Friday, March 11, 2016

பீமசேனனின் ஆற்றல்! - பீஷ்ம பர்வம் பகுதி – 114

The prowess of Bhimasena! | Bhishma-Parva-Section-114 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 72)

பதிவின் சுருக்கம் : பீமசேனனுடன் போரிட்ட பத்து கௌரவ வீரர்கள்; கிருபரின் வில்லை அறுத்த பீமன்; ஜெயத்ரதனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று, அவனுடைய வில்லையும் அறுத்த பீமன்; பீமனின் தேரோட்டியான விசோகனைத் துளைத்த சல்லியன்; கிருதவர்மனனின் வில்லை அறுத்த பீமன்; பல வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனைக் கண்ட அர்ஜுனன் அந்த இடத்திற்கு வந்தது; வெற்றியில் நம்பிக்கை இழந்த கௌரவர்கள்; பீமனையும் அர்ஜுனனையும் கொல்ல சுசர்மனை ஏவிய துரியோதனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயரான்ம துரோணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பகதத்தன், கிருபர், சல்லியன், கிருதவர்மன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், சித்திரசேனன், விகர்ணன், துர்மர்ஷணன் ஆகிய உமது படையின் பத்து வீரர்களும், இன்னும் பிறரும், பீஷ்மருக்கான போரில் உயர்ந்த புகழை வெல்ல விரும்பி, பல நாடுகளைச் சேர்ந்த பெரும் படைகளுடன் பீமசேனனுடன் போரிட்டனர்.


சல்லியன் ஒன்பது {10} கணைகளால் பீமனைத் தாக்கினான், கிருதவர்மன் மூன்றாலும் {3}, கிருபர் ஒன்பதாலும் {9} அவனைத் தாக்கினர். சித்திரசேனன், விகர்ணன் மற்றும் பகதத்தன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பத்து {10x3} கணைகளால் அவனைத் தாக்கினர். சிந்துக்களின் ஆட்சியாளன் (ஜெயத்ரதன்}, மூன்றால் {3 கணைகளால்} அவனைத் தாக்கினான், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரும் ஐந்து {5x2} கணைகளாலும் அவனைத் தாக்கினர். துரியோதனன் இருபது {20} கூரிய கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைத்} தாக்கினான்.

பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலக மனிதர்களில் முதன்மையானவர்களும், தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த மன்னர்கள் ஒவ்வொருவரையும், ஒருவர் பின் ஒருவராகப் பதிலுக்குத் தாக்கினான். பகை வீரர்களைக் கொல்பவனான அந்தத் துணிச்சல்மிக்கப் பாண்டவன் {பீமன்}, சல்லியனை ஏழு {7} கணைகளாலும், கிருதவர்மனை எட்டாலும் {8 கணைகளாலும்} துளைத்தான். மேலும் அவன் {பீமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருபரின் கணை பொருத்தப்பட்ட வில்லை நடுவில் இரண்டாகப் பிளந்தான். அவன் {பீமன்}, இப்படி அவரது {கிருபரின்} வில்லை வெட்டிய பிறகு, மீண்டும் ஏழு {7} கணைகளால் கிருபரைத் துளைத்தான். விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று {3} கணைகளால் அவன் {பீமன்} தாக்கினான். துர்மர்ஷணனை இருபது {20} கணைகளாலும், சித்திரசேனனை ஐந்தாலும் {5}, விகர்ணனைப் பத்தாலும் {10}, ஜெயத்ரதனை ஐந்தாலும் {5} அவன் {பீமன்} துளைத்தான். மேலும் மூன்று {3} கணைகளால் சிந்துக்களின் ஆட்சியாளனைத் {ஜெயத்ரதனைத்} தாக்கிய அவன் {பீமன்}, மகிழ்ச்சியால் நிறைந்து உரக்கக் கூச்சலிட்டான்.

பிறகு, தேர்வீரர்களில் முதன்மையானவரான கௌதமர் {கிருபர்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பத்து {10} கூரிய கணைகளால் கோபத்துடன் பீமனைத் துளைத்தார். அங்குசத்தால் துளைக்கப்பட்ட பெரும் யானையைப் போல அந்தப் பத்து கணைகளால் துளைக்கப்பட்ட அந்த வீர பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து அந்தப் போரில் பல கணைகளால் கௌதமரைத் {கிருபரைத்} தாக்கினான்.

யுக முடிவில் தோன்றும் யமனின் காந்தியைக் கொண்ட பீமசேனன், மூன்று {3} கணைகளால் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் காலனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது, ஜெயத்ரதன்), குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்து, கூர்முனை கணைகள் பலவற்றை அந்தப் போரில் பீமசேனன் மேல் ஏவினான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இரண்டு பல்லங்களைக் கொண்டு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் உயர் ஆன்ம மன்னனின் {ஜெயத்ரதனின்} வில்லை நடுவில் வெட்டினான். தன் வில் அறுபட்டு, தேரிழந்து, தன் குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்ட ஜெயத்ரதன், பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான்.

உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரையும் துளைத்து, {அவர்களை} முன்னேற விடாமல் தடுத்து, படைகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சிந்துக்கள் ஆட்சியாளனின் {ஜெயத்ரதனின்} தேரை இழக்கச் செய்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்தப் போரில் மிக அற்புதமான சாதனையை அடைந்தான்.

பீமசேனன் வெளிப்படுத்திய ஆற்றலைப் பொறுக்க முடியாத சல்லியன், அவனிடம் {பீமனிடம்}, “நில், நில்” என்று சொல்லி, கொல்லர்களின் கைகளால் நன்கு பளபளப்பாக்கப்பட்ட கூரிய கணைகள் பலவற்றைக் குறிபார்த்து, அவற்றைக் கொண்டு அந்தப் போரில் பீமனைத் துளைத்தான். கிருபர், கிருதவர்மன், வீர பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சித்திரசேனன், துர்மர்ஷணன், விகர்ணன், சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் அனைவரும் அந்தப் போரில் சல்லியனுக்காகப் பீமனை விரைவாகத் துளைத்தனர்.

பீமன் பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து {5} கணைகளால் துளைத்தான். அவன் {பீமன்}, சல்லியனை எழுபது {70} கணைகளாலும், பிறகு மறுபடியும் பத்தாலும் {10} துளைத்தான். சல்லியன் அவனை {பீமனை} ஒன்பது {9} கணைகளாலும், பிறகு மறுபடியும் ஐந்தாலும் {5 கணைகளாலும்} துளைத்தான். மேலும் அவன் {சல்லியன்}, பல்லம் ஒன்றினால், பீமசேனனின் தேரோட்டியுடைய உயிர் நிலைகளில் ஆழமாகத் துளைத்தான். தன் தேரோட்டியான விசோகன் ஆழமாகத் துளைக்கப்பட்டதைக் கண்ட வீரப் பீமசேனன், மத்ரர்கள் ஆட்சியாளனின் {சல்லியனின்} மார்பிலும் கரங்களிலும் மூன்று {3} கணைகளை ஏவினான்.

பெரும் வில்லாளிகளான பிறரைப் பொறுத்தவரை, அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் அந்தப் போரில் துளைத்த அவன் {பீமன்}, பிறகு சிங்கம் போல உரக்க முழங்கினான். பிறகு, உறுதியுடன் முயன்ற அந்தப் பெரும் வில்லாளிகள் ஒவ்வொருவரும், போரில் திறம் பெற்ற அந்தப் பாண்டு மகனின் {பீமனின்} உயிர் நிலைகளில் மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தனர். வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பீமசேனன், ஆழத் துளைக்கப்பட்டாலும், மேகங்கள் பொழியும் மழைத்தாரைகளில் நனைந்த மலையைப் போல (உறுதியாக நின்றானேயன்றி) நடுங்கவில்லை.

பிறகு, பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனாகக் கொண்டாடப்படும் அந்த வீரன் {பீமன்}, கோபத்தால் நிறைந்து, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} மூன்று கணைகளால் துளைத்தான். பிறகு அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு {100} கணைகளால் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனைத் {பகதத்தனைத்} துளைத்தான். பெரும் புகழ்பெற்ற அவன் {பீமன்}, பல கணைகளால் கிருபரைத் துளைத்து, பிறகு தன் பெரும் கர வேகத்தை வெளிப்படுத்தி, கூர்முனை கொண்ட க்ஷுரப்ரத்தால், உயர் ஆன்ம கிருதவர்மனின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்தான். பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்தக் கிருதவர்மன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, நாராசம் ஒன்றினால் விருகோதரனின் {பீமனின்} புருவங்களுக்கு இடையில் தாக்கினான்.

எனினும், பீமன், அந்தப் போரில் முழுக்க இரும்பாலான ஒன்பது {9} கணைகளால் சல்லியனையும், பகதத்தனை மூன்றாலும் {3}, கிருதவர்மனை எட்டாலும் {8} துளைத்து, கௌதமரைத் {கிருபரைத்} தலைமையாகக் கொண்ட பிறர் ஒவ்வொருவரையும் இரண்டு {2x2 இரண்டு இரண்டு} கணைகளால் துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்களும், கூர்முனை கணைகளால் பதிலுக்கு அவனைத் {பீமனைத்} துளைத்தனர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் அனைத்து வகையிலான ஆயுதங்களால் பீடிக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் துரும்பாகக் கருதிய அவன் {பீமன்}, களத்தில் கவலையேதும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்தான். தேர்வீரர்களின் முதன்மையான அவர்களோ (மறுபுறம்), பெரும் பொறுமையுடன், பீமன் மீது நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கூர்முனை கணைகளை ஏவினர்.

பிறகு, வலிமைமிக்க வீர பகதத்தன், அந்தப் போரில், கடும் வேகம் கொண்டதும், தங்கப்பிடி கொண்டதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை அவன் {பீமன்} மீது வீசினான். வலிய கரங்களைக் கொண்ட சிந்துமன்னன் {ஜெயத்ரதன்} அவன் {பீமன்} மீது ஒரு வேலையும், ஒரு கோடரியையும் எறிந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} மீது சதக்னி ஒன்றைக் கிருபரும், கணை ஒன்றைச் சல்லியனும் ஏவினர். பெரும் வில்லாளிகளான பிறர் ஒவ்வொருவரும், அவன் {பீமன்} மீது, பெரும் சக்தியுள்ள ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளை ஏவினர்.

அந்த வாயு தேவனின் மகன் {பீமன்}, கூரிய க்ஷுரப்ரம் ஒன்றால் {ஜெயத்ரதனின்} அந்த வேலை இரண்டாக அறுத்தான். பிறகு அவன் {பீமன்}, ஏதோ எள்ளுச்செடியின் தண்டை வெட்டுவது போல மூன்று கணைகளால் அந்தக் கோடரியையும் வெட்டினான். கங்கப் பறவையின் இறகுகளால் அமைந்த சிறகைக் கொண்ட ஐந்து {5} கணைகளால், {கிருபரின்} அந்தச் சதக்னியை துண்டுகளாக வெட்டினான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பீமன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏவிய கணையை வெட்டி, அந்தப் போரில் பகதத்தனால் ஏவப்பட்ட ஈட்டியையும் {சக்தியையும்} பலமாக வெட்டினான். பிற கணைகளைப் பொறுத்தவரை, போரில் தன் சாதனைகளால் பெருமை கொண்டவனான பீமசேனன், நேரான தன் கணைகளால் அவை ஒவ்வொன்றையும் மூன்று {மூன்று மூன்று} துண்டுகளாக வெட்டினான். மேலும் அவன் {பீமன்}, அந்தப் பெரும் வில்லாளிகள் ஒவ்வொருவரையும் மூன்று {மூன்று மூன்று} கணைகளால் தாக்கினான்.

அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் (பலரை எதிர்த்துப்) போரிட்டு, எதிரியைத் தாக்கிக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனைக் கண்டு அவ்விடத்திற்குத் தன் தேரில் வந்தான். பிறகு, உமது படையின் அந்த மனிதர்களில் காளையர், பாண்டுவின் இரண்டு உயர் ஆன்ம மகன்களையும் ஒன்றாகக் கண்டு, வெற்றிக்கான நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்தனர்.

பிறகு பீஷ்மரைக் கொல்ல விரும்பித் தன் முன்னே சிகண்டியை நிறுத்தி வந்த அந்த அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனை அணுகி, உமது படையின் கடும் போராளிகளான அந்தப் பத்து {10} பேர் மீதும் பாய்ந்தான். பிறகு அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, பீமனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனுடன் போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரர்கள் அனைவரையும் துளைத்தான்.

பிறகு, மன்னன் துரியோதனன், அர்ஜுனன் மற்றும் பீமசேனன் ஆகிய இருவரின் அழிவுக்காகச் சுசர்மனிடம், “ஓ! சுசர்மா, பெரும் படையொன்றால் ஆதரிக்கப்பட்டு விரைந்து செல்வாயாக. தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரன் ஆகிய பாண்டுவின் மகன்கள் இருவரையும் கொல்வாயாக” என்று சொல்லித் தூண்டினான். பிரஸ்தாலம் என்றழைக்கப்படும் நாட்டை ஆள்பவனான அந்தத் திரிகர்த்த மன்னன் {சுசர்மன்}, அவனது {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, பீமன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரண்டு வில்லாளிகளுடன் போரிட விரைந்து, பல்லாயிரம் தேர்களால் அவர்கள் இருவரையும் {பீமன், அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டான். பிறகு அர்ஜுனனுக்கும், எதிரிக்கும் இடையில் கடும் போரொன்று தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்