Saturday, November 05, 2016

“ஹிடிம்பையைக் கற்பழித்தான் பீமன்!” என்ற அலாயுதன்! - துரோண பர்வம் பகுதி – 176

“Bhima deflowered Hidimva!” said Alayudha! | Drona-Parva-Section-176 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 24)

பதிவின் சுருக்கம் : அலாயுதனின் வருகை; பகன், கிர்மீரன், ஹிடிம்பன் ஆகியோரின் கொலைக்காகப் பீமனைப் பழிவாங்கப் போவதாகத் துரியோதனனிடம் சொன்ன அலாயுதன்; அலாயுதனின் தோற்றம், ஆயுதங்கள் மற்றும் அலங்காரம் குறித்த விவரிப்பு…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணனுக்கும், ராட்சனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போர் நடந்து கொண்டிருந்தபோது, ராட்சசர்களின் இளவரசனான வீர அலாயுதன் (களத்தில்) அங்கே தோன்றினான்.(1) ஒரு பெரும் படையின் துணையுடன் அவன் {அந்த அலாயுதன்} துரியோதனனை அணுகினான். உண்மையில், பல்வேறு வடிவங்களையும், பெரும் வீரத்தையும் கொண்ட ஆயிரக்கணக்கான பயங்கர ராட்சசர்கள் பலரால் சூழப்பட்ட அவன் {அலாயுதன்}, (பாண்டவர்களுடனான) பழைய சச்சரவை நினைவு கூர்ந்து (அந்தக் களத்தில்) தோன்றினான்.(2) {முன்பொரு காலத்தில்} அவனது {அலாயுதனின்} உறவினனும், பிராமணர்களை உண்டுவந்தவனுமான {ராட்சசன்} வீர பகன், பெரும் சக்தி படைத்த கிர்மீரன், அவனது நண்பன் ஹிடிம்பன் ஆகியோர் {பீமனால்} கொல்லப்பட்டனர்[1]. அவன் {அந்த அலாயுதன்}, தன் பழைய சச்சரவை அடைகாத்தபடியே நீண்ட காலம் காத்திருந்தான்.(3,4) இரவு போரொன்று இப்போது நடைபெறுவதை அறிந்த அவன் {அலாயுதன்}, பீமனைக் கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டு, மதங்கொண்ட ஒரு யானையைப் போலவோ, கோபக்காரப் பாம்பைப் போலவோ அங்கே வந்தான்.(5)


[1] ஆதிபர்வம் 156ல் ஹிடிம்ப வதத்தையும், ஆதிபர்வம் பகுதி 165ல் பகன் வதத்தையும், வன பர்வம் பகுதி 11ல் கிர்மீரன் வதத்தையும் காணலாம்.

போரை விரும்பிய அவன் {அலாயுதன்}, துரியோதனனிடம், “ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, என் உறவினர்களான பகன், கிர்மீரன் மற்றும் ஹிடிம்பன் ஆகிய ராட்சசர்கள் பீமனால் கொல்லப்பட்டனர் என்பது நீ அறிந்ததே. முன்பு எங்களையும், பிற ராட்சசர்களையும் அலட்சியம் செய்த அவனால் {பீமனால்}, கன்னிப்பெண்ணான ஹிடிம்பை கற்பழிக்கப்பட்டாள்[2] எனும்போது இன்னும் நான் வேறு என்ன சொல்ல வேண்டும்?(6,7) ஓ! மன்னா {துரியோதனா} அந்தப் பீமனைப் பின்தொடர்பவர்கள் அனைவரையும், அவனது குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு சேர்த்து அவனையும் {பீமனையும்}, அந்த ஹிடிம்பையின் மகனையும் {கடோத்கசனையும்}, அவனது நண்பர்களையும் கொல்லவே நான் இங்கே வந்தேன். நான் இன்று குந்தியின் மகன்கள் அனைவரையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அவர்களுக்கு முன்பு நடந்து வருபவர்களையும் கொல்வேன், அவர்களைப் பின்தொடர்ந்து வருவோர் அனைவருடன் சேர்த்து அவர்களை நான் விழுங்கப் போகிறேன். உன் துருப்புகள் அனைத்தையும் போரில் இருந்து விலகிக் கொள்ள ஆணையிடுவாயாக. பாண்டவர்களோடு நாங்கள் போரிடப் போகிறோம்” என்றான் {அலாயுதன்}.(8-10)

[2] வேறொரு பதிப்பில், “அந்தப் பீமன் மற்ற ராட்சசர்களையும், எங்களையும் அலட்சியம் செய்து கன்னிகையாயிருந்த ஹிடிம்பையையும் முன்பு அனுபவித்தான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “கடந்து போன நாட்களில் அவன் எங்கள் மகள் ஹிடிம்பையைக் கற்பழித்தான்” என்றிருக்கிறது. கங்குலியில் “Deflowered” என்ற வார்த்தையும், மன்மதநாததத்தரின் பதிப்பில், “Ravished” என்ற வார்த்தையும் கையாளப்பட்டிருக்கிறது. அலாயுதனின் இந்தக் குற்றச்சாட்டு, ஆதிபர்வம் பகுதி 157க்கு முரணாக உள்ளது.

அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். தன் தம்பியர்கள் அனைவரும் சூழ இருந்த அந்த மன்னன் {துரியோதனன்}, ராட்சசனின் {அந்த அலாயுதனின்} வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு,(11) “உன்னை முன்னிலையில் நிறுத்திக் கொண்டு, நாங்களும் எதிரியோடு போர்புரிவோம். எனது துருப்புகளின் பகை உணர்ச்சி இன்னும் தணியாததால், அவர்கள் அக்கறையில்லாத பார்வையாளர்களாக நிற்க மாட்டார்கள்” என்றான்.(12) அந்த ராட்சசக் காளை {அலாயுதன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, மனித ஊனுண்ணும் தன் படையின் துணையுடன் பீமனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(13)

சுடர்மிக்க வடிவம் கொண்ட அந்த அலாயுதன், சூரியப் பிரகாசம் கொண்ட தேரில் ஏறி வந்தான். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தத் தேரானது, கடோத்கசனின் தேரைப் போன்றே இருந்தது.(14) அலாயுதனுடைய தேரின் சடசடப்பொலியும் கடோத்கசனுடையதைப் போலவே ஆழமானதாக இருந்தது; மேலும் அது பல வளைவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெரிய தேர் கரடித் தோல்களால் மறைக்கப்பட்டிருந்தது; மேலும் அஃது {அந்த தேர்} ஒரு நல்வம் {நானூறு முழம்} அளவைக் கொண்டிருந்தது.(15) அவனது குதிரைகள், கடோத்கசனுடையவையைப் போன்றே, பெரும் வேகம் கொண்டவையாகவும், வடிவில் யானைகளுக்கு, குரலில் கழுதைகளுக்கு ஒப்பானவையாகவும் இருந்தன. இறைச்சியும், குருதியும் உண்டு வாழ்பவையும் பெரும் வடிவைக் கொண்டவையுமான அவைகளைப் போன்ற நூறு உயிரினங்கள் அவனது {அலாயுதனின்} வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன.(16) உண்மையில் அந்தத் தேரின் சடசடப்பொலியானது, கடோத்கசனுடையதைப் போலவே பெருமேகத்தின் ஆழமான முழக்கத்தைக் கொண்டிருந்தது.

அவனது வில்லும், அவனது எதிராளியுடையதை {கடோத்கசனுடையதைப்} போலவே பெரியதாகவும், வலிமையானதாகவும் இருந்தது, மேலும் அதனுடைய நாண்கயிறும் கடினமானதாக இருந்தது.(17) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அவனது கணைகளும், கடோத்கசனுடையவையைப் போன்றே பெரிதானவையாகவும், {தேர்களுடைய} அக்ஷங்களின் அளவுள்ளவையாகவும் இருந்தன. வீர அலாயுதன், கடோத்கசன் அளவுக்கு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனாக இருந்தான்;(18) சூரியன் அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அவனது தேரின் கொடிமரத்தில், கடோத்கசனுடையதைப் போலவே கழுகுகளும், அண்டங்காங்ககைகளும் அமர்ந்திருந்தன[3]. வடிவில் அவன் கடோத்கசனைவிட அழகாக இருந்தான்; (கோபத்தில்) கலங்கியிருந்த அவனது முகமானது சுடர்மிக்கதாகத் தெரிந்தது.(19) சுடர்மிக்க அங்கதங்கள், சுடர்மிக்கக் கிரீடம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகள், தலைப்பாகை, வாள் ஆகியவற்றோடு, கதாயுதம், புசுண்டிகள், குறுங்கதாயுதங்கள் {உலக்கைகள்}, கலப்பைகள், வில், கணைகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, யானையைப் போன்ற கடினமான கருந்தோலுடன்,(20) நெருப்பின் காந்தி கொண்ட தேரில் ஏறி வந்த அவன் {அலாயுதன்}, பாண்டவப் படையைப் பீடித்து முறியடித்துக் கொண்டிருந்த போது, மின்னலின் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்டு வானத்தில் திரியும் மேகத்தைப் போலத் தெரிந்தான்.(21) (அந்த அலாயுதன் போரிட வந்த போது), பெரும் வலிமை கொண்டவர்களும், (வாள் மற்றும்) கேடயம் தரித்துக் கவசம் பூண்டவர்களுமான பாண்டவப் படையின் முக்கிய மன்னர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் போரில் ஈடுபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(22)

[3] வேறொரு பதிப்பில், “அவனது கொடியும் நரிக்கூட்டங்களால் நான்கு புறத்திலும் காக்கப்பட்டதாகவும் நெருப்புக்கும் சூரியனுக்கு ஒப்பாகவுமிருந்தது” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
---------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் 176-ல் உள்ள மொத்த சுலோகங்கள்: 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்