Saturday, June 20, 2015

யுதிஷ்டிரனை நீ எப்படி வெல்வாய்? - உத்யோக பர்வம் பகுதி 139

How will you vanquish Yudhishthira? | Udyoga Parva - Section 139 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –68)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரும், துரோணரும் மாறி மாறிப் பேசியும் சமாதானத்திற்கு உடன்படாத துரியோதனன் தலையைத் தொங்கப்போடுவது; யுதிஷ்டிரனிடம் போரிடுவது தவறு எனப் பீஷ்மர் உரைப்பது; அர்ஜுனனிடம் தான் கொண்ட பாசம், அர்ஜுனனின் ஆற்றல் ஆகியவற்றைத் துரியோதனனிடம் துரோணர் சொல்வது; க்ஷத்திரியக் கடமைகளைத் தான் நோற்க வேண்டி வந்ததை எண்ணி நொந்து கொள்வது; பாண்டவர்களிடம் துரியோதனன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று துரோணர் அவனைத் தூண்டியது ...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படி அவர்களால் சொல்லப்பட்ட துரியோதனன், தனது புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியைச் சுருக்கி, உற்சாகமிழந்தவனாக, தலையைத் தொங்கப்போட்டவாறு சரிந்த பார்வையைச் செலுத்தினான். மறுமொழியாக அவன் {துரியோதனன்} எவ்வார்த்தையும் சொல்லவில்லை. அவன் {துரியோதனன்} உற்சாகமிழந்தைக் கண்டவர்களும், மனிதர்களில் காளைகளுமான பீஷ்மரும், துரோணரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, மீண்டும் அவனிடம்  {துரியோதனனிடம்} (இந்த வார்த்தைகளால்) பேசினார்கள்.


பீஷ்மர் {துரியோதனனிடம்}, "தனக்கு மூத்தவர்களுக்குச் சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனும், பொறாமையற்றவனும், பிரம்மத்தை அறிந்தவனும், உண்மையைப் பேசுபவனுமான யுதிஷ்டிரனிடம் நாம் போரிடுவதைவிடத் துயர் நிறைந்த காரியம் வேறு எதுவும் கிடையாது" என்றார் {பீஷ்மர்}.

துரோணர் {துரியோதனனிடம்}, "என் மகன் அஸ்வத்தாமனைவிட நான் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} அதிகப் பாசம் கொண்டிருக்கிறேன். அந்த வானரக்கொடியோனும் {அர்ஜுனனும்} (அஸ்வத்தாமன் கொண்டிருப்பதைவிட) அடக்கமும், என்னிடம் அதிக மரியாதையும் கொண்டிருக்கிறான். ஐயோ, க்ஷத்திரியக் கடமைகளை நோற்பதினால், நான் என் மகனை விட அன்பாகக் கருதும் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} போரிட வேண்டியுள்ளதே. ஐயோ, க்ஷத்திரியத் தொழிலுக்காக  உலகில் தனக்கு நிகரற்ற அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, எனது அருளால் வில்லாளிகள் அனைவரிலும் மேன்மையை அடைந்திருக்கிறான்.

தனது நண்பர்களை வெறுப்பவனும், தீய மனநிலை கொண்டவனும், கடவுளை மறுப்பவனும், குறுகிய மனம் படைத்த வஞ்சகனுமான ஒருவன், வேள்வியில் பங்குபெறும் மூடனைப் போல, நீதிமான்களின் வழிபாட்டைப் பெறவே மாட்டான். {என்னதான் ஒரு மூடன் வேள்விகளில் பங்குகொண்டாலும் அவன் மதிப்பபைப் பெறுவதில்லை}. பாவத்தில் இருந்து விலக்கப்பட்டாலும், பாவம் நிறைந்த ஒருவன் பாவச் செயல்களையே செய்வான்; அதே வேளையில் நீதிமானான ஒருவன் பாவத்தால் ஈர்க்கப்பட்டாலும், அவன் நீதியைக் கைவிட மாட்டான். நீ பாண்டவர்களிடம் பொய்மையுடனும், வஞ்சகத்துடனும் நடந்து கொண்டாலும், அவர்கள் {பாண்டவர்கள்} இன்னும் உனக்கு ஏற்புடையதைச் செய்யவே விரும்புகிறார்கள். உன்னைப் பொறுத்தவரை, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, உனது தவறுகள் அனைத்தும், உனக்குப் பேரழிவுகளையே கொண்டு வருவனவாக இருக்கின்றன.

குருக்களில் மூத்தவரும் {பீஷ்மரும்}, நானும், விதுரனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்} உன்னிடம் பேசினோம். எது நன்மை என்பதை நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை. "என்னிடம் பெரிய படை இருக்கிறது" என்ற நம்பிக்கையில், சுறா மீன்களும், முதலைகளும், மகரங்களும் நிறைந்த கடலை, கங்கையின் நீரூற்று துளைப்பதைப் போல, வீரர்கள் நிறைந்த பாண்டவப் படையை நீ துளைக்க விரும்புகிறாய். மற்றொருவன் களைந்து போட்ட மாலைகளையோ, ஆடைகளையோ போன்ற யுதிஷ்டிரனின் செழிப்பை அடைந்த நீ, அதை உனதாகவே கருதுகிறாய். பிருதை {குந்தி} மற்றும் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஆயுதம் தாங்கிய தனது தம்பிகள் சூழ திரௌபதியுடன் காட்டிலேயே தங்கிவிட்டாலும்கூட, நாட்டைக் கொண்ட எவனால் அவனை {யுதிஷ்டிரனை} வீழ்த்த முடியும்? யக்ஷர்கள் யாருடைய உத்தரவின் பேரில் பணியாட்களைப் போல அவனுக்கு {யுதிஷ்டிரனுகு} பணி செய்து கிடக்கிறார்களோ, அந்த ஐலவிலன் {குபேரன்} முன்னிலையிலேயே கூட நீதிமானான யுதிஷ்டிரன் பிரகாசத்தால் ஒளிர்ந்தான். குபேரனின் வசிப்பிடத்திற்கு முன்னேறி, அங்குச் செல்வத்தை அடைந்த பாண்டவர்கள், பரந்திருக்கும் உனது நாட்டைத் தாக்கி, அரசுரிமையை வெல்லவே இப்போது விரும்புகிறார்கள்.

{பீஷ்மர், துரோணர் ஆகிய} (எங்கள் இருவரைப் பொறுத்தவரை), நாங்கள் தானங்களைச் செய்திருக்கிறோம்; நெருப்பில் நீர்க்காணிக்கைகளை ஊற்றியிருக்கிறோம், (சாத்திரங்களைக்) கற்றிருக்கிறோம், செல்வத்தால் அந்தணர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்திருக்கிறோம். எங்களது (எங்களுக்கு ஒதுக்கப்பட்ட) வாழ்வுக் காலம் முடியப்போகிறது. எங்கள் வேலை முடிந்துவிட்டது என்பதை அறிவாயாக. (எனினும், உன்னைப் பொறுத்தவரை), இன்பம், நாடு, நண்பர்கள், செல்வம் ஆகியவற்றைக் கைவிட்டுப் பாண்டவர்களிடம் நீ போருக்கு முனைந்தால், நீ அடையும் துன்பம் பெரியதாக இருக்கும். உண்மை நிறைந்த பேச்சுடன், கடும் நோன்புகளுக்கும், தவங்களுக்கும் தன்னை அர்ப்பணித்து, பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} வெற்றிக்காகத் திரௌபதி வேண்டி {பூஜை செய்து} கொண்டிருக்கும்போது, உன்னால் அவனை {யுதிஷ்டிரனை} எப்படி வெல்ல முடியும்? ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தனது ஆலோசகனாகவும், ஆயுதங்களைத் தாங்குவோரில் முதன்மையான தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தனது தம்பியாகவும் கொண்டிருகும் அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} நீ எப்படி வெற்றி கொள்வாய்? இவ்வளவு நிறைய அந்தணர்களைத் தனது கூட்டாளிகளாகக் கொண்டவனும், புத்திக்கூர்மை கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், கடும் தவங்களைக் கொண்டவனுமான பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} நீ எப்படி வெற்றி கொள்வாய்?

துன்பக்கடலில் மூழ்கப்போகும் தனது நண்பனைக் கண்டு, செழிப்பை விரும்பும் நண்பன் ஒருவன் என்ன சொல்ல வேண்டுமோ, அதையே நான் மீண்டும் உனக்குச் சொல்கிறேன். போருக்கான அவசியமே இல்லை. குருக்களின் செழிப்பிற்காகவாவது நீ அந்த வீரர்களுடன் {பாண்டவர்களுடன்} சமாதானம் கொள்வாயாக. உனது மகன்கள், ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் இந்தப் படையுடன் நீ தோல்வியை அடையாதே" என்றார் துரோணர்."


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்