Monday, August 03, 2015

போர் உடன்படிக்கைகள்! - பீஷ்ம பர்வம் பகுதி -001

War Covenants! | Bhishma Parva - Section 001 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : கௌரவர்களும், பாண்டவர்களும் குருக்ஷேத்திரத்தில் கூடியது; தங்களுக்கு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும்...

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரத  என்ற இதிகாசம்}  சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "குருக்கள் {கௌரவர்கள்}, பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கூடியிருந்த உயர் ஆன்ம மன்னர்கள் ஆகிய அந்த வீரர்கள் எப்படிப் போரிட்டனர்?" என்று கேட்டான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, சொன்னார் "ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, குருக்கள், பாண்டவர்கள், சோமகர்கள் ஆகிய அந்த வீரர்கள், புனிதவெளியான [1] குருக்ஷேத்திரத்தில் எப்படிப் போரிட்டார்கள் என்பதைக் கேட்பாயாக. சோமகர்களுடன் குருக்ஷேத்திரத்திற்குள் நுழைந்த பெரும் பலம் படைத்த பாண்டவர்கள், கௌரவர்களுக்கு எதிரான வெற்றியை விரும்பி முன்னேறினர். வேதங்களின் கல்வியில் சாதித்த (அவர்கள் {பாண்டவர்கள்}) அனைவரும் போரில் பெருமகிழ்ச்சியை அடைந்தனர். போரில் வெற்றியை எதிர்பார்த்து, தங்கள் துருப்புகளுடன் (அவர்கள் {பாண்டவர்கள்}) அந்தப் போரை எதிர் கொண்டனர். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படையை அணுகியவர்களும் போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அந்த வீரர்கள், தங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கி வைத்துக் கொண்டு, (அந்த வெளியில் {களத்தின்}) மேற்குப் பகுதியில் தங்கள் துருப்புகளை நிறுத்தினர். குந்தியின் மகனான யுதிஷ்டிரன் சமந்தபஞ்சகம் {குருஷேத்திரம்} என்று அழைக்கப்பட்ட பகுதிக்கும் அப்பால், ஆயிரக்கணக்கான கூடாரங்களை விதிப்படி அமைத்தான்.

[1] தபஸ்-க்ஷேத்திரம் = இந்தப் பகை வீடுகளுக்கு {கௌரவ மற்றும் பாண்டவர்களுக்கு) பொதுவான மூதாதையான குரு என்பவன் இங்கே தனது தவத்துறவுகளை மேற்கொண்டான். அந்தக் குருவின் காலத்தில் இருந்து, இங்கே பல தவசிகள் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டனர். எனவே இது குருக்ஷேத்திரம் என்றும் தபக்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுவதாகக் கங்குலி குறிப்பிடுகிறார்.

(வீட்டில்) குழந்தைகள் மற்றும் முதியவர்களை மட்டுமே விட்டுவிட்டு, குதிரைகள் மற்றும் மனிதர்களும் இன்றி, தேர்கள் மற்றும் யானைகளும் இன்றி இருந்த முழுப் பூமியும் வெறுமையாகத் தெரிந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, சூரியன் தனது கதிர்களை வடிக்கும் [2] ஜம்பூத்வீபப் பகுதி முழுவதிலும் இருந்து படைகள் சேகரிக்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள், ஆறுகள், மலைகள், வனங்கள் ஆகியவற்றில் பல யோஜனைகளுக்குப் பரந்த பகுதியில் அனைத்து இனங்களைச் [3] சார்ந்த மனிதர்களும் கூடினர். மனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், தங்கள் விலங்குகளோடு சேர்ந்த அவர்கள் அனைவருக்கும் அற்புத உணவையும், பிற இன்பநுகர் பொருட்களையும் வழங்கினான். மேலும் யுதிஷ்டிரன், அவர்களுக்குப் பல்வேறு நோட்ட மொழிகளை {அடையாளச் சொற்களை} நிர்ணயித்தான். அவற்றைச் சொல்லும் ஒருவன், பாண்டவர்களைச் சேர்ந்தவன் என்பதை அறிவதற்காக இதைச் செய்தான். அந்தக் குரு குலத்தின் வழித்தோன்றல் {யுதிஷ்டிரன்}, போர் நடைபெறும் நேரத்தில் அவர்களை அறிந்து கொள்வதற்காக அவர்கள் அனைவருக்கும் பதக்கங்களையும், பெயர்களையும் தீர்மானித்தான்.

[2] "வெப்பத்தைக் கொடுக்கும்" என்பதே உண்மை பொருள் என்கிறார் கங்குலி.

[3] மூலத்தில் இந்த இடத்தில் "வர்ணம்" என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அது சாதிகளைக் குறிப்பதல்ல, இனங்களையே குறிக்கும் என்கிறார் கங்குலி.

பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனின்} கொடிநுனியைக் கண்டவனும், தனது தலைக்கு மேலே வெண்குடையைக் கொண்டவனும், ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் இருப்பவனும், தனது நூறு தம்பிகளால் சூழப்பட்டவனுமான உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, (தனது தரப்பில் உள்ள) மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எதிராகத் தனது துருப்புகளை அணிவகுத்தான். போரில் மகிழ்ச்சி கொள்ளும் பாஞ்சாலர்கள் துரியோதனனைக் கண்டதும், மகிழ்ச்சியால் நிறைந்து, உரத்த ஒலியைத் தரும் தங்கள் சங்குகளை ஊதினர், இனிய ஒலி தரும் பேரிகைகளையும் முழங்கினர்.

அந்தத் துருப்புகள் இப்படி மகிழ்ச்சியடைவதைக் கண்ட பாண்டுவின் மகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் சக்தி கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் இதயத்தில் மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஒரே தேரில் அமர்ந்திருந்தவர்களும், மனிதர்களில் புலிகளுமான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்து, தங்கள் தெய்வீகச் சங்குகளை முழங்கினர். அந்த இருவருக்கும் சொந்தமான பெரியதின் {Gigantea} {சங்கான பாஞ்சஜன்யத்தின்} முழக்கத்தையும், பெருக்கத்தின் {Theodotes} {சங்கான தேவதத்தத்தின்} உரத்த வெடிப்பையும் கேட்ட எதிராளிகள் மலம் மற்றும் சிறுநீரைக் {மலஜலத்தைக்} கழித்தனர். கர்ஜிக்கும் சிங்கத்தின் குரலைக் கேட்டு அச்சத்தால் நிறையும் பிற விலங்குகளைப் போல, அந்த உரத்த வெடிப்புகளைக் கேட்ட படையும் அப்படியே அச்சத்தால் நிறைந்தன. அச்சம்நிறைந்த புழுதியெழுந்ததால் ஏதும் காணப்படவில்லை, ஏனெனில் திடீரெனச் சூரியனும் அவற்றால் மூடப்பட்டதால், அது {சூரியன்} மறைந்ததைப் {அஸ்தமித்ததைப்} போலத் தெரிந்தது. கருநிற மேகம் ஒன்று சுற்றிலும் இருந்த அந்தத் துருப்புகளின் மேல் இறைச்சியையும் இரத்தத்தையும் பொழிந்தது. இவையாவும் இயல்புக்கு மிக்கதாகத் தெரிந்தது.

மண்ணோடு சேர்ந்த பருக்கைக் கற்களைச் சுமந்து, அங்கே எழுந்த காற்றானது நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் போராளிகளை துன்புறுத்தியது. (இவை அனைத்தையும் விட) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா} மகிழ்ச்சி நிறைந்து போரைச் சந்திக்க நின்ற அந்தப் படைகள் இரண்டும், கலங்கிய கடல்கள் இரண்டைப் போலக் குருக்ஷேத்திரக் களத்தில் நின்றன. உண்மையில், அந்த இருபடைகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது, யுகத்தின் முடிவின் போது ஏற்படும் இரண்டு கடல்களின் மோதலைப் போல இருந்தது. கௌரவர்களால் மொய்க்கப்பட்ட அந்தப் பெரும் படையின் விளைவாக (வீட்டில்) சிறுவரும் முதியவரும் மட்டுமே இருந்ததால் முழுப் பூமியும் வெறுமையாக இருந்தது.

பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {ஜனமேஜயா}, குருக்களும், பாண்டவர்கள் மற்றும் சோமகர்களும் சில உடன்படிக்கைகளையும், பல்வேறு விதமான மோதல்கள் சம்பந்தமாக விதிகளையும் தங்களுக்குள் நிர்ணயித்துக் கொண்டனர்.

  1. சமமான சூழல் கொண்டவர்கள் {சமமானவர்களே} தங்களுக்குள் மோதிக் கொண்டு நன்கு போரிட வேண்டும்.  
  2. நன்கு போராடிய பிறகு, (துன்பத்தைக் கண்டு அஞ்சாமல்) போராளிகள் விலகினாலும், அதுவும் நமக்கு நிறைவையே தர வேண்டும். {போரிட்டு முடிந்த பிறகு, நமக்குள் அன்பு உண்டாக வேண்டும்}. 
  3. சொற்போட்டிகளில் ஈடுபடுபவர்களுடன் சொற்களாலேயே போரிட வேண்டும். [4]  
  4. படையணியை விட்டு விலகியவர்கள் கொல்லப்படக் கூடாது. 
  5. ஒரு தேர்வீரன் மற்றொரு தேர்வீரனையே எதிராளியாகக் கொள்ள வேண்டும்; யானையின் கழுத்தில் இருப்பவன், அதே போன்ற போராளியையே தனது எதிரியாகக் கொள்ள வேண்டும்; ஒரு குதிரை மற்றொரு குதிரையையே சந்திக்க வேண்டும்; ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஒரு காலாட்படை வீரர் மற்றொரு காலாட்படை வீரரையே சந்திக்க வேண்டும். 
  6. உடற்தகுதி, விருப்பம், துணிவு, பலம் ஆகிய கருதுகோள்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஒருவன் மற்றவனுக்கு அறிவிப்பைச் செய்துவிட்டு அடிக்க வேண்டும். எவனும், தயாராக இல்லாதவனையோ [5], பீதியால் தாக்குண்டவனையோ அடிக்கக் கூடாது.
  7. வேறொருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் ஒருவன், இடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் ஒருவன், பின்வாங்கும் ஒருவன், ஆயுதம் தகுதியற்றுவிட்டதாகக் காண்பிக்கும் ஒருவன், கவசம் தரிக்காதவன் ஆகியோர் எப்போதும் அடிக்கப்படக்கூடாது.  
  8. தேரோட்டிகள், (தேரில் பூட்டப்பட்ட அல்லது ஆயுதங்களைச் சுமந்து வரும்) விலங்குகள், ஆயுதங்களைச் சுமந்து வருவதில் ஈடுபடும் மனிதர்கள், பேரிகைகள் அடிப்பவர்கள் மற்றும் சங்கை முழக்குபவர்கள் ஆகியோர் ஒருபோதும் அடிக்கப்படக்கூடாது. 

[4] தனியாக விடப்பட்டவன் கொல்லப்படக்கூடாது.

[5] உண்மையில், "நம்பிக்கைக்கு உரித்தான" என்பதே இங்குப் பொருள் என்கிறார் கங்குலி. அஃதாவது இப்போது தாக்கமாட்டான் என்ற நம்பிக்கையுடன் தயாரில்லாமல் இருக்கும் ஒருவனை அடிக்கக்கூடாது என்பதே இங்குப் பொருள்.

 {மேற்கண்ட} இந்த உடன்படிக்கைகளைச் செய்து கொண்ட குருக்கள், பாண்டவர்கள் மற்றும் சோமகர்கள், மிகுந்த ஆச்சரியத்துடன் ஒருவருக்கொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர். (இப்படித் தங்கள் படைகளுடன்) நிலை நின்ற அந்த மனிதர்களில் காளைகள், அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள், தங்கள் படைகளுடன் சேர்ந்து, இதயத்தில் மகிழ்ந்தனர்; அந்த மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் பிரதிபலித்தது" என்றார் {வைசம்பாயனர்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்