Wednesday, July 15, 2015

துரியோதனனின் மகன் லட்சுமணன்! - உத்யோக பர்வம் பகுதி 167

Lakshmana, the son of Duryodhana! | Udyoga Parva - Section 167 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 2)

பதிவின் சுருக்கம் : காம்போஜ மன்னன் சுதக்ஷிணன், மஹிஷ்மதியின் மன்னன் நீலன், அவந்தியின் மன்னர்கள் விந்தன் மற்றும் அனுவிந்தன், திரிகார்த்தத்தின் ஐந்து இளவரசர்கள், துரியோதனனின் மகன் லக்ஷ்மணன், துச்சாசனின் மகன் லட்சுமணன், தண்டதாரன், கோசல மன்னன் பிருஹத்பலன், கிருபர் ஆகியோர் கௌரவப்படையில் வகிக்கும் படிநிலை குறித்து பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் என் கருத்தின்படி ஒரு தனி ரதனுக்கு {Ratha} {ரதிக்னன்} இணையானவன். உனது நோக்கத்தின் வெற்றியை விரும்பும் அவன் {சுதஷிணன்}, போர்க்களத்தில் எதிரியுடன் போரிடுவது உறுதி. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, போர்க்களத்தில் இருக்கும் இந்திரனுக்கு இணையாக உனக்காக உழைக்கும் தேர்வீரர்களில் சிங்கமான இவனது ஆற்றலை கௌரவர்கள் காண்பார்கள். இந்த மன்னனின் {சுதக்ஷிணனின்} தேர்ப்படையைப் பொறுத்தவரை, கடும் செயலூக்கத்துடன் அடிப்பவர்களான அந்தக் காம்போஜர்கள், ஒரு பெரிய பகுதியை மூடும் வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போன்றவர்களாவர்.


நீலக் கவசம் தரித்திருப்பவனும், மஹிஷ்மதி (மாகாணத்தில்) இருந்து வந்திருப்பவனுமான நீலன், உனது ரதர்களில் ஒருவன் ஆவான். அவனது தேர்ப்படையைக் கொண்டு அவன் {நீலன்} பெரிய அழிவை ஏற்படுத்துவான். ஓ! குழந்தாய் {துரியோதனா}, அவனுக்குச் சகாதேவனிடம் பகைமை இருக்கிறது.

போரில் சாதித்தவர்களும், கடும் சக்தி மற்றும் ஆற்றலைக் கொண்டவர்களும், அவந்தியை {அவந்தி நாட்டைச்} சேர்ந்தவர்களுமான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகிய இருவரும் அற்புதமான ரதர்களாகக் கருதப்படுகிறார்கள். மனிதர்களில் வீரர்களான இந்த இருவரும், தங்கள் கையில் இருந்து விடப்பட்ட கதாயுதங்கள், நாராசம், தோமரம், வாள், ஈட்டிகளால் உனது எதிரியின் துருப்புகளை எரிப்பார்கள். இரு (யானைகளை) தலைவர்களைப் போல, தங்கள் கூட்டத்துடன் விளையாடி, போருக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் அந்த இளவரசர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, யமனைப் போலவே போர்க்களத்தில் உலவுவார்கள்.

திரிகார்த்தத்தின் ஐந்து (அரசச்) சகோதரர்களும், எனது கருத்தின்படி, ரதர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாவார்கள். (நன்கு அறியப்பட்ட) விராட நகர் சம்பவத்தின் போது, பிருதையின் {குந்தியின்} மகன்கள் அவர்களுடன் பகைமை கொண்டார்கள். ஓ! மன்னா {துரியோதனா}, உயர்ந்த அலைகளைக் கொண்ட கங்கையின் ஓடையைக் கலக்கும் பெரும் மகரங்களைப் போல, போர்க்களத்தில் பார்த்தர்களின் அணியைக் கலங்கடிப்பார்கள். ஓ! மன்னா {துரியோதனா}, சத்தியரதனைத் (தங்களில்) மூத்தவனாகக் கொண்ட அவர்கள் {திரிகார்த்தத்தின் சகோதரர்கள்} ஐவரும் ரதர்களாவர் {ரதிக்னர்கள்}. வெள்ளைக்குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் செல்பவனும், பாண்டுவின் மகனான பீமனின் தம்பி {அர்ஜுனன்}, பூமியின் மன்னர்கள் அனைவரையும் அடக்கியபோது, தங்களுக்கும் தீங்கிழைத்ததை நினைவு கூரும் அவர்கள் {திரிகார்த்தத்தின் சகோதரர்கள்}, ஓ! பாரதா {துரியோதனா}, போர்க்களத்தில் தங்கள் வீரத்தை நிச்சயம் காட்டுவார்கள். பாண்டவர்கள் பக்கம் உள்ள வில்லாளிகளின் தலைவர்களான பல மகாரதர்களையும், க்ஷத்திரியத் தலைவர்களையும் அவர்கள் நிச்சயம் கொல்வார்கள்.

{துரியோதனா} மனிதர்களில் புலிகளான உனது மகன் லக்ஷ்மணன், துச்சாசனனின் மகன் ஆகிய இருவரும் போரில் புறமுதுகிடாதவர்களாவர்.. இளமையின் துவக்கத்தில், மென்மையான உறுப்புகளுடனும், பெரும் சுறுசுறுப்புடனும் இருக்கும் அந்த இளவரசர்கள் இருவரும் போர்களை அறிந்தவர்களாகவும், அனைவரையும் தலைமைதாங்க இயன்றவர்களாகவும் இருக்கிறார்கள். குருக்களில் புலிகளான அந்த இரு தேர்வீரர்களையும், நம்மிடம் இருக்கும் ரதர்களில் சிறந்த இருவர் என நான் நினைக்கிறேன். க்ஷத்திரிய வகைக் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அந்த இரு வீரர்களும் பெரும் சாதனைகளைப் புரிவார்கள்.

ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, தண்டதாரன் ஒரு தனி ரதனுக்கு இணையானவனாவான். தனது சொந்த வீரர்களால் பாதுகாக்கப்படும் அவன், போர்க்களத்தில் உனக்காகப் போரிடுவான்.

பெரும் வேகமும், ஆற்றலும் கொண்டவனும், கோசலத்தின் ஆட்சியாளனுமான மன்னன் பிருஹத்பலன், ஓ! ஐயா, எனது கருத்தின்படி, ஒரு ரதனுக்கு இணையானவனாவான். ஆயுதங்களில் கடுமை கொண்ட இந்த வலிமைமிக்க வில்லாளி, தார்தராஷ்டிரர்களின் நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்து, தனது நண்பர்களை மகிழ்வூட்டும்படி, போர்க்களத்தில் பலமாக உழைப்பான்.

சரத்வானின் மகனான கிருபர், ஓ! மன்னா, தேரணி தலைவர்களின் தலைவராவார் {அதிரதராவார்}. அன்புக்குரிய உயிரையோ துச்சமாக மதிக்கும் அவர் {கிருபர்} உனது எதிரிகளை எரிப்பார். சரத்வான் என்று வேறு பெயரில் அழைக்கப்பட்டவரும், பெரும் தவசியும், ஆசானுமான கௌதமருக்கு நாணற்கட்டில் பிறந்த அவர் {கிருபர்}, கார்த்திகேயனை {முருகனைப்} போன்றே வெல்லப்பட முடியாதவராவார். பல்வேறு ஆயுதங்களையும், விற்களையும் தரித்த சொல்லப்படாத வீரர்களையும் எரிக்கும் அவர் {கிருபர்}, ஓ! ஐயா, சுடர்மிகும் நெருப்பு போலப் போர்க்களத்தில் உலவி வருவார்" என்றார் பீஷ்மர்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்