Friday, June 19, 2015

பீஷ்மர், துரோணர் வற்புறுத்தல்! - உத்யோக பர்வம் பகுதி 138

The assertion of Bhishma and Drona! | Udyoga Parva - Section 138 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –67)

பதிவின் சுருக்கம் : குந்தியின் வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மரும், துரோணரும் துரியோதனனிடம் சமாதானத்தை ஏற்கும்படி சொல்வது; குந்தியின் சொல்லுக்கும், கிருஷ்ணனுக்கு ஏற்புடையவைக்கும் பாண்டவர்கள் கீழ்ப்படிவார்கள் என்றும், அது போலத் துரியோதனனும், அவனது தந்தை திருதராஷ்டிரன், தாய் காந்தாரி மற்றும் அவனது நலன்விரும்பிகளான நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் சொன்னது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தியின் வார்த்தைகளைக் கேட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மரும், துரோணரம், கீழ்ப்படியாதவனான துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். அவர்கள் {பீஷ்மரும், துரோணரும்}, "ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, கிருஷ்ணனின் முன்னிலையில் சொல்லப்பட்டவையும், பயனுள்ளவையும், அற்புதமானவையும், அறத்திற்கு இசைவானவையும், கடுமையானவையுமான குந்தியின் வார்த்தைகளைக் கேட்டாயா? அவளது {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} அதன்படியே செயல்படுவார்கள், அதிலும் குறிப்பாகக் கிருஷ்ணனால் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தைகளின்படியே செயல்படுவார்கள்.


ஓ! கௌரவா {துரியோதனா}, தங்கள் பங்கான நாடு (அவர்களுக்குக்) கொடுக்கப்படாமல், அவர்கள் நிச்சயம் தணியமாட்டார்கள். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} நீ நிறைய வலிகளைக் கொடுத்துவிட்டாய். திரௌபதியும் சபையில் வைத்து உன்னால் துன்புற்றாள். எனினும், உண்மையின் {சத்தியத்தின்} கட்டுகளுக்கு அவர்கள் {பாண்டவர்கள்} கட்டுப்பட்டிருந்தார்கள். இதன்காரணமாகவே அவர்களால் {பாண்டவர்களால்} அந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடிந்தது.

அனைத்து ஆயுதங்களிலும் திறன் படைத்த அர்ஜுனனையும், உறுதியான தீர்மானம் கொண்ட பீமனையும், காண்டீவத்தையும், (வற்றாத) அம்பறாத்தூணிகள் இரண்டையும், (அர்ஜுனனின்) தேரையும், (குரங்கு உருவம் பொறிக்கப்பட்ட) கொடியையும், பெரும் வலிமை மற்றும் சக்தி படைத்த நகுலன் மற்றும் சகாதேவனையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} தனது கூட்டாளிகளாகக் கொண்ட யுதிஷ்டிரன் (உன்னை) மன்னிக்கமாட்டான்.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, விராடநகரத்தில் நடந்த போரில், புத்திக்கூர்மையுள்ள அர்ஜுனன் நம் அனைவரையும் முன்பே வீழ்த்தியதை நீ உனது கண்களாலேயே கண்டிருக்கிறாய். உண்மையில் அந்த வானரக் கொடியோன் {அநுமன் கொடிகொண்ட வீரன் அர்ஜுனன்} பயங்கரச் செயல்களைச் செய்யும் நிவாதகவசர்கள் எனும் தானவர்களை, தனது கடும் ஆயுதங்களால் போரில் எரித்தான். கால்நடைகளை எண்ணும் சந்தர்ப்பத்தில் {கோஷ யாத்திரையில்}, கந்தர்வர்களால் {நீ} கைப்பற்றப்பட்ட போது, இந்தக் கர்ணனையும், உனது ஆலோசகர்கள் அனைவரையும், கவசம் தரித்து உனது தேரில் இருந்த உன்னையும் கந்தர்வர்களின் பிடியில் இருந்து விடுவித்தவன் அந்த அர்ஜுனனே. {அவன் நம்மைவிடப் பலவான் என்பதற்கு} அதுவே போதுமான சாட்சியாகும். எனவே, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது சகோதரர்கள் அனைவருடன் கூடி பாண்டு மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சமாதானம் கொள்வாயாக. அழிவின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து இந்த முழு உலகத்தையும் காப்பாயாக.

அறம்சார்ந்த நடத்தை கொண்டவனும், உன்னிடம் பாசம் கொண்டவனும், இனிய பேச்சு மற்றும் கல்வியைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் உனது அண்ணனாவான். உனது பாவம் நிறைந்த நோக்கங்களைக் கைவிட்டு, அந்த மனிதர்களில் புலியிடம் {யுதிஷ்டிரனிடம்} ஒற்றுமையாகச் சேர்வாயாக. கைகளில் வில்லற்று, கோபத்தால் புருவம் சுருங்காமல், மகிழ்ச்சியாக இருக்கும் உன்னை அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கண்டால், {நிச்சயம் யுதிஷ்டிரன் பகையை மறந்துவிடுவான்}, அதுவே நமது குலத்திற்கான நன்மையாகும். உனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} அனைவருடன் கூடி நீ அவனை {யுதிஷ்டிரனைச்} சகோதரப்பாசத்தோடு தழுவுவாயாக.

ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, முன்பு போலவே நீ அந்த மன்னனை {யுதிஷ்டிரனை} மதிப்பாயாக. குந்தியின் மகனும், பீமனின் அண்ணனுமான யுதிஷ்டிரன், வணங்கிச் செல்லும் உன்னைப் பாசத்தால் ஆரத் தழுவட்டும். அடிப்பவர்களில் முதன்மையானவனும், சிங்கம் போன்ற தோள், நீண்ட உருண்ட தொடைகள் மற்றும் வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமன் உன்னைத் ஆரத்தழுவிக் கொள்ளட்டும். குந்தியின் மகனும், பார்த்தன் என்றும் அழைக்கப்படுபவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனும், சுருட்டை முடி மற்றும் சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} உன்னை மரியாதையாக வணங்கட்டும். மனிதர்களில் புலிகளும், இப்பூமியில் ஒப்பற்ற அழகுடையவர்களுமான அசுவினி இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்} பாசத்துடன் உனக்குச் சேவை செய்து, உன்னை அவர்களது ஆசானாக மதிக்கட்டும்.

{இதனால்} தாசார்ஹ குலத்தோனைத் {கிருஷ்ணனைத்} தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீரை வடிக்கட்டும். உனது செருக்கையைக் கைவிட்டு, உனது சகோதரர்களுடன் ஒன்றுபடுவாயாக. ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா} போருக்கான எந்தத் தேவையும் இல்லை. உனது நண்பர்கள் எடுத்துச் சொல்பவற்றைக் கேட்பாயாக. வரப்போகும் போரினால் க்ஷத்திரியர்களுக்குப் பெரும் அழிவு ஏற்படப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

நட்சத்திரங்கள் அனைத்தும் பகையாயிருக்கின்றன. விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அச்சத்திற்குரிய அம்சங்களை ஏற்கின்றன. ஓ! வீரா {துரியோதனா} பல்வேறுவிதமான தீய சகுனங்கள், க்ஷத்திரியர்களின் படுகொலைகளை முன்னறிவிக்கின்றன. இந்தச் சகுனங்கள் அனைத்தும் குறிப்பாக நமது இல்லங்களில் மட்டுமே மீண்டும் மீண்டும் தெரிகின்றன. சுடர்விடும் எரிகற்கள் உனது படையைத் துன்புறுத்துகின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, நமது விலங்குகள் உற்சாகமற்றவையாகவும், அழுபவையாகவும் தெரிகின்றன. உனது துருப்புகளைக் கழுகுகள் வட்டமிடுகின்றன. நகரமோ, அரண்மனையோ முன்பு போலத் தோற்றமளிக்கவில்லை. அச்சுறுத்தும்வகையில் ஊளையிடும் ஓநாய்கள், காட்டு நெருப்புக்கு மத்தியில் நாலாபுறமும் ஓடுகின்றன.

உனது தந்தை {திருதராஷ்டிரன்}, தாய் {காந்தாரி} மற்றும் உனது நலன்விரும்பிகளான நாங்கள் சொல்லும் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, போரும், அமைதியும் உனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன. ஓ! எதிரிகளை வாட்டுபவனே {துரியோதனா}, உனது நண்பர்களின் வார்த்தைகளின்படி நீ செயல்படாவிடில், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் உனது படை அல்லலுறுவதைக் கண்டு நீ வருந்த வேண்டியிருக்கும். வலிமைமிக்கப் பீமனாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் எழுப்பப்படும் பயங்கர ஒலிகளைப் போரில் கேட்கும் நீ, எங்களது இந்த வார்த்தைகளை நினைவு கூர்வாய். நாங்கள் சொல்வது உனக்கு ஏற்புடையதாகத் தோன்றாவிடில், நாங்கள் சொல்வது போலத்தான் உண்மையில் நடக்கும்" என்றனர் {பீஷ்மரும் துரோணரும்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்