Sunday, August 14, 2016

"நான் உன் அண்ணன்!" என்ற யுதிஷ்டிரன்! - துரோண பர்வம் பகுதி – 125

"I am thy eldest brother!" said Yudhishthira! | Drona-Parva-Section-125 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 41)

பதிவின் சுருக்கம் : போரின் நிலை கண்டு கலங்கிய யுதிஷ்டிரன் சிந்திக்கத் தொடங்கியது; அர்ஜுனனையும், சாத்யகியையும் காணாமல் கவலையடைந்த யுதிஷ்டிரன் பீமனின் பெருமைகளை நினைத்துப் பார்த்தது; யுதிஷ்டிரனைக் கண்டு கலங்கிய பீமன்; அர்ஜுனனையும், சாத்யகியையும் தேடிச் செல்லுமாறு பீமனைப் பணித்த யுதிஷ்டிரன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பாண்டவர்களின் படை இப்படி அனைத்துப் பக்கங்களிலும் கலங்கடிக்கப்பட்ட போது, பார்த்தர்களும், பாஞ்சாலர்களும் வெகு தொலைவுக்குத் திரும்பி ஓடினர். மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், யுக முடிவில் ஏற்படுவதைப் போல உலகளாவிய பேரழிவை ஏற்படுத்திய அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உண்மையில் துரோணர் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கங்களிட்ட போது, பாஞ்சாலர்கள் பலவீனப்படுத்தப்பட்டுப் பாண்டவர்கள் கொல்லப்பட்ட போது, அந்தப் போரில் ஏற்படும் துயருக்கு எந்தப் புகலிடத்தையும் காணத்தவறிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காரியம் எப்படி முடியப்போகிறது எனச் சிந்திக்கத் தொடங்கினான்.


சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} காண எதிர்பார்த்துச் சுற்றிலும் கண்களைச் செலுத்தினாலும், யுதிஷ்டிரன், அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனையோ {அர்ஜுனனையோ}, மாதவனையோ {சாத்யகியையோ} காணவில்லை. மனிதர்களில் புலியும், குரங்குக் கொடியோனுமான அந்த அர்ஜுனனைக் காணாமல், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்காமல் அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} கவலையில் நிறைந்தான். மேலும், விருஷ்ணிகளின் தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியையும் காணாமல், மன்னன் யுதிஷ்டிரன் அதே போன்ற கவலையையே அடைந்தான். உண்மையில், மனிதர்களில் முதன்மையான அவ்விருவரையும் காணாத யுதிஷ்டிரன் அமைதி எதையும் அடையவில்லை. உயர் ஆன்மாவும், வலிமைமிமிக்கக் கரங்களையும் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், உலகின் தீச்சொல்லிற்கு அஞ்சி சாத்யகியின் தேரை நினைக்கத் தொடங்கினான்.

'உண்மையான ஆற்றலைக் கொண்டவனும், நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனும், சிநியின் பேரனுமான சாத்யகி, என்னால் அர்ஜுனனின் பாதையில் {அவனைப் பின்தொடர்ந்து} அனுப்பப்பட்டான். முன்பு எனக்கு ஒரு கவலையே இருந்தது, இப்போது இரண்டைக் கொண்டிருக்கிறேன். சாத்யகி மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரைக் குறித்த செய்திகளையும் நான் பெற வேண்டும். அர்ஜுனனின் பாதையில் பின்தொடர்ந்து செல்ல சாத்யகியை அனுப்பிய பிறகு, இப்போது சாத்யகியின் பாதையில் யாரை அனுப்புவேன்? நான் யுயுதானனை {சாத்யகியைக்} குறித்து விசாரிக்காமல் {தேடாமல்}, என் தம்பி {அர்ஜுனன்} குறித்து மட்டுமே அனைத்து வழிகளிலும் அறிய முயன்றால் {தேடினால்} உலகத்தோர் என்னை நிந்திப்பர்.

அவர்கள், "தர்மனின் மகனான யுதிஷ்டிரன், தன் தம்பியை {அர்ஜுனனை மட்டும்} விசாரித்தான், தவறாத ஆற்றலைக் கொண்டவனும், விருஷ்ணி குலத்து வீரனுமான சாத்யகியை விதியின் வசத்தில் விட்டுவிட்டான்" என்பார்கள். எனவே, உலக்கத்தோர் நிந்தனைக்கு அஞ்சும் நான், பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரனை {பீமனை} உயர் ஆன்ம சாத்யகியின் பாதையில் அனுப்ப வேண்டும். சாத்வத குலத்தின் வெல்லப்படாத விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} மேல் நான் கொண்ட அன்பு, எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன் மேல் கொண்ட என் அன்புக்குச் சற்றும் குறைந்ததல்ல. மேலும் சிநிக்களை மகிழ்விப்பவனான அவன், பெரும் பணியில் என்னால் ஈடுபடுத்தப்பட்டான். எனினும் அந்த வலிமைமிக்க வீரன் {சாத்யகி}, ஒரு நண்பனின் வேண்டுகோளுக்காகவோ, கௌரவத்திற்காகவோ பெருங்கடலுக்குள் புகும் ஒரு மகரத்தைப் போலப் பாரதப் படைக்குள் ஊடுருவினான். பெரும் நுண்ணறிவு கொண்ட அந்த விருஷ்ணி வீரனை எதிர்த்து ஒன்றுகூடிப் போரிடும் பின்வாங்காத வீரர்களின் ஒலி பெரிதாக இருப்பதை நான் கேட்கிறேன். அவனுக்கு அவர்கள் அதிகமானவர்களே என்பதில் ஐயமில்லை. எனவே, அவனைக் காக்க நான் நினைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

வலிமைமிக்கவர்களான அவ்விரு தேர் வீரர்களும் எங்கிருக்கிறார்களோ அங்கே வில்தரித்தவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன் செல்ல வேண்டும் என்றே எனக்குத் தெரிகிறது. பீமனால் தாங்கிக் கொள்ள முடியாதது என இவ்வுலகில் ஏதும் இல்லை. தீர்மானத்துடன் அவன் {பீமன்} போராடினால், உலகில் உள்ள வில்லாளிகள் அனைவருக்கும் போரில் அவன் இணையானவனாவான். தன் கரத்தின் பலத்தை நம்பியே அவனால் {பீமனால்} அனைத்து எதிரிகளையும் எதிர்த்து நிற்க முடியும். அந்த உயர்ஆன்ம போர்வீரனுடைய {பீமனுடைய} கரங்களின் பலத்தைக் கொண்டே நாம் வனவாசத்தில் இருந்து மீண்டு வந்தோம். போரில் நாம் எப்போதும் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறோம். எனவே, பாண்டுவின் மகனான பீமசேனன் சாத்யகியிடம் சென்றால், சாத்யகி மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் உண்மையான உதவியைப் பெறுவார்கள். சாத்யகி மற்றும் பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நான் எந்தக் கவலையும் அடைய வேண்டியதில்லை என்பதிலும் ஐயமில்லை. அவ்விருவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களாவர், மேலும் வாசுதேவனே {கிருஷ்ணனே} அவர்களைப் பாதுகாக்கிறான். (இவ்வளவு இருந்தும், அவர்கள் குறித்து நான் கவலையையடைகிறேன்). நிச்சயம் நான் என் கவலையை விலக்க முயலவேண்டும். எனவே, சாத்யகியைப் பின்தொடர்ந்து செல்லும்படி பீமனை நான் அனுப்ப வேண்டும். இதைச் செய்த பிறகே, சாத்யகியைக் காக்கும் என் ஏற்பாடுகள் முழுமையடைந்ததாக என்னால் கருத முடியும்" என்று நினைத்தான் {யுதிஷ்டிரன்}.

மனதில் இதைத் தீர்மானித்துக் கொண்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன், தன் தேரோட்டியிடம், "பீமனிடம் என்னை அழைத்துச் செல்வாயாக" என்றான். குதிரைகளின் தன்மைகள் நன்கறிந்தவனான அந்தத் தேரோட்டி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணையைக் கேட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரை பீமன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சென்றான். பீமனின் முன்னிலையை அடைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அத்தருணத்தை நினைத்து துயரால் நிலையழிந்து, பல்வேறு கோரிக்கைகளால் பீமனை நெருக்கினான். உண்மையில், துயரில் நிறைந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} பீமனிடம் பேசினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளையே அவனிடம் {பீமனிடம் சொன்னான்}, "ஓ! பீமா, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய அனைவரையும் எதிர்த்து ஒரே தேரில் சென்று வென்ற அர்ஜுனனின் கொடிமரத்தை நான் காணவில்லை" என்றான்.

அப்போது பீமசேனன், இத்தகு பரிதாப நிலையில் இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், "இப்படி உற்சாகமற்றதன்மையால் பீடிக்கப்பட்ட உமது வார்த்தைகளை இதற்கு முன்னர் எப்போதுமே நான் கேட்டதோ, கண்டதோ இல்லை. உண்மையில், முன்னர் நாம் துயரால் பீடிக்கப்பட்ட போது, நீரே எங்களுக்கு ஆறுதலளித்தீர். எழுவீர், ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, எழுவீராக, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? ஓ! கௌரவங்களை அளிப்பவரே, என்னால் செய்ய முடியாததென ஏதுமில்லை. ஓ! குருகுலத்தின் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, உமது ஆணைகள் யாவை என்பதை எனக்குச் சொல்வீராக. உமது இதயத்தைத் துயரில் நிலைக்கச் செய்யாதீர்" என்றான்.

கவலை நிறைந்த முகத்துடனும், கண்ணீரில் குளித்த கண்களுடனும் கூடிய மன்னன் {யுதிஷ்டிரன்}, கருநாகமொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே பீமசேனனிடம், "உலகம் பரந்த புகழைக் கொண்ட வாசுதேவனால் கோபத்துடன் முழக்கப்படும் சங்கான பாஞ்சஜன்யத்தின் வெடிப்பொலிகள் கேட்கப்படுகின்றன. இதன் மூலம், உன் தம்பியான தனஞ்சயன் {அர்ஜுனன்}, களத்தில் உயிரையிழந்து கிடக்கிறான் என்றே தெரிகிறது. அர்ஜுனன் கொல்லப்பட்டதும் ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} போரிடுகிறான் என்பதில் ஐயமில்லை. எவனுடைய ஆற்றலால் பாண்டவர்கள் உயிரோடிருக்கிறார்களோ, தேவர்கள், ஆயிரங்கண்களைக் கொண்ட தங்கள் தலைவனை {இந்திரனை} நோக்கித் திரும்புவதைப் போல, நமக்கு அச்சம் நேரும் காலங்களிலெல்லாம் நாம் எவனை நோக்கித் திரும்புவோமோ அந்தப் பெரும் வலிமைமிக்க வீரன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தேடி பாரதப் படைக்குள் ஊடுருவினான்.

அவன் {அர்ஜுனன்} சென்றான் என்பதை நான் அறிவேன், ஓ! பீமா, ஆனால் அவன் {அர்ஜுனன்} இன்னும் திரும்பவில்லை. நிறத்தால் கறுமையும், வயதால் இளமையும், சுருள் முடியும் கொண்டவனும், வலிமைமிக்க மிக அழகிய தேர்வீரனும், அகன்ற மார்பு, நீண்ட கரங்கள், மதயானைக்கு ஒப்பான நடை ஆகியவற்றைக் கொண்டவனும், சக்கரத்தைப் போன்றவையும், புடம்போட்ட தாமிரத்தின் நிறத்தாலானவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த உன் தம்பி {அர்ஜுனன்} எதிரிகளின் அச்சங்களை அதிகரித்தான். நீ அருளப்பட்டிருப்பாயாக, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இதுவே என் துயரின் காரணம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அர்ஜுனனுக்காகவும், சாத்வதனுக்காகவும், தெளிந்த நெய் காணிக்கையால் ஊட்டப்படும் சுடர்மிக்க நெருப்பைப் போல என் துன்பம் அதிகரிக்கிறது. நான் அவனது {அர்ஜுனனது} கொடிமரத்தைக் காணவில்லை. இதனாலேயே நான் கவலையால் மலைத்துப் போகிறேன். அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டிருப்பான் என்பதிலும், போரில் திறன்மிக்கக் கிருஷ்ணன் போரிடுகிறான் என்பதிலும் ஐயமில்லை. மனிதர்களில் புலியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சாத்வதனும் {சாத்யகியும்} கொல்லப்பட்டிருப்பான் என்பதிலும் ஐயமில்லை. ஐயோ, சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரனான உன் தம்பியைப் பின்தொடர்ந்தே சென்றான். சாத்யகியைக் காணாமலும் துயரால் நான் மலைத்துப் போகிறேன்.

எனவே, ஓ! குந்தியின் மகனே {பீமா}, உண்மையில், என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது உன் கடமை என நீ நினைத்தால், வலிமையும், சக்தியும் கொண்ட தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, சாத்யகியும் எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வாயாக. நான் உன் அண்ணன் என்பதை நினைவில் கொள்வாயாக. அர்ஜுனனை விடச் சாத்யகியே உனக்கு அன்புக்குரியவன் என நீ நினைப்பாயாக. ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, சாத்யகி எனக்கு நன்மை செய்ய விரும்பி இழிந்தோரால் நடக்க முடியாத அர்ஜுனனின் பாதையைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறான். இரு கிருஷ்ணர்களையும் {அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இரு கருப்பர்களையும்} சாத்வத குலத்தின் சாத்யகியையும் நலமாகவும், முழுமையாகவும் கண்டதும், ஓ! பாண்டுவின் மகனே {பீமா} சிங்க முழக்கம் எழுப்பிச் செய்தியை எனக்கு அனுப்புவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்