Tuesday, August 11, 2015

அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவன்!- பீஷ்ம பர்வம் பகுதி - 008

The one that pervadeth the Universe! | Bhishma-Parva-Section-008 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 8)

பதிவின் சுருக்கம் : ரோமணகம், ஹிரண்யமயம், ஐராவதம் ஆகிய வர்ஷங்களைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; பாற்கடலின் வடக்கில் இருக்கும் விஷ்ணுவின் மகிமையைச் சஞ்சயன் சொல்வது; காலமே பெரியதென்றும், அனைத்திலும் ஊடுருவி படர்ந்திருக்கும் காலத்தையே, வைகுண்டன் எனத் தேவர்களும், விஷ்ணு என மனிதர்களும் அழைக்கிறார்கள் என்று திருதராஷ்டிரன் சொல்வது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, அனைத்து வர்ஷங்கள், அனைத்து மலைகள் அனைத்தின் பெயர்களையும், அந்த மலைகளில் வசிப்போர் அனைவரின் பெயர்களையும் உண்மையில் எனக்குச் சொல்வாயாக"


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஸ்வேதத்திற்கு {ஸ்வேத மலைக்குத்} தெற்காகவும், நிஷதத்திற்கு வடக்காகவும், ரோமணகம் {ரமணகம்} என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே பிறக்கும் மனிதர்கள் அனைவரும் வெள்ளை நிறம் கொண்டோராகவும், நல்ல தாய் தந்தையரை உடையவராகவும், அழகிய குணநலன்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கே பிறப்பவர்கள் அனைவரும் எதிரிகளற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே {ரோமணகத்தில்} அவர்கள் பதினோராயிரத்து ஐநூறு {11,500) ஆண்டுகள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் வாழ்கிறார்கள்.

நிஷதத்திற்குத் தெற்கே ஹிரண்யமயம் என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே ஹைரண்யவதி என்று அழைக்கப்படும் நதி ஒன்று இருக்கிறது. அங்கேதான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பறவைகளின் முதன்மையானவன் எனப் பெயர் கொண்டவனான கருடன் வாழ்கிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் யக்ஷர்களைப் பின்பற்றுபவர்களாகவும், செல்வந்தர்களாகவும், அழகிய குணநலன்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கே இருக்கும் மனிதர்கள் பலம் கூடியவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பனிரெண்டாயிரத்து ஐநூறு {12,500} ஆண்டுகள் வாழ்கிறார்கள். அதுவே அவர்களது வாழ்வின் அளவாகும்.

ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, சிருங்காவத மலைகள் மூன்று அழகிய சிகரங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தங்கத்தாலும், {ஒன்று} ரத்னங்களாலும் ஆனது. மற்றொன்று அனைத்து வகை ரத்தினங்களாலும் செய்யப்பட்டு மிக அற்புதமானதாக இருக்கிறது. அது பெரிய மாளிகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்கேதான் சாண்டிலி என்ற பெயர் கொண்டவளும், சுய காந்தி கொண்டவளுமான மங்கை எப்போதும் வாழ்கிறாள்.

சிருங்காதவதத்திற்கு வடக்கே கடலின் எல்லை வரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஐராவதம் என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே இந்த ரத்தினமயமான மலையிருப்பதால், இந்த வர்ஷம் அனைத்திலும் மேன்மையானதாக இருக்கிறது. அங்கே சூரியன் வெப்பத்தைக் கொடுப்பதில்லை. மனிதர்கள் அங்கே கிழட்டுத் தன்மைக்கு ஆளாவதில்லை. நட்சத்திரங்களுடன் கூடிய நிலவுதான் அங்கே வெளிச்சத்துக்கான ஒரே தோற்றுவாயாக (ஆகாயத்தை) மூடிக் கொண்டிருக்கிறது. தாமரையின் நிறம் மற்றும் பிரகாசத்தைக் கொண்டவர்களும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்களுமான அங்கே பிறக்கும் மனிதர்கள், தாமரையின் மணத்தையும் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள். சிமிட்டாத கண்களும், (தங்கள் உடல்களில் இருந்து வெளிவரும்) இனிமையான நறுமணமும் கொண்ட அவர்கள் உணவின்றித் தங்கள் புலன்களை அடக்கி வாழ்பவர்களாவர். அவர்கள் அனைவரும் தேவர்களின் பகுதியில் இருந்து விழுந்தவர்களாவர். மேலும் அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எந்தவிதமான பாவத்தையும் செய்யாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் பதிமூன்றாயிரம் {13,000} ஆண்டுகளுக்கு அந்த வாழ்வை வாழ்கிறார்கள். ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அதுவே அவர்களது வாழ்வின் அளவாகும்.

அப்படியே பாற்கடலின் வடக்கில், அளவிலா வலிமை கொண்டவனான தலைவன் ஹரி {விஷ்ணு}, தனது தங்கத்தேரில் {பொற்சகடத்தில்} வசிக்கிறான். அந்த வாகனம், எட்டு சக்கரங்களையுடையதும், இயல்புக்குமிக்க எண்ணிலா உயிரினங்களைக் {பூதங்களைக்} கொண்டதும், மனோ வேகம் கொண்டதாகவும் இருக்கிறது. நெருப்பு போன்ற நிறமும், வலிமைமிக்க சக்தியும் கொண்ட அது ஜம்பூநதத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துயிர்களுக்கும் தலைவனான அவன் {ஹரி}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன்னில் அனைத்து வகைச் செழிப்பையும் கொண்டிருக்கிறான். (பிரளயம் ஏற்படும்போது) அவனிலேயே இந்த அண்டம் கலக்கிறது. (படைப்பின் விருப்பம் அவனைப் பீடிக்கும்போது) அவனிலிருந்தே அது மீண்டும் உற்பத்தியாகிறது. செயல்படுபவனாகவும், அனைவரையும் செயல்பட வைப்பவனாகவும் இருப்பவன் அவனே {விஷ்ணுவே}. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நிலமாகவும், நீராகவும், வெளியாகவும் {ஆகாயமாகவும்}, காற்றாகவும், நெருப்பாகவும் இருப்பவன் அவனே. அனைத்துயிர்களுக்கும் வேள்வியின் வடிவமாக இருப்பவன் அவனே. நெருப்பு {அக்னியே} அவனது {விஷ்ணுவின்} வாயாக இருக்கிறது {இருக்கிறான்}" என்றான் {சஞ்சயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சஞ்சயனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த உயர் ஆன்ம மன்னன் திருதராஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தனது மகன்களைக் குறித்த {நினைவில்} தியானத்தில் ஆழ்ந்தான். பெரும் சக்தி கொண்ட அவன் {திருதராஷ்டிரன்}, {இப்படிச்} சிந்தித்த பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! சூதனின் மகனே {சஞ்சயா}, அண்டத்தை அழிப்பது காலமே என்பதில் ஐயமில்லை. அனைத்தையும் மீண்டும் படைப்பதும் காலமேயாகும். இங்கே எதுவும் நிலையானதில்லை {நித்தியமில்லை}. அனைத்திலும் ஊடுருவி பரந்திருக்கும் தன்மை பெற்ற {சர்வ வியாபிகளான} நரன் மற்றும் நாராயணனே அனைத்து உயிர்களையும் அழிப்பவர்களாவர். தேவர்கள் அவனை வைகுண்டன் (அளவிலா வலிமை கொண்டவன்) என்று சொல்கின்றனர். அதே வேளையில் மனிதர்கள் அவனை விஷ்ணு (அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவன்) என்று அழைக்கின்றனர்" என்றான் {திருதராஷ்டிரன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்