Saturday, August 08, 2015

பஞ்சபூதங்களால் உயிர்கள் தோன்றின! - பீஷ்ம பர்வம் பகுதி - 005

The creatures sprung from five elements! | Bhishma-Parva-Section-005 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 5)

பதிவின் சுருக்கம் : சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குப் பஞ்சபூதங்களின் தன்மைகளையும் அவை ஒவ்வொன்றின் பண்புகளையும் விளக்குவது; ஒரு பூதம் மற்றொன்றோடு கலக்கும் போதே உயிர்கள் தோன்றுகின்றன பூதங்கள் அழிகின்றன என்று சொல்வது; அண்டம் ஒரே சீர்மையுடன் ஒரே பெருந்திரளாக இருந்தபோது அவை ஒவ்வொன்றும் தனித்துச் சார்பற்று இருந்தன என்று சொல்வது; பஞ்சபூதங்களின் கலவை உயிரினங்களில் எவ்வளவு இருக்கிறது என்பதை அளக்க முடியாது, அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது; சுதர்சனத் தீவைக் குறித்துத் திருதராஷ்டிரனுக்குச் சஞ்சயன் சொல்வது....

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, நதிகள் மற்றும் மலைகளின் பெயர்கள், மாகாணங்களின் பெயர்கள், மேலும் பூமியில் இருக்கும் பிற பொருட்கள் அனைத்தையும், அதன் பரிணாமங்களையும் குறித்தும், காடுகளோடு கூடிய மொத்த உலகத்தில் முழுமையாக உள்ள பொருட்களை அறிந்தவனான நீ, ஓ சஞ்சயா எனக்கு விபரமாக எடுத்துரைப்பாயாக."

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அண்டத்தின் பொருட்கள் அனைத்தும், (அவையவற்றில் உள்ள) ஐந்து தனிமங்களுடைய {பஞ்சபூதங்களுடைய} இருப்பின் விளைவால் சமமானவையாகவே இருக்கின்றன என்று ஞானிகளால் சொல்லப்படுகிறது. வெளி {ஆகாயம்}, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்பதே அந்தத் தனிமங்களாகும் {பூதங்களாகும்}. ஒலி, தொடுதல், பார்வை, சுவை, மற்றும் நறுமணம் ஆகியவை அவற்றுடைய (தனிப்பட்ட) பண்புகள் {குணங்கள்} ஆகும். இந்தத் தனிமங்கள் {ஐம்பூதங்கள்} ஒவ்வொன்றும் (தனது சொந்த பண்புகளுக்குக் கூடுதலாக) தனக்கு முன் வருவது அல்லது வருவனவற்றின் பண்பு அல்லது பண்புகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. எனவே, உண்மையை அறிந்த முனிவர்களுடைய வாக்கின்படி, {ஒரு பூதம்} தனது சிறப்புப் பண்புடன் சேர்த்து, மற்ற நான்கின் {நான்கு பூதங்களின்} பண்புகள் {ஒலி, தொடுதல், பார்வை, சுவை ஆகிய} அனைத்தையும் கொண்டிருக்கலாம். {ஐந்து பூதங்களில் ஒன்றான} நிலமானது இவை {பூதங்கள்} அனைத்திலும் முதன்மையானதாகும்.


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீரில் நான்கு பண்புகள் {ஒலி, தொடுதல், பார்வை, சுவை ஆகியன} இருக்கின்றன. அதில் மணம் இல்லை. நெருப்பானது ஒலி, தொடுதல், பார்வை ஆகிய மூன்று பண்புகளை கொண்டிருக்கிறது. காற்றுக்கு ஒலி மற்றும் தொடுதல் சொந்தமாக இருக்கிறது. அதே வேளையில் வெளியில் {ஆகாயத்தில்} ஒலி மட்டுமே இருக்கிறது. இந்த ஐந்து பண்புகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வழியிலேயே), எந்த உயிரினங்கள் எல்லாம் அண்டத்தில் நிலைத்திருக்கின்றன என்பதைச் சார்ந்து இந்த ஐந்து அடிப்படை தனிமங்களிலும் {பூதங்களிலும்} நிலைத்திருக்கிறது. இந்த அண்டத்தில் சமச்சீர்மை எப்போது இருக்கிறதோ, அப்போது, அவை {அந்தப் பண்புகள்} தனித்தனியாகவும், சார்பற்றும் நிலைத்திருக்கின்றன [1].

[1] "இங்கே மூலத்தில் உள்ள Samyam என்பது சமச்சீர்மையாகும். படைப்பிற்கு முன்பு, ஒரேவிதமான ஒரே திரள் அல்லது பிரம்மத்தைத் தவிர வேறு ஏதும் இல்லாத போது, அண்டம் இருந்த நிலையின் உருவகமாகும் அது {Samyam}. இரண்டாவது வரியின் முதல் சேர்மம் {கலவை} வேறுவிதமாகப் படிக்கப்படுகிறது. பர்த்வான் பண்டிதர்களும், பம்பாய் பதிப்பும் (வேறுபடும் வகையில்) anyonyam என்று உரைக்கிறது. வங்க உரைகளில் பல (காரணத்துடன்) anyonyena என்று உரைக்கின்றன. இந்த வேறுபட்ட வாசிப்புகளால் பொருள் அரிதாகவே பாதிப்படைகிறது" என்கிறார் கங்குலி.

எனினும், இவை தங்கள் இயல்பான நிலையில் இல்லாமல் ஒன்றுடன் ஒன்று கலந்தால், உடல்களுடன் கூடிய உயிரினங்கள் உயிருடன் எழுகின்றன. இஃது எப்போதும் வேறுவிதமாக இருப்பதில்லை. ஒன்றினுக்குள் ஒன்று ஒன்றிணைந்து, ஒன்று வெல்லும் வரிசையில் அந்தத் தனிமங்கள் அழிவடைகின்றன; மேலும், தன் முன்பு இருக்கும் ஒன்றிலிருந்து எழும் அவை இருப்பிலும் உதிக்கின்றன {தோற்றமும் கொள்கின்றன} [2].

[2] "அழிவின் வரிசை என்பது பூமி நீரில் இணைவதும், நீர் நெருப்பில் இணைவதும், நெருப்புக் காற்றில் இணைவதும், காற்று வெளியில் {ஆகாயத்தில்} இணைவதுமாகும். எனவே பிறப்பின் வரிசை என்பது வெளியில் {ஆகாயத்தில்} இருந்து காற்று எழுவதும், காற்றில் இருந்து நெருப்பு எழுவதும், நெருப்பில் இருந்து நீர் எழுவதும், நீரில் இருந்து நிலம் எழுவதுமாகும்" என்கிறார் கங்குலி.

இவை அனைத்தும் அளக்கமுடியாதவை, இவற்றின் வடிவங்கள் பிரம்மமே ஆகும். இந்த அண்டத்தில் ஐந்து தனிமங்களைக் {பஞ்சபூதங்களைக்} கொண்ட உயிரினங்களே காணப்படுகின்றன. அவற்றின் அளவுகளை உறுதிசெய்து கொள்ளவே, மனிதர்கள் தங்கள் அறிவைப் {ஊகத்தைப்} பயன்படுத்தி முயன்று கொண்டிருக்கிறார்கள். எனினும், நினைத்துப் பார்க்க முடியாத அந்தக் காரியங்களை, அறிவால் {ஊகத்தினால்} தீர்த்துவிட முயற்சிக்கக்கூடாது. (மனித) இயல்புக்கு மேலானதாக இருப்பதால், அது நினைத்துக்கூடப் பார்க்க முடியாததற்கான ஓர் அடையாளமாக இருக்கிறது.

ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, எனினும், நான் உமக்குச் சுதர்சனம் என்றழைக்கப்படும் தீவைக் குறித்து விளக்குவேன். இந்தத் தீவு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வட்டமானதும், சக்கரத்தின் வடிவம் கொண்டதுமாகும். நதிகள், பிற நீர்நிலைகள், மேகத் திரள்களைப் போன்ற மலைகள், நகரங்கள் மற்றும் பல இனிய மாகாணங்கள் அதில் நிறைந்திருக்கின்றன. மலர்கள் மற்றும் கனிகளைக் கொண்ட மரங்கள் நிறைந்து, பல்வேறு வகைகளிலான பயிர்கள் மற்றும் பிற செல்வங்களுடன் அஃது {சுதர்சனத் தீவு} இருக்கிறது. மேலும் அஃது அனைத்துப் புறங்களிலும் உப்புக் கடலால் சூழப்பட்டுள்ளது. ஒருவன் தனது முகத்தைக் கண்ணாடியில் காண்பதைப் போலவே, சுதர்சனத் தீவையும் சந்திர வட்டிலில் காண முடியும். அதன் இரண்டு பகுதிகள் அரச மரத்தைப் போன்று தெரியும், அதே வேளையில் மற்றும் இரண்டு, பெரிய முயலைப் போலத் தோன்றும். அஃது {சுதர்சனத்தீவு}, இலையுதிர்க்கும் அனைத்து வகைத் தாவரங்களின் நெருக்கத்துடன் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டுள்ளது [3].

[3] வேறு பதிப்பில் இந்தப் பத்தி முற்றிலும் மாறுபடுகிறது. "ஒரு மனிதன் தன் முகத்தை எவ்வாறு கண்ணாடியில் பார்ப்பானோ, அவ்வாறே சுதர்சனத் தீவு சந்திர மண்டலத்தில் காணப்படுகிறது. அந்தத் சுதர்சனத் தீவினைக் காட்டிலும் ப்லக்ஷத்தீவு இரண்டு மடங்கும் பெரியதாகும். சால்மலித்தீவு அதைவிட இரண்டு மடங்கும் பெரியதாகும். பிப்பலத்தீவு அதைக்காட்டிலும் இரண்டு மடங்கும் பெரியதாகும். அனைத்துவிதமான மூலிகைகள் நிறைந்த மலைகளால் நாற்புறங்களிலும் சூழப்பட்ட குசத்தீவும் அதைவிட இரண்டு மடங்கும் பெரியதாகும்" என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளைத் தவிர எஞ்சிய அனைத்தும் நீரேயாகும். இன்னும் என்ன மீதியிருக்கிறது என்பதை விரைவில் நான் விவரிப்பேன். எஞ்சியதை நான் பிறகு சொல்கிறேன். இப்போது சுருக்கமாக நான் விவரிப்பதைக் கேட்பீராக [4]" என்றான் {சஞ்சயன்}.

[4] "கடைசி ஆறு சுலோகங்களை நீலகண்டர் ஆச்சரியத்திற்குரிய பொருளுடன் {எளிதில் புரியாத மறை பொருளுடன்} விளக்குகிறார். சுதர்சனத்தின் மூலம் அவர் மனதைப் புரிந்து கொள்கிறார். எஞ்சியவையும் அப்படியே தொடர்ந்து விளக்கப்படுகிறது. எனினும், பொருளற்றவற்றில் பொருள் கொள்ள முயன்று விளக்கமளிப்பது {திரிப்பது} வர்ணனையாளர்கள் {விளக்கவுரை அளிப்பவர்கள்} மத்தியில் அரிதானது அல்ல" என்கிறார் கங்குலி. அதனால் அதைக் கங்குலி விட்டிருப்பார் என்றும் அதுவே ஏற்கனவே மேலே [3] ல் கண்டவை என்றும் நினைக்கிறேன்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்