Sunday, August 09, 2015

பாரதவர்ஷமும்! மேரு மலையும்!- பீஷ்ம பர்வம் பகுதி - 006அ

BharataVarsha and mountain Meru! | Bhishma-Parva-Section-006a | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 6)

பதிவின் சுருக்கம் : சுதர்சனத் தீவின் முயல் போன்ற பகுதியை விபரிக்குமாறு திருதராஷ்டிரன் சஞ்சனைத் தூண்டுவது; அந்தப் பகுதியில் உள்ள மலைகளைக் குறித்துச் சஞ்சயன் விபரிப்பது; பாரதவர்ஷம் மற்றும் பிற வர்ஷங்கள் இருக்கும் இடங்களைக் குறித்துச் சொல்வது; மேரு மலை குறித்த வர்ணனை...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, புத்திசாலியாகவும், (அனைத்தையும் குறித்த) உண்மையை அறிந்தவனாகவும் நீ இருக்கிறாய். அந்தத் தீவை {சுதர்சனத் தீவைக்} குறித்த சுருக்கமான விளக்கத்தை நீ முறையாகச் சொல்லிவிட்டாய். இப்போது அந்தத் தீவை {சுதர்சனத் தீவைக்} குறித்து எங்களுக்கு விரிவாகச் சொல்வாயாக. ஒரு முயலைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட பகுதியில் இருக்கும் நிலப்பரப்பின் பரிமாணங்களை இப்போது எங்களுக்குச் சொல்வாயாக. அரச மரத்தைப் போல இருக்கும் பகுதியைக் குறித்துப் பிறகு நீ பேசலாம்" என்றான் {திருதராஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னனால் {திருதராஷ்டிரனால்}, இப்படிக் கேட்கப்பட்ட சஞ்சயன் பேச ஆரம்பித்தான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கிழக்கில் இருந்து மேற்காக நீண்டபடி, கிழக்குக் கடலில் இருந்து மேற்கு கடல் வரை, சமமான அளவில் இருக்கும் [1] இந்த ஆறு மலைகள் இருக்கின்றன. அவை இமயம், ஹேமகூடம், நிஷதம் என்று அழைக்கப்படும் சிறந்த மலை, வைடூரியக் கற்கள் நிறைந்த நீலம், சந்திரனைப் போன்று வெண்மையான ஸ்வேதம், அனைத்து வகை உலோகங்களும் அடங்கிய [2] சிருங்காவன் ஆகியவை ஆகும். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சித்தர்கள் மற்றும் சாரணர்களின் வசிப்பிடங்களாக எப்போதும் இருப்பவை இந்த ஆறு மலைகளாகும்.

[1] "பம்பாய் உரை parvatas samas {சமமான மலைகள்} என்பதற்குப் பதில் Varsha parvatas {கண்டத்தின் மலைகள்} என்று கூறுகிறது" என்கிறார் கங்குலி.

[2] வங்காள உரைகளில் Pinaddha {கட்டப்பட்ட, மூடப்பட்ட} என்று இருப்பதைப் பம்பாய்ப் பதிப்பு Vichitra {வெற்றிபெற்ற} என்று கூறுகிறது" என்கிறார் கங்குலி

இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி {பல} ஆயிரம் யோஜனைகள் ஆகும். அவற்றில் மகிழ்ச்சிகரமான பல நாடுகள் உள்ளன. ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, இந்தப் பகுதிகளே வர்ஷங்கள் [3] என்று அழைக்கப்படுகின்றன. அந்த நாடுகள் அனைத்திலும் பல்வேறு இனவகைகளைச் சேர்ந்த உயிரினங்கள் வசிக்கின்றன. (நாம் இருக்கும் நிலமான) இது பரதனின் பெயரால் அழைக்கப்படும் வர்ஷத்தில் {கண்டத்தில்} இருக்கிறது [4]. இதற்கு அடுத்ததாக (வடக்கில்) இமயத்தின் பெயரால் அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது [5]. ஹேமகூடத்துக்கு {ஹேமகூட மலைக்கு} அப்பால் இருப்பது ஹரிவர்ஷம் என்று அழைக்கப்படுகிறது. நீல மலையின் வரம்புக்குத் தெற்கே, நிஷத மலைக்கு வடக்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிழக்கில் இருந்து மேற்காக நீண்டிருக்கும் மால்யவதம் {மால்யவான்} என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. மால்யவதத்திற்கு அப்பால் வடக்கே கந்தமாதனம் என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது.

[3] உயிரினங்களுக்குச் செல்வங்களையும், தானியங்களையும், உடல் நலத்தையும் என அனைத்தையும் கொடுப்பதால் இவற்றிற்கு வர்ஷங்கள் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

[4] நாம் இருக்கும் இந்தக் கண்டம் பாரதவர்ஷமாகும்.

[5] அந்தக் கண்டத்தின் பெயர் ஹைமவதமாகும். அது கிம்புருஷாவாசமென்றும் சொல்லப்படுகிறது.

இவை இரண்டிற்கும் (மால்யவதம் மற்றும் கந்தமாதனம் ஆகியவற்றிற்கு) இடையே தங்கத்தால் ஆன, கோள உருவிலான மேரு என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. காலைக் கதிரவனைப் போல் பிரகாசிக்கும் அது, புகையற்ற நெருப்பு போன்று இருக்கிறது. அஃது எண்பத்துநான்காயிரம் {84,000} யோஜனைகள் உயரம் கொண்டதாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் ஆழமோ எண்பத்துநான்கு யோஜனைகள் கொண்டதாக இருக்கிறது [6]. இது, மேலே, கீழே மற்றும் குறுக்கே இருக்கும் உலகங்களைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது.

[6] வேறு பதிப்பில் இந்தப்பகுதி, "அந்த மேரு, பூமியின் கீழே பதினாலாயிரம் {14,000} யோஜனை ஆழ்ந்ததென்றும், மேலே எண்பத்துநாலாயிரம் {84,000} யோஜனை உயர்ந்ததென்றும், சிகரத்தில் முப்பத்திரண்டாயிரம் {32,000} யோஜனை அகன்றதென்றும் எண்ணப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, அதன் தாழ்வரை எண்பத்துநாலாயிரம் {84,000} யோஜனை பரப்புள்ளது" என்று இருக்கிறது.

மேருவைத் தவிர, பதராஸ்வம், கேதுமாலம், பாரதம் என்றும் அழைக்கப்படும் ஜம்பூத்வீபம், நீதியின் தகுதியை அடைந்தவர்களின் வசிப்பிடமான உத்தர-குரு என்ற நான்கு தீவுகளும் அமைந்துள்ளன.

சுபர்ணனின் {கருடனின்} மகனான சுமுகன் என்ற பறவையானவன், மேருவில் இருக்கும் அனைத்துப் பறவைகளும் தங்க நிறத்தில் இருப்பதைக் கண்டு, நல்ல, மத்திம, தீய பறவைகளின் வேறுபாடுகளை அறியமுடியாததால் அந்த மலையைவிட்டு தான் சென்றுவிட வேண்டும் என்று நினைத்தான். ஒளிமண்டலங்களுள் முதன்மையான சூரியன், மேருவை எப்போதும் சுற்றி வருகிறான். நட்சத்திரங்களைத் {தனது} தொண்டர்களாகக் கொண்ட சந்திரனும் அப்படியே சுற்றி வருகிறான். மேலும் வாயுத்தேவனும் அப்படியே {மேருவைச்} சுற்றி வருகிறான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மலை {மேரு}, தெய்வீகக் கனிகளையும் மலர்களையும் கொண்டிருக்கிறது. தங்கத்தாலான மாளிகைகளால் அது முழுவதும் மூடப்பட்டிருக்கிறது. அந்த மலையில் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அப்சரஸ் இனக்குழுவினருடன் எப்போதும் விளையாடுகின்றனர். பிரம்மன், ருத்திரன், தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்} ஆகியோர் கூடி, அபரிமிதமான தானங்களுடன் பல்வேறு வகைகளிலான வேள்விகளை அங்கேதான் செய்தனர். தும்புரு, நாரதர், விஸ்வாவசு, ஹாஹா, ஹூஹூ ஆகியோர் அங்கே சென்று பல்வேறு பாடல்களால் தேவர்களில் முதன்மையானோரைத் துதிக்கின்றனர். உயர்ஆன்மா கொண்ட ஏழு முனிவர்களும், உயிரினங்களின் தலைவரான காசியபரும், அனைத்து பர்வ நாட்களிலும் [7] {ஒவ்வொரு பர்வகாலத்திலும்} அங்கே செல்கின்றனர். உமக்கு மங்களம் உண்டாகட்டும். அந்த மலையில் சிகரத்தில் கவி என்றும் அழைக்கப்படும் உசனஸ் {சுக்கிரன்}, (தன் சீடர்களான) தைத்தியர்களுடன் இருக்கிறார் [8].

[7] "பௌர்ணமி மற்றும் அமாவாசைகளில்" என்கிறார் கங்குலி.

[8] பர்துவான் உரைகளைத் தவிர மற்ற வங்காள உரைகளில் Daityas {தைத்தியர்கள்} என்பதற்கு பதில் {திவி} என்றிருக்கிறது. ஆனால் தைத்தியர்கள் என்பதே சரியானது ஆகும் என்கிறார் கங்குலி.

(நாம் காணும்) நகைகள், ரத்தினங்கள் ஆகியவும், விலையுயர்ந்த கற்கள் நிறைந்த அனைத்து மலைகளும் மேருவிலேயே இருக்கின்றன. அங்கிருப்பதில் நான்கில் ஒரு பங்கு புனிதமான குபேரனால் அனுபவிக்கப்படுகிறது. அதில் பதினாறில் ஒரு பங்கையே அவன் {குபேரன்} மனிதர்களுக்குக் கொடுக்கிறான். மேருவின் வடக்குப் பக்கத்தில் அனைத்துக் காலங்களில் பூக்கும் மலர்களால் நிரம்பியதும், இனிமையானதும், அற்புதமானதுமான கோங்குக் காடு ஒரு மலைத்தொடரை முழுவதும் ஆக்கிரமித்தபடி [9] இருக்கிறது. தெய்வீகத் தொண்டர்களால் {கணங்களால் = பூதங்களால்} சூழப்பட்டவனும், உமையைத் {பார்வதியைத்} துணையாகக் கொண்டவனும், அனைத்தையும் படைத்தவனும், பாதம் வரை தொங்கும் அளவுக்குக் கொன்றை மலர்களைக் {கோங்கு மலர்களைச்} சரமாக (தனது கழுத்தில்) அணிந்து கொண்டவனும், உதித்தெழுந்த மூன்று சூரியன்களைப் போன்ற பிரகாசமான முக்கண்களைக் கொண்டவனும், ஒப்பற்றவனுமான பசுபதி {சிவன்} அங்கேதான் {மேருவில்தான்} விளையாடிக் கொண்டிருக்கிறான். பேச்சில் உண்மை நிறைந்தவர்களும், அற்புத நோன்புகள் மற்றும் தவத்துறவுகளைக் கொண்டவர்களுமான சித்தர்கள் அவனைக் {சிவனைக்} காண்கிறார்கள். உண்மையில், தீய நடத்தை கொண்டோர் அந்த மஹேஸ்வரனை {சிவனைக்} காணும் திறனற்றவர்களாவர்.

[9] வங்காள உரைகளில் Sarvata {சுற்றிலும்} என்று இருப்பது பம்பாய் உரைகளில் Sarvatas {முழுவதும்} என்று இருக்கிறது. பின்னதே சிறப்பு என்கிறார் கங்குலி.

அந்த மலையின் சிகரத்தில் இருந்துதான், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பாகீரதி என்றும் அழைக்கப்படும் புனிதமான மங்கலக் கங்கை, நீதிமிக்கவர்களால் துதிக்கப்பட்டு, அளக்க முடியாத தனது தெய்வீக வடிவில், பயங்கர ஒலியுடன், சந்திரனின் இனிய தடாகத்தில் சக்திமிக்க வேகத்துடன் பாலோடையைப் போல விழுந்து கொண்டிருக்கிறாள். உண்மையில் கடலைப் போன்ற அந்தப் புனித மடுவை அந்தக் கங்கையே உண்டாக்கினாள். (மலைகளில் இருந்து பாயும்போது) மலைகளால்கூடத் தாங்க முடியாத கங்கையானவள், பினகை தாங்கியின் {சிவனின்} தலையில் நூறாயிரம் {ஒரு லட்சம்- 1,00,000} வருடங்கள் பிடித்து வைக்கப்பட்டாள் [10].

[10] "சிவன் கங்கையைத் தலையில் பிடித்து வைத்த மரபை நினைவுப்படுத்தும் வகையில் அந்தப் பெரும் தேவன் சில நேரங்களில் கங்காதரன் என்றும் அழைக்கப்படுகிறான்" என்கிறார் கங்குலி

மேருவின் மேற்குப் பக்கத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேதுமாலம் [11] இருக்கிறது, அங்கேயும் ஜம்பூகண்டம் இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரண்டும் மனிதகுலத்தின் மாபெரும் இருக்கைகளாக இருக்கின்றன. அங்கே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனிதர்களுடைய வாழ்நாளின் அளவு பத்தாயிரம் வருடங்களாகும். மனிதர்கள் அனைவரும் அங்கே தங்க நிறத்தில் இருக்கின்றனர், பெண்கள் அனைவரும் அப்சரசுகளைப் போல இருக்கின்றனர். அங்கே வசிப்போர் அனைவரும் நோய், கவலை ஆகியவை இன்றி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அங்கே பிறக்கும் மனிதர்கள் உருக்கிய தங்கத்தின் பிரகாசத்துடன் இருக்கிறார்கள்" {என்றான் சஞ்சயன்}.

[11] குடகடற்குக் கீழ் கேதுமாலமெனக் குறித்திடுக (சிவதரு மோத்திரம். கோபுர.53).


அனுமானம் : சுதர்சனத் தீவு என்று அழைக்கப்படுவது ஐரோப்பாவும், ஆசியாவும் சேர்ந்த நிலப்பகுதியைக் குறிக்கலாம். இது குறித்து http://ancientvoice.wikidot.com/article:sanjaya-s-world என்ற பக்கத்தில் ஊகங்கள் இருக்கின்றன.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்