Saturday, March 12, 2016

பீமார்ஜுனர்களின் ஆற்றல்! - பீஷ்ம பர்வம் பகுதி – 115

The prowess of Bhima and Arjuna! | Bhishma-Parva-Section-115 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 73)

பதிவின் சுருக்கம் : கௌரவப் படையைப் பீடித்த அர்ஜுனன்; அர்ஜுனனையும் பீமனையும் தங்கள் கணைகளால் துளைத்த கௌரவர்கள்; பீமார்ஜுனர்களை எதிர்த்த துரோணரும், ஜெயத்சேனனும்; ஜெயத்சேனனின் தேரோட்டியை வீழ்த்திய பீமன்; பீமனுக்கும் துரோணருக்கும் ஏற்பட்ட மோதல்; சுசர்மனின் துருப்புகளை அழித்த அர்ஜுனன்; போர் பீஷ்மரை மையமாகக் கொண்டு இயங்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனன், போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியனைத் தன் நேரான கணைகளால் மறைத்தான். அவன் {அர்ஜுனன்}, சுசர்மன் மற்றும் கிருபர் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.

அந்தப் போரில், அதிரதனான அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன், சித்திரசேனன், விகர்ணன், கிருதவர்மன், துர்மர்ஷணன், அவந்தியின் இளவரசர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்} ஆகியோர் ஒவ்வொருவரையும் கங்க மற்றும் மயில் இறகுகளால் அமைந்த சிறகைக் கொண்ட மூன்று {மூன்று மூன்று} கணைகளால் தாக்கி உமது படையைப் பீடித்தான்.


சித்திரசேனனின் தேரில் இருந்த ஜெயத்ரதன், (பதிலுக்குப்) பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிறகு, நேரத்தை இழக்காமல், பீமனையும் தன் கணைகளால் துளைத்தான். சல்லியன், தேர்வீரர்களில் முதன்மையான கிருபர் ஆகிய இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பல்வேறு வகையான கணைகளால் ஜிஷ்ணுவை {அர்ஜுனனைத்} துளைத்தனர். சித்திரசேனனின் தலைமையிலான உமது மகன்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அர்ஜுனனையும், பீமசேனனையும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஐந்து கூரிய கணைகளால் விரைவாகத் துளைத்தனர்.

எனினும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும் பாரதக் குலக் காளைகளுமான அந்தக் குந்தியின் மகன்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, அந்தப் போரில் திரிகர்த்தர்களின் வலிமைமிக்கப் படையைப் பீடிக்கத் தொடங்கினர். ஒன்பது {9} கணைகளால் பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பதிலுக்குத் துளைத்த சுசர்மன், (பாண்டவர்களின்) அந்தப் பெரும்படையை அச்சுறுத்தும் வகையில் பெரும் கூச்சலிட்டான். வீரமிக்கத் தேர்வீரர்கள் பிறர், தங்கச் சிறகுகளைகளையும், கூர் முனைகளையும் கொண்ட நேராகச் செல்லும் கணைகள் பலவற்றால் பீமசேனனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} துளைத்தனர்.

எனினும், பாரதக் குலக்காளைகளும், பெரும் தேர்வீரர்களுமான அந்தக் குந்தியின் மகன்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, இந்தத் தேர்வீரர்களுக்கு மத்தியில் மிக அழகாகத் தெரிந்தனர். பசு மந்தைகளுக்கு மத்தியில் உள்ள மூர்க்கமான சிங்கங்கள் இரண்டைப் போல, அவர்களுக்கு {எதிர்த்த கௌரவ வீரர்களுக்கு} மத்தியில் அவர்கள் {பீமனும், அர்ஜுனனும்}, விளையாடுவதைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில் துணிச்சல் மிக்க வீரர்கள் பலரின் விற்கள் மற்றும் கணைகளைப் பல்வேறு வழிகளில் வெட்டிய அந்த வீரர்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, போராளிகளின் தலைகளை நூறு நூறாக வீழ்த்தினார்கள்.

எண்ணற்ற தேர்கள் நொறுக்கப்பட்டன, நூற்றுக்கணக்கான குதிரைகளும், பல யானைகளும் அவற்றைச் செலுத்துபவர்களுடன் சேர்த்துக் கொல்லப்பட்டு, அந்தப் பயங்கரப் போர்க்களத்தில் கீழே கிடந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைப்பாகன்கள் ஆகியோர் உயிரிழந்து துடித்துக்கொண்டே நகர்வது களமெங்கும் காணப்பட்டது. கூட்டமாகக் கொல்லப்பட்ட யானைகள் மற்றும் காலாட்படையினர், உயிரிழந்த குதிரைகள், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்ட தேர்கள் ஆகியவற்றால் பூமி மறைக்கப்பட்டிருந்தது.

அனைத்து வீரர்களையும் தடுத்து, பெரும் படுகொலையை நிகழ்த்திய வலிமைமிக்க வீரனான அந்தப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நாங்கள் அங்கே கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது. {இருப்பினும்}, கிருபர், கிருதவர்மன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் போரைக் கைவிடவில்லை. பிறகு, பெரும் வில்லாளியான பீமனும், வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனும், கௌரவர்களின் அந்தக் கடும் படையை அந்தப் போரில் முறியடிக்கத் தொடங்கினர்.

(அந்த {கௌரவப்} படையின்) மன்னர்கள் விரைவாகத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேர் மீது மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட லட்சக்கணக்கான எண்ணற்ற கணைகளை ஏவினர். எனினும், பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கணை மழையால் அந்தக் கணைகளைத் தடுத்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை யமலோகம் அனுப்பத் தொடங்கினான்.

பிறகு, அந்தப் போரில் விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல இருந்த பெரும் தேர்வீரனான சல்லியன், கோபத்தால் தூண்டப்பட்டு, நேரான சில பல்லங்களால் அர்ஜுனனின் மார்பைத் தாக்கினான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, ஐந்து {5} கணைகளின் மூலம் சல்லியனின் வில்லையும், தோலுறையையும் அறுத்து, கூர் முனை கொண்ட கணைகள் பலவற்றால் பின்னவனின் {சல்லியனின்} உயிர்நிலைகளை ஆழமாகத் துளைத்தான்.

பெரும் வலிமையைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, பிறகு, மூன்று கணைகளால் ஜிஷ்ணுவையும் {அர்ஜுனனையும்}, ஐந்தால் {5} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} மூர்க்கமாகத் தாக்கினான். மேலும் ஒன்பது கணைகளால் பீமசேனனின் கரங்களையும் மார்பையும் தாக்கினான்.

பிறகு, துரியோதனனின் உத்தரவுக்கிணங்க, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த மகதர்களின் ஆட்சியாளன் {ஜெயத்சேனன்} ஆகிய இருவரும், குரு மன்னனின் வலிமைமிக்கப் படையைப் படுகொலை செய்து கொண்டிருந்த இரு வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் பீமசேனன் ஆகியோர் இருக்கும் இடத்தை அடைந்தனர்.

பிறகு, (மகதர்களின் மன்னன்) ஜெயத்சேனன், ஓ! பாரதக்குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் பயங்கர ஆயுதங்களைத் தரித்திருக்கும் அந்தப் பீமனை எட்டு கூரிய கணைகளால் துளைத்தான். எனினும், பீமன் (பதிலுக்கு) பத்து கணைகளாலும், பிறகு மீண்டும் ஐந்தாலும் அவனைத் {ஜெயத்சேனனைத்} துளைத்தான். பிறகு அவன் {பீமன்}, பல்லம் ஒன்றினால் ஜெயத்சேனனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து விழச்செய்தான். கட்டுப்பாட்டை இழந்த (அவனது {ஜெயத்சேனனது} தேரின்) குதிரைகள் திசைகள் அனைத்திலும் மூர்க்கமாக ஓடி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மகதர்களின் ஆட்சியாளனை {ஜெயத்சேனனை} (போரை விட்டு வெளியே) கொண்டு சென்றன.

அதே வேளையில், ஒரு திறப்பை {வாய்ப்பைக்} கண்ட துரோணர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தவளையின் வாய் வடிவத் தலைகளைக் கொண்ட எட்டு {8} கணைகளால் பீமசேனனைத் துளைத்தார். எனினும், போரில் எப்போதும் மகிழ்பவனான பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தந்தையைப் போல மதிக்கத்தக்க ஆசானை {துரோணரை} ஐந்து பல்லங்களாலும், பிறகு மேலும் அறுபது {60} கணைகளாலும் துளைத்தான்.

அர்ஜுனன், (முழுவதும்) இரும்பாலான எண்ணற்ற கணைகளால் சுசர்மனைத் துளைத்து, வலிமைமிக்க மேகத் திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அவனது {சுசர்மனின்} துருப்புகளை அழித்தான்.

பிறகு, பீஷ்மர், {கௌரவ} மன்னன் (அதாவது துரியோதனன்), கோசலர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன் ஆகியோர் சினத்தால் தூண்டப்பட்டு, பீமசேனன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிடம் முன்னேறிச் சென்றனர். இதன் காரணமாக, பாண்டவப் படையின் வீரமிக்கப் போர்வீரர்களும், பிருஷதன் {துருபதன்} மகன் திருஷ்டத்யும்னனும், வாயை அகலத்திறந்து காலனைப் போல முன்னேறி வரும் பீஷ்மரை எதிர்த்து விரைந்தான்.

சிகண்டியும், பாரதர்களின் பாட்டனைப் {பீஷ்மரைக்} கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, வலிமைமிக்க அந்தத் தேர்வீரர் {பீஷ்மர்} மீது கொண்ட அச்சத்தைக் கைவிட்டு, அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். பிறகு, யுதிஷ்டிரனைத் தங்கள் தலைமையில் கொண்ட பார்த்தர்கள் அனைவரும், சிகண்டியைத் தங்கள் முன்னணியில் கொண்டும், சிருஞ்சயர்களுடன் {பாஞ்சாலர்களுடன்} சேர்ந்தும், போரில் பீஷ்மருடன் போரிட்டனர். அதே போல உமது படையின் வீரர்கள் அனைவரும், ஒழுங்கான நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தங்கள் முன்னணியில் கொண்டு, போரில் சிகண்டியின் தலைமையிலான பார்த்தர்கள்  {பாண்டவர்கள்} அனைவருடன் போரிட்டனர்.

பிறகு, பீஷ்மரின் வெற்றிக்காக கௌரவர்களுக்கும், அல்லது பீஷ்மரை வெல்வதற்காகக்  பாண்டுவின் மகன்களுக்கும் {பாண்டவர்களுக்கு} இடையில் தொடங்கிய அந்தப் போர் மிகப் பயங்கரமானதாக இருந்தது. உண்மையில், வெற்றிக்காக, அல்லது தோல்விக்காக விளையாடப்பட்ட அந்தப் போர் விளையாட்டில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது படையின் வெற்றிக்கு யாரை நம்பியிருந்தனரோ, அந்தப் பீஷ்மர் பந்தயப் பொருளானார்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்துக்கும் ஆணையிட்ட திருஷ்டத்யும்னன், “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைவீராக. தேர்வீரர்களில் சிறந்தவர்களே, அஞ்சாதீர்” என்றான். தங்கள் படைத்தலைவனின் அவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்களின் படை, அந்தப் பயங்கரப் போரில் தங்கள் உயிரையும் விடத் தயாராகப் பீஷ்மரை எதிர்த்து விரைந்து முன்னேறினர்.

தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீஷ்மர், கொந்தளிக்கும் கடலை ஏற்கும் நிலத்தை {கரையைப்} போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் அந்தப் பெரும்படையை ஏற்றார் {வரவேற்றார்}” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்