Thursday, July 16, 2015

அஸ்வத்தாமனின் பெருங்குறை! - உத்யோக பர்வம் பகுதி 168

The great defect of Aswatthaman! | Udyoga Parva - Section 168 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 3)

பதிவின் சுருக்கம் : துரியோதனனின் தாய்மாமன் சகுனி, துரோணரின் மகன் அஸ்வத்தாமன், க்ஷத்திரியர்கள் அனைவரின் ஆசான் துரோணர், பிருஹத்பலன், கர்ணனின் மகன் விருஷசேனன், ஜலசந்தன், பாஹ்லீகர், சத்யவான், ராட்சசத் தலைவன் அலம்புசன், பிராக்ஜோதிஷ நாட்டு மன்னன் பகதத்தன் ஆகியோர் கௌரவப்படையில் வகிக்கும் படிநிலை குறித்தும், அவரவரின் தன்மைகள் குறித்தும் பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, இந்த உனது தாய்மாமன் சகுனி, ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். அவன் {சகுனி}, பாண்டுவின் மகன்களிடம் (தற்போதைய) பகைமைகளுடன் (அதை வெடிக்கச் செய்யும் வகையில்) போரிடுவான். இதில் ஐயமில்லை. போருக்கு விரையும் அவனது {சகுனியின்} துருப்புகள் தடுக்கமுடியாதனவாகும். பல்வேறு விதமான ஆயுதங்களை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் அவை {அந்தத் துருப்புகள்}, வேகத்தில் காற்றுக்கு இணையானவை ஆகும்.


வலிமைமிக்க வில்லாளியான துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), வில்லாளிகள் அனைவரையும் விஞ்சியிருக்கிறான். போர்முறைகள் அனைத்தையும், கலங்கடிக்கமுடியாத ஆயுதங்களையும் அறிந்து வைத்திருக்கும் இவன் ஒரு மகாரதனாவான். காண்டீவதாரியை {அர்ஜுனனைப்} போன்றே, இந்த வீரனின் வில்லில் இருந்து அடிக்கப்படும் இவனது {அஸ்வத்தாமனின்} கணைகள், ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு தொடர்ந்து நேர்கோட்டில் சரமாகச் செல்லும். இந்த மகாரதன் {அஸ்வத்தாமன்} விரும்பினால், மூன்று உலகங்களையும் அழித்துவிடுவான். தனது ஆசிரமத்தில் தவத்தில் ஈடுபட்ட இவன் {அஸ்வத்தாமன்}, தனது கடுமையையும், ஆற்றலையும் அதிகரித்திருக்கிறான். பெரும் புத்திக்கூர்மை கொண்ட இவன் {அஸ்வத்தாமன்}, (பரிசாக அளிக்கப்பட்ட அனைத்து) தெய்வீக ஆயுதங்களின் மூலம் துரோணரின் ஆதரவைப் பெற்றிருக்கிறான்.

எனினும், இவனை {அஸ்வத்தாமனை} ரதன் என்றோ, மகாரதன் என்றோ நான் கருதாதபடிக்கு, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, இவனிடம் ஒரு பெரும் குறை இருக்கிறது. வாழ்க்கையை மிகவும் விரும்புவதால், இந்த மறுபிறப்பாள மனிதன் {வேதியனான அஸ்வத்தாமன்} வாழ்க்கையை {உயிர் வாழ} {ஆயுளை} மிகவும் விரும்புகிறவனாக இருக்கிறான். இரு படை வீரர்களுக்கு மத்தியிலும், இவனுக்கு ஈடாகக் கருதுவதற்கு ஒருவனும் இல்லை. தனித்தேரில் இருந்தாலும், இவன், தேவர்களின் படையையே நிர்மூலமாக்கவல்லவனாவான். பலம்வாய்ந்த உடற்கட்டுக் கொண்ட இவன், தனது வில் நாணை {வலது கரத்தால் இழுத்து} தனது இடது கரத்தின் கையுறையில் அடித்து {அதனால் உண்டாகும் ஒலியால்} மலைகளையே பிளந்துவிட வல்லவனாவான்.

எண்ணிலடங்கா பண்புகளைக் கொண்டவனும், பயங்கரப் பிராகாசத்தைக் கொண்டவனும், {எதிரிகளை} அடிப்பவனுமான இவன் {அஸ்வத்தாமன்}, கையில் கதாயுதம் தரித்து, யமனாலும் தாங்க முடியாத படி (போர்க்களத்தில்) உலவுவான். யுகமுடிவின் போது ஏற்படும் நெருப்பைப் போன்ற கோபமும், சிங்கம் போன்ற பிடரியும், பெரும் காந்தியும் கொண்ட இந்த அஸ்வத்தாமன், பாரதர்களுக்கு இடையிலான இந்தப் போரில் உள்ள நீரு பூத்த நெருப்பை அணைப்பான். {யுத்தத்தின் மிச்சத்தை முடிப்பான்}.

வயதானாலும், பெரும் சக்தியுடன் இருக்கும் இவனி்ன் {அஸ்வத்தாமனின்} தந்தை (துரோணர்), இன்னும் கூடப் பல இளைஞர்களை விட மேன்மையானவராகவே இருக்கிறார். போரில் அவர் பெருஞ்செயல்களைச் சாதிப்பார். இதில் எனக்கு ஐயமில்லை. (போர்க்களத்தில்) அசையாமல் இருக்கும் அவர் {துரோணர்}, யுதிஷ்டிரனின் துருப்புகளை எரிப்பார்.

நெருப்பு உற்பத்தியாகும் உலர்ந்த புல் மற்றும் விறகின் பங்கைப் பாண்டவப் படை ஆற்றுகையில், இவரது {துரோணருடைய} ஆயுதங்களின் செயலூக்கம் காற்றாக வீசி அதில் (வலிமைமிக்கப் பெரிய) நெருப்பை உண்டாக்கி விடும். மனிதர்களில் காளையான இவர் {துரோணர்}, தேர்வீரர்கள் கூட்டத்தின் தலைவராவார். இந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்} உனது நன்மைக்காகக் கடுஞ்செயல்களைச் சாதிப்பார். அரசபரம்பரையில் வந்த க்ஷத்திரியர்கள் அனைவரின் குருவான இந்த மரியாதைக்குரிய ஆசான் {துரோணர்}, சிருஞ்சயர்களை {பாஞ்சாலர்களை} நிர்மூலமாக்குவார்.

எனினும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அவரது அன்புக்குரியவனாவான். எனவே, தன்னால் கொண்டாடப்படுவதும், தனக்கு உயர்ந்த தகுதியைத் தருவதுமான ஆசிரியச் சேவையை நினைவு கூரும் இந்த வலிமைமிக்க வில்லாளி {துரோணர்}, எந்தத் தொல்லையுமில்லாமல் பெரும் செயல்களைச் சாதிக்கவல்ல பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்ல இயலாதவராக இருக்கிறார். ஓ! வீரா {துரியோதனா}, பார்த்தனின் {அர்ஜுனனின்} எண்ணிலடங்கா சாதனைகளுக்காகத் துரோணர் எப்போதும் தற்பெருமை கொள்கிறார். உண்மையில் இந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தனது மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} தான் கொண்டுள்ளதைவிட அதிகப் பாசத்துடன் அவனை {அர்ஜுனனைக்} காண்கிறார்.

பெரும் ஆற்றலையுடைய இவர் {துரோணர்}, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து வந்தாலும், தனித்தேரில் நின்று, தனது தெய்வீக ஆயுதங்களின் மூலம் போரில் அவர்களைத் தோற்கடிப்பார். மன்னர்களில் புலியான அவர் {துரோணர்}, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உனது மகாரதர்களில் ஒருவராவார். பகையணி வீரர்களின் தேர்ப்படையை உடைக்கவல்ல இவர் {துரோணர்}, எனது கருத்தின் படி, உனது தேர்வீரர்களில் முதன்மையானவர்களில் ஒருவராவார். தனது சொந்தப் படையின் தலைமையில் நின்று, எதிரியின் படையணிகளைத் துன்புறுத்தும் இவர் {துரோணர்}, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலப் பாஞ்சாலர்களை எரித்துவிடுவார்.

உண்மையான புகழைக் கொண்ட இளவரசன் பிருஹத்பலன் ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எதிரியின் துருப்புகளுக்கு மத்தியில் அவன் {பிருஹத்பலன்} மரணத்தைப் போலவே உலவுவான். ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, பல்வேறுவிதமான கவசங்களையும், பல்வேறு விதமான ஆயுதங்களையும் தரித்திருக்கும் இவனது {பிருஹத்பலனின்} துருப்புகள், தங்களை எதிர்க்கும் வீரர்கள் அனைவரையும் கொன்றபடி போர்க்களத்தில் உலவிக்கொண்டிருக்கும்.

கர்ணனின் மகனான விருஷசேனன் முதன்மையான உனது தேர்வீரர்களில் ஒருவனும், மகாரதனுமாவான். வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான அவன் {விருஷசேனன்}, உனது எதிரியின் துருப்புகளை எரித்துவிடுவான்.

பெரும் சக்தியை உடைய ஜலசந்தன், ஓ! மன்னா {துரியோதனா}, முதன்மையான உனது ரதர்களில் ஒருவனாவான். மது குலத்தில் பிறந்தவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான இவன் {ஜலசந்தன்}, போரில் தனது உயிரைவிடத் தயாராக இருக்கிறான். போரில் திறம்பெற்றவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான இந்த வீரன் {ஜலசந்தன்}, தனக்கு எதிரே உள்ள எதிரியின் படையணிகளைச் சிதறடித்து, தேரில் இருந்தோ, யானையின் முதுகில் இருந்தோ போரிடுவான். இந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜலசந்தன்}, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எனது கருத்தின் படி ஒரு ரதனாவான். கடும் போரில், இவன் {ஜலசந்தன்}, தனது துருப்புகள் அனைத்துடனும் கூடி உன் நிமித்தமாகத் தனது உயிரையே விடச் சித்தமாக இருக்கிறான். பெரும் ஆற்றலைக் கொண்டும், அனைத்து போர்முறைகளை அறிந்தும் இருக்கும் இவன் {ஜலசந்தன்}, ஓ! மன்னா {துரியோதனா}, போரில் உனது எதிரிகளுடன் அச்சமற்றுப் போரிடுவான்.

எப்போதும் போரில் புறமுதுகிடாதவரும், வீரரும், யமனைப் போன்றவருமான பாஹ்லீகர், ஓ! மன்னா {துரியோதனா}, எனது கருத்தின்படி, ஓர் அதிரதராவார். மோதலுக்கு விரையும் அவர் எப்போதும் திரும்புவதில்லை. உண்மையில், வாயுத் தேவனைப் போல அவர் {பாஹ்லீகர்} பகைவீரர்களைக் கொல்வார்.

பகையணியின் தேர்ப்படையை நிர்மூலமாக்குபவனும், போரில் அற்புதச் செயல்களைச் செய்யும் தேர்வீரனும், உனது படைகளின் தளபதியுமான சத்யவான், ஓ! மன்னா {துரியோதனா}, ஒரு மகாரதனாவான். போரை நோக்கமாகக் கொண்ட இவன் {சத்யவான்}, எப்போதும் துயரடைவதே இல்லை. தனது தேரின் குறுக்கே வரும் வீரர்களைக் குழப்பி அவர்கள் மீது இவன் விழுவான். பகைவர்களின் மீது எப்போதும் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த மனிதர்களில் சிறந்தவன் {சத்யவான்}, ஒரு நல்ல க்ஷத்திரியன் அடையத்தக்க அனைத்தையும் உனக்காகச் சாதிப்பான்.

கொடுஞ்செயல்கள் புரிபவனான ராட்சசர்கள் தலைவன் அலம்புசன் ஒரு மகாரதனாவான். (பாண்டவர்களுடனான) தனது பகைமைகளை நினைவு கூரும் அவன், எதிரிக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்துவான். ராட்சச வீரர்கள் அனைவரிலும் இவனே ரதர்களில் சிறந்தவனாவான். மாய சக்திகளைக் கொண்டவனும், பகைமையில் உறுதியுடன் இருப்பவனுமான இவன் {அலம்புசன்} போர்க்களத்தில் கடுமையுடன் உலவுவான்.

பிராக்ஜோதிஷ {நாட்டின்} ஆட்சியாளனும், பெரும் ஆற்றல் கொண்டவனும், துணிவுமிக்கவனுமான பகதத்தன், யானையின் அங்குசம் ஏந்தியவர்களில் முதன்மையானவனும், தேரில் இருந்து போரிடுவதில் திறம்பெற்றவனும் ஆவான். இவனுக்கும் {பகதத்தனுக்கும்}, காண்டீவதாரிக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நெடுநாட்கள் போர் நடந்தது. ஒருவரை வெல்ல மற்றொருவர் விரும்பினர். பிறகு, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, இந்திரனைத் தனது நண்பனாகக் கருதிய பகதத்தன், (இந்திரனின் மகனான) அந்த உயர் ஆன்ம பாண்டவனிடம் {அர்ஜுனனிடம்} நட்பு கொண்டான். யானையின் கழுத்தில் இருந்து போரிடுவதில் திறம்பெற்ற இந்த மன்னன் {பகதத்தன்}, தேவர்களுக்கு மத்தியில் ஐராவதத்தில் இருந்து போரிடும் வாசவனைப் {இந்திரனைப்} போலப் போர்க்களத்தில் போரிடுவான்" என்றார் {பீஷ்மர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்