Saturday, June 11, 2016

ஜெயத்ரதனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 074

Drona consoled Jayadratha! | Drona-Parva-Section-074 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 03)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் சபதத்தைக் கேட்டு அஞ்சிய ஜெயத்ரதன் களத்தை விட்டு வீட்டுக்குச் செல்வதாகச் சொன்னது; ஜெயத்ரதனுக்குத் தைரியமூட்டிய துரியோதனன்; துரோணரிடம் சென்ற ஜெயத்ரதன்; அவனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "(துரியோதனனின்) ஒற்றர்கள் {சாரர்கள்}, வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் உண்டாக்கப்பட்ட அந்த உரத்த ஆரவாரத்தைக் கேட்டு, (அதன் காரணத்தைக் குறித்துத் தங்கள் தலைவர்களுக்கு) தகவல் சொன்ன போது, அடியற்ற பெருங்கடலில் மூழ்குபவனைப் போலத் துயரத்தால் இதயம் நிலைகுலைந்து, சோகத்தில் மூழ்கிய ஜெயத்ரதன், மெதுவாக எழுந்து, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மன்னர்களின் சபைக்குச் சென்றான்.


மனிதர்களில் தேவர்களான அவர்களின் முன்னிலையில் சிறிது நேரம் சிந்தித்த ஜெயத்ரதன், அபிமன்யுவின் தந்தையின் {அர்ஜுனன்} மீது கொண்ட அச்சத்தால் வெட்கமடைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான், "பாண்டுவின் மண்ணில் {மனைவியிடத்தில்}, ஆசையின் ஆதிக்கத்தின் கீழ் இந்திரனால் பெறப்பட்ட அந்த இழிந்தவன் {அர்ஜுனன்} என்னை யமனுலகுக்கு அனுப்ப நினைக்கிறான். நீங்கள் அருளப்பட்டிருப்பீராக.

எனவே, உயிர் மீது கொண்ட விருப்பத்தால் நான் என் வீட்டுக்குத் திரும்புகிறேன். அல்லது, க்ஷத்திரியரில் காளையரே, உங்கள் ஆயுதங்களின் பலத்தால் என்னைப் பாதுகாப்பீராக. பார்த்தன் {அர்ஜுனன்} என்னைக் கொல்ல முயல்கிறான், வீரர்களே, என்னை அச்சமற்றவனாக்குங்கள். துரோணர், துரியோதனன், கிருபர், கர்ணன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, பாஹ்லீகர், துச்சானன் மற்றும் பிறர், யமனால் பீடிக்கப்பட்டவனையே காக்க இயன்றவர்களாவர். எனினும், பல்குனனால் {அர்ஜுனனால்} மட்டுமே நான் அச்சுறுத்தப்படுகிறேன் எனும்போது, பூமியின் தலைவர்களான இவர்கள் அனைவரும், மற்றும் நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து என்னைக் காக்க இயலாதா?

பாண்டவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்ட பிறகு எனது அச்சம் பெரிதாக இருக்கிறது. பூமியின் தலைவர்களே, மரணத்தின் விளிம்பில் நிற்கும் மனிதர்களைப் போல எனது அங்கங்கள் பலமற்றனவாகின்றன. காண்டீவதாரி {அர்ஜுனன்} என் மரணத்துக்காக உறுதியேற்றிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. இதன்காரணமாகவே பாண்டவர்கள், தாங்கள் அழவேண்டிய இந்நேரத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர். மனித ஆட்சியாளர்களை விட்டுத் தள்ளுங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோர் கூட அர்ஜுனனின் சூளுரையைக் கலங்கடிக்கத் துணியமாட்டார்கள்.

எனவே, மனிதர்களில் காளையரே, அருளப்பட்டிருப்பீராக, (குரு முகாமை விட்டு அகல) எனக்கு அனுமதி அளிப்பீராக. என்னை நான் மறைத்துக் கொள்ள வேண்டுகிறேன். பாண்டவர்களால் இதற்கு மேல் என்னைக் காண முடியாது!” என்றான் {ஜெயத்ரதன்}.

அச்சத்தால் இதயம் நடுங்க இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனிடம், வேறு அனைத்தையும் விடத் தன் சொந்த வேலையைச் செய்து முடிப்பதையே எப்போதும் நோக்கும் துரியோதனன், “ஓ மனிதர்களில் புலியே {ஜெயத்ரதா}, அஞ்சாதே. ஓ! மனிதர்களில் காளையே, இந்த க்ஷத்திரிய வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னுடன் போரில் மோத யாரால் முடியும். {துரியோதனனாகிய} நான், விகர்த்தனன் மகன் கர்ணன், சித்திரசேனன், விவிம்சதி, பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், வெல்லப்பட முடியாத விருஷசேனன், புருமித்ரன், ஜயன், போஜன், காம்போஜன், சுதக்ஷிணன், பெரும்பலமுள்ள சத்யவிரதன், விகர்ணன், துர்முகன், துச்சாசனன், சுபாஹு, தன் ஆயுதங்களை உயர்த்தியிருக்கும் கலிங்கர்களின் ஆட்சியாளன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் (சகுனி) ஆகிய இவர்களும், எண்ணற்ற பிற மன்னர்களும் தங்கள் படைகளுடன் அனைத்துப் புறங்களிலும் உன்னைச் சூழ்ந்து கொண்டு போரைச் சந்திக்கின்றனர். எனவே, உனது இதய நோய் அகலட்டும்!

மேலும், நீயே தேர்வீரர்களில் முதன்மையானவனாகவும் இருக்கிறாய். ஓ!அளவிலா காந்தி கொண்டவனே, நீயே வீரனாகவும் இருக்கிறாய். ஓ! சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, இப்படிப்பட்ட நீ அச்சத்திற்கான காரணத்தை எவ்வாறு காண முடியும்? எனக்குச் சொந்தமான பதினோரு அக்ஷௌஹணி படைகளும் உன்னைப் பாதுகாப்பதற்காகக் கவனத்துடன் போராடும். எனவே, ஓ! சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, அச்சங்கொள்ளாதே. உன் அச்சங்கள் விலகட்டும்” என்றான் {துரியோதனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் {துரியோதனனால்} தேற்றப்பட்ட சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, துரியோதனன் துணையுடன் அன்றிரவே (குரு படைத்தலைவர்) துரோணரிடம் சென்றான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மரியாதையுடன் துரோணரின் கால்களைத் தொட்டுப் பணிவுடன் தன் இருக்கையில் அமர்ந்த அவன் {ஜெயத்ரதன்}, ஆசானிடம் {துரோணரிடம்} இந்த வார்த்தைகளில், “இலக்கை அடித்தல், தொலைவிலிருந்து அஃதை {இலக்கை} அடித்தல், கரங்களின் உறுதி, தாக்குதலின் பலம் ஆகியவற்றில் எனக்கும் பல்குனனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் உள்ள வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக! ஓ! ஆசானே {துரோணரே}, (ஆயுத அறிவியலில் உள்ள) திறனைப் பொறுத்தவரை எனக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைத் துல்லியமாக நான் அறியவிரும்புகிறேன்! அஃதை என்னிடம் உண்மையாகச் சொல்வீராக!” என்று கேட்டான் {ஜெயத்ரதன்}.

துரோணர் {ஜெயத்ரதனிடம்}, “ஓ! மகனே {ஜெயத்ரதா}, நீ மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் ஒரே அளவு கல்வியையே பயின்றீர்கள். எனினும், யோகம் {அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி} மற்றும் அவன் ஏற்ற கடின வாழ்வு {கடின முயற்சி} ஆகியவற்றின் விளைவால் அவன் உனக்கு மேம்பட்டவனாக இருக்கிறான்! எனினும், எக்காரணத்திற்காகவும் நீ பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} அஞ்சலாகாது. ஓ! மகனே {ஜெயத்ரதா}, இவ்வச்சத்தில் இருந்து நான் உன்னைப் பாதுகாப்பேன் என்பதில் ஐயமில்லை. என் கரங்களால் பாதுகாக்கப்படுபவனைத் தேவர்களே கூடத் தீங்கு செய்ய முடியாது.

பார்த்தனால் {அர்ஜுனனால்} துளைக்க {கடக்க [அ] பிளக்க} முடியாத வியூகம் ஒன்றை நான் அமைக்கப் போகிறேன். எனவே, உன் சொந்த வகையின் {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றபடி அஞ்சாமல் நீ போரில் ஈடுபடுவாயாக. ஓ! வலிமைமிக்கத் தேர்வீரனே {ஜெயத்ரதா}, உன் தந்தைமார்கள் மற்றும் பாட்டன்மார்களின் வழியில் நீ நடப்பாயாக. வேதங்களை முறையாகக் கற்ற பிறகு நீ விதிப்படி நெருப்பில் காணிக்கைகளைச் செலுத்தியிருக்கிறாய் {அக்னியில் ஹோமம் செய்திருக்கிறாய்}. பல்வேறு வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய். எனவே, மரணம் என்பது உனக்கு அச்சத்தைத் தரும் பொருளாகாது. (ஒரு வேளை நீ இறந்தாலும்) தீய மனிதர்களால் அடைய முடியாத பெரும் நற்பேறைப் பெற்று, கர வலிமையால் ஒருவன் அடையும் சொர்க்கத்திலுள்ள அற்புத உலகங்கள் அனைத்தையும் நீ அடைவாய்.

கௌரவர்கள், பாண்டவர்கள், விருஷ்ணிகள், பிற மனிதர்கள், நான், என் மகன் ஆகியோரும் குறுகிய வாழ்நாளைக் கொண்ட மனிதர்களே. இஃதை எண்ணிப் பார்ப்பாயாக. அனைத்திலும் சக்தி வாய்ந்த காலத்தால், ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்படப் போகும் நாம் அனைவரும், தத்தமது வினையையே {செயற்பலனையே} அடுத்த உலகத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறோம். கடும் நோன்புகளை நோற்று துறவியர் எந்த உலகங்களை அடைவார்களோ, அதே உலகங்களைத் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்றே க்ஷத்திரியர்கள் அடைகிறார்கள்” என்றார் {துரோணர்}.

இவ்வாறே சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} ஆறுதல் சொல்லப்பட்டான். பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்த அச்சத்தை {தன்னிடமிருந்து} வெளியேற்றிய அவன் {ஜெயத்ரதன்}, தன் இதயத்தைப் போரில் நிலைநிறுத்தினான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் பெரும் மகிழ்ச்சியை அடைந்தன. சிங்க முழக்கங்களுடன் கலந்து, இசைக்கருவிகளின் உரத்த ஒலி அங்கே கேட்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்