Sunday, June 12, 2016

கிருஷ்ணன் சொன்ன தகவல்! - துரோண பர்வம் பகுதி – 075

The information of Krishna! | Drona-Parva-Section-075 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 04)

பதிவின் சுருக்கம் : ஒற்றர்கள் மூலம் அறிந்த தகவலை கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது; ஜெயத்ரதன் துரியோதனனிடம் பேசியது; துரோணர் அமைக்கப்போகும் வியூகம் குறித்த தகவல்கள் ஆகியவற்றைச் சொன்ன கிருஷ்ணன் மீண்டும் மந்திரிகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்று அர்ஜுனனை முடுக்கியது…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பார்த்தன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} மரணத்தைக் குறித்துச் சூளுரைத்த பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} “உன் சகோதரர்களின் சம்மதத்துடன் (மட்டுமே, என்னிடம் ஆலோசியாமல்), “சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வேன்” என்று உறுதியேற்றிருக்கிறாய்! இஃது (உன் தரப்பில்) பெரும் அசட்டைத் துணிவு கொண்ட ஒரு செயலாகும். என்னிடம் ஆலோசியாமலே, நீ பெரும் கனத்தை (உன் தோள்களில்) ஏற்றிருக்கிறாய். ஐயோ, அனைவரின் ஏளனத்தில் இருந்து நாம் எப்படித் தப்பிக்கப் போகிறோம்? [1]


[1] வேறொரு பதிப்பில் இந்த வரிகள், ”சகோதரர்களின் சம்மதத்தையறியாமல், ‘சைந்தவனை யான் கொல்வேன்’ என்று உன் வாக்கினால் பிரதிஜ்ஞை செய்யப்பட்டது. இப்படிச் செய்யப்பட்ட அந்தப் பிரதிஜ்ஞை சாகசமே; என்னோடு கூட ஆலோசியாமலே இந்தப் பெரிய பாரத்தை நீ சுமக்க ஆரம்பித்தாய். எவ்வாறு நாம் எல்லாவுலகத்தோர்களாலும் பரிஹஸிக்கத் தகாதவர்களாவோம்” என்று இருக்கிறது.

நான் திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} முகாமுக்கு சில ஒற்றர்களை அனுப்பிவைத்தேன். அந்த ஒற்றர்கள் விரைவாக என்னிடம் வந்து இந்தத் தகவலை எனக்கு அளித்தனர். அஃதாவது, ஓ! தலைவா {அர்ஜுனா}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} குறித்து நீ உறுதியேற்ற பிறகு, சிங்க முழக்கங்களுடன் கலந்த (நமது) இசைக்கருவிகளின் ஒலி, திருதராஷ்டிரர்களால் கேட்கப்பட்டது.

அந்த ஆரவாரத்தின் விளைவாக, அந்தத் திருதராஷ்டிரர்கள், தங்கள் நலன்விரும்பிகளுடன் கூடி அச்சமடைந்து, “இந்தச் சிங்க முழக்கங்கள் காரணமற்றவையல்ல” என்று நினைத்து (அடுத்தது என்ன நடக்கும் என்று) காத்திருந்தனர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, கௌரவர்களின் யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படைக்கு மத்தியில் இருந்து உரத்த முழக்கங்களைக் கொண்ட ஆரவாரம் எழுந்தது. அவர்களது தேர்களில் இருந்து பயங்கரச் சடசடப்பொலிகளும் கேட்கப்பட்டது. “அபிமன்யுவின் மரணத்தைக் கேட்கும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆழமாகத் துன்புற்றுக் கோபத்தில் இரவிலேயே கூடப் போரிடப் புறப்பட்டு வருவான்” என்று நினைத்து (போருக்குத் தயாராக) அவர்கள் காத்திருந்தனர்.

அப்படி அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கையில், ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, உண்மையில் பிணைப்புள்ள நீ, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல ஏற்றிருக்கும் உறுதியை உண்மையில் அறிந்து கொண்டனர். பிறகு, சுயோதனனின் ஆலோசகர்கள் அனைவரும் உற்சாகமிழந்து சிறு விலங்குகளைப் போல அச்சமுற்றனர்.

மன்னன் ஜெயத்ரதனைப் பொறுத்தவரை, சிந்துக்கள் மற்றும் சௌவீரர்களின் ஆட்சியாளனான அவன், துயரத்தில் மூழ்கி, முற்றிலும் உற்சாகத்தை இழந்து எழுந்து நின்று, தன் ஆலோசகர்கள் அனைவருடன் தன் பாசறைக்குள் நுழைந்தான். ஆலோசனை தேவைப்பட்டு நிற்கும் அந்நேரத்தில், தனக்கு நன்மையைத் தரும் அனைத்துத் தீர்வுகளையும் குறித்து (அவர்களுடன்) கலந்தாலோசித்த பிறகு, (கூட்டணியில் உள்ள) மன்னர்களின் சபைக்குச் சென்று சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

{அவன் ஜெயத்ரதன்}, ”தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனது மகனைக் கொன்றவன் நானே என்று நினைத்து, நாளை என்னுடன் போரில் மோதுவான்! தன் படைக்கு மத்தியில் அவன் {அர்ஜுனன்} என்னைக் கொல்வதாகச் சபதமேற்றிருக்கிறான். தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோரும் கூடச் சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} அந்த உறுதிமொழியில் அவனைச் சலிப்படையச் செய்யத் துணியமாட்டார்கள். எனவே, நீங்களனைவரும் போரில் என்னைப் பாதுகாக்க வேண்டும். தனஞ்சயன் {அர்ஜுனன்} உங்கள் தலையில் தன் காலை வைத்து இலக்கை {அவனது இலக்கான என்னை} அடிப்பதில் வெல்லாதிருக்கட்டும். இக்காரியம் குறித்து உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அல்லது, ஓ! குருக்களை மகிழ்விப்பவனே {துரியோதனா}, போரில் என்னைக் காப்பதில் நீ வெல்ல முடியாது என நீ நினைத்தால், ஓ! மன்னா {துரியோதனா}, நான் வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பாயாக” என்றான் {ஜெயத்ரதன்}.

இப்படி (ஜெயத்ரதனால்} சொல்லப்பட்ட சுயோதனன் {துரியோதனன்} உற்சாகமற்றவனாக அமர்ந்து தன் தலையைத் தொங்கப்போட்டான். ஜெயத்ரதன் பெரும் அச்சத்தில் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்ட சுயோதனன் {துரியோதனன்} அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினான். குரு மன்னன் {துரியோதனன்} பெரிதும் துயருறுவதைக் கண்ட சிந்துக்களின் ஆட்சியாளனான மன்னன் ஜெயத்ரதன், தன் நன்மையைக் குறிப்பிட்டு மெதுவாக இந்த வார்த்தைகளைச் சொன்னான், ”பெரும்போரில் அர்ஜுனனின் ஆயுதங்களைத் தன் ஆயுதங்களால் கலங்கடிக்கும் மேன்மையான சக்தி கொண்ட எந்த வில்லாளியையும் நான் இங்கே காணவில்லை. சதக்ரதுவே {இந்திரனே} ஆனாலும், வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டீவ வில்லுடன் நிற்கும் அர்ஜுனன் முன்பு எவனால் நிற்க முடியும்?

முற்காலத்தில், இமயமலையில், உயர்ந்த சக்தியைக் கொண்ட தலைவன் மகேஸ்வரனே {சிவனே} காலாளாக நின்றிருந்த பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} மோதினான் என்று கேள்விப்படுகிறோம். தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} தூண்டப்பட்ட அவன் {அர்ஜுனன்}, தனித்தேரில் சென்று, ஹிரண்யபுரத்தில் வசித்த ஆயிரம் தானவர்களைக் கொன்றான். அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} இப்போது பெரும் மதிநுட்பம் கொண்ட வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} கூட்டுச் சேர்ந்திருக்கிறான். அவன் {அர்ஜுனன்}, தேவர்களுடன் சேர்ந்த இந்த மூவுலகங்களையும் அழிக்கத் தகுந்தவனென நான் நினைக்கிறேன். (போர்க்களத்தை விட்டு என் வீட்டுக்குச் செல்ல) எனக்கு நீ அனுமதியளிக்க வேண்டும், அல்லது உயர் ஆன்ம வீரத் துரோணர் தன் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} சேர்ந்து என்னைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அல்லது, உன் விருப்பத்துக்காக நான் காத்திருப்பேன்” என்றான் {ஜெயத்ரதன்}.

ஓ! அர்ஜுனா, (ஜெயத்ரதனால் இப்படிச் சொல்லப்பட்ட) மன்னன் சுயதோனன் இக்காரியம் குறித்து ஆசானிடம் பணிவுடன் வேண்டினான் [2]. அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்களும், குதிரைகளும் அணிவகுக்கப்பட்டிருக்கின்றன. கர்ணன், பூரிஸ்ரவஸ், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வெல்லப்பட முடியாத விருஷசேனன், கிருபர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆகியோர் முன்னணியில் (ஜெயத்ரதனுக்கு முன்பாக) நிற்பார்கள்.

[2] துரோணர் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஜெயத்ரதனின் கோரிக்கையைத் துரோணரிடம் துரியோதனன் வழிமொழிந்தான் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அரைப்பங்கு சகடமும் {தேர்போன்ற வாகனம்}, அரைப்பங்கு தாமரையும் {பத்மும்} கொண்ட வியூகம் ஒன்றை துரோணர் அமைக்கப்போகிறார். அந்தத் தாமரையின் இதழ்களின் நடுவில் சூசிமுக {ஊசி வாய்} வியூகமும் இருக்கும். சிந்துக்களின் ஆட்சியாளனான அந்த ஜெயத்ரதன் அதற்குள் போரில் வெல்லப்பட முடியாத படி கடினமாக வீரர்களால் பாதுகாக்கப்படுவான். வில் (பயன்பாடு), ஆயுதங்கள், ஆற்றல், பலம், குலவழி [3] ஆகியவற்றில் இந்த ஆறு தேர்வீரர்களும் தாங்கிக் கொள்ள மிகக் கடினமானவர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த ஆறு தேர்வீரர்களையும் முதலில் வீழ்த்தாமல் ஜெயத்ரதனை அடையமுடியாது.

[3] வேறொரு பதிப்பில் இது மனோதைரியம் என்று இருக்கிறது. இஃதே இங்குச் சரியானதாகவும் படுகிறது.

ஓ! அர்ஜுனா, அந்த அறுவரில் ஒவ்வொருவரின் ஆற்றலையும் நினைத்துப் பார். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா} அவர்கள் ஒன்றுசேர்ந்து நிற்கும்போது எளிதில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருப்பார்கள். எனவே, நாம், நமது நன்மைக்காகவும், நமது நோக்கத்தில் வெற்றியடைவதற்காகவும், நம் நன்மையை விரும்புபவர்களும், கொள்கைகளை {ஆலோசனைகளை} அறிந்தவர்களுமான ஆலோசகர்களுடன் மீண்டும் ஆலோசிக்க வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்