Sunday, August 09, 2015

ஏழாகப் பிரிந்து பாயும் கங்கை!- பீஷ்ம பர்வம் பகுதி - 006ஆ

Ganga flows, dividing herself into seven streams! | Bhishma-Parva-Section-006b | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 6)

பதிவின் சுருக்கம் : கந்தமாதன மலைகள், அங்கே வாழும் மக்களின் தன்மை ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது; ஏழு வர்ஷங்களின் பெயர்கள், அவை அமைந்திருக்கும் பகுதிகள் ஆகியவற்றைச் சொல்வது; கைலாசம், பிந்துசரஸ் பற்றிய குறிப்பு, கங்கையின் மூன்று ஊற்றுகள், கங்கையின் ஏழு ஓடைகள் பற்றிய குறிப்பு ; சரஸ்வதி நதி பற்றிய குறிப்பு, ஒவ்வொரு மலைகளிலும் யார் யார் வசிக்கிறார்கள் என்ற குறிப்பு, தென்னகத்தின் மலய மலை பற்றிய குறிப்பு ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது...

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "கந்தமாதனச் சிகரத்தில், குஹ்யர்களின் தலைவனான குபேரன், பல ராட்சசர்களுடனும், அப்சரசுகளின் கூட்டத்துடனும் தனது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கிறான். கந்தமாதனத்தைத் தவிர்த்து அங்கே பல மலைகளும், குன்றுகளும் இருக்கின்றன. மனித வாழ்வின் கால அளவு அங்கே {கந்தமாதன மலையில்} பதினோராயிரம் {11,000} வருடங்களாகும். அங்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் இருக்கிறார்கள் [1]. அங்கே இருக்கும் பெண்கள் அனைவரும் தாமரை நிறத்துடனும் உயர்ந்த அழகுடனும் இருக்கிறார்கள்.

[1] வேறு ஒரு பதிப்பில் மேலும் ஒரு குறிப்பாக அங்கே இருக்கும் மனிதர்கள் கறுத்த நிறம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று இருக்கிறது.


நீலத்தை {நீலமலையைத்} தாண்டி ஸ்வேதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. சுவேதத்தைத் தாண்டி ஹைரண்யகம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. ஹைரண்யகத்தைத் தாண்டி நாடுகளால் சூழப்பட்ட ஐராவதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. இறுதியான வர்ஷம் {ஐராவதம்}, வடக்கில் (எல்லையில்) இருக்கிறது, பாரத வர்ஷமோ தெற்கில் (எல்லையில்) இருக்கிறது. இவையிரண்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வில்லின் வடிவத்தில் இருக்கின்றன [2].

[2] வேறு பதிப்பில் இந்தப் பத்தி, "நீல மலைக்கு வடபுறத்தில் சுவேதம் எனும் வர்ஷமிருக்கிறது. சுவேத வர்ஷத்தைக் காட்டிலும் அப்புறத்தில் ஹைரண்யக வர்ஷம் இருக்கிறது. அதற்கு வட எல்லையான சிருங்கவத மலைக்கு வடபுறத்தில் பற்பல நாடுகளால் சூழப்பட்ட ஐராவதமெனும் வர்ஷம் இருக்கிறது. தெற்கில் உள்ள பாரதம், வடக்கில் உள்ள ஐராவதம் என்ற இரண்டு வர்ஷங்களும் நன்றாக வளைத்து ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிற வில்லின் இரண்டு நுனிகளைப் போலச் சேர்ந்திருக்கின்றன" என்று சொல்லப்பட்டுள்ளது.

(ஸ்வேதம், ஹைரண்யகம், இளாவிருதம், ஹரிவர்ஷம், ஹைமாவத வர்ஷம் ஆகிய) ஐந்து வர்ஷங்கள் மத்தியில் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மத்தியில் இளாவிருதம் இருக்கிறது. (ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள ஐந்துடன் சேர்த்து, ஐராவதம் மற்றும் பாரதம் ஆகியவற்றைச் சேர்த்து உள்ள) இந்த ஏழு வர்ஷங்களில், வடக்கில் உள்ளவை {வர்ஷங்கள்}, அதன் உடனடித் தெற்கில் உள்ளவற்றை {வர்ஷங்களை} விட, வாழ்நாளின் காலம், உடற்கட்டு, உடல்நலம், நீதி, இன்பம் மற்றும் பொருள் ஆகிய பண்புகளில் விஞ்சி நிற்கின்றன.

இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பூமி மலைகளால் நிரம்பியிருக்கிறது. ஹேமகூடத்தின் பெரும் மலைகள் கைலாசம் என்றும் அழைக்கப்படுகின்றன. {ஹேமகூடத்தின் பெரும் மலைகளில் ஒன்றுதான் கைலாசம் என்றிருக்கலாம்}. அங்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வைஸ்ரவணன் {குபேரன்} தனது நேரத்தைக் குஹ்யர்களுடன் இன்பமாகக் கழிக்கிறேன். கைலாசத்திற்கு உடனடி வடக்கில், மைநாக மலைகளுக்கு அருகில், பெரியதும், தங்கச் சிகரங்களைக் கொண்டதுமான மணிமயம் {ஹரண்யசிருங்கம்} என்று அழைக்கப்படும் அழகிய மலை இருக்கிறது. இந்த மலையைத் தவிர அங்கே, பெரிதானதும், அழகானதும், படிகம் போன்றதும், (தன் கரையில்) தங்க மணல்களைக் கொண்டதுமான பிந்துசரஸ் என்கிற இனிய தடாகம் இருக்கிறது. மன்னன் பகீரதன், தன் பெயரால் {பாகீரதி என்று} அழைக்கப்படும் கங்கையைக் பார்த்தபடி பல வருடங்களாக அங்கேதான் தங்கியிருந்தான். அங்கே எண்ணிலடங்காதவையும், ரத்தினங்களாலானவையுமான வேள்விக் குச்சிகளையும் {யூபங்களையும்}, தங்கத்தாலான சைத்திய மரங்களையும் {வேள்வி மேடைகளையும்} காணலாம். ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்} அங்கேதான் வேள்விகளைச் செய்து (தவ) வெற்றியை அடைந்தான். அங்கேதான் அனைத்துயிரினங்களின் தலைவனும், உயர்ந்த சக்தியைக் கொண்டவனுமான அனைத்து உலகங்களின் நித்திய படைப்பாளன் {சிவன்}, தனது பேய்த்தொண்டர்களால் சூழப்பட்ட படி துதிக்கப்படுகிறான்.

அங்கேதான் நரன் மற்றும் நாராயணன், பிரம்மன், மனு, ஐந்தாவதாக ஸ்தாணுவும் (எப்போதும்) இருக்கின்றனர். அங்கேதான் மூன்று ஊற்றுகளைக் கொண்ட [3] தெய்வீக ஓடையான கங்கை, பிரம்மலோகத்தில் இருந்து முதலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, வஸ்வோகஸாரை, நளினி, பாவத்தைத் தூய்மைசெய்யும் சரஸ்வதி, ஜம்பூநதி, சீதை, கங்கை, ஏழாவதாகச் சிந்து என ஏழு ஓடைகளாகத் [4] தன்னைப் பிரித்துக் கொள்கிறாள். உயர்ந்த தலைவன் {சிவன்} (தானே) அந்தத் தெய்வீக ஓடையைப் பார்க்க முடியாததாக ஏற்பாடு செய்திருக்கிறான். யுக முடிவிற்குப் பிறகு (படைப்புகள் தொடங்கும் முன்) ஆயிரம் சந்தர்ப்பங்களில், அங்கேதான், (தேவர்களாலும், முனிவர்களாலும்) வேள்விகள் செய்யப்பட்டன. சரஸ்வதியைப் பொறுத்தவரை, (அவளது வழியில்) சில இடங்களில் அவள் {சரஸ்வதி} கண்ணுக்குப் புலப்படுபவளாகவும், சில இடங்களில் புலப்படாதவளாகவும் இருக்கிறாள். இந்த ஏழு அடுக்குக் கொண்ட கங்கை மூன்று உலகங்களிலும் பரந்து அறியப்படுகிறது.

[3] புனித ஓடையான கங்கை மூன்று ஊற்றுகளைக் கொண்டிருக்கிறாள் என்று நம்பப்படுகிறது. சொர்க்கத்தில் அந்த ஊற்று மந்தாகினி என்றும், பூமியில் கங்கை என்றும், பாதாள உலகில் போகவதி என்று அழைக்கப்படுகிறாள் என்று சொல்கிறார் கங்குலி.

[4] "இதே ஏழு ஓடைகள், ராமாயணத்தில், "ஹ்லாதினி, பாவனி, நளினி, சுசக்ஷுஸ், சீதை, சிந்து, பாகீரதி" என்று சொல்லப்படுகின்றன. ராமாயணம், பாலகாண்டம், 43வது சர்க்கம், 11 ஸ்லோகம்" என்று வேறொரு பதிப்பில் மேற்கோள் உள்ளது.

ராட்சசர்கள் இமயத்திலும், குஹ்யர்கள் ஹேமகூடத்திலும், பாம்புகளும், நாகர்கள் நிஷதத்திலும், தவசிகள் கோகர்ணத்திலும் வசிக்கின்றனர். ஸ்வேத மலைகள், தேவர்கள் மற்றும் அசுரர்களின் வசிப்பிடமாகச் சொல்லப்படுகிறது. கந்தர்வர்கள் எப்போதும் நிஷதங்களிலும் {நிஷத மலைகளிலும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் நீலத்திலும் {நீல மலைகளிலும்} வசிக்கின்றனர். சிருங்கவத {சிருங்கவான்} மலைகள் எப்போதும் தேவர்களின் ஓய்விடமாகக் கருதப்படுகிறது.

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உலகத்தின் ஏழு வர்ஷங்களான இவை இப்படியே பிரிந்திருக்கின்றன. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் இவற்றிலேயே நிலைபெற்று இருக்கின்றன. தேவ மற்றும் மனித செழிப்பு ஆகிய இரண்டின் பல்வேறு வகைகள் அவற்றில் காணப்படுகின்றன. அவை எண்ண முடியாதனவாகவும் இருக்கின்றன. எனினும், நான் உம்மிடம் சொன்னதும், முயலின் வடிவத்தைக் கொண்டதுமான மகிழ்ச்சி நிறைந்த பகுதியைக் குறித்த (இவை அனைத்தையும்) தங்கள் சொந்த நன்மையில் விருப்பம் கொண்டோர் நம்புகின்றனர். நன்மையை அடைய விருப்பமுள்ளவனால் அவசியம் நம்பத்தக்கது. இந்தப் பகுதியின் எல்லைகளில், வடக்கில் ஒன்றும் {ஐராவதம்}, தெற்கில் மற்றொன்றும் {பாரதம்} என இரு வர்ஷங்கள் இருக்கின்றன. அவை இரண்டும் உமக்கு இப்போது சொல்லப்பட்டன. மேலும் நாகத்வீபம் என்றும் காசியபத்வீபம் என்று இரு தீவுகள், முயல் வடிவப் பகுதியின் இரு காதுகளாக இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தாமிரத் தட்டுகளைப் [5] போன்ற பாறைகளைக் கொண்டவையான அழகிய மலய மலைகள், முயல் வடிவத்தை ஒத்திருக்கும் ஜம்பூத்வீபத்தின் மற்றொரு (முக்கிய) பகுதியாக இருக்கிறது" என்றான் {சஞ்சயன்}.

[5] வேறு பதிப்பில் இந்தப் பத்தி, "தாமிரபரணி நதியின் தோற்றுவாயும், செழிப்புமிக்கதுமான மலய மலையானது இந்தத் த்வீபத்திற்கு முயல்வடிவம் போன்ற இரண்டாவது த்வீபமாகக் காணப்படுகிறது" என்று இருக்கிறது.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்