Wednesday, August 03, 2016

சுதர்சனனைக் கொன்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 117

Satyaki killed Sudarsana! | Drona-Parva-Section-117 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 33)

பதிவின் சுருக்கம் : கௌரவர்கள் எவராலும் தடுக்கப்பட முடியாமல் களத்தில் முன்னேறிய சாத்யகி; இடையில் வந்த மன்னன் சுதர்சனன்; சுதர்சனனின் தேரோட்டியையும், சுதர்சனனையும் கொன்ற சாத்யகி; வீரர்களின் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துரோணரையும், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} தலைமையிலான உமது படையின் போர்வீரர்கள் பிறரையும் வென்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, சிரித்துக் கொண்டே தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, "ஓ! சூதா {முகுந்தா}, கேசவராலும் {கிருஷ்ணராலும்}, பல்குனராலும் {அர்ஜுனராலும்} ஏற்கனவே நமது எதிரிகள் எரிக்கப்பட்டிருக்கின்றனர். (மீண்டும்) அவர்களை வெல்வதற்கான (மேம்போக்கான) ஒரு வழியாக மட்டுமே நாம் இருக்கிறோம். தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} மகனான அந்த மனிதர்களில் காளையால் {அர்ஜுனரால்} ஏற்கனவே கொல்லப்பட்டு மாண்டவர்களையே நாம் கொல்கிறோம்" என்றான்.


சிநிக்களில் காளையும், வில்லாளிகளில் முதன்மையானவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த வலிமைமிக்க வீரன் {சாத்யகி}, தன் தேரோட்டியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, சுற்றிலும் தன் கணைகளைப் பெரும்பலத்துடன் இறைத்து, அந்தப் பயங்கரப் போரில் இரைதேடிச் செல்லும் பருந்தைப் போலவே சென்றான். குரு வீரர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைத் {சாத்யகியைத்} தாக்கினாலும், சந்திரன் அல்லது சங்கின் வெண்மையைக் கொண்ட அந்தச் சிறந்த குதிரைகளால் தாங்கப்பட்டு, கௌரவப்படைப்பிரிவுகளைத் துளைத்துச் சென்றவனும், ஆயிரங்கதிரோனான சூரியனுக்கு ஒப்பானவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனை {சாத்யகியைத்} தடுப்பதில் அவர்களால் {குரு வீரர்களால்} வெல்ல முடியவில்லை. உண்மையில், குறையற்ற வலிமை கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுக்கு {இந்திரனுக்கு} இணையான வீரம் கொண்டவனும், கூதிர் காலச் சூரியனைப் போல ஆகாயத்தில் தெரிபவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகியை, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் போரிட்டவர்களில் ஒருவனாலும் தடுக்க முடியவில்லை.

அப்போது, போர்க்கலையின் அனைத்து முறைகளை அறிந்தவனும், தங்கக் கவசம் அணிந்திருந்தவனும், வில் மற்றும் கணைகளைத் தரித்திருந்தவனும், சினத்தால் நிறைந்தவனும், மன்னர்களில் முதன்மையானவனுமான சுதர்சனன் [1], விரைந்து வரும் சாத்யகியை எதிர்த்து, அவன் {சாத்யகி} செல்வதைத் தடுக்க முயன்றான். பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட மோதலானது மிகக் கடுமையானதாக இருந்தது. உமது வீரர்கள் மற்றும் சோமகர்கள் ஆகிய இருதரப்பினரும் அந்த மோதலை விருத்திரனுக்கும் வாசவனுக்கும் இடையிலான மோதலைப் போலப் புகழ்ந்தனர். அந்தப் போரில் சுதர்சனன், நூற்றுக்கணக்கான கூர்மையான கணைகளால் அந்தச் சாத்வதர்களில் முதன்மையானவனை {சாத்யகியைத்} துளைக்க முயன்றான். அவை சாத்யகியை அடைவதற்கு முன்பே {சாத்யகியால்} வெட்டப்பட்டன. அதே போலத் தன் முதன்மையான தேரில் நின்ற சுதர்சனனும், இந்திரனுக்கு ஒப்பான சாத்யகியால் அவன் மீது ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் தன் சிறந்த கணைகளால் இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டினான்.

[1] இவன் திருதராஷ்டிரன் மகனும், துரியோதனனின் தம்பியுமான சுதர்சனன் அல்ல. இவன் வேறு ஒருவன். நக்னஜித்திடம் இருந்து கிருஷ்ணனால் விடுவிக்கப்பட்ட மன்னன் சுதர்சனன் என்று ஒருவன் உத்யோக பர்வம் பகுதி 48ல் குறிப்பிடப்படுகிறான். இவன் அவனாகவும் இருக்கலாம், அல்லது வேறு ஒருவனாகவும் இருக்கலாம். பாண்டவத் தரப்பைச் சேர்ந்த சுதர்சனன் என்ற மற்றொரு மாலவ மன்னன் துரோண பர்வம் பகுதி 199ல் குறிப்பிடப்படுகிறான்.

சாத்யகியுடைய கணைகளின் சக்தியால் தன் கணைகள் கலங்கடிக்கப்படுவதைக் கண்டவனும், கடும் சக்தி கொண்டவனுமான சுதர்சனன், (தன் எதிரியை) எரித்துவிடுபவனைப் போலக் கோபத்துடன், தங்கச் சிறகுகள் கொண்ட அழகிய கணைகளை எவினான். பிறகும் அவன் {சுதர்சனன்}, நெருப்புக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகள் கொண்டவையும், தன் வில்லின் நாணைக் காதுவரை இழுத்து ஏவப்பட்டவையுமான மூன்று அழகிய கணைகளால் தன் எதிரியை மீண்டும் துளைத்தான். சாத்யகியின் கவசத்தைப் பிளந்த அவை, பின்னவனின் {சாத்யகியின்} உடலுக்குள் ஊடுருவின.

அதே போலவே அவன் (இளவரசனான சுதர்சனன்), சுடர்மிக்க நான்கு பிற கணைகளைக் குறிபார்த்து, அவற்றைக் கொண்டு, வெள்ளிநிறம் போல வெண்மையாக இருந்த சாத்யகியின் நான்கு குதிரைகளைத் தாக்கினான். அவனால் {சுதர்சனனால்} இப்படிப் பீடிக்கப்பட்டவனும், இந்திரனுக்கு இணையான ஆற்றலையும் பெரும் சுறுசுறுப்பையும் கொண்டவனுமான சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கூரிய கணைகளால் சுதர்சனனின் குதிரைகளைக் கொன்று உரக்க முழங்கினான். பிறகு சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்துக்கு ஒப்பான ஒரு பல்லத்தால் சுதர்சனனின் தேரோட்டியுடைய தலையை வெட்டிய அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, யுக நெருப்புக்கு ஒப்பான க்ஷுரப்ரம் ஒன்றால், ஓ! மன்னா, பழங்காலத்தில் போரில் வலிமைமிக்கப் பலனின் தலையைப் பலவந்தமாக வெட்டிய வஜ்ரதாரியைப் {இந்திரனைப்} போலக் காது குண்டலங்களைக் கொண்டதும், முழு நிலவுக்கு ஒப்பானதும், மிகப் பிரகாசமான முகத்தால் அலங்கரிக்கப்பட்டதும் சுதர்சனனின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினான். பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த யது குலத்து உயர் ஆன்மக் காளை {சாத்யகி}, இப்படி அந்த அரசபேரனை {சுதர்சனனைக்} கொன்று, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து, தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.

பிறகு, மனிதர்களில் வீரனான அந்த யுயுதானன் {சாத்யகி}, தனக்கு முன் சென்ற அர்ஜுனனின் பாதையிலேயே சென்று, (அப்படிச் செல்கையில்) உமது துருப்புகள் அனைத்தையும் தன் கணைகளின் மேகங்களால் தடுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடி அந்தச் சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அதே தேரில் சென்றான். அவன் {சாத்யகி}, தன் வழியில் உள்ள அனைத்தையும் எரித்துச் செல்லும் காட்டுத் தீயைப் போலத் தன் கணைகள் அடையும் தொலைவில் இருந்த எதிரிகள் அனைவரையும் எரித்ததால், அங்கே இருந்த முதன்மையான வீரர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, அவனால் {சாத்யகியால்} அடையப்பட்ட முதன்மையான அதிசய சாதனைகளைப் பாராட்டினர்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்