Monday, August 10, 2015

நாவலந்தீவு!- பீஷ்ம பர்வம் பகுதி - 007

Jamvudwipa! | Bhishma-Parva-Section-007 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 7)

பதிவின் சுருக்கம் : வடக்கு குருவைக் குறித்த வர்ணனை; அங்கிருக்கும் மரங்கள், மனிதர்கள், குளங்கள் பற்றிய குறிப்பு; பத்திராசுவம் குறித்த குறிப்பு; நாவலந்தீவு குறித்த வர்ணனை; அங்கிருக்கும் நாவல் மரம், மற்றும் அதன் கனி குறித்த குறிப்பு; நாவலந்தீவில் இருந்து உத்திர குருவுக்கு ஓடும் நதியைப் பற்றிய குறிப்பு; மால்யவாத மலையினைப் பற்றிய குறிப்பு...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, பெரும் புத்திக்கூர்மை கொண்டவனே, மேருவின் வடக்கு மற்றும் கிழக்கு பக்கத்தின் பகுதிகளையும், மால்யவான் மலைகளையும் குறித்து விரிவாக எனக்குச் சொல்வாயாக."


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "நீல மலையின் தெற்காகவும், மேருவின் வடக்காகவும், சித்தர்களின் வசிப்பிடமானதும், புனிதமானதுமான வடக்கு குரு {உத்தரக் குரு} இருக்கிறது. அங்கே இருக்கும் மரங்கள் இனிமையான கனிகளைச் சுமக்கின்றன. அவை எப்போதும் கனிகளாலும், மலர்களாலும் நிறைந்திருக்கின்றன. (அங்கே இருக்கும்) அனைத்து மலர்களும் மணமிக்கவையாகவும், கனிகள் அற்புத சுவை கொண்டவையாகவும் இருக்கின்றன. மேலும், அங்கே இருக்கும் மரங்களில் சில, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பறிப்பவரின்) விருப்பத்தின்படி கனிகளைக் கொடுக்கின்றன.

மேலும், அங்கே சில மரங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பால் சுரப்பவை {க்ஷீரிகள்} என்று அழைக்கப்படுகின்றன. அவை எப்போதும் பாலைச் சுரந்து, அமிர்தத்தைப் போன்ற சுவை கொண்ட ஆறு வேறுபட்ட வகைகளிலான உணவைக் கொடுக்கின்றன. அந்த மரங்கள் ஆடைகளையும் தருகின்றன. அவற்றின் கனிகளில் (மனிதர்களின் பயன்பாட்டுக்கான) ஆபரணங்களும் இருக்கின்றன. அந்த முழு நிலமும் தங்க மணற்துகள்களால் நிரம்பியிருக்கின்றன. அந்த இடத்தின் ஒரு பகுதி மிக இனிமை நிறைந்ததாகவும், மாணிக்கம், அல்லது வைரம், அல்லது வைடூரியம், அல்லது பிற கற்கள் மற்றும் ரத்தினங்களின் பிரகாசத்தையும் கொண்டிருக்கிறது. அனைத்து பருவகாலங்களும் அங்கே இனிமையானதாக இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நிலத்தில் எங்கும் சேறு இருப்பதில்லை. அங்கிருக்கும் குளங்கள் அழகானவையாகவும், சுவை நிறைந்தவையாகவும், தெளிந்த நீரைக் கொண்டனவாகவும் இருக்கின்றன.

தேவலோகத்தில் {தேவநிலையில்} இருந்து விழுந்தவர்களே அங்கே மனிதர்களாகப் பிறக்கிறார்கள். அங்கே அனைவரும் தூய பிறப்பு கொண்டவர்களாகவும், மிக அழகான தோற்றத்துடனும் இருக்கிறார்கள். (எதிர்பாலினம்) கொண்ட இரட்டையர்கள் அங்கே {தம்பதியினராகவே} பிறக்கிறார்கள். மேலும் பெண்கள் அப்சரசுகளைப் போன்ற அழகுள்ளவர்களாக இருக்கிறார்கள். (ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) பால்சுரக்கும் மரங்களில் இருந்து அமிர்தத்தைப் போன்ற இனிய சுவை கொண்ட பாலை அவர்கள் பருகுகின்றனர். அங்கே பிறக்கும் (எதிர் பாலினம் = ஒரு ஆண், ஒரு பெண் கொண்ட) இரட்டையர்கள் சமமாகவே வளர்கின்றனர். இருவரும் சம அழகுடனும், இருவரும் ஒத்த குணநலன்களுடனும், இருவரும் சமமாக உடுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அன்றில் {சக்கரவாகப் பறவைகளின்} இணையைப் போலக் காதலுடன் {அன்புடன்} வளர்கின்றனர்.

அந்த நாட்டில் இருக்கும் மக்கள் நோயின்றி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பதினோராயிரம் {11,000} வருடங்கள் {ஒன்றாக} வாழும் அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருபோதும் ஒருவரை ஒருவர் கைவிடுவதில்லை. கூர்மையான அலகுகளைக் கொண்டவையும், பெரும் பலம் கொண்டவையுமான பாருண்டங்கள் என்று அழைக்கப்படும் ஒருவகைப் பறவைகள், அவர்கள் இறந்ததும், அவர்களை எடுத்துக் கொண்டு போய், மலைக்குகைகளில் வீசுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் இப்போது உமக்கு வடக்குக் குருக்களை {உத்தரக் குருக்களைக்} குறித்துச் சுருக்கமாக விவரித்துவிட்டேன்.

உமக்கு நான் இப்போது முறையாக மேருவின் கிழக்குப் பக்கத்தை விவரிக்கிறேன். அங்கிருக்கும் பகுதிகள் அனைத்திலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பத்திராசுவம் முதன்மையானதாகும். அங்கேதான் பத்திரசாலம் எனும் பெரும் காடும், காலாம்ரம் என்று அழைக்கப்படும் பெரும் மரமும் இருக்கின்றன. இந்தக் காலாம்ரம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எப்போதும் கனிகளாலும், மலர்களாலும் நிறைந்திருக்கிறது. மேலும், ஒரு யோஜனை உயரம் கொண்ட அந்த மரம் சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படுகிறது. அங்கே இருக்கும் மனிதர்கள் வெண்ணிறமும், பெரும் சக்தியும், பெரும் பலமும் கொண்டிருக்கின்றனர்.

அங்கே இருக்கும் பெண்கள் ஆம்பல் {மலரின்} நிறத்தோடு மிக அழகாகவும், பார்வைக்கு இனிமையானவர்களாகவும் இருக்கிறார்கள். நிலவின் காந்தியையும், நிலவின் வெண் நிறத்தையும் கொண்டவர்களான அவர்களின் முகங்களும் முழு நிலவைப் போலவே இருக்கின்றன. அவர்களின் உடல்கள், நிலவின் கதிர்களைப் போலவே குளுமையாக இருக்கின்றன. அவர்கள் அனைவரும் பாடவும், ஆடவும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அங்கே மனித வாழ்வின் காலம் பத்தாயிரம் {10,000} வருடங்களாகும். காலாம்ரத்தின் சாறை அருந்தும் அவர்கள் எப்போதும் இளமையுடனே இருக்கிறார்கள்.

நீலத்திற்கு {நீல மலையின்} தெற்காகவும், நிஷதத்திற்கு {நிஷதமலையின்} வடக்காகவும், நித்தியமான ஒரு பெரும் ஜம்பூ {நாவல்} மரம் இருக்கிறது. சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படும் அந்தப் புனித மரம், விரும்பிய அனைத்தையும் கொடுக்கவல்லதாக இருக்கிறது. அந்த மரத்தின் பெயரால்தான் இந்தப் பகுதி எப்போதும் ஜம்பூத்வீபம் {நாவலந்தீவு} என்று அழைக்கப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயிரத்துநூறு {1,100} யோஜனைகள் உயரம் உள்ள இந்த மரங்களின் இளவரசன் {ஜம்பூ}, சொர்க்கத்தையே தொட்டுக் கொண்டு நிற்கிறான்.

இரண்டாயிரத்து ஐநூறு {2,500} முழங்கள் [1] பரப்பளவு கொண்ட அந்த மரத்தின் கனி பழுக்கும்போது வெடிக்கிறது. பூமியில் விழும் இந்தக் கனிகள் உரத்த ஒலியை எழுப்புகின்றன. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவை வெள்ளி நிறத்திலான சாறை பூமியில் பொழிகின்றன. அந்த நாவற்சாறு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு நதியாகி, மேருவை வலம் வந்து, வடக்குக் குருக்களுக்கு {உத்தரக் குருவுக்கு} செல்கிறது. அந்தக் கனியின் சாறு பருகப்படும்போது, அது மன அமைதியை விளைவிக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் பிறகு தாகமே உணரப்படுவதில்லை. {அதைப் பருகுபவர்களை} முதுமை பலவீனமாக்குவதில்லை.

[1] வேறொரு பதிப்பில் இது முழங்கள் என்றில்லாமல், அரத்னி என்றிருக்கிறது. அரத்னி என்றால் சிறு விரலைச் சேர்க்காமல் முஷ்டியுடன் கூடிய கையளவு என்றும் அங்கே சொல்லப்பட்டுள்ளது.

தெய்வீக ஆபரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவதும், இந்திரகோபக பூச்சிகளின் {பட்டுப்பூச்சிகளின்} நிறத்தைப் போன்றதும், பெரும் பிரகாசம் கொண்டதுமான ஜாம்பூநதம் என்ற தங்கத்தின் வகைகளில் ஒன்று இந்த இடத்தில் உண்டாகிறது. இந்த இடத்தில் பிறப்பவர்கள் காலைச் சூரியனின் நிறத்தைக் கொண்டிருக்கின்றனர்.

மால்யவாத மலையின் உச்சியில், ஓ! பாரதக்குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யுகத்தின் முடிவில், அண்ட அழிவுக்காகச் சுடர்விட்டு எரியும் சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு எப்போதும் காணப்படுகிறது. மால்யவாதத்தின் சிகரத்தில் கிழக்கு நோக்கி பல சிறு மலைகள் இருக்கின்றன. அந்த மால்யவாதம், ஓ! மன்னா, பதினோராயிரம் {11,000} யோஜனைகள் அளவைக் கொண்டதாகும் [2]. அங்கே பிறக்கும் மனிதர்கள் தங்க நிறத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பிரம்ம லோகத்தில் இருந்து விழுந்தவர்களும், பிரம்மத்தை உச்சரிப்பவர்களுமாவர். அவர்கள் தங்கள் உயிர்வித்தை மேலெழுப்பிக் கடும் தவத்துறவுகளை மேற்கொள்கின்றனர். உயிரினங்களின் பாதுகாப்புக்காக அவர்கள் அனைவரும் சூரியனுக்குள் நுழைகிறார்கள். எண்ணிக்கையில் அறுபத்தாறாயிரம் {66,000} கொண்ட அவர்கள், அருணனுக்கு முன்பாகவே சூரியனைச் சூழ்ந்து கொண்டு செல்கிறார்கள். சூரியக் கதிர்களால் அறுபத்தாறாயிரம் {66,000} ஆண்டுகள் சுடப்பட்ட பிறகு அவர்கள் சந்திரவட்டிலில் நுழைகிறார்கள்" என்றான் {சஞ்சயன்}.

[2] பர்துவான் மற்றும் பம்பாய்ப்பதிப்புகளில் Panchashat {ஐந்தும் ஆறும்} என்று கூறப்படுவது, அதாவது பதினொன்று என்று கூறப்படுவது, வங்காள உரைகளில் பொதுவாக panchasat {ஐம்பது} என்று கூறப்படுகிறது என்கிறார் கங்குலி.




பூவும் நற்றளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும்
நாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று
தீவுநற்கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த
நாவலந்தீவு நந்தினன் மணி போன்ற தன்றே.   

- உதயண குமார காவியம் 6


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்