Saturday, June 20, 2015

கர்ணா நீயும் பாண்டவனே! - உத்யோக பர்வம் பகுதி 140

Karna you are a Pandava! | Udyoga Parva - Section 140 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –69)

பதிவின் சுருக்கம் : கர்ணனிடம் கிருஷ்ணன், அவன் குந்தியின் மகன் என்பதைச் சொல்வது; பாண்டவர்களுடன் சேருமாறும், நாட்டின் மன்னனாக ஆகுமாறும் கிருஷ்ணன் கர்ணனிடம் சொன்னது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, சேவகர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரின் மத்தியிலும், கர்ணனைத் தனது தேரில் அழைத்துக் கொண்டு மதுசூதனன் {கிருஷ்ணன்} (நமது நகரத்தை விட்டு) வெளியே சென்றான். பகைவீரர்களைக் கொல்பவனான அந்த அளக்கமுடியாத ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} என்ன சொன்னான்? அந்தச் சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} கோவிந்தன் {கிருஷ்ணனிடம்} பேசிய சமரச வார்த்தைகள் என்ன? ஓ! சஞ்சயா, மழைக்காலத்தின் போது, புதிதாய் எழுந்த மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்ட கிருஷ்ணன் கர்ணனிடம் பேசிய வார்த்தைகள் மென்மையானவையா? கடுமையானவையா? அதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.


அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "அளவிடமுடியாத ஆன்மா கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்} ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சொன்னதும், இதயத்துக்கு இனிமையானதும், நன்மையானதும், உண்மையானதும், அறத்திற்கு இசைவானதும், ஏற்புடையதும், மிரட்டல் மற்றும் மென்மை ஆகிய இரண்டும் கலந்ததுமான அந்த வார்த்தைகளைச் சரியான வரிசையில் நான் சொல்வதை நீர் கேட்பீராக" என்றான் {சஞ்சயன்}.

வாசுதேவன் {கிருஷ்ணன் கர்ணனிடம்} சொன்னான், "ஓ! ராதையின் மகனே {கர்ணா}, வேதங்களை முழுதாய் அறிந்த பல அந்தணர்களை நீ வழிபட்டிருக்கிறாய். குவிந்த கவனத்துடன், மனதில் பொறாமையின்றி {பல சந்தர்ப்பங்களில்) நீ அவர்களிடம் உண்மையை {சத்தியத்தைக்} குறித்து விசாரித்திருக்கிறாய். எனவே, ஓ! கர்ணா, வேதங்கள் சொல்லும் நித்தியமானவை என்ன என்பதை நீ அறிவாய். சாத்திரங்களின் நுணுக்கமான தீர்மானங்களையும் நீ முழுமையாக அறிந்திருக்கிறாய்.

'ஒரு கன்னிகைக்கும், அந்தக் கன்னிகையை மணந்த தங்கள் தந்தைக்கும் காநீகன், சகோடன் என்று இருவகையான மகன்கள் பிறக்கிறார்கள்' என்று சாத்திரங்களை நன்கு அறிந்தோர் சொல்கின்றனர். ஓ! கர்ணா, நீயும் இவ்வழியிலேயே பிறந்திருக்கிறாய். {சாத்திரங்களை அறிந்தோர், ஒரு கன்னிகைக்குப் பிறக்கும் காநீகன் மற்றும் சகோடன் என்ற இருவகைப் பிள்ளைகளுக்கு, அந்தக் கன்னிகையை மணந்தவனே தந்தை என்று சொல்கிறார்கள்}. எனவே, தார்மீக அடிப்படையில் நீயும் பாண்டுவின் மகனே. வா, சாத்திரங்களின் கூற்றுப்படி நீ மன்னனாவாயாக. உனது தந்தையின் {பாண்டுவின்} வழியில் பிருதையின் {குந்தியின்} மகன்களையும் {பாண்டவர்களையும்}, தாயின் வழியில் விருஷ்ணிகளையும் {சொந்தங்களாகக்} கொண்டவன் நீ. ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, இந்த இருவரையும் உனக்குச் சொந்தமானவர்களாக நீ அறிவாயாக.

இப்போதே என்னுடன் வந்து, ஓ! ஐயா, யுதிஷ்டிரர் பிறப்புக்கு முன்பே குந்திக்குப் பிறந்தவன் நீ என்பதைப் பாண்டவர்கள் அறியச் செய்வாயாக. சகோதரர்களான ஐந்து பாண்டவர்கள், திரௌபதியின் மகன், சுபத்திரையின் ஒப்பற்ற மகன் {அபிமன்யு} ஆகிய அனைவரும் உனது பாதத்தைத் தழுவுவார்கள் {உனது காலைப் பிடிப்பார்கள்}. பாண்டவக் காரணத்திற்காகக் கூடியிருக்கும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரும் கூட உனது பாதத்தைத் தழுவுவார்கள்.

ராணிகளும், இளவரசிகளும், (நீர் நிரம்பிய} பொன், வெள்ளி மற்றும் மண் குடங்களையும், இனிமையான மூலிகைகளையும், அனைத்து வகையிலான விதைகளையும், ரத்தினங்களையும் கொடிகளையும் உன்னை நிறுவுவதற்காக {உனக்கு மன்னனாக முடிசூட்டுவதற்காக} கொண்டு வரட்டும். ஆறாம் காலத்தில், திரௌபதி (மனைவியாக) உன்னிடம் வருவாள். ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவரும், அந்தணர்களில் சிறந்தவருமான தௌமியர், (புனித) நெருப்பீல் தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாக ஊற்றட்டும். நான்கு வேதங்களை அதிகாரப்பூர்வமானதாகக் கருதும் (பாண்டவர்களுக்குப் புரோகிதர்களாகச் செயல்படும்) அந்தணர்கள் உன்னை {மன்னனாக} நிறுவுவதற்கான சடங்கைச் செய்யட்டும். வேதச் சடங்குகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவரான பாண்டவர்களின் குடும்பப் புரோகிதரும் {தௌமியரும்}, மனிதர்களில் காளைகளும் சகோதரர்களுமான பாண்டுவின் ஐந்து மகன்களும், திரௌபதியின் ஐந்து மகன்களும், பாஞ்சாலர்களும், சேதிகளும், நானும் கூடி இந்த முழு உலகத்தின் தலைவனாக உன்னை நிறுவுவோமாக.

நீதிமிக்க ஆன்மா கொண்டவரும், கடும் நோன்புகள் கொண்டவருமான தர்மனின் மகன் யுதிஷ்டிரர், உனது பட்டத்து இளவரசராக இருந்து, உனக்குக் கீழே நாட்டை ஆளட்டும். தனது கைகளில் வெண்சாமரம் கொண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரர், ஒரே தேரில் உனக்குப் பின்னே இருக்கட்டும். உனது முடிசூட்டு முடிந்ததும், குந்தியின் மற்றொரு மகனான பலமிக்கப் பீமசேனன், உனது தலைக்கு மேலே வெண்குடையைப் பிடிக்கட்டும். உண்மையில் அப்போது, நூற்றுக்கணக்கான கிண்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், புலித் தோல்களால் பக்கங்கள் மூடப்பட்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமான உனது தேரை அர்ஜுனன் ஓட்டுவான். அப்போது, நகுலன், சகாதேவன், திரௌபதியின் ஐந்து மகன்கள், பாஞ்சாலர்கள், பலமிக்கத் தேர்வீரனான சிகண்டி ஆகியோர் உனக்குப் பின்னே வருவார்கள்.

அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவருடன் கூடிய நானும் உனக்குப் பின்னே நடந்து வருவேன். உண்மையில், தாசார்ஹர்கள் மற்றும் தசார்ணர்கள் அனைவரும், ஓ! மன்னா {கர்ணா}, உனது உறவினர்களின் கணக்கில் எண்ணப்படுவார்கள். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கர்ணா}, உனது தம்பிகளான பாண்டவர்களுடனும், யபங்கள் {ஜபங்கள்}, ஹோமங்கள், பல்வேறு வகைகளிலான மங்கலச் சடங்குகள் ஆகியவை உனது மதிப்பிற்காகச் செய்யப்படட்டும். திராவிடர்கள், குந்தளர்கள், ஆந்திரர்கள், தாலசரர்கள், சூசுபர்கள், வேணுபர்கள் ஆகியோர் உனக்கு முன்பு {பரிவாரங்களாக} நடந்து செல்லட்டும்.

சூதர்களும், மாகதர்களும், எண்ணிலடங்கா துதிப்பாடல்களைப் பாடி உன்னைப் புகழட்டும். "வசுசேணனுக்கு {கர்ணனுக்கு} வெற்றி என்று பாண்டவர்கள் அறிவிக்கட்டும். சந்திரனைச் சூழ்ந்திருக்ககும் நட்சத்திரங்களைப் போலப் பாண்டவர்களால் சூழப்பட்டு நீ நாட்டை ஆள்வாயாக. ஓ! குந்தியின் மகனே {கர்ணா}, குந்தியையும் மகிழ்ச்சியடையச் செய்வாயாக. உனது நண்பர்கள் மகிழட்டும், உனது எதிரிகள் துயருறட்டும். இந்த நாளில் உனக்கும், உனது தம்பிகளான பாண்டுவின் மகன்களுக்கும் {பாண்டவர்களுக்கும்} இடையில் சகோதர ஒற்றுமை உண்டாகட்டும்" என்றான் {கிருஷ்ணன்}."


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்