Friday, August 12, 2016

மஹாபாரதம் - கால அட்டவணை - 4



மஹாபாரத நிகழ்வுகளின் தொடர்ச்சி…

48. சைந்தவனின் {ஜெயத்ரதன்} மரணம்: மார்கழி மாதம் தேய்பிறை பதினோறாம் நாளில் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான். அன்று இரவும் போர் தொடர்ந்தது. துரோணர் மார்கழி மாதம் தேய்பிறை பனிரெண்டாம் நாளில் நடுப்பகலில் கொல்லப்பட்டார்.



49. கர்ணனின் மரணம்: மார்கழி மாதம் தேய்பிறை 14ம் நாளில் கர்ணன் கொல்லப்பட்டான். சல்லியன் மார்கழி மாதம் அமாவாசை அன்று கொல்லப்பட்டான்.

50. துரியோதனனின் வீழ்ச்சி: மார்கழி மாதம் அமாவாசை / தைமாதம் வளர்பிறை முதல் நாள் மாலையில் அவன் வீழ்ந்தான். அடுத்த நாள் காலையில் தை மாதம் வளர்பிறை முதல் நாளில் அவன் இறந்தான்.

51. பலராமன் கார்த்திகை மாதம் தேய்பிறை 5ம் நாளில், பூச நட்சத்திரத்தில் தன் யாத்திரயைத் தொடங்கினார். அதேபோல நாள் வாரியாகவும், நட்சத்திர வாரியாகவும் அந்த யாத்திரை 42 நாட்கள் நடந்தது.

52. அஸ்வத்தாமன் மார்கழி மாதம் அமாவாசை / தை மாதம் வளர்பிறை 1ம் நாள் இரவில் பாண்டவர்களின் மகன்களைக் கொன்று அந்தப் பயங்கரச் செய்தியை துரியோதனனிடம் வளர்பிறை 1ம் நாள் காலையில் சொன்னான். தைமாதம் வளர்பிறை 1ம் நாளில் அஸ்வத்தாமன் வீழ்த்தப்பட்டான்.

53. பாண்டவப் படைகள் 7 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 551,33,83,260.
கௌரவப் படைகள் 11 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 866,38,87,960,
மொத்தம் 18 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 1417,72,71,240.

பாண்டவர்களின் தரப்பில், பாண்டவர்கள், கிருஷ்ணன், சாத்யகி, யுயுத்சு ஆகியோரையும், கௌரவர் தரப்பில், கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமன் ஆகியோரையும் தவிர எஞ்சிய அனைவரும் கொல்லப்பட்டனர். யுதிஷ்டிரன், போரில் 94 கோடி பேருக்கு மேல் கொல்லப்பட்டதாகத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்தான்.

பாண்டவ வீரர்கள் கௌரவப்படையினரை எப்படி அப்புறப்படுத்தினர் என்ற தகவல்கள் இக்காவியத்தில் தெளிவாக இல்லை. 13வது நாளில் அபிமன்யு மட்டும் 0.5 அக்ஷௌஹிணி படையினரைக் கொன்றான். 14வது நாளில் அர்ஜுனன் மட்டும் 5 அக்ஷௌஹிணி படையினரைக் கொன்றான்.

54. பாண்டவத்தரப்பைத் தாக்கி

பீஷ்மர் மட்டும் கிட்டத்தட்ட 1.27 அக்ஷௌஹிணிகள் = 100,00,00,000
துரோணர் மட்டும் கிட்டத்தட்ட 1.00 அக்ஷௌஹிணி = 78,75,26,180
கர்ணன் மட்டும் கிட்டத்தட்ட 2.37 அக்ஷௌஹிணிகள் = 186,28,78,540
சல்லியன் மட்டும் கிட்டத்தட்ட 0.29 அக்ஷௌஹிணி = 22,60,46,000
அஸ்வத்தாமன் மட்டும் கிட்டத்தட்ட 0.09 அக்ஷௌஹிணி = 7,20,24,400 
போர்வீரர்களைக் கொன்றனர்.

எஞ்சிய போர்வீரர்கள் 1.98 அக்ஷௌஹிணிகள் = 156,48,08,140
மொத்தம் 7.00 அக்ஷௌஹிணிகள் = 55,33,83,260

55. அப்போது யுதிஷ்டிரனின் வயது 91 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 27 நாட்களாகும். பாண்டவர்கள் தை மாதம் வளர்பிறை 1ம் நாளில் இருந்து 13ம் நாள் வரை துக்கம் அனுசரித்தனர். 14ம் நாளில் மொத்த தகனம் நடந்தது. அதே நாள் மாலையில் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்றனர்.

56. யுதிஷ்டிரன் சுபகிருது வருடம் தை மாதம் பௌர்ணமியில் மூடிசூடப்பட்டான். யுதிஷ்டிரனுக்கு அப்போது 91 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 10 நாட்களாகும்.

57. பாண்டவர்கள் (அம்புப்படுக்கையில் கிடந்த) பீஷ்மரிடம் தை மாதம் தேய்பிறை 2ம் நாளில் சென்று 8ம் நாள் வரை அவரது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி ,15 நாட்கள் ஹஸ்தினாபுரத்திலேயே தங்கி, மாசி மாதம் வளர்பிறை எட்டாம் நாளில் பீஷ்மரிடம் மீண்டும் சென்றனர். 8வது, 9வது, 10வது, 11வது நாட்களில் பீஷ்மர் தியானத்தில் இருந்தார். 12வது நாளில் தமது உடலைத் துறந்தார். அதன்காரணமாகவே தை மாதம் தேய்பிறையின் 8ம் நாள் முதல் 12ம் நாள் வரை பீஷ்ம பஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் தேய்பிறை 7ம் நாளில் விழுந்த பீஷ்மர், 8ம் நாளில் இருந்து மாசி மாதம் வளர்பிறை 11ம் நாள் வரை, 48 நாள் கடந்திருந்தது. "அஷ்ட பஞ்சசதம் ராத்ரியாசயணச் சியாசியாம கதை AshtaPanchasatam ratryassayana syasyama gatha" என்பது பீஷ்மர் தான் போர்க்களத்தில் கழித்ததாகச் சொன்ன 58 (10 + 48) நாட்களாகும். "ஸரஷு நிஸிதகிரேசு யதா வர்ஷ சதம் தஹா Sarashu nisitagresu yatha varsha satam tatha" என்பது 100 வருடங்களாகத் தோன்றினாலும், கூரிய கணைகளில் படுத்திருந்த அந்தக் காலம் ஆகும். "திரிபாகச் சேஷ பக்ஷியம் சுக்லோ Tribhaga seshah pakshyam suklo" என்பது 3 பகுதிகள் மீந்திருந்த வளர்பிறைக் காலமாகும். (வளர்பிறை காலத்தை 10 பகுதிகளாக வகுத்தால், 7 பகுதிகள் என்பது 10.5 நாள் அல்லது 11வது நாள் நடைபெறும் காலமாகும். மீதம் மூன்று பகுதிகள் என்பது பௌர்ணமிக்கு முன்பு எஞ்சியிருந்த 4.5 நாட்களாகும்).

58. அஸ்வமேத யாகம் சோபகிருது வருடம் மாதி மாதம் 12ம் நாளில் தொடங்கியது. அதற்குச் சற்று முன்பே உத்தரைக்கு மகனாகக் குறைப்பிரசவத்தில் பரிக்ஷித் இறந்து பிறந்து பிறந்து, கிருஷ்ணனால் மீண்டும் உயிர்பெற்றான். 15 வருடங்களுக்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் திருதராஷ்டிரன் காடேகினான். அதற்கடுத்து 3 வருடங்களுக்குப் பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனைக் காண காட்டுக்குச் சென்றனர். விதுரன் இறந்தான். அதற்கு அடுத்து 1 மாதத்திற்குப் பிறகு திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் காட்டுத்தீயில் கொல்லப்பட்டனர்.

59. பெரும்போர் முடிந்து 36 வருடங்கள் கழித்து வந்த வெகுதானிய வருடத்தில் துவாரகையில் தீய சகுனங்கள் தென்பட்டன. சாம்பன் கருத்தரித்து, {அதன் மூலம்} இரும்பு உலக்கை ஒன்று (முசலத்தைப்) பிறந்தது.

60. யுதிஷ்டிரன் 36 வருடங்கள், 2 மாதங்கள் மற்றும் 15 நாட்களுக்கு ஆட்சி செய்தான். சுபகிருது வருடம் தை மாதம் பௌர்ணமியில் இருந்து வெகுதானிய வருடம் தை மாதம் பௌர்ணமி வரை 36 வருடங்களும் 2 மாதங்களும் 15 நாட்களும் கழிந்திருந்தன. ஸ்ரீகிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்துக் கலியுகம் பிறந்த நாளானது பிரமாதி வருடம் வளர்பிறை 1ம் நாளாக இருந்தது.

61. 7 நாட்கள் கழித்து வளர்பிறையின் 7ம் நாளில் துவாரகை நகரம் பெருங்கடலில் மூழ்கியது. கலியுகத்திற்கு 75 வருடங்கள் முன்பு இருந்து கலியுகம் தொடங்கிய பின்னர் 25 வருடங்கள் வரை சப்தரிஷிகள் மக நட்சத்திரத்தில் இருந்தனர். யுதிஷ்டிரனின் காலகட்டமானது {Yudhishthir Shaka யுதிஷ்டிரனின் சகாப்தமானது} அவனது பட்டமேற்பு நாளில் இருந்து தொடங்கியது. அதன்படி, யுதிஷ்டிரன் காலகட்டத்தில் 36 வருடங்கள், 2 மாதங்கள், 15 நாட்களில் கிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்தான்.

62. பாண்டவர்கள் அதற்கடுத்து 6 மாதங்கள் 11 நாட்களுக்குப் பிறகு பிரமாதி வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 12 நாளில் தங்கள் முடிவை அடைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 128 வருடங்களும், 6 நாட்களுமாகும். 36 வயதுடைய பரீக்ஷித் அதே நாளில் ஹஸ்தினாபுரத்தில் மகுடம் சூட்டப்பட்டான்.

63. சுவர்க்கரோஹணம் என்பது இந்தக் காவியத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அது 26 வருடங்களுக்குப் பிறகாக இருக்கலாம். பாண்டவர்களின் சுவர்க்கரோஹணத்திற்குப் பிறகே, அதாவது கலியுகம் தொடங்கி 26 வருடங்கள் கழித்தே முனிவரான வேத வியாசர் இந்தப் பெருங்காப்பியத்தைக் கணபதியிடம் உரைத்தார்.

64. பரீக்ஷித் 60 வருடங்கள், 25 வயதான தன் மகன் ஜனமேஜயனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு இறந்து போனான்.

65. எனவே, முனிவரான வேதவியாசரால் மகாபாரதம் எழுதப்பட்ட பிறகே பாகவதம் எழுதப்பட்டது. அது கலியுகத்தின் 60வது வருடத்திற்கு முன்பாக இருக்க வேண்டும்.

66. துவாபர யுகத்தில், மனிதர்கள் 400 வருடங்கள் வரை வாழ்ந்தனர். வாழ்வில், பால்யம், யௌவனம், கௌமாரம், வார்த்தக்யம் {விருத்தப்பியம் Vriddhapyam} என்ற நான்கு நிலைகள் இருந்தன. துவாபர யுகத்தில் பால்ய பருவம் என்பது 40 வருடங்கள் வரையும், யௌவனம் 120 வருடங்கள் வரையும், அதன்பிறகு கௌமாரம் மற்றும் வார்த்தக்ய பருவங்களும் இருந்தன. ஆனால் இப்போதோ இந்தக் கலியுகத்தில் பால்ய பருவம், 15 வருடங்கள் வரையும், யௌவன பருவம் 45 வருடங்கள் வரையும், கௌமார பருவம் 60 வருடங்கள் வரையும், வார்த்தக்யம பருவம் 60 வருடங்களுக்கு மேலும் என இருக்கிறது.

இந்தத் தகவல்கள் யாவும்  சம்ஸ்க்ருதப் பெருங்காப்பியமான மகாபாரதத்தில் இருந்தும், பல்வேறு உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் திரட்டப்பட்டவையாகும்.

முற்றும்.

- Dr.K.N.S.பட்நாயக்

தமிழில் செ. அருட்செல்வப்பேரரசன்.

 

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்