Thursday, October 15, 2015

கௌரவர்களைக் கைவிட்ட யுயுத்சு! - பீஷ்ம பர்வம் பகுதி - 043ஈ

Yuyutsu abandoned the Kauravas! | Bhishma-Parva-Section-043d | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : சல்லியனிடம் விடைபெற்ற யுதிஷ்டிரன் கௌரவப் படையை விட்டு வெளியேறுவது; கர்ணனிடம் கிருஷ்ணன் தங்கள் தரப்புக்கு வருமாறு கோருவது; கர்ணன் மறுப்பது; கௌரவப் படை வீரர்களிடம் யுதிஷ்டிரன் கோரிக்கை வைப்பது; யுயுத்சு பாண்டவர் தரப்பை அடைவது; பாண்டவர்களின் நடத்தையை அங்கிருந்த அனைவரும் மெச்சுவது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "தனது தாய்மாமனான மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} அனுமதியைப் பெற்ற அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகள் சூழ அந்தப் பரந்த படையை விட்டு வெளியே வந்தான். பிறகு வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தப் போர்க்களத்தில் இருந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சென்றான். பாண்டவர்களுக்காகக் கர்ணனிடம் அந்தக் கதனின் அண்ணன் {கிருஷ்ணன்} பேசினான். "ஓ! கர்ணா, பீஷ்மர் மீதிருக்கும் வெறுப்பால் நீ போரிடப் போவதில்லை என்று நான் கேள்விப்பட்டேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எங்கள் தரப்புக்கு வருவாயாக. பீஷ்மர் கொல்லப்படாதவரை (எங்களுடன் தங்கி) இருக்கலாம். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ எத்தரப்பையும் விரும்பவில்லையெனில், துரியோதனன் தரப்பில் இருந்து கொண்டு மீண்டும் நீ போரில் ஈடுபடலாம் [1]" என்றான் {கிருஷ்ணன்}.


[1] வேறு பதிப்புகளில் இங்கே "ராதேயா, பீஷ்மர் கொல்லப்படாதிருக்கும்வரை எங்களைச் சேர்ந்திரு. அவர் கொல்லப்பட்ட பிறகு, துரியோனனுக்கு உதவி செய்வதே அறிவுள்ள செயல் {விவேகம்} என நீ கருதினால் மறுபடியும் அவர்களிடம் செல்" என்று இருக்கிறது.

கர்ணன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்பில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன். துரியோதனனுடைய நன்மையில் அர்ப்பணிப்புள்ள நான் எனது உயிரையும் (அவனுக்காக) விடுவேன் என்பதை அறிவாயாக" என்றான். (கர்ணனின்) இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் {பேசுவதை} நிறுத்திக் கொண்டு யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டுவின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்} மீண்டும் இணைந்து கொண்டான்.

பிறகு, பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், "எவன் எங்களைத் தேர்ந்தெடுப்பானோ {விரும்பி ஏற்பானோ}, அவனை எங்கள் கூட்டாளியாக நாங்களும் தேர்ந்தெடுப்போம் {விரும்பி ஏற்போம்}" என்று உரக்கச் சொன்னான்.

அவர்களின் {பாண்டவர்களின்} மீது கண்களைச் செலுத்திய யுயுத்சு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், குந்தியின் மகனும், நீதிமானுமான மன்னன் {தர்மராஜா} யுதிஷ்டிரனிடம், "பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, நீர் என்னை ஏற்பீரென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமக்கு {உமது தலைமையின்} கீழ் {இருந்து கொண்டு}, உங்கள் அனைவருக்காகவும் திருதராஷ்டிரர் மகன்களுடன் போரிடுவேன்" என்றான் {யுயுத்சு}.

யுதிஷ்டிரன் {யுயுத்சுவிடம்}, "வா, வருவாயாக, மூடர்களான உனது சகோதரர்களுடன் நாம் அனைவரும் போரிடுவோம். ஓ! யுயுத்சு, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, நாங்கள் அனைவரும், உன்னிடம், "ஓ! வலியகரங்களைக் கொண்டவனே {யுயுத்சு} உன்னை ஏற்கிறோம். என் காரியமாக நீ போரிடுவாயாக" என்றே சொல்கிறோம். திருதராஷ்டிரப் பரம்பரையின் நூலும் {தொடர்ச்சியும்}, அவரது {திருதராஷ்டிரரின்} ஈமப் பிண்டமும் உன்னிடமே உள்ளது என்றே தெரிகிறது. ஓ! இளவரசே, ஓ! பெரும் காந்தியுடையவனே {யுயுத்சுவே}, உன்னை ஏற்கும் எங்களை நீயும் ஏற்பாயாக. தீய புரிதல் {புத்தி} கொண்டவனும், சினம் நிறைந்தவனுமான துரியோதனின் வாழ்வு முடியப்போகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "குருக்களான உமது மகன்களைக் கைவிட்ட யுயுத்சு, பிறகு, துந்துபி மற்றும் பேரிகைகளின் முழக்கத்தோடு பாண்டவர்களின் படைக்குச் சென்றான். மகிழ்ச்சியால் நிறைந்தவனான வலிய கரங்களைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தங்கத்தின் ஒளி பொருந்தியதும் பளபளப்பு கொண்டதுமான தனது கவசத்தை மீண்டும் அணிந்து கொண்டான். பிறகு, மனிதர்களில் காளையரான அவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய தேர்களில் ஏறினர். மேலும், அவர்கள் முன்பு போலவே தங்கள் துருப்புகளின் எதிர் வியூகத்தை அமைத்துக் கொண்டனர். துந்துபிகளையும், காகளங்களையும் நூற்றுக்கணக்கில் அவர்கள் ஒலிக்கச் செய்தனர். பிறகு, மனிதர்களில் காளையரான அவர்களும் பல்வேறு வகைகளில் சிம்ம முழக்கமிட்டார்கள்.

மனிதப் புலிகளான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தேர்களில் ஏறுவதைக் கண்ட (அவர்களது தரப்பு) மன்னர்களும், திருஷ்டத்யும்னனும், பிறரும் மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மரியாதைக்குரியவர்களுக்கு முறையான மரியாதையைச் செய்த பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} உயர்ந்த பண்பைக் கண்டவர்களும், அப்போது அங்கிருந்தவர்களுமான மன்னர்கள் அனைவரும் அவர்களை {பாண்டவர்களை} உயர்வாக மெச்சினார்கள். நட்பு, பரிவு, சொந்தங்களிடம் அன்பு ஆகியவற்றை உரிய காலத்தில் வெளிப்படுத்திய அந்த உயர் ஆன்ம மனிதர்களைக் {பாண்டவர்களைக்} குறித்து அந்த ஏகாதிபதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அந்தப் புகழ்மிக்க மனிதர்களைக் {பாண்டவர்களைக்} குறித்த துதிபாடல்களுடன் இணைந்து "அருமை, அருமை" என்ற இனிமை வார்த்தைகளே எங்கும் வெளிப்பட்டன.

இதன் விளைவாக அனைவரின் மனங்களும், இதயங்களும் அவர்களின் {பாண்டவர்களின்} பால் ஈர்க்கப்பட்டன. பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} அந்த நடத்தையைச் சாட்சியாகக் கண்டவர்களும், அல்லது கேட்டவர்களும், மிலேச்சர்களும், ஆரியர்களுமான அனைவரும் தடைபட்ட {தழுதழுத்த} குரல்களுடன் அழுதனர். பெரும் சக்தி கொண்ட அந்த வீரர்கள் {மிலேச்சர்களும், ஆரியர்களும்} நூறு நூறாக பேரிகைகளையும், *புஷ்கரங்களையும் முழங்கச் செய்து, பசுவின் பாலைப் போன்று வெண்மையா்க இருந்த தங்கள் சங்குகள் அனைத்தையும் முழங்கினர்" {என்றான் சஞ்சயன்}.
...................................................................................................................................................................
*புஷ்கரங்கள்: ஒருவகைப் பேரிகை


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்