் பகுதி 135

Unite your enemy's foes! | Udyoga Parva - Section 135 | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் – 64) {விதுலோபாக்யானம் - 3}

பதிவின் சுருக்கம் : சஞ்சயன் தன் தாய் விதுலையிடம்,  மகனென்றும் பாராமல் தன்னிடம் இப்படிப் பேசுவது முறையா என வருந்துவது; இழிநிலையை அடையும் மகனைப் பாசத்தால் கண்டிக்காமல் இருத்தல், அந்தப் பாசத்துக்கே இழுக்கு என விதுலை சொன்னது; வெற்றியடையும் வழிமுறைகள் தெரிந்தால் தனக்குச் சொல்லுமாறு சஞ்சயன் விதுலையிடம் கேட்டது; எதிரியை வெல்லும் வழிமுறைகளை விதுலை சொன்னது...

குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், "தனது தாயின் {தாய் விதுலையின்} வார்த்தைகளைக் கேட்ட மகன் {சஞ்சயன் விதுலையிடம்}, "ஓ! இரக்கமற்றவளும், கோபம் நிறைந்தவளுமான தாயே, ஓ! உலகியல் வீரத்தை உயர்வாக நினைப்பவளே, உனது இதயம் உருக்காலாகி {இரும்பாலாகி} வடிவம் பெற்றது என்பது உறுதி. க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ; அதன் காரணமாகத்தானே என்னை அந்நியனைப் போலக் கருதி, என்னை நீ போரிடத் தூண்டுகிறாய். அதன்காரணமாகத் தானே உனது ஒரே மகனான என்னிடம் இத்தகு வார்த்தைகளைப் பேசுகிறாய். உனது மகனான என்னைக் காணாமல், என்னிடம் இருந்து நீ பிரிந்துவிட்டால், இந்த முழு உலகத்தாலும் உனக்கு என்ன பயன்? உனது ஆபரணங்கள் அனைத்தாலும், மகிழ்ச்சிக்கான வழிகள் அனைத்தாலும் இந்த வாழ்வில் உனக்கு என்னதான் பயன் இருக்கும்?" என்று கேட்டான் {சஞ்சயன்}.


அதற்கு அந்தத் தாய் {விதுலை சஞ்சயனிடம்}, "ஓ! மகனே {சஞ்சயா}, அறிவுடையோர், தாங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தையும் அறம் மற்றும் பொருள் ஆகியவற்றின் காரணமாகவே செய்கின்றனர். அறம் மற்றும் பொருள் ஆகியவற்றை மட்டுமே கண்டு, ஓ! சஞ்சயா நான் உன்னைப் போரிடத் தூண்டுகிறேன். உனது ஆற்றலை வெளிப்படுத்தத் தக்க தருணம் வந்துவிட்டது. இத்தகு நேரத்தில் நீ செயல்படவில்லையெனில், மக்களால் அவமதிக்கப்பட்டு, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றையே நீ செய்பவனாவாய்.

ஓ! சஞ்சயா, புகழ்க்கேட்டால் கறைபடப்போகும் உன்னிடம் (பாசத்தால்) நான் எதையும் சொல்லவில்லையென்றால், பிறகு அந்தப் பாசம், பெண்கழுதை தன் குட்டியிடம் கொண்டதைப் போல மதிப்பற்றத்தாகவும், காரணமற்றதாகவும் ஆகும். அறிவுடையோரால் அங்கீகரிக்கப்படாததும், மூடர்களால் பின்பற்றப்படுவதுமான பாதையில் நீ நடக்காதே. இங்கே {மனிதர்களிடம்} இருக்கும் அறியாமை பெரியதாக இருக்கிறது. உலகின் எண்ணற்ற உயிரினங்கள் அதையே {அறியாமையையே} புகலிடமாகக் கொண்டிருக்கின்றன.

எது எப்படியிருப்பினும், நீ அறிவுடையோரின் நடத்தையைப் பின்பற்றினால், எனது அன்புக்குரியவனாக இருப்பாய். உண்மையில், அறம் மற்றும் பொருளை அறிந்து, கடவுளை மேலானவனாகக் கொண்டு, மனித உழைப்பை நம்பியவனாக, நல்லோரின் நடத்தையை பின்பற்றுபவனாக நீ இருந்தால், அதன் காரணமாகவே நீ எனது அன்புக்குரியவனாவாய்; மற்ற எந்த வழிகளிலும் அப்படி ஆக மாட்டாய். எவன் நன்கு அறிவுறுத்தப்பட்ட பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் கண்டு மகிழ்கிறானோ அவனே உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். மறுபுறம், எவன் முயற்சியற்ற, அடக்கமில்லாத, தீய மனம் கொண்ட மகனைக் கண்டு மகிழ்கிறானோ, அவன் ஒரு மகனால் எது அடையப்பட வேண்டும் என்று விரும்புவானோ, அந்த நோக்கத்தை அடையமாட்டான். சரியானதை எப்போதும் செய்யாமல், கண்டிக்கத்தக்கதையே எப்போதும் செய்பவன் இங்கேயும், இதன் பிறகும் {மறு உலகிலும்} இன்பத்தை அடைவதில்லை.

ஓ! சஞ்சயா, ஒரு க்ஷத்திரியன் போருக்காகவும், வெற்றிக்காகவுமே படைக்கப்பட்டிருக்கிறான். {போரில்} வென்றாலும், அழிந்தாலும் அவன் இந்திரலோகத்தை அடைகிறான். அடிபணியச் செய்து எதிரிகளைக் குறைக்கும் ஒரு க்ஷத்திரியன் அடையும் இன்பம், புனிதமான இந்திரலோகத்தில் உள்ள சொர்க்கத்தில் கூட இருக்காது. கோபத்தில் எரிந்து கொண்டிருப்பவனும், பெரும் சக்தி படைத்தவனுமான ஒரு க்ஷத்திரியன், பல முறை தோல்வியுற்றாலும், தனது எதிரிகளை வீழ்த்த விரும்பி அவன் காத்திருக்க வேண்டும். உயிரையும் விடாமல், எதிரிகளையும் கொல்லாமல் இருக்கும் ஒருவனால் எவ்வழியில்தான் மன அமைதியை அடைய முடியும்?

அறிவுடையவன் எவனும், சிறியது எதையும் ஏற்பில்லாதவையாகவே கருதுவான். சிறியது எதையும் ஏற்கும் ஒருவனுக்கு, அந்தச் சிறிய விவகாரமே வலியின் ஊற்றுக்கண்ணாக (முழுமையாக) ஆகும். விரும்பியதை அடையாத ஒருவன் விரைவில் இழிந்தவனாகிறான். உண்மையில், அவன் அனைத்துத் தேவைகளையும் உணர்ந்து கடலுக்குள் நுழையும் கங்கையாகக் காணாமல் போகிறான்" என்றாள் {விதுலை}.

அதற்கு அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "ஓ! தாயே, நீ உனது மகனின் முன்பு, இத்தகு கருத்துகளை வெளியிடக்கூடாது. அமைதியான ஊமை ஒருத்திபோல, அவனது பக்கத்தில் இருந்து, இப்போது அவனுக்குக் கருணை காட்டுவாயாக" என்றான்.

அதற்கு அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்}, "நீ இப்படிச் சொல்வதால் நான் பெரும் மனநிறைவு கொள்கிறேன். (எனது கடமை என்ன என்று உன்னால்) உந்தப்பட்டதால் தானோ என்னவோ, நான் உன்னை இப்படித் தூண்டுகிறேன். எனவே, (நீ எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய) நான் இன்னும் அதிகமாக உன்னைத் தூண்டுவேன். சைந்தவர்கள் {சிந்துக்கள்} அனைவரும் கொல்லப்பட்டு, முழுமையான வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உன்னைக் கண்ட பிறகே உண்மையில் நான் உன்னை மதிப்பேன்", என்றாள் {விதுலை}.

அதற்கு அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "செல்வம் இல்லாமல், கூட்டாளிகள் இல்லாமல், வெற்றி எப்படி எனதாகும்? மிகப் பரிதாபகரமான எனது நிலையை உணர்ந்தறிந்தே, சொர்க்கத்தின் மேல் உள்ள ஆசையைத் திருப்பிக் கொள்ளும் தீயவன் போல, நாட்டின் மீது கொண்ட எனது ஆசையை நானே திருப்பிக்கொண்டேன். எனவே, ஓ! முதிர்ந்த அறிவு கொண்டவளே, (இவை அனைத்தையும் இது நேர் செய்யும் என) எந்த வழிகளையாவது நீ கண்டால், அது குறித்து முழுமையாகச் சொல்வாயாக என நான் கேட்கிறேன். ஏனெனில், நீ எனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் நான் செய்வேன்" என்றான் {சஞ்சயன்}.

அதற்கு அந்தத் தாய் {விதுலை சஞ்சயனிடம்}, "ஓ! மகனே, தோல்வியை எதிர்பார்த்து, நீ உனது ஆன்மாவை அவமதிக்காதே {உன்னையே அவமதித்துக் கொள்ளாதே}. அடையப்படாத பொருட்கள் அடையப்பட்டிருக்கின்றன; அடையப்பட்டனவோ தொலைக்கப்பட்டுள்ளன. கோபத்தாலோ, மூடத்தனத்தாலோ பொருட்களின் சாதனையை முயற்சிக்கக்கூடாது. ஓ! மகனே {சஞ்சயா}, அனைத்து செயல்களிலும் வெற்றியை அடைவது என்பது உறுதியில்லாதது. வெற்றி உறுதியற்றது; சில வேளைகளில் வெல்லலாம், சில வேளைகளில் அது முடியாமல் போகலாம் என்று அறிந்தும் மக்கள் செயல்படுகிறார்கள். எனினும், செயலில் இருந்து விலகும் ஒருவன் வெற்றியை அடைவதே இல்லை. உழைப்பு {முயற்சி} இல்லை என்றால் ஒரே முடிவுதான், அது வெற்றி இல்லை என்பதாகும். எனினும், உழைப்பின் {முயற்சியின்} போது வெற்றியை அடைவது, அல்லது அதை அடையாதது என்ற இரு நிலைகள் எப்போதுமே உண்டு.

ஓ! இளவரசே {சஞ்சயா}, விளைவுகளைப் பொறுத்தவரை அனைத்துச் செயல்களிலும் அவை உறுதியற்றவைதான் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்பவன், வெற்றி மற்றும் செழிப்பு ஆகிய இரண்டையும் தான் அடையும்படி செய்கிறான். அப்படிப்பட்ட நம்பிக்கையுடன் ஒருவன், சோம்பல் அனைத்தையும் கைவிட்டு, முயற்சியுடன் எழுந்து, ஒவ்வொரு செயலையும் செய்கிறான். ஓ! மகனே {சஞ்சயா}, செயல்களில் ஈடுபடும் {கர்மாவைச் செய்யும்} அறிவுள்ள மன்னன் ஒருவன், தேவர்களையும், அந்தணர்களையும் தன் பக்கத்ததில் வைத்துக் கொண்டு, மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்து, விரைவில் வெற்றியை அடைகிறான். கிழக்கை வாரியணைக்கும் சூரியனைப் போல, செழிப்பின் தேவதை அவனை {செயல்படுபவனை} அரவணைப்பாள். {சுற்றிக் கொண்டு சூரியன் மீண்டும் கிழக்கு திசைக்கு வருவதைப் போல, சுற்றிக் கொண்டு லட்சுமி அவனை நோக்கி வருகிறாள்}.

நான் உனக்கு உரைத்த பல்வேறு பரிந்துரைகளுக்கும், வழிகளுக்கும், ஊக்கமூட்டும் உரைகளுக்கும் தகுந்தவனாகவே உன்னை நான் காண்கிறேன். (இப்போது) உனது ஆற்றலை வெளிப்படுத்து. அனைத்து முயற்சிகளையும் செய்து, உனது கருத்தில் கொண்டுள்ள பொருளை வெல்வதே உனக்குத் தகும். (உனது எதிரிகளிடம்) கோபத்தில் இருப்போரையும், பேராசை கொண்டோரையும், (உனது எதிரியால்) பலவீனமாக்கப்பட்டவர்களையும், (உனது எதிரிகளிடம்) பொறாமை கொண்டோரையும், (உனது எதிரிகளால்) அவமதிப்புக்கு உள்ளானவர்களையும், அதீத செருக்கின் காரணமாக (உனது எதிரிகளால்) எப்போதும் அறைகூவி அழைக்கப்படுபவர்களையும், இந்த வகைகளைச் சார்ந்த {எதிரியின் எதிரிகளான} அத்தனை பேரையும் உன் பக்கத்தில் ஒன்றாகச் சேர்ப்பாயாக.

இவ்வழிகளில் நீ மேகங்களைச் சிதறடிக்கும் வகையில், மூர்க்கமாகவும், கடுமையாகவும் எழும் சூறாவளியைப் போன்று, (உனது எதிரியின்) பலமிக்கப் படையை உன்னால் உடைக்க முடியும். அவர்களுக்கு (உனது கூட்டாளிகளாக இருப்போருக்கு), உரிய காலத்திற்கு முன்பே செல்வத்தையும் உணவையும் அளித்து, எப்போதும் அவர்களுக்காகச் செயல்பட்டு, அவர்கள் அனைவரிடமும் இனிமையாகப் பேசுவாயாக. பிறகு அவர்கள் உனக்கு நன்மையைச் செய்து, உன்னைத் தங்கள் தலையில் {முன்பு} வைப்பார்கள்.

தன் எதிரி உயிரைத் துச்சமாக நினைக்கிறான், என எப்போது உனது எதிரி அறிவானோ, அப்போது அவன் {அந்த எதிரி} தன் அறையிலேயே வாழும் பாம்பைப் போல அவனை {உன்னை} எண்ணி நடுங்குவானல்லவா? ஒருவனைப் பலம் நிறைந்தவனாக அறிந்து கொள்ளும் அவனது எதிரி, அவனை அடக்க முயற்சிக்க மாட்டான். சமரசக் கலைகள், கொடை மற்றும் விருப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவனை {தன் எதிரியை} நண்பனாக்கவே முயற்சிப்பான். அதுவும் அவன் அடக்கப்பட்டதுக்கு ஒப்பானதே ஆகும்.

சமரசக் கலை மூலம் நிவாரணம் பெறுவதால், ஒருவன் தனது செல்வத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். ஒருவனது செல்வம் அதிகரித்தால், அவன் வழிபடப்பட்டு, தஞ்சமளிப்பவனாக அவனது நண்பர்களால் அவன் வேண்டப்படுவான். ஒருவன் செல்வத்தை இழந்தாலோ, அவன் நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு, அதைவிட அதிகமாக அவநம்பிக்கையடைந்து, அவர்களால் வெறுக்கப்படும் நிலையும் உண்டாகும். தனது எதிரியிடமே சேர்ந்து நம்பிக்கையுடன் வாழ்பவனால், தனது நாட்டை மீண்டும் மீட்பது முற்றிலும் முடியாததாகும்" என்றாள் {விதுலை}."


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்