Friday, September 04, 2015

"வெற்றி உறுதி!" என்ற அர்ஜுனன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 021

"Victory is certain!" said Arjuna! | Bhishma-Parva-Section-021 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 9)

பதிவின் சுருக்கம் : கௌரவப் படையைக் கண்ட யுதிஷ்டிரன் கவலை கொண்டது; தனது வருத்தத்தை அர்ஜுனனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்கு நம்பிக்கை அளிப்பது ஆகியவற்றைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போருக்குத் தயாராகத் தார்தராஷ்டிரப் படை பரந்திருப்பதைக் கண்ட குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் கவலைக்கு ஆளானான். பீஷ்மரால் அமைக்கப்பட்ட ஊடுருவ முடியாத {பிளக்கப்பட முடியாத} அணிவகுப்பை {வியூகத்தைக்} கண்டு, அதை உண்மையிலேயே ஊடுருவ முடியாது என்று கருதிய மன்னன் {யுதிஷ்டிரன்}, நிறம் மங்கி அர்ஜுனனிடம், "ஓ! வலிய கரங்களைக் கொண்ட தனஞ்சயா {அர்ஜுனா}, பாட்டனைத் {பீஷ்மரைத்} தங்கள் (தலைமைப்) போராளியாகக் கொண்ட தார்தராஷ்டிரர்களுடன் களத்தில் போரிடுவதற்கு எப்படி நாம் இயன்றவர்களாவோம்? அசைக்கமுடியாததும், பிளக்கப்படமுடியாததுமான இந்த அணிவகுப்பு {வியூகம்}, எதிரிகளை வாட்டுபவரும், எல்லையில்லா மகிமை கொண்டவருமான பீஷ்மரால், சாத்திரங்களில் உள்ள விதிகளின் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஓ! எதிரிகளை வாட்டுபவனே {அர்ஜுனா}, நமது துருப்புகள் {தங்கள் வெற்றியில்} சந்தேகம் கொண்டுள்ளன. உண்மையில், இந்த வலிமைமிக்க வியூகத்தின் முன்னால் வெற்றி எப்படி நமதாகும்?" என்று {அர்ஜுனனிடம்} கேட்டான் {யுதிஷ்டிரன்}.


இப்படிச் சொல்லப்பட்ட எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையைக் கண்டு துயரத்தில் மூழ்கியிருந்த பிருதையின் {குந்தியின்} மகன் யுதிஷ்டிரனுக்கு இவ்வார்த்தைகளில் பதிலளித்தான். அவன் {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அனைத்து குணங்களையும் கொண்ட பலரைச் சிறு எண்ணிக்கையிலான போர்வீரர்களால் எப்படி வீழ்த்த முடியும் என்பதைக் கேட்பீராக. எந்தத் தீய குணமும் அற்றவராக நீர் இருக்கிறீர்; எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் உமக்கு வழிமுறைகளைச் சொல்கிறேன்.

பீஷ்மர், துரோணர் ஆகிய இருவரும் அறிந்ததை முனிவர் நாரதரும் அறிவார். பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நிகழ்ந்த போது. இந்திரனுக்கும் மற்றும் பிற தேவர்களுக்கும் இதற்கான வழிமுறைகளைப் பெரும்பாட்டனே {பிரம்மனே} குறிப்பிட்டிருக்கிறார் {என்று நாரதர் சொல்லியிருக்கிறார்}.

"வெற்றியை விரும்புவோர், உண்மை {சத்தியம்}, இரக்கம் {கருணை}, நீதி மற்றும் உழைப்பால் வெல்வதைப் போலப் பலத்தாலோ, ஆற்றலாலோ வெல்வதில்லை. {வெல்ல விரும்புவோர், உண்மையாலும், கொடுமையற்ற தன்மையாலும், அறத்தாலும், உழைப்பாலும் எப்படி வெல்கிறார்களோ, அவ்வாறு பலத்தாலும் சக்தியாலும் வெல்வதில்லை}. நீதி மற்றும் அநீதியை வேறுபடுத்திப் பார்த்து, பேராசை என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு, ஆணவமற்ற உழைப்பைக் கொண்டு போரிடுவீராக. ஏனெனில், நீதி {அறம்} எங்கிருக்கிறதோ அங்கேதான் வெற்றி இருக்கும்" {என்றான் பிரம்மன்}. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, {இதன் காரணமாகவே}, (இந்தப்) போரில் நமது வெற்றி உறுதி என்பதை அறிவீராக.

உண்மையில், நாரதர் சொன்னபடியே, "கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ, அங்கே வெற்றி இருக்கும்", வெற்றி என்பது கிருஷ்ணனின் இயல்பாக {இயற்கையாக} இருக்கிறது. {கிருஷ்ணனிடமே வெற்றி இருக்கிறது}. உண்மையில் அது {வெற்றி} மாதவனையே {கிருஷ்ணனையே} பின்தொடர்கிறது. வெற்றி எப்படி அவனது குணங்களில் ஒன்றோ, அப்படியே பணிவும் அவனது மற்றொரு குணமாக இருக்கிறது. கோவிந்தன் {கிருஷ்ணன்} எல்லையில்லா ஆற்றலைக் கொண்டவனாவான். அளவிலா எதிரிகளுக்கு மத்தியிலும் அவன் {கிருஷ்ணன்} வலியில்லாமல் இருக்கிறான். ஆண் மக்களில் {புருஷர்களில்} அவனே மிகவும் நிலைத்தவனாவான் {நித்தியமானவனாவான்}. எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றியும் இருக்கும்.

கலங்கடிக்கப்பட முடியாத ஆயுதங்களாலும் அழிக்கப்பட முடியாதவனான அவன் {கிருஷ்ணன்}, பழங்காலத்தில் ஹரியாகத் தோன்றி, தேவர்களிடமும், அசுரர்களிடமும் உரத்த குரலில், "உங்களில் யார் வெற்றி பெறுவார்கள்?" என்று கேட்டான். வெற்றிக் கொள்ளப்பட்டவர்கள் கூட, "கிருஷ்ணனை {அதாவது ஹரி என்ற நாராயணனை} முன்னிலையில் கொண்டு நாங்கள் வெல்வோம்" என்றனர் [1]. அந்த ஹரியின் கருணையாலேயே, சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்கள் மூவுலகங்களையும் அடைந்தனர். எனவே, அண்டத்தின் அரசுரிமையைக் கொண்டவனான அந்தத் தேவர்களின் தலைவனே [2] உமது வெற்றியை விரும்புகிறான் எனும்போது, உமது சோகத்திற்கான சிறு காரணத்தையும் என்னால் காண இயலவில்லை" என்றான் {அர்ஜுனன்}.

[1] "முன்னணியில் நிற்பவனாகக் கிருஷ்ணனை ஏற்றுக் கொண்டோ, அல்லது அவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தோ தேவர்கள் வென்றார்கள் என்பதே இங்கே பொருள். Anu Krishna என்பது உண்மையில், "கிருஷ்ணனுக்குப் பின்னால்" அல்லது "கிருஷ்ணனை முன்னணியாகக் கொண்டு" அல்லது "கிருஷ்ணனின் தலைமையை ஏற்று" என்ற பொருளைத் தரும். எனவே, மேற்கண்ட பொருளைக் கொண்டிருக்கும் வங்க உரை, மேன்மையானது என்பது இங்கே தெளிவு. பம்பாய் உரையில் Katham Krishna என்றிருக்கிறது. இது பின்பற்றப்பட்டால், "ஓ! கிருஷ்ணா, நாம் எப்படி வெல்வோம்?" என்று பொருளைத் தரும். இவ்வழியில் பதிலளிப்போர் எப்படி வெற்றியடைவார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் இந்தப் பதில் பணிவைச் சுட்டுகிறது. ஆனால் பணிவே வெற்றியின் ஒரே அவசியத் தேவையல்ல. அல்லது பணிவு என்பதே வெற்றியின் முக்கியச் சாதனம் என்றும் இங்கே போதிக்கப்படவில்லை" என்கிறார் கங்குலி.

[2] சில பதிப்புகளில் இங்கே இந்திரன் என்றும் சிலவற்றில் விஷ்ணு {நாராயணன்} என்றும் இருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்