Monday, August 01, 2016

துரோணரை வென்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 116

Satyaki vanquished Drona! | Drona-Parva-Section-116 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 32)

பதிவின் சுருக்கம் : துரோணருக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சாத்யகியின் வில்லை அறுத்த துரோணர்; சாத்யகியின் தேரோட்டியை மயக்கமடையச் செய்தது; தன் தேரைத் தானே செலுத்திய சாத்யகி, துரோணரின் தேரோட்டியைக் கொன்றது; துரோணரை வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் இட்டுச் சென்ற குதிரைகள்; துரோணர் சாத்யகியைப் பின்தொடராமல் அங்கேயே நிலைகொண்டது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இந்த இடங்களில் சிநியின் பேரனால் {சாத்யகியால்} (குரு) படை துரத்தியடிக்கப்படும்போது, அவனைப் பரத்வாஜர்மகன் {துரோணர்} அடர்த்தியான கணைமழையால் மறைத்தார். துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கையில் துரோணருக்கும், சாத்வதனுக்கும் {சாத்யகிக்கும்} இடையில் நடந்த மோதலானது, (பழங்காலத்தில்) பலிக்கும் {பலிச்சக்கரவர்த்திக்கும்} வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது. அப்போது துரோணர், முழுக்க இரும்பாலானவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான மூன்று அழகிய கணைகளால் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} நெற்றியைத் துளைத்தார். இப்படி அந்த நேரான கணைகளால் நெற்றியில் துளைக்கப்பட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா, மூன்று முகடுகளைக் கொண்ட மலையொன்றைப் போல அழகாகத் தெரிந்தான்.


{ஏதாவதொரு} சந்தர்ப்பத்திற்காக எப்போதும் விழிப்புடன் இருக்கும் அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, இந்திரனுடைய வஜ்ரத்தின் முழக்கத்திற்கு ஒப்பானவையான பிற கணைகள் பலவற்றை அந்தப் போரில் சாத்யகியின் மீது ஏவினார். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான அந்தத் தாசார்ஹ குலத்தோன் {சாத்யகி}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும், அழகிய சிறகுகள் கொண்ட தன் இரண்டு கணைகளால் வெட்டினான். (சாத்யகியின்) அந்தக் கரநளினத்தைக் கண்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென முப்பது {30} கணைகளால் அந்தச் சிநிக்களின் காளையை {சாத்யகியைத்} துளைத்தார். யுயுதானனின் கரநளினத்தைத் தமது கரநளினத்தால் விஞ்சிய துரோணர், மீண்டுமொரு முறை பின்னவனை {சாத்யகியை} ஐம்பது {50} கணைகளாலும், மேலும் ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில் {உடலைச்} சிதைப்பவையான அக்கணைகள்,  எறும்புப் புற்றில் இருந்து கோபத்துடன் வெளியேறும் சீற்றமிக்கப் பாம்புகளைப் போலத் துரோணரின் தேரில் இருந்து வெளியேறின. அதே போல, யுயுதானனால் {சாத்யகியால்} நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவப்பட்டவையான குருதியைக் குடிக்கும் கணைகளும் துரோணரை மறைத்தன. எனினும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரால் {துரோணரால்} வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்திற்கும், சாத்வத குலத்தோனால் {சாத்யகியால்} வெளிப்படுத்தப்பட்டதற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நாங்கள் காணவில்லை. உண்மையில் மனிதர்களில் காளையரான அவ்விருவரும் ஒரு வகையில் இணையானவராகவே இருந்தனர்.

அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, நேரான ஒன்பது கணைகளால் துரோணரைத் தாக்கினான். மேலும் அவன் {சாத்யகி} கூரிய கணைகள் பலவற்றால் துரோணரின் கொடிமரத்தையும் தாக்கினான். பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {சாத்யகி} பின்னவரின் {துரோணரின்} தேரோட்டியை நூறு கணைகளால் துளைத்தான். யுயுதானனால் வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்தைக் கண்டவரும், வலிமைமிக்கத் தேர்வீரருமான துரோணர், எழுபது கணைகளால் யுயுதானனின் தேரோட்டியைத் துளைத்து, மூன்றால் அவனது (நான்கு) குதிரைகளையும் துளைத்து, ஒற்றைக் கணை ஒன்றால் மாதவனின் {சாத்யகியின்} தேரில் நின்ற கொடிமரத்தையும் வெட்டினார். இறகுகளையும், தங்கத்தாலான சிறகுகளையும் கொண்ட மற்றொரு பல்லத்தால் அந்தப் போரில் மதுகுலத்தின் சிறப்புமிக்க வீரனுடைய {சாத்யகியின்} வில்லையும் அறுத்தார்.

அதன்பேரில் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கோபத்தால் தூண்டப்பட்டு, அவ்வில்லை வீசிவிட்டு, ஒரு பெரிய கதாயுதத்தை அந்தப் பரத்வாஜரின் மகன் மீது வீசினான். எனினும் துரோணர், இரும்பாலானதும், இழைகளால் கட்டப்பட்டதும், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்ததுமான அந்தக் கதாயுதத்தைப் பல்வேறு வடிவங்களிலான கணைகள் பலவற்றால் தடுத்தார். அப்போது கலங்கடிக்கப்பட முடியாதவனான சாத்யகி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் பரத்வாஜரின் வீர மகனை {துரோணரைத்} துளைத்தான். அந்தப் போரில் அதைக் கொண்டு துரோணரைத் துளைத்த யுயுதானன் சிங்கமுழக்கமும் செய்தான். எனினும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரால் அந்த முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இரும்பாலானதும் தங்கக் கைப்பிடி கொண்டதுமான ஓர் ஈட்டியை எடுத்த துரோணர், அதை மாதவனுடைய {சாத்யகியின்} தேரின் மீது வேகமாக ஏவினார். எனினும், காலனைப் போல மரணத்தைக் கொடுக்கும் அந்த ஈட்டியானது, சிநியின் பேரனைத் {சாத்யகியைத்} தீண்டாமல், பின்னவனின் {சாத்யகியின்} தேரைத் துளைத்துச் சென்று, கடும் ஒலியுடன் பூமிக்குள் நுழைந்தது. பிறகு அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா, சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். அவரது வலக்கரத்தைத் தாக்கிய அந்தச் சாத்யகி, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அவரைப் பெரிதும் பீடித்தான். அந்தப் போரில் துரோணரும், ஓ! மன்னா, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை வெட்டி, பின்னவனின் தேரோட்டியை ஓர் ஈட்டியால் [1] தாக்கினார். அந்த ஈட்டியால் தாக்கப்பட்ட யுயுதானனின் தேரோட்டி மயக்கமடைந்து, சிறிது நேரத்திற்குத் தேர்த்தட்டில் அசைவற்றவனாகக் கிடந்தான்.

[1] வேறொரு பதிப்பில் இவ்வாயுதம் ரதசக்தி என்றழைக்கப்படுகிறது. அது தாழை மடல் போன்ற வாயுள்ள சக்தி {ஈட்டி} என்றும் அங்கே விளக்கப்படுகிறது.

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனக்குச் சாரதியாகத் தானே செயல்பட்ட சாத்யகி, கடிவாளங்களையும் தானே பிடித்துக் கொண்டு துரோணருடனும் தொடர்ந்து போரிட்டத்தால், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சாதனையை அடைந்தான். பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன், அந்தப் போரில் ஒரு நூறு கணைகளால் அந்தப் பிராமணரை {துரோணரைத்} தாக்கி, ஓ! ஏகாதிபதி, தான் அடைந்த சாதனையால் மிகவும் மகிழ்ந்தான். அப்போது துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் மீது ஐந்து கணைகளை ஏவினார். அந்தப் போரில், சாத்யகியின் கவசத்தைத் துளைத்த அந்தக் கடுங்கணைகள் அவனது குருதியைக் குடித்தன. அச்சந்தரும் அந்தக் கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சாத்யகி கோபத்தால் தூண்டப்பட்டான். பதிலுக்கு அந்த வீரன் {சாத்யகி}, தங்கத் தேரைக் கொண்ட அவர் {துரோணர்} மீது கணைகள் பலவற்றை ஏவினான்.

பிறகு ஓர் ஒற்றைக் கணையால் துரோணரின் தேரோட்டியைப் பூமியில் வீழ்த்திய அவன் {சாத்யகி}, தன் கணைகளால் தன் எதிராளியின் சாரதியற்றக் குதிரைகளைத் தப்பி ஓடும்படி செய்தான். அதன் பேரில் அந்தத் தேரானது, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு {அந்தக் குதிரைகளால்} இழுத்துச் செல்லப்பட்டது. உண்மையில், துரோணரின் பிரகாசமான தேரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் நகர்வைப் போல அந்தப் போர்க்களத்தில் ஆயிரம் முறை சுழலத் தொடங்கியது. அப்போது, (கௌரவப் படையின்) மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், "ஓடுவீர், விரைவீர், துரோணரின் குதிரைகளைப் பிடிப்பீர்" என்று உரக்க ஆரவாரம் செய்தனர். அந்தப் போரில் சாத்யகியை விரைவாகத் தவிர்த்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணர் எங்கிருந்தாரோ அந்த இடத்திற்கு விரைந்தனர். சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு ஓடிச் செல்லும் அந்தத் தேர்வீரர்களைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் பிளந்து, மிகவும் உற்சாகமற்றவையாக ஆகின.

அதேவேளையில், துரோணர், விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு, வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் சென்று அங்கேயே நிலையாக நின்று கொண்டார். பரத்வாஜரின் வீரமகன் {துரோணர்}, (தாமில்லாத போது) பாண்டவர்களாலும், பாஞ்சாலர்களாலும் பிளக்கப்பட்ட வியூகத்தைக் கண்டு, சிநியின் பேரனைப் பின்தொடர எந்த முயற்சியும் செய்யாமல், (பிளக்கப்பட்ட) தமது வியூகத்தைத் தாமே காப்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு, பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் தடுத்த அந்தத் துரோண நெருப்பு, கோபத்தால் சுடர்விட்டெரிந்து அங்கேயே நின்று, யுக முடிவில் எழும் சூரியனைப் போல அனைத்தையும் எரித்தது" {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்