Wednesday, August 05, 2015

தெய்வீகப்பார்வையைப் பெற்ற சஞ்சயன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 002

Celestial Vision obtained by Sanjaya! | Bhishma-Parva-Section-002 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 2)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனிடம் தனிமையில் பேசிய வியாசர்; போரைக் காண திருதராஷ்டிரனுக்குப் பார்வையளிப்பதாகச் சொன்ன வியாசர்; பார்வையை மறுத்த திருதராஷ்டிரன்; வியாசர் சஞ்சயனுக்கு ஞானப்பார்வையை அருள்வது; வியாசர் தான் காணும் தீய சகுனங்களைக் குறித்துச் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வர இருக்கும் கடும்போருக்காகக் கிழக்கிலும், மேற்கிலும் (நின்று கொண்டு) இருந்த அந்தப் படைகளிரண்டைக் கண்டவரும், நடந்தது, நடப்பது, நடக்கப்போவது ஆகியவற்றை {கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலங்களை} அறிந்தவரும், பாரதர்களின் பாட்டனும், வேதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், சத்தியவதியின் மகனும், புனிதமுனியுமான வியாசர், தன் கண்களுக்கு முன்பு நடப்பதைக் காண்பது போலவே அனைத்தையும் கண்டு, தனிமையில் சென்று, தனது மகன்களின் தீய கொள்கைகளை நினைத்து மன உளைச்சல் அடைந்தவனும், துன்பத்துக்கு ஆளானவனுமான விசித்திரவீரியனின் அரச மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்.


வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது மகன்களும், பிற ஏகாதிபதிகளும் தங்கள் நேரத்தை அடைந்திருக்கிறார்கள் [1]. போருக்காக அணிதிரண்டிருக்கும் அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்லப் போகிறார்கள். ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, அவர்களது நேரம் வந்துவிட்டதால், அவர்கள் அனைவரும் அழிந்தே போவார்கள். காலத்தால் கொண்டுவரப்படும் மாற்றங்களை மனதில் தாங்கும் நீ, துக்கத்தில் உனது இதயத்தைச் செலுத்தாதே. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, போரில் (போரிடும்) அவர்களை நீ காண விரும்பினால், ஓ! மகனே {திருதராஷ்டிரா}, நான் உனக்குப் பார்வையை அருள்வேன் {கொடுப்பேன்}. போரைக் காண்பாயாக!" என்றார்.

[1] மாறாக, "அவர்களது காலம் முடிந்துவிட்டது" என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார் கங்குலி.

திருதராஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவர்களில் சிறந்தவரே {வியாசரே}, எனது சொந்தங்களின் படுகொலையைக் காண நான் விரும்பவில்லை. எனினும், நான், உமது ஆற்றலின் மூலம், இந்தப் போரை நுணுக்கமாகக் கேட்க வேண்டும்" என்று சொன்னான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவன் {திருதராஷ்டிரன்} போரைக் காண விரும்பாமல், கேட்க விரும்பியதால், வரங்களின் தலைவனான வியாசர், சஞ்சயனுக்கு ஒரு வரத்தை அளித்தார். (அவர் திருதராஷ்டிரனிடம்), "ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, இந்தச் சஞ்சயன் போரை உனக்கு விவரிப்பான். இந்தப் போர் முழுவதிலும் இவனது கண்களைத் தாண்டி எதுவும் இருக்காது. {இந்தப் போரில் நடைபெறும் எதுவும் இவனது கண்களுக்குத் தப்பாது}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, தெய்வீகப் பார்வையை அடைந்த சஞ்சயன், போரை உனக்கு விவரிப்பான். அவன் {சஞ்சயன்} அனைத்தையும் அறிவான். வெளிப்படையாகவோ, மறைவாகவோ, பகலிலோ, இரவிலோ நடக்கும் எதையும், ஏன் மனதால் நினைக்கப்படும் அனைத்தையும்கூட இந்தச் சஞ்சயன் அறிவான்.

ஆயுதங்கள் இவனை வெட்டாது. உழைப்பு இவனைக் களைப்படையச் செய்யாது. இந்தக் கவல்கணன் மகன் {சஞ்சயன்}, அந்தப் போரில் இருந்து உயிருடன் வெளிவருவான். என்னைப் பொறுத்தவரை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரா}, இந்தக் குருக்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் புகழையும் நான் பரப்புவேன் {மஹாபாரதம் பாடுவேன்}. வருந்தாதே. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரா}, இது விதி. துயருக்கு வழிகொடுப்பது உனக்குத் தகாது. இது தவிர்க்க இயலாததாகும். வெற்றியைப் பொறுத்தவரை, நீதி எங்கிருக்கிறதோ, அங்கேயே அஃது இருக்கும். {அறமிருக்குமிடம் வெற்றியுண்டாகும்}", என்றார் {வியாசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர்ந்த அருளைக் கொண்டவரும், குருக்களின் புனிதப்பாட்டனுமான அவர் {வியாசர்}, இதைச் சொன்ன பிறகு, மேலும் ஒரு முறை திருதராஷ்டிரனிடம், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, இந்தப் போரில் நடக்கும் படுகொலை பெரிதாக இருக்கும். பயங்கரத்தின் அறிகுறியாக (எண்ணற்ற) {தீய} சகுனங்களை நான் இங்கே காண்கிறேன்.

பருந்துகள் {சியேனங்கள்}, கழுகுகள் {கிருத்திரங்கள்}, காகங்கள், நாரைகள் {கங்கங்கள்} [2] ஆகியவை கொக்குகளுடன் சேர்ந்து மரங்களின் மேல் இறங்கி {கொடிக்கம்ப நுனிகளில் விழுந்து}, கூட்டங்கூட்டமாகச் சேருகின்றன. போருக்கான சாத்தியக்கூறுகளினால் மகிழ்ந்திருக்கும் அவை, தங்கள் முன்னிலையில் இருப்பதைக் (களத்தைக்) {எதிர்பார்ப்புடன்} கீழே பார்க்கின்றன. ஊனுண்ணும் விலங்குகள், யானைகள் மற்றும் குதிரைகளின் இறைச்சியை உண்ணப் போகின்றன. உக்கிரமான நாரைகள் {Herons}, பயங்கரத்தை முன்னறிவிக்கும்படி, இரக்கமற்ற வகையில் கதறி, மையப் பகுதியில் சுற்றியபடி தென்பகுதியை நோக்கிச் செல்கின்றன [3]. சந்திப் பொழுதுகள் இரண்டுக்கும் முன்னரும், பின்னரும், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, சூரியன், உதிக்கும்போதும், மறையும்போதும், தலையற்ற உடல்களால் {கபந்தங்களால்} அவன் {சூரியன்} மறைக்கப்படுகிறான். மின்னலால் சக்தியூட்டப்பட்டவையும், கதாயுதம் போன்றவையும், வெள்ளை மற்றும் சிவந்த கைகளுடனும் {ஓரங்களுடனும்}, கறுத்த கழுத்துடனும் {இடைவெளியுடனும்} மூவண்ணங்களைக் கொண்டவையுமான மேகங்கள், சந்திப்பொழுதுகள் இரண்டிலும் சூரியனைச் சூழ்ந்திருக்கின்றன.

[2] மேற்கண்ட வரியில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் சியேனம், கிருத்திரம், கங்கம் ஆகியன கழுகுகளின் வகைகளாகும். மேற்கண்ட பத்தியில் {} என்ற அடைப்புக்குறிக்குள் உள்ள பறவைகளின் பெயர்கள் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவை வேறு பதிப்புகளில் கண்டவையாகும்.

[3] வேறு பதிப்புகளில் பின்வரும் வரிகள் காணப்படுகின்றன. அவ்வரிகள், "பயங்கரங்களும், பயத்தைத் தெரிவிப்பவைகளுமான கழுகுகள், நடுப்பகலில், தெற்கை நோக்கி நான்கு பக்கங்களிலும், "கடா! கடா!" என்று ஒலியிட்டபடி கூச்சலிடுகின்றன" என்று இருக்கிறது. இந்தக் கழுகுக்குப் பதில் கங்குலி Heron என்று சொல்லி நாரையை இங்கே குறிப்பிடுகிறார்.

சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் ஒளிவீசிக் கொண்டிப்பதை நான் கண்டேன். மாலையிலும் கூட அவற்றின் அம்சங்களில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை. நான் இவற்றை நாள் முழுவதும், ஏன் இரவு முழுவதும்கூடக் காண்கிறேன். இவை அனைத்தும் அச்சத்தையே முன்னறிவிக்கின்றன. கார்த்திகை (மாதத்தில்}, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் {பௌர்ணமியில்} கூட, சந்திரன் தனது பொலிவை இழந்து போய், காண முடியாதவன் ஆனான். அல்லது தாமரையின் நிறத்தைக் கொண்டிருந்த ஆகாயத்தில், அவன் {சந்திரன்} நெருப்பின் நிறத்தைக் கொண்டிருந்தான். பெரும் வீரம் கொண்டவர்களும், கதாயுதங்களைப் போன்ற கரங்களைக் கொண்டவர்களுமான பூமியின் வீரத் தலைவர்கள், மன்னர்கள், இளவரசர்கள் ஆகிய பலர், கொல்லப்பட்டு, பூமியில் கிடந்து உறங்கப் போகிறார்கள் [4]. இரவு நேரங்களில், சண்டையிட்டுக் கொள்ளும் பன்றிகள் மற்றும் பூனைகளின் உக்கிரக் கூக்குரல்களைத் தினமும் நான் வானத்தில் கேட்கிறேன்.

[4] இறக்கப் போகிறார்கள் என்பது இங்கே பொருள்.

தேவர்கள் மற்றும் தேவியரின் உருவங்கள் {பிரதிமைகள்} சில நேரங்களில் சிரிக்கின்றன; சில நேரங்களில் நடுங்குகின்றன; சில நேரங்களில் தங்கள் வாயில் இரத்தம் கக்குகின்றன; சில நேரங்களில் வேர்க்கின்றன; சில நேரங்களில் விழுந்து விடுகின்றன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, அடிக்கப்படாமலேயே பேரிகைகள் முழங்குகின்றன, (இழுவை) விலங்குகள் பூட்டப்படாமலேயே க்ஷத்திரியர்களின் பெருந்தேர்கள் நகர்கின்றன. குயில்கள் {கோகிலங்கள்}, மரங்கொத்திகள் {சதபத்ரங்கள்}, காடைகள், நீர்க்கோழிகள் {பாஸங்கள்}, கிளிகள், காகங்கள் {சாரசப்பறவைகள்}, மயில்கள் ஆகியன பயங்கரக் கூச்சலிடுகின்றன. ஆயுதங்கள் தரித்தவர்களும், கவசம் அணிந்தவர்களுமான குதிரைப்படை வீரர்கள் இங்கேயும் அங்கேயுமாகக் கடுமையாகக் கத்துகின்றனர் [5]. சூரிய உதயத்தின் போது, நூற்றுக்கணக்கான பூச்சிகளின் {சல்பங்களின்} கூட்டங்கள் காணப்படுகின்றன.

[5] இதே வரி, வேறு பதிப்பில், "பிருங்கிரிடிகள் என்று அழைக்கப்படும் கறுத்த விட்டில் பூச்சிகள் உலோகங்களை மூக்கினால் கொத்திக் கொண்டு குதிரைகளின் முதுகில் அமர்ந்து கத்துகின்றன" என்று இருக்கிறது. தொடர்ந்து வரும் அடுத்த வரியால், இதுவே சரியாகவும் படுகிறது.

இரு சந்திப் பொழுதுகளிலும், வானத்தின் திக்குகள் பற்றி எரிவன போலத் தெரிகின்றன. மேலும், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, மேகங்கள் புழுதியையும், இறைச்சியையும் பொழிகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவளும், நீதிமான்களால் மெச்சப்படுபவளுமான அருந்ததி {நட்சத்திரம்}, இதோ, (தனது தலைவனான) வசிஷ்டரைத் தனக்குப் பின்னால் கொண்டிருக்கிறாள் {வசிஷ்டரை முந்திச் செல்கிறாள்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, சனிக் கோளும் {கிரகமும்}, ரோகிணியைப் பீடித்தபடி தோன்றுகிறது {ரோகிணி நட்சத்திரத்தைப் பீடித்தபடி சனி தோன்றுகிறான்}. நிலவில் இருக்கும் மானின் அடையாளம் {களங்கம்}, தனது வழக்கமான நிலையை விட்டு மாறுபட்டிருக்கிறது. {இவற்றால்}, ஒரு பெரிய பயங்கரம் சுட்டிக் காட்டப்படுகிறது. வானம் மேகமற்றிருந்தாலும், அங்கே ஒரு பயங்கர முழக்கம் கேட்கிறது. விலங்குகள் அனைத்தும் அழுகின்றன, அவற்றின் கண்ணீரும் வேகமாக விழுகிறது" என்றார் {வியாசர்}."


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்