Saturday, November 05, 2016

பீமன் அலாயுதன் மோதல்! - துரோண பர்வம் பகுதி – 177

The encounter between Bhima and Alayudha! | Drona-Parva-Section-177 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 25)

பதிவின் சுருக்கம் : கடோத்கசன் ஏற்படுத்திய அழிவைக் கண்டு, அவனோடு மோதுமாறு அலாயுதனைத் தூண்டிய துரியோதனன்; கர்ணனைக் கைவிட்டு, அலாயுதனை நோக்கிச் சென்ற கடோத்கசன்; அலாயுதனை எதிர்த்து விரைந்த பீமன்; பீமனுக்கும், அலாயுதனுக்கும் இடையில் நடந்த மோதல்; பீமசேனனைக் காக்க கடோத்கசனை அனுப்பிய கிருஷ்ணன்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பயங்கரச் செயல்களைப் புரியும் அலாயுதன் போருக்கு வந்ததைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(1) அதே போலத் துரியோதனனைத் தங்கள் தலைமையில் கொண்ட உமது மகன்களும், கடலைக் கடக்க விரும்பும் தெப்பமற்ற மனிதர்கள், ஒரு தெப்பத்தைச் சந்திப்பதைப் போல (மகிழ்ச்சியால்) நிறைந்தனர்.(2) உண்மையில் குரு படையில் இருந்த மன்னர்கள், இறந்து மீண்டும் பிறந்தவர்களைப் போலத் தங்களைக் கருதிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அலாயுதனை மரியாதையுடன் வரவேற்றனர்.(3) பயங்கரமானதும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதும், கடுமையானதுமாக இருந்தாலும், காண்பதற்கு இனிமையானதுமான அந்தப் போர் அவ்விரவில் கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது,(4) பிற க்ஷத்திரியர்கள் அனைவருடன் கூடிய பாஞ்சாலர்கள் சிரித்துக் கொண்டே பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதே வேளையில் உமது படைவீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (தங்கள் தலைவர்களாலும்), துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிறரால் களம் முழுவதும் பாதுகாக்கப்பட்டாலும், “யாவும் தொலைந்தன” என்று உரக்க ஓலமிட்டனர்.(5) உண்மையில், ஹிடிம்பை மகனின் {கடோத்கசனின்} அந்தச் சாதனைகளைக் கண்ட உமது போர்வீரர்கள் அனைவரும் அச்சத்தால் கலங்கி, ஓலங்களிட்டு கிட்டத்தட்ட தங்கள் உணர்வுகளை {சுய நினைவை} இழந்தனர்.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் அனைத்தும் கர்ணன் உயிர்வாழ்வான் என்பதில் நம்பிக்கை இழந்தனர்.(7)


அப்போது துரியோதனன், பெரும் துன்பத்தில் வீழ்ந்த கர்ணனைக் கண்டு, அலாயுதனை அழைத்து, அவனிடம்:(8) “அதோ விகர்த்தனன் மகன் கர்ணன், ஹிடிம்பையின் மகனோடு {கடோத்கசனோடு} போரிட்டு, போரில் தன் வலிமைக்கும், ஆற்றலுக்கும் தகுந்த சாதனைகளை அடைந்து வருகிறான்.(9) அந்தப் பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் தாக்கிக் கொல்லப்பட்டு, யானையால் முறிக்கபட்ட மரங்களைப் போல (களத்தில் கிடக்கும்) துணிச்சல்மிக்க மன்னர்களைப் பார்.(10) இந்தப் போரில் என் அரசப் போர்வீரர்கள் அனைவரிலும், ஓ! வீரா {அலாயுதா}, உனது அனுமதியுடன் என்னால் ஒதுக்கப்படும் இந்தப் பங்கு {கடோத்கசனைக் கொல்லும் காரியம்} உன்னுடையதாக இருக்கட்டும். உன் ஆற்றலை வெளிப்படுத்தி, இந்த ராட்சசனைக் கொல்வாயாக.(11) ஓ! எதிரிகளை நசுக்குபவனே, இந்த இழிந்த கடோத்கசன், அவனை நீ முடிப்பதற்கு {கொல்வதற்கு} முன்பே, மாயா சக்திகளின் துணையுடன் விகர்த்தனன் மகனான கர்ணனைக் கொல்லாதிருக்கட்டும்” என்றான் {துரியோதனன்}.(12) மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், கடும் ஆற்றலையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட அந்த ராட்சசன் {அலாயுதன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடோத்கசனை எதிர்த்து விரைந்தான்.(13)

அப்போது பீமசேனன் மகன் {கடோத்கசன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கைவிட்டு விட்டு, தன்னை நோக்கி வரும் எதிரியைத் தன் கணைகளால் கலங்கடிக்கத் தொடங்கினான்.(14) பிறகு அந்தக் கோபக்கார ராட்சச இளவரசர்களுக்குள் நடந்த போரானது, பருவ காலத்தில் உள்ள பெண்யானைக்காகக் காட்டில் போரிட்டுக் கொள்ளும் மதங்கொண்ட இரு யானைகளுக்கு ஒப்பாக இருந்தது.(15) அந்த ராட்சசனிடம் இருந்து விடுபட்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணன், சூரியப்பிரகாசம் கொண்ட தன் தேரில் ஏறி பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.(16) சிங்கத்துடன் போரிடும் காளை பீடிக்கப்படுவதைப் போல அந்தப் போரில் கடோத்கசன், அலாயுதனுடன் போரிடுவதைக் கண்டவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான பீமன், முன்னேறி வரும் கர்ணனை அலட்சியம் செய்துவிட்டு, கணைமேகங்களை இறைத்தபடியே சூரியப்பிரகாசம் கொண்ட தன் தேரில் அலாயுதனை நோக்கி விரைந்தான்.(17,18) பீமன் முன்னேறுவதைக் கண்ட அலாயுதன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கடோத்கசனைக் கைவிட்டுவிட்டு, பீமனை எதிர்த்துச் சென்றான்.(19)

அப்போது ராட்சசர்களை அழிப்பவனான அந்தப் பீமன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனை} நோக்கி மூர்க்கமாக விரைந்து, கணைகளால் அவனை மறைத்தான்.(20) அதே போல எதிரிகளைத் தண்டிப்பவனான அலாயுதனும், கல்லில் கூராக்கப்பட்ட நேரான கணைகளால் அந்தக் குந்தியின் மகனை {பீமனை} மீண்டும் மீண்டும் மறைத்தான்.(21) பயங்கர வடிவங்களைக் கொண்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களும், உமது மகன்களின் வெற்றியை விரும்பியவர்களுமான வேறு ராட்சசர்கள் அனைவரும் கூடப் பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(22) இப்படி அவர்களால் தாக்கப்பட்ட வலிமைமிக்கப் பீமசேனன், ஐந்து கூரிய கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.(23) பிறகு, பீமசேனனால் இப்படி வரவேற்கப்பட்டவர்களும், தீய புரிதலைக் கொண்டவர்களுமான அந்த ராட்சசர்கள், உரத்த ஓலமிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(24) தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் பீமனால் அச்சுறுத்தப்பட்டதைக் கண்ட அந்த வலிமைமிக்க ராட்சசன் {அலாயுதன்}, பீமனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து, கணைகளால் அவனை மறைத்தான்.(25)

பிறகு பீமசேனன், கூர்முனை கணைகளால் அந்தப் போரில் தன் எதிரியை பலவீனமடையச் செய்தான். பீமனால் அவனை {அலாயுதனை} நோக்கி ஏவப்பட்ட கணைகளில், சிலவற்றை அப்போரில் வெட்டிய அலாயுதன், பிறவற்றை {கையில்} பிடித்தான். பிறகு பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனை} நிலையாகப் பார்த்து,(26,27) வஜ்ரத்தின் சீற்றத்தைக் கொண்ட கதாயுதம் ஒன்றைப் பெரும் பலத்துடன் அவன் {அலாயுதன்} மீது வீசினான். நெருப்பின் தழலைப் போன்ற அந்தக் கதாயுதமானது, அந்த மனித ஊனுண்ணியை {அலாயுதனை} நோக்கி சென்றபோது,(28) அவன் {அலாயுதன்} தன் கதாயுதம் ஒன்றால் அதைத் தாக்கினான். அதன்பேரில், (முன்னதைக் கலங்கடித்த) பின்னது {அலாயுதனின் கதாயுதமானது} பீமனை நோக்கிச் சென்றது. பிறகு அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனைக்} கணை மழையால் மறைத்தான்.(29) அந்த ராட்சசனோ, கூரிய தன் கணைகளால் பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான். பிறகு, பயங்கர வடிவங்களைக் கொண்ட அந்த ராட்சசப் போர்வீரர்கள் அனைவரும் (அணிதிரண்டு மீண்டும் போரிட வந்து),(30) தங்கள் தலைவனின் ஆணையின் பேரில் (பீமனுடைய படையின்) யானைகளைக் கொல்லத் தொடங்கினர். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், குதிரைகள், (பீமனுடைய படையின்) பெரும் யானைகள் ஆகியவை(31) அந்த ராட்சசர்களால் பெரிதும் பீடிக்கப்பட்டு மிகவும் கலக்கமடைந்தன.

அந்தப் பயங்கரப் போரை (பீமனுக்கும் அந்த ராட்சசர்களுக்கும் இடையிலான அம்மோதலைக்) கண்டவனும்,(32) மனிதர்களில் முதன்மையானவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} சொன்னான்: "அந்த ராட்சசர்களின் இளவரசனிடம் {அலாயுதனிடம்} வசப்படும் வலிமைமிக்கப் பீமரைப் பார்.(33) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஏதும் ஆலோசியாமல், விரைவாகப் பீமரைத் தொடர்ந்து செல்வாயாக. அதே வேளையில், திருஷ்டத்யும்னன், சிகண்டி, யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள்,(34) திரௌபதியின் மகன்களோடு சேர்ந்து கொண்டு கர்ணனை எதிர்த்துச் செல்லட்டும். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நகுலன், சகாதேவன், வீர யுயுதானன் {சாத்யகி} ஆகியோர்,(35) உனது உத்தரவின் பேரில் பிற ராட்சசர்களைக் கொல்லட்டும். உன்னைப் பொறுத்தவரை, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, துரோணரைத் தலைமையில் கொண்ட இந்தப் படைப்பிரிவைத் தடுப்பாயாக. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இப்போது நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆபத்தானது பெரியதாக இருக்கிறது" என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இப்படிச் சொன்னதும், உத்தரவுக்கேற்றபடியே அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர்,(36,37) விகர்த்தனன் மகனான கர்ணனை எதிர்த்தும், (குருக்களுக்காகப் போரிடும்) பிற ராட்சசர்களை எதிர்த்தும் சென்றனர். பிறகு முற்று முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான சில கணைகளால்,(38) ராட்சசர்களின் அந்த வீர இளவரசன் {அலாயுதன்}, பீமனின் வில்லை அறுத்தான். அடுத்ததாக அந்த வலிமைமிக்க மனித ஊனுண்ணி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சில கூரிய கணைகளால் பின்னவனின் {பீமனின்} குதிரைகளையும், சாரதியையும் கொன்றான். குதிரைகளும், சாரதியும் அற்ற பீமன், தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கி,(39,40) உரக்க முழங்கியபடியே தன் எதிரியை நோக்கி ஒரு கனமான கதாயுதத்தை வீசினான். அந்தக் கனமான கதாயுதமானது, பயங்கர ஒலியுடன் அந்த மனித ஊனுண்ணியை {அலாயுதன்} நோக்கிச் சென்ற போதே,(41) அவன் {அலாயுதன்} தன் கதாயுதத்தால் அதைக் கலங்கடித்தான். பிறகு பின்னவன் {அலாயுதன்} உரக்க முழங்கினான்.

அந்த ராட்சசர்களின் இளவரசனுடைய {அலம்புசனுடைய} பயங்கரமான, வலிமைமிக்க அருஞ்செயலைக் கண்ட பீமசேனன்,(42) மகிழ்ச்சியால் நிறைந்து மற்றொரு கடும் கதாயுதத்தைப் பிடித்தான். அந்த மனிதப் போர்வீரனுக்கும் {பீமனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரத்தை அடைந்தது.(43) அவர்களது கதாயுத வீச்சுகளின் மோதலால் பூமியானது பயங்கரமாக நடுங்கியது. தங்கள் கதாயுதங்களைத் தூக்கி எறிந்த அவர்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர்.(44) அவர்கள் தங்கள் கைமுட்டிகளை இறுக பற்றிக் கொண்டு இடிமுழக்கம் போன்ற ஒலி கொண்ட குத்துகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சினத்தால் தூண்டப்பட்ட அவர்கள், தேர் சக்கரங்கள், நுகத்தடிகள், அக்ஷங்கள் {அச்சுகள்}, அதிஸ்தானங்கள் {ஆசனங்கள்}, உபஷ்கரங்கள் ஆகியவற்றையும், இன்னும் தங்கள் வழியில் இருந்த எதையும் எடுத்துகொண்டு ஒருவரோடொருவர் மோதினர். இப்படி ஒருவரோடொருவர் மோதி, குருதியில் நனைந்த அவர்கள் இருவரும், பெரும் வடிவங்களைக் கொண்ட மதங்கொண்ட இரண்டு யானைகளைப் போலத் தெரிந்தனர். அப்போது, பாண்டவர்களின் நன்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் கூடிய ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அம்மோதலைக் கண்டு, பீமசேனனைக் காப்பதற்காக ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} அனுப்பினான்" {என்றான் சஞ்சயன்}.(45-47)
-------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி 177-ல் உள்ள சுலோகங்கள்: 47

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்