Wednesday, September 02, 2015

கௌரவர்களின் வியூகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 017

The vyuha of the Kauravas! | Bhishma-Parva-Section-017 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 5)

பதிவின் சுருக்கம் : போருக்குப் புறப்பட்ட கௌரவப் படையைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விவரிப்பது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "புனிதமான கிருஷ்ண துவைபாயன வியாசர் சொன்னபடியே, அதே முறையிலேயே, பூமியின் மன்னர்கள் ஒன்று திரண்டு அந்த மோதலுக்கு வந்தார்கள்.


போர் ஆரம்பித்த அந்த நாளில் சோமன் பித்ரு லோகத்தை அணுகினான் [1]. வானத்தில் தோன்றிய அந்த ஏழு பெரிய கோள்கள் அனைத்தும் சுடர்விடும் நெருப்பைப் போலத் தோன்றின [2]. சூரியன் உதித்த போது, அஃது இரண்டாகப் பிளவுபட்டதைப் போலத் தோன்றியது. அது தவிர வானத்தில் தோன்றிய அந்த ஒளிக்கோள், தீப்பிழம்புகளாக பற்றி எரிவதாகத் தோன்றியது. ஊனுண்ணிகளான நரிகளும், காகங்களும், விருந்துண்ண இறந்த உடல்களை எதிர்பார்த்து, பற்றி எரிவதாகத் தெரிந்த அனைத்துப் புறங்களில் இருந்தும் கடும் கூச்சலிட்டன.

[1] "Magha Vishayagas Somas என்பது சோமன், அல்லது சந்திரன் மக நட்சத்திரக்கூட்டத்தில் நுழைந்ததாகச் சொல்லவில்லை என்று ஒரு நீண்ட குறிப்பில் நீலகண்டர் விளக்குகிறார். போர் தொடங்கிய நாள் எது என்ற கேள்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மகாபாரதத்தில் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற சுலோகங்களை மேற்கோளாக இட்டு, அவை அனைத்தும் வேறு ஒரு தீர்மானத்திற்கு வழிவகுப்பதாகவே அவர் காட்டுகிறார். பித்ருக்களின் உலகை அணுகும் நிலவு என்பதன் பொருள் என்னவென்றால், போரில் விழுவோர் உடனடியாகச் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்; நிச்சயமாக, அவர்கள் பித்ருக்களின் உலகத்திற்கே முதலில் செல்ல வேண்டும். அங்கே இருந்து அவர்கள் தெய்வீக உடல்களை அடைய சந்திர மண்டலத்திற்குச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் ஒரு சிறிய தாமதத்தையே குறிக்கிறது. எனினும் இங்கே, குருக்ஷேத்திரக் களத்தில் விழுவோரின் வழக்கில், அவர்கள் அத்தகைய ஒரு சிறிய தாமதத்தைக்கூடப் பெற மாட்டார்கள். விழுந்த வீரர்கள் மிக விரைவில் தெய்வீக உடலைப் பெறுவதற்காகவே சந்திரன், அல்லது சோமன் பித்ருக்களின் உலகத்தை அணுகினான். உண்மையில் {அங்கே வீழ்ந்த வீரர்கள்}, பிரகாசமிக்கத் தங்கள் உடல்களுடன் சொர்க்கத்திற்கு உயர்வதற்கு முன்னர்ச் சந்திரலோகப் பயணத்தில் அவர்கள் எந்தத் தாமதத்தையும் அடைய வேண்டிய அவசியமில்லை என்பதே இங்கே பொருள்" என்கிறார் கங்குலி.

[2] புராண வானியல்கள் அனைத்திலும் ஒன்பது கிரகங்களே உள்ளன. அவற்றில் ராகுவும், கேதுவும் உபக்கிரகங்களாகும். எனவே, மொத்தம் ஏழு கிரகங்கள் மட்டுமே உண்டு. இவ்வாறு இருக்க, நீலகண்டரும், பர்துவான் பண்டிதர்களும் இந்த வரியை மிகவும் குழப்பிவிட்டனர் என்கிறார் கங்குலி.

முதிர்ந்தவரான குருக்களின் பாட்டனும் {பீஷ்மரும்}, பரத்வாஜரின் மகனும் {துரோணரும்}, தினமும் காலையில் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, குவிந்த மனத்துடன், "பாண்டு மகன்களுக்கு வெற்றி" என்று சொல்லினர். அதே வேளையில் அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள், தாங்கள் கொடுத்த வாக்குறுதிக்காகவே உமது நிமித்தமாகப் போரிட்டனர்.

ஒவ்வொரு கடமையையும் முழுமையாக அறிந்தவரான உமது தந்தை தேவவிரதர் {உமது பெரியப்பா பீஷ்மர்}, மன்னர்கள் அனைவரையும் அழைத்து (அவர்களிடம்) இந்த வார்த்தைகளைச் சொன்னார். "க்ஷத்திரியர்களே, நீங்கள் சொர்க்கத்திற்குள் நுழையவே இந்தப் பெருங்கதவு திறந்திருக்கிறது. இதன் வழியாக நீங்கள் சக்ரன் {இந்திரன்}, மற்றும் பிரம்மனின் உலகங்களுக்குச் செல்வீராக. பழங்காலத்தின் முனிவர்கள் உங்களுக்கு இந்த நிலைத்த பாதையைக் காட்டியிருக்கின்றனர். மனதில் கவனத்துடன் போரில் ஈடுபட்டு, உங்களை நீங்களே கௌரவப்படுத்திக் கொள்ளுங்கள். இது போன்ற செய்கைகளாலேயே நாபாகன், யயாதி, மாந்தாதா, நகுஷன், நிருகன் ஆகியோர் உயர்ந்த உலகத்தை அடைந்தனர். வீட்டில் நோயால் இறப்பது ஒரு க்ஷத்திரியனுக்குப் பாவமாகும். போரில் தனது மரணத்தைச் சந்திப்பதே அவனது {க்ஷத்திரியனது} நிலைத்த கடமையாகும்" என்றார் {பீஷ்மர்}.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டவர்களும், தங்கள் தேர்களில் அழகாகத் தோன்றியவர்களுமான அந்த மன்னர்கள், தங்களுக்குரிய படைப்பிரிவுகளின் தலைமைக்கு முன்னேறிச் சென்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன் மட்டுமே, தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் பீஷ்மரின் நிமித்தமாக அந்தப் போரில் தனது ஆயுதங்களைத் தள்ளி வைத்தான். கர்ணன் இல்லாமல், உமது மகன்களும், மன்னர்கள் அனைவரும், அடிவானத்தின் பத்துப்புள்ளிகளையும் தங்கள் சிங்க முழக்கத்தால் எதிரொலிக்கச் செய்தபடி உமது பக்கத்தில் {படையில்} முன்னேறிச் சென்றனர். வெண்குடைகளாலும், கொடிகளாலும், கொடிக்கம்பங்களாலும், யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களாலும் அவர்களது படைப்பிரிவுகள் பிரகாசமாக ஒளிர்ந்தன.

பேரிகைகள், கணவங்கள் {சிறு முரசு}, துந்துபிகள் ஆகியவற்றின் ஒலிகளாலும், தேர் சக்கரங்களின் சடசடப்பொலிகளாலும் பூமி நடுங்கியது. கைவளைகள், தோள்வளைகள், (தங்கத்தின் பல வண்ண வேறுபாடுகளுடன் கூடிய) விற்கள் ஆகியவற்றைத் தரித்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நெருப்பு மலைகளைப் போலப் பிரகாசித்தனர். ஐந்து நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட பெரும் பனைமரக் கொடிமரத்துடன் {பனைமரக் கொடியைக் கொண்ட கொடிக்கம்பத்துடன்} கூடிய குருக்களின் படைத்தலைவர் பீஷ்மர், சூரியனைப் போலவே பிரகாசித்தார்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் இருந்த, அரச பிறவிகளான அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், ஓ! மன்னா, சந்தனுவின் மகன் {பீஷ்மரின்} கட்டளைக்கிணங்கி தங்கள் நிலைகளை ஏற்றனர்.

கோவாசனர்களின் நாட்டு (மன்னன்) சைப்பியன், ஏகாதிபதிகள் அனைவரின் துணையோடு, அரச பயன்பாட்டுக்குத் தகுந்ததும், முதுகில் கொடியைக் கொண்டதுமான அரச யானையின் மீது அமர்ந்து சென்றான்.

தாமரையின் நிறத்தைக் கொண்ட அஸ்வத்தாமன், ஒவ்வொரு அவசரத்திற்கும் தயாராக வெளியே சென்று, சிங்க வால் பொறிக்கப்பட்ட தனது கொடிக்கம்பத்துடன் {அல்லது கொடியுடன்}, அனைத்துப் பிரிவுகளுக்கும் தலைமையில் தன்னை நிறுத்திக் கொண்டான்.

சுருதாயுதன், சித்திரசேனன், புருமித்ரன், விவிம்சதி, சல்லியன், பூரிஸ்ரவஸ், விகர்ணன் ஆகிய வலிமைமிக்க வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த எழுவர், தங்கள் கவசங்களைப் பூண்டு கொண்டு, துரோணரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கு} பின்னே, ஆனால் பீஷ்மருக்கு முன்னே தங்கள் தேர்களில் தொடர்ந்து சென்றார்கள்.

தங்கத்தாலான இந்த வீரர்களின் நெடிய கொடிக்கம்பங்கள் அவர்களது சிறந்த தேர்களை அழகாக அலங்கரித்தபடி உயர்வான பிரகாசத்துடன் இருந்தன. ஆசான்களில் முதன்மையான துரோணனின் கொடிக்கம்பம், நீர்க்குடத்தால் {கமண்டலத்தால்} அலங்கரிக்கப்பட்ட பொற்பீடத்தையும், வில்லின் உருவத்தையும் தனது கொடியில் கொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிரிவுகளுக்கு வழிகாட்டிய துரியோதனனின் கொடிக்கம்பம், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட யானை பொறித்த கொடியுடன் இருந்தது.

பௌரவன், கலிங்கர்களின் ஆட்சியாளன், சல்லியன் ஆகிய ரதர்கள், துரியோதனனுக்கு முன்னணியில் தங்கள் நிலையை எடுத்தனர். காளை பொறிக்கப்பட்ட கொடி பொருந்திய தனது கொடிக்கம்பத்துடன் உள்ள விலையுயர்ந்த தேரில், (தனது படைப்பிரிவின்) முன்னணிக்கு வழிகாட்டியபடி, மகதர்களின் ஆட்சியாளன் எதிரியை எதிர்த்து அணிவகுத்தான் [3]. இலையுதிர் காலத் திரளான மேகங்களைப் போல இருந்த கிழக்கத்தியரின் அந்தப் படை பெரியதாக இருந்தாலும், (ஒருபுறம்) அங்க நாட்டவரின் தலைவனாலும் (கர்ணனின் மகன் விருஷகேதுவால்) {மறுபுறம்} பெரும் சக்தி கொண்ட கிருபராலும் அது பாதுகாக்கப்பட்டது.

[3] இந்த இடத்தில், வங்கப் பதிப்புகளில் 'Magadhascha ripum yayau.' என்று இருக்கிறது. பம்பாய்ப்பதிப்புகளிலிலோ 'Magadhasya Kripo-yayau.' என்று இருக்கிறது. பிந்தைய உரையை {அதாவது பம்பாய்ப் பதிப்பை} ஏற்றால், "மகதத் துருப்புகளின் முன்னணி படையை வழிநடத்திய படி கிருபர் சென்றார்" என்ற பொருள் வரும் என்கிறார் கங்குலி. அடுத்த வரியிலேயே கிருபரைப் பற்றிய குறிப்பு வருவதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.

பன்றிக் கொடியுடன் கூடியதும், வெள்ளியாலானதுமான தனது அழகிய கொடிக்கம்பத்துடன் தனது பிரிவின் முன்னணியில் நின்ற புகழ்மிக்க ஜெயத்ரதன் உயரிய பிரகாசத்துடன் தோன்றினான். நூறாயிரம் {100000} தேர்கள், எட்டாயிரம் {8000} யானைகள் மற்றும் அறுபதாயிரம் {60000} குதிரைகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்தன. சிந்துக்களின் அந்த அரசத் தலைவனால் {ஜெயத்ரதனால்} கட்டளையிடப்பட்ட அந்தப் பெரும் பிரிவு (படையின்) முன்னணியில் மகத்தானவையும் எண்ணற்றவையுமான தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் இருந்தது.

அறுபதாயிரம் {60000} தேர்கள், பத்தாயிரம் {10000} யானைகள் ஆகியவற்றுடன் கூடிய கலிங்கர்களின் ஆட்சியாளன், கேதுமானின் துணையுடன் வெளியே சென்றான். மலைபோலத் தெரிந்த அவனது பெரும் யானைகள், யந்திரங்கள் [4], வேல்கள், அம்பறாத்தூணிகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, மிகவும் அழகாகத் தெரிந்தன. அந்தக் கலிங்கர்களின் ஆட்சியாளன், நெருப்பு போன்ற பிரகாசமிக்கத் தனது நெடிய கொடிக்கம்பம், வெண்குடை, பொற்கண்டம், சாமரங்கள் ஆகியவற்றுடன் பிரகாசமாக ஒளிர்ந்தான்.

[4] இயந்திரங்கள், ஒருவேளை {கல் எறியும்} கவணாக இருக்கலாம் என்கிறார் கங்குலி.

கேதுமானும், அழகிய, அற்புதமான அங்குசம் கொண்ட யானையின் மீது ஏறி (கரு) மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போலப் போர்க்களத்தில் நிலைத்திருந்தான். சுடர்மிகும் சக்தி கொண்ட மன்னன் பகதத்தன், தனது யானையைச் செலுத்திய படி, வஜ்ரந்தாங்கியைப் {இந்திரனைப்} போல வெளியே சென்றான். பகதத்தனுக்கு இணையாகக் கருதப்பட்டவர்களும், அவந்தியின் இளவரசர்களுமான விந்தன், அனுவிந்தன் ஆகிய இருவரும், தங்கள் யானைகளின் கழுத்தில் அமர்ந்தபடி கேதுமானைத் தொடர்ந்து சென்றனர்.

ஓ! மன்னா, துரோணராலும், சந்தனுவின் அரசமகனாலும் {பீஷ்மராலும்}, துரோணரின் மகனாலும் {அஸ்வத்தாமனாலும்}, பாஹ்லீகனாலும், கிருபராலும் அணிவகுக்கப்பட்டதும், பல தேர்ப்பிரிவுகளை உள்ளடக்கியதுமான அந்த {கௌரவ} வியூகம் [5], யானைகளைத் தனது உடலாகக் கொண்டிருந்தது; மன்னர்கள் அதன் தலையாக இருந்தனர்; குதிரைகள் அதன் சிறகுகளாக இருந்தன. அனைத்துப் புறமும் நோக்கி முகத்துடன் கொண்ட அந்தக் கடும் வியூகம், சிரிப்பதாகவும், (எதிரியின் மீது) பாயத் தயாராக இருப்பதாகவும் தெரிந்தது" என்றான் {சஞ்சயன்}.

[5] "வியூகம்" என்பது குறிப்பிட்ட வடிவத்திலான துருப்புகளின் வரிசையாகும். இது போன்ற பல வியூகங்கள், போருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த {உத்யோக} மற்றும் பிற பர்வங்களில் பேசப்படும் என்கிறார் கங்குலி.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்