Sunday, November 06, 2016

அலாயுதனைக் கொன்ற கடோத்கசன்! - துரோண பர்வம் பகுதி – 178

The encounter between Bhima and Alayudha! | Drona-Parva-Section-178 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 26)

பதிவின் சுருக்கம் : அலாயுதனின் ராட்சசர்களைக் கொன்ற பாண்டவத் தலைவர்கள் கர்ணனை எதிர்த்து விரைந்தது; அலாயுதனுக்கும் கடோத்கசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலாயுதனின் தலையை வெட்டிய கடோத்கசன்; அலாயுதன் கொல்லப்பட்டதைக் கண்டு கவலையில் நிறைந்த துரியோதனன்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் போரில் பீமன், அந்த மனித ஊனுண்ணியால் {அலாயுதனால்} தாக்கப்படுவதைக் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, கடோத்கசனை அணுகி, அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பெரும் காந்தி கொண்டவனே, போரில் துருப்புகள் அனைத்தும், நீயும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீமர் அந்த ராட்சசர்களால் பலமாகத் தாக்கப்படுவதைப் பார்.(2) தற்சமயம் கர்ணனைக் கைவிட்டுவிட்டு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கடோத்கசா}, விரைவாக அலாயுதனைக் கொல்வாயாக. கர்ணனை நீ பிறகு கொல்லலாம்” என்றான் {கிருஷ்ணன்}.(3)

அந்த விருஷ்ணி குலத்தோனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட வீரக் கடோத்கசன், கர்ணனைக் கைவிட்டுவிட்டு, மனித ஊனுண்ணிகளின் இளவரசனும், பகனின் தம்பியுமான அந்த அலாயுதனுடன் மோதினான்.(4) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனித ஊனுண்ணிகளான அலாயுதன் மற்றும் ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} ஆகிய இருவருக்கிடையில் அந்த இரவில் நடந்த போரானது கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(5)


அதேவேளையில், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன் {சாத்யகி}, நகுலன், சகாதேவன் ஆகியோர் பயங்கரத் தோற்றம் கொண்டவர்களும், வில்தரித்துத் தங்களை நோக்கி மூர்க்கமாக விரைந்தவர்களும், அலாயுதனின் போர்வீரர்களுமான வீர ராட்சசர்களைக் கூரிய கணைகளால் துளைத்தனர்.(6,7) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடியே க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலரை வீழ்த்தத் தொடங்கினான்.(8) அதே வேளையில், அந்தப் போரில் கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் பலரையும், திருஷ்டத்யும்னன், சிகண்டி மற்றும் பிறரின் தலைமையிலான பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரையும் கலங்கடித்தான்.(9) (கர்ணனால்) கொல்லப்படும் அவர்களைக் கண்டவனும், பயங்கர ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், அந்தப் போரில் தன் கணைகளை ஏவியபடியே கர்ணனை நோக்கி வேகமாக விரைந்தான்.(10) பிறகு, நகுலன், சகாதேவன் ஆகிய அந்தப் போர்வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும், ராட்சசர்களைக் கொன்றுவிட்டு, சூதனின் மகன் {கர்ணன்} இருந்த இடத்திற்குச் சென்றனர்.(11) அவர்கள் அனைவரும் கர்ணனோடு போரிடத் தொடங்கிய அதே வேளையில், பாஞ்சாலர்கள் துரோணரோடு மோதினர்.

அப்போது சினத்தால் தூண்டப்பட்ட அலாயுதன், ஒரு பெரிய பரிகத்தைக் கொண்டு எதிரிகளைத் தண்டிப்பவனான கடோத்கசனை தலையில் தாக்கினான். பெரும் ஆற்றலைக் கொண்ட பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்},(12,13) அந்தப் பரிகத்தின் தாக்குதலால் குறை மயக்க நிலையில் காணப்பட்டு, அசைவற்றவனாகக் கீழே அமர்ந்தான். சுய நினைவு மீண்ட பின்னவன் {கடோத்கசன்}, பிறகு அம்மோதலில், தங்கத்தாலும், நூறு மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்ததுமான கதாயுதம் ஒன்றைத் தன் எதிரியின் மீது வீசினான். கடுஞ்சாதனைகளைச் செய்யும் அவனால் பலமாக வீசப்பட்ட அந்தக் கதாயுதம், அலாயுதனின் குதிரைகள், சாரதி மற்றும் உரத்த சடசடப்பொலி கொண்ட அவனது தேர் ஆகியவற்றை நொறுக்கியது. மாயையை அறிந்தவனும், குதிரைகள், சக்கரங்கள், அக்ஷங்கள், கொடிமரம் மற்றும் கூபரம் ஆகிய அனைத்தும் தூள்தூளாக நொறுக்கப்பட்டவனுமான பின்னவன் {அலாயுதன்}, தனது தேரில் இருந்து கீழே குதித்தான். தன் மாயையைப் பயன்படுத்திய அவன் அபரிமிதமான இரத்த மழையைப் பொழிந்தான்.(14-17)

அப்போது வானமானது, மின்னலின் கீற்றுகளுடன் கூடிய கார்மேகத் திரள்களால் பரவியிருப்பதாகத் தெரிந்தது. உரத்த வெடிச்சத்தங்கள் மற்றும் மேகங்களில் உரத்த முழக்கங்களுடன் கூடிய இடி மழையின் ஒலி ஆகியன அப்போது கேட்கப்பட்டன.(18) அந்தப் பயங்கரப் போரில் “சட சட” எனும் உரத்த ஒலியும் கேட்கப்பட்டது. ராட்சசன் அலாயுதனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயையைக் கண்ட ராட்சசன் கடோத்கசன்,(19) உயரப் பறந்து, தன் மாயையைக் கொண்டு அதை {அலம்புசனின் மாயையை} அழித்தான். மாயா சக்திகளைக் கொண்ட அலாயுதன், தன் மாயையானது தன் எதிரியினுடையதைக் கொண்டு அழிக்கப்பட்டதைக் கண்டு,(20) கடோத்கசன் மீது கனமான கல் மழையைப் பொழியத் தொடங்கினான். பிறகு அவர்கள் இரும்பு பரிகங்கள், சூலங்கள், கதாயுதங்கள், குறுந்தண்டங்கள் {உலக்கைகள்}, சம்மட்டிகள் {முத்கரங்கள்}, பினாகங்கள், வாள்கள், வேல்கள், நீண்ட சூலங்கள், கம்பனங்கள், நீளமாகவும், அகன்ற தலை கொண்டதாகவும் கூரிய கணைகள் {நாராசங்கள் மற்றும் பல்லங்கள்}, போர்க்கோடரிகள், அயாகுதங்கள் {இரும்புத் தடிகள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, பசுவைப் போன்ற தலைகள் கொண்ட ஆயுதங்கள் {கோசீர்ஷங்கள்} மற்றும் உலூகலங்கள் {உரல்கள்} போன்ற பல்வேறு ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(21-24) மேலும் அவர்கள் இங்குதி {வன்னி மரம்}, பதரி {இலந்தை}, மலர்ந்திருக்கும் கோவிதாரம், பல்க்ஸம் {பலாசம்}, அரிமேதம், பிலாக்ஷம் {கல்லிச்சி}, ஆலம், அரசம் போன்ற மரங்களாலும் மற்றும் பல்வேறு வகைகளிலான உலோகங்களால் {தாதுவகைகளால்} அலங்கரிக்கப்பட்ட பல்வேறு மலைச்சிகரங்களாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(25-27) அந்த மரங்கள் மற்றும் மலைச்சிகரங்களின் மோதலானது, இடிமுழக்கத்தைப் போலப் பேரொலியோடு இருந்தது.

உண்மையில், பீமனின் மகனுக்கும் அலாயுதனுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில், குரங்குகளின் இளவரசர்களான வாலி மற்றும் சுக்ரீவன் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்ததைப் போல மிகப் பயங்கரமானதாக இருந்தது.(28) பல்வேறு வகைகளிலானவையும், கூரிய கத்திகளைப் போன்ற கடுமையானவையுமான பிற ஆயுதங்கள் மற்றும் கணைகள் ஆகியவற்றால் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பிறகு ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த அந்த வலிமைமிக்க ராட்சசர்கள், தங்களில் மற்றவரின் மயிரைப் பிடித்தனர்.(29,30) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் உடல்படைத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் உடல்களில் உண்டான காயங்களோடும், வழிந்த இரத்தத்தோடும் மழையைப் பொழியும் இரண்டு மேகத் திரள்களைப் போல இருந்தனர்.(31) அப்போது வேகமாக விரைந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, அந்த ராட்சசனை {அலாயுதனை} உயரத் தூக்கிச் சுழற்றி தரையில் அடித்து, {பிறகு} அவனது பெரிய தலையை அறுத்தான்.(32) பிறகு, அந்த வலிமைமிக்கக் கடோத்கசன், இரு காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தலையை எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினான்.(33) எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்தப் பகனின் தம்பி {அலாயுதன்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் சிங்க முழக்கமிடத் தொடங்கினர்.(34)

அந்த ராட்சசனின் {அலாயுதனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் பாண்டவர்கள், ஆயிரக்கணக்கான பேரிகைகளையும், பதினாயிரக்கணக்கான சங்குங்களையும் அடித்து முழக்கினர்.(35) அப்போது அந்த இரவானது பாண்டவர்களின் வெற்றியைத் தெளிவாகக் குறிப்பிட்டது. சுற்றிலும் பந்தங்களால் ஒளியூட்டப்பட்டு, இசைக்கருவிகளால் எதிரொலிக்கப்பட்ட அந்த இரவனாது மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(36) பிறகு பீமசேனனின் அந்த வலிமைமிக்க மகன் {கடோத்கசன்} கொல்லப்பட்ட அலாயுதனின் தலையைத் துரியோதனன் முன்பாக வீசினான்.(37) வீர அலாயுதன் கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகள் அனைத்துடன் சேர்ந்து கவலையில் நிறைந்தான்.(38) முந்தைய சச்சரவை நினைவில் கொண்டு துரியோதனனிடம் தானாக வந்த அலாயுதன், அவனிடம் {துரியோதனனிடம்} பீமனைப் போரில் கொல்லப் போவதாகச் சொல்லியிருந்தான்.(39) அந்தக் குரு மன்னனும் {துரியோதனனும்}, பீமனின் கொலை உறுதியானது என்று கருதியும், தன் தம்பிகள் அனைவரும் நீண்ட வாழ்நாளோடு இருப்பார்கள் என்றும் நம்பினான்.(40) அந்த அலாயுதன், பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} கொல்லப்பட்டதைக் கண்ட மன்னன் {துரியோதனன்}, (தன்னையும், தன் தம்பிகளையும் கொல்வது குறித்த) பீமனின் சபதம் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகவே கருதினான்” {என்றான் சஞ்சயன்}.(41)
--------------------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் 178-ல் உள்ள சுலோகம்: 41


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்