Wednesday, September 02, 2015

பீஷ்மரின் பாதுகாப்பு! - பீஷ்ம பர்வம் பகுதி - 018

The Protection for Bhishma! | Bhishma-Parva-Section-018 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 6)

பதிவின் சுருக்கம் : கௌரவப் படையின் புறப்பாடு குறித்தும், பீஷ்மரைப் பாதுகாத்தவர்கள் குறித்தும் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விவரிப்பது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "விரைவில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதயத்தை நடுங்கச் செய்யும் உரத்த கூக்குரல், போருக்குத் தயாராக இருந்த போராளிகள் மத்தியில் எழுந்தது. உண்மையில், சங்குகள் மற்றும் பேரிகைகளின் ஒலிகளாலும், யானைப் பிளிறல்களாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளாலும் இந்தப் பூமி இரண்டாகப் பிளக்கப் போவது போலத் தெரிந்தது.


குதிரை கனைப்பொலிகளாலும், போராளிகளின் கூச்சலாலும் விரைவில் வானமும், மொத்த பூமியும் நிறைந்தது. ஓ! தடுக்கப்பட முடியாதவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் மற்றும் பாண்டவர்கள் துருப்புகள் இரண்டும் மோதலில் ஒன்றை ஒன்று சந்தித்தபோது நடுங்கின. அங்கே (அந்தப் போர்க்களத்தில்) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், தேர்கள் ஆகியவை, மின்னலோடு கூடிய மேகங்களைப் போல அழகாகத் தோன்றின.

உமது தரப்பைச் சேர்ந்த போராளிகளுக்குச் சொந்தமானவையும், தங்க வளையங்களால் அலங்கரிக்கப்பட்டவையும் பல்வேறு வடிவங்களில் ஆனவையுமான கொடிக்கம்பங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் தோன்றின. உமது தரப்பிலும், அவர்கள் {பாண்டவர்கள்} தரப்பிலும் இருந்த கொடிக்கம்பங்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தெய்வீக மாளிகைகளில் உள்ள இந்திரனின் கொடியைப் போல இருந்தன. தங்கக் கவசம் அணிந்த வீரர்கள் அனைவரும், சூரியப் பிரகாசத்துடன், சுடர்விடும் நெருப்பைப் போலவோ, சூரியனைப் போலவோ தோன்றினர். குருக்களுக்கு மத்தியில் உள்ள வீரர்களில் முதன்மையானோர் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த விற்களுடனும், (அடிப்பதற்காக) உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடனும், கைகளில் தோல் கையுறைகளுடனும், கொடிக்கம்பங்களுடனும் இருந்தனர். காளைகளைப் போன்ற பெரிய கண்களைக் கொண்ட அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், தங்கள் (தங்களுக்குரிய) பிரிவுகளின் தலைமையில் தங்களை நிறுத்திக் கொண்டார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களான துச்சாசனன், துர்விஷஹன், துர்முகன், துஸ்ஸ்கன், விவிம்சதி, சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான {மகாரதனான} விகர்ணன் ஆகியோர் பீஷ்மரின் பின்புறத்தைக் காத்தார்கள் {Dussasana, and Durvishaha, and Durmukha, and Dussaha and Vivinsati, and Chitrasena, and that mighty car-warrior Vikarna}. அவர்களுக்கு மத்தியில் சத்யவிரதன், புருமித்ரன், ஜயன், பூரிஸ்ரவஸ், சலன் ஆகியோரும் இருந்தனர் {Satyavrata, and Purumitra, and Jaya, and Bhurisravas, and Sala}. இருபதாயிரம் {20,000} தேர்வீரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள், சுவால்யர்கள் {சால்வர்கள்}, மத்ஸ்யர்கள், அம்பஷ்டர்கள், திரிகார்த்தர்கள், கேகயர்கள், சௌவீரர்கள், கைதவர்கள், {Abhishahas, the Surasenas, the Sivis, and the Vasatis, the Swalyas, the Matsyas, the Amvashtas, the Trigartas, and the Kekayas, the Sauviras, the Kitavas} கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கைச் சார்ந்த வீரர்கள் என இந்தப் பன்னிரெண்டு {12} வீரக் குலங்கள் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்துப் போரிடத் தீர்மானித்தனர். பெரும் அளவுக்கான தேர் வரிசைகளைக் கொண்ட இவர்களும் பாட்டனைப் {பீஷ்மரைப்} பாதுகாத்தார்கள்.

பத்தாயிரம் {10,000} சுறுசுறுப்பான யானைகளுடன் கூடிய ஒரு படைப்பிரிவுடன் மகத மன்னன் அந்தப் பெரும் தேர்ப்பிரிவைப் பின்தொடர்ந்து சென்றான். தேர்ச்சக்கரங்களைக் காத்தவர்களும், யானைகளைக் காத்தவர்களுமாக அவர்கள் அறுபது இலட்சம் {60,00,000} பேர் இருந்தார்கள். (படைக்கு) முன்பு அணிவகுத்துச் சென்ற காலாட்படை வீரர்கள், விற்கள், வாட்கள், கேடயங்கள் ஆகியவற்றை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் {அதாவது பல லட்சங்களில்} கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் நகராயுதம் மற்றும் ஈட்டிகளைப் பயன்படுத்திப் போரிட்டார்கள். உமது மகனின் {துரியோதனனின்} பதினோரு {11} அக்ஷௌஹிணிகளும், ஓ! வலிமைமிக்க மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யமுனையில் இருந்து பிரிந்த கங்கையைப் போல இருந்தன" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்