Thursday, June 18, 2015

கண்ணன் தேரில் கர்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 137

Karna on the chariot of Krishna! | Udyoga Parva - Section 137 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –66)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன், பீமன், திரௌபதி, மாத்ரியின் மகன்கள் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டிய  செய்தியை அவள் கிருஷ்ணனிடம் சொல்லியனுப்பியது; கர்ணனைத் தனது தேரில் ஏற்றிக் கொண்ட கிருஷ்ணன் அவனோடு நெடுநேரம் வாதிட்டது; கர்ணனை வழியனுப்பிய கிருஷ்ணன், விரைந்து உபப்லாவ்யத்தை அடைந்தது...

குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், "இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொல்வாயாக, "நீ பிறந்த போது, பிரசவ அறையில் மங்கையர் சூழ நான் அமர்ந்திருந்தேன். அப்போது வானத்தில் இருந்து ஒரு மகிழ்ச்சிகரமான தெய்வீகக் குரல், "ஓ! குந்தி, இந்த உனது மகன் ஆயிரம் கண் படைத்த தேவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனாவான். கூடியிருக்கும் குருக்கள் அனைவரையும் இவன் {அர்ஜுனன்} போரில் வீழ்த்துவான். பீமனின் துணை கொண்டு, இவன் முழு உலகையும் வெல்வான். இவனது புகழ் சொர்க்கத்தையே தொடும். வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்ட இவன் {அர்ஜுனன்} போரில் குருக்களைக் கொன்று, தொலைந்து போன தனது தந்தை {பாண்டு} வழி நாட்டை மீட்பான். பெரும் செழிப்புடைய இவன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் கூடி, மூன்று பெரும் வேள்விகளைச் செய்வான்",என்றது.


ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் பீபத்சு {அர்ஜுனன்} எப்படி உண்மையில் {சத்தியத்தில்} நிலையானவன் என்பதையும், எப்படித் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் என்பதையும் நீ அறிவாய். ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, அந்தத் (தெய்வீகக்) குரல் சொன்னது போலவே ஆகட்டும். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நீதி என்ற ஒன்று உண்டென்றால், அந்த வார்த்தைகள் உண்மையாகட்டும். நீயொருவனாகவே அவை அனைத்தையும் சாதிப்பாய். அந்தக் குரல் சொன்ன எதையும் நான் சந்தேகிக்கவில்லை. அனைத்துக்கும் மேன்மையான நீதியை நான் வணங்குகிறேன். நீதியே அனைத்து உயிர்களையும் தாங்குகிறது. நீ இவ்வார்த்தைகளையே தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொல்வாயாக.

மேலும், எப்போதும் உழைக்க {முயற்சி செய்யத்} தயாராக இருக்கும் விருகோதரனிடம் {பீமனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம் {பீமனிடம்}, "ஒரு க்ஷத்திரியப் பெண் ஒரு மகனைப் பெறும் காரணத்திற்கான நேரம் வந்துவிட்டது! பகை இருக்கும்போது, எப்போதும், மனிதர்களில் முதன்மையானவர்கள் உற்சாகமற்றுப் போவதில்லை", என்று சொல்வாயாக. பீமனின் மனநிலையை நீ அறிவாய். எதிரிகளைக் கலங்கடிப்படிப்பவனான அவன் {பீமன்}, தனது எதிரிகளை அழிக்கும் வரை எப்போதும் தணியமாட்டான் {ஓயமாட்டான்}.

பிறகு நீ, ஓ! மாதவா {கிருஷ்ணா}, பெரும் புகழ்கொண்டவளும், உயர் ஆன்ம பாண்டுவின் மருமகளும், மங்கலகரமானவளுமான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, "ஓ! உயர்ந்த அருள் கொண்டவளே, ஓ! உன்னதமான பெற்றோரைக் கொண்டவளே, ஓ! பெரும்புகழ் கொண்டவளே, எனது மகன்களிடம் எப்போதும் நீ நடந்து கொள்ளும் இனிமையான விதம், உண்மையில் உனக்குத் தகுந்ததே", என்று சொல்வாயாக.

மேலும், க்ஷத்திரிய அறங்களுக்குத் தங்களை எப்போதும் அர்ப்பணித்திருக்கும் மாத்ரியின் மகன்களிடம் {நகுலன் மற்றும் சகாதேவனிடம்}, "உயிரைவிட, வீரத்தினால் பெறப்படும் இன்பங்களைப் பெரிதாக விரும்புங்கள். வீரத்தினால் வெல்லப்பட்ட பொருட்கள், க்ஷத்திரிய நடைமுறைகளின் படி வாழும் ஒருவனின் இதயத்துக்கு எப்போதும் இனிமையானவையாக இருக்கும். அனைத்து வகை அறங்களையும் அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உங்கள் கண் முன்பாகவே பாஞ்சால இளவரசி {திரௌபதி} கொடூரமான, தவறான அடைமொழிகளால் அழைக்கப்பட்டாள். அந்த அவமானத்தை எவனால் மன்னிக்கமுடியும்?", என்று சொல்வாயாக.

அவர்கள் {பாண்டவர்கள்} நாட்டை இழந்தது எனக்குத் துயரை அளிக்கவில்லை. பகடையில் அவர்கள் அடைந்த தோல்வி எனக்குத் துயரை அளிக்கவில்லை. ஆனால், உன்னதமானவளும், அழகானவளுமான திரௌபதி சபைக்கு மத்தியில் அழுதுகொண்டிருந்த போது, அந்தக் கொடூரமான, அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளைக் கேட்க நேர்ந்ததே எனக்குப் பெரும் துயரை அளித்தது. ஐயோ, க்ஷத்திரிய அறங்களுக்குத் தன்னை எப்போதும் அர்ப்பணித்துக் கொண்டவளும், மிக அழகானவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, இத்தகு பலம் நிறைந்த பாதுகாவலர்களை மணந்திருந்தாலும், அச்சந்தர்ப்பத்தில் எந்தப் பாதுகாவலனையும் அவள் {திரௌபதி} காணவில்லை.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, மனிதர்களில் புலியும், ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனனிடம், திரௌபதி சுட்டிக் காட்டும் பாதையில் எப்போதும் அவன் நடக்க வேண்டும் என்று சொல்வாயாக. கேசவா {கிருஷ்ணா}, அனைத்தையும் அழிக்கும் யமன்களும், கடுமையான இணையுமான பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர், தேவர்களையே கூட அனைத்து உயிரினங்களின் வழியில் செல்ல வைக்க இயன்றவர்கள் {தேவர்களைப் பரகதி அடையச் செய்வார்கள்} என்பதை நீ நன்கு அறிவாய். (அப்படிப்பட்ட அவர்களுக்கு மனைவியான) கிருஷ்ணை சபையில் இழுத்துவரப்பட்டது அவர்களை அவமதித்ததாகாதா?

ஓ! கேசவா {கிருஷ்ணா}, குருகுலத்தின் வீரர்கள் அனைவரின் முன்னிலையிலும், பீமனிடம் துச்சாசனன் பேசிய கொடூரமான, கடுமையான வார்த்தைகள் அனைத்தையும் அவர்களுக்கு ஞாபகப்படுத்துவாயாக. (என் பெயரால்) பாண்டவர்கள், அவர்களது பிள்ளைகள் மற்றும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} நலன்களை விசாரிப்பாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் நன்றாக இருக்கிறேன் என்று அவர்களிடம் சொல்வாயாக. மங்கலகரமான உனது வழியில் சென்று, நீ எனது மகன்களைக் காப்பாயாக", என்றாள் {குந்தி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவளை {குந்தியை} வணங்கி வலம் வந்தவனும் வலிய கரங்களைக் கொண்டவனும், சிங்கத்தின் கம்பீரமான நடைக்கு ஒப்பான நடையைக் கொண்டவனுமான கிருஷ்ணன், பிருதையின் {குந்தியின்} இல்லத்தில் இருந்து வெளிப்பட்டான். பிறகு அவன் {கிருஷ்ணன்}, (தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களான) பீஷ்மரைத் தலைமையாகக் கொண்ட குருக்களின் தலைவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பி, கர்ணனைத் தனது தேரில் ஏற்றிக் கொண்டு, சாத்யகியுடன் (குருக்களின் நகரை) விட்டுச் சென்றான்.

அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} சென்ற பிறகு, அவனுடன் {கிருஷ்ணனுடன்} தொடர்புடைய அற்புதமான ஆச்சரியமான சம்பவத்தைக் குறித்து, ஒன்றாகக் கூடியிருந்த குருக்கள் பேசத் தொடங்கினர். அவர்கள், "அறியாமையில் மூழ்கியிருக்கும் முழு உலகமும் மரணவலையில் சிக்கியிருக்கிறது" என்றனர். மேலும் அவர்கள், "துரியோதனனின் மூடத்தனத்தால், இவை அனைத்தும் அழிவுக்குள்ளாகப் போகின்றன" என்றும் சொன்னார்கள்.

(குரு) நகரத்தில் இருந்து வெளியேறியவனும், முன்னேறியவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், நீண்ட நேரம் கர்ணனுடன் வாதிட்டுக் கொண்டிருந்தான். யாதவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பவனான அவன் {கிருஷ்ணன்}, பிறகு கர்ணனுக்கு விடைகொடுத்து, தனது குதிரைகளை அதிவேகமாகச் செலுத்தினான். தாருகனால் செலுத்தப்பட்ட அந்த மனோவேகம் கொண்ட குதிரைகள், வானத்தைக் குடித்துவிடுவதைப் போலச் சென்றன. நெடும் வழியை விரைவாகக் கடக்கும் வேகமான பருந்தைப் போல, சாரங்கம் தாங்குபவனை {கிருஷ்ணனைத்} தாங்கிக் கொண்டு, அவை {அந்தக் குதிரைகள்} உபப்லாவ்யத்தை மிக விரைவில் அடைந்தன.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்