Sunday, January 08, 2017

திருதராஷ்டிரனின் புலம்பல்! - கர்ண பர்வம் பகுதி – 08

The lament of Dhritarashtra! | Karna-Parva-Section-08 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கர்ணனின் பெருமைகளைச் சொல்லிப் புலம்பிய திருதராஷ்டிரன், நஞ்சுண்டோ, தீயில் விழுந்தோ, மலையில் இருந்து விழுந்தோ சாக விரும்புவதாகச் சஞ்சயனிடம் சொன்னது...


ஜனமேயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {வைசம்பாயனரே}, மன்னன் {திருதராஷ்டிரன்} சற்றே ஆறுதலடைந்ததும், கர்ணனின் வீழ்ச்சியையும், தனது மகன்கள் கொல்லப்பட்டதையும் கேட்டு என்ன சொன்னான்?(1) உண்மையில், தன் மகன்களுக்கு ஏற்பட்ட அழிவால் உண்டான அவனது துயரம் வருந்தக்கூடியதாக இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} சொன்னது அனைத்தையும் கேட்கின்ற எனக்கு {அவற்றை} நீர் சொல்வீராக" என்றான்.(2)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நம்பமுடியாததும், அதிர்ச்சியூட்டுவதும், அச்சமூட்டுவதும், அனைத்து உயிரினங்களின் உணர்வுகளையும் முடக்கும் திறன் கொண்டதும், மேருவின் வீழ்ச்சியைப் போலத் தெரிவதும்,(3) அல்லது நம்ப முடியாத வகையிலான சுக்கிரனின் {சுக்கிராச்சாரியரின்} அறிவு மயக்கம் போன்றதும், அல்லது பயங்கரச் சாதனைகளைச் செய்த இந்திரன் எதிரிகளிடம் அடையும் வீழ்ச்சியைப் போன்றதும்,(4) அல்லது ஆகாயத்தில் இருக்கும் பிரகாசமான சூரியன் பூமியில் விழுந்ததைப் போன்றதும், அல்லது வற்றாத நீர் கொள்ளிடமான பெருங்கடலானது, புரிந்து கொள்ள முடியாத வகையில் வற்றிப் போவது போன்றதும்,(5) அல்லது பூமி, ஆகாயம், திசைப்புள்ளிகள் மற்றும் நீர் ஆகியன, வியக்கவைக்கும் வகையில் முற்றிலும் அழிவது போன்றதும், அல்லது புண்ணியம் மற்றும் பாவம் ஆகிய இரு செயல்களும் கனியற்றுப் போவது போன்றதுமான கர்ணனின் படுகொலையைக் கேட்ட திருதராஷ்டிரன்,(6) அதுகுறித்துச் சிறிது நேரம் மெய்யுறுதியுடன் சிந்தித்ததும், தன் படை நிர்மூலமாக்கப்பட்டதாகவே நினைத்தான்.(7)

கொல்லப்பட முடியாத கர்ணனைப் போலவே, அதே போன்ற விதியையே பிற உயிரினங்களும் அடையப் போகின்றன என்று நினைத்தவனும், துயரில் எரிந்தவனும், பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனும், கிட்டத்தட்ட அங்கங்கள் {அனைத்தும்} முடங்கியவனும், அந்த அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன், மிகவும் உற்சாகமற்ற வகையில் நெடும் பெருமூச்சுகளைவிட்டுக் கொண்டே, கவலையால் நிறைந்து "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் புலம்பத் தொடங்கினான்.(8,9)

அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, "ஓ! சஞ்சயா, அதிரதனின் அந்த வீர மகன் {கர்ணன்}, சிங்கம் அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டிருந்தான். ஒரு காளையின் கழுத்தளவிற்குத் தன் கழுத்து தடித்தவனான {காளையின் திமில்களைப் போலத் தோள் தடித்தவனான} அவனது கண்கள், நடை மற்றும் குரலும் கூடக் காளையைப் போன்றே இருந்தன.(10) வஜ்ரத்தைப் போன்ற கடினமான அங்கங்களைக் கொண்ட அந்த இளைஞன் {கர்ணன்}, காளையானது மற்றொரு காளையிடம் இருந்து தப்பி ஓடாததைப் போல, பெரும் இந்திரனே {மகேந்திரனே} தன் எதிரியாக இருந்தாலும் போரில் இருந்து எப்போதும் விலகியதில்லை. (11)

அவனது வில்லின் நாணொலி, உள்ளங்கையொலி, அவனது கணை மாரியின் "விஸ்" என்ற ஒலி ஆகியவற்றால் மனிதர்களும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் போரில் இருந்து தப்பி ஓடின.(12) துரியோதனன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளின் பெருங்கூட்டத்தைக் கொல்பவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தப் போர்வீரனை {கர்ணனை} நம்பியே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்களிடம் பகைமையைத் தூண்டிவிட்டான்.(13) தேர்வீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் புலியும், தடுக்கப்படமுடியாத தொடக்கத்தை {புறப்பாட்டைக்} கொண்ட வீரனுமான அந்தக் கர்ணன், போரில் பார்த்தனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்லப்பட்டான்?(14)

அவன் {கர்ணன்}, தன் கரங்களின் வலிமையை நம்பியே, மங்காப் புகழ் கொண்ட கேசவனையும் {கிருஷ்ணனையும்}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருஷ்ணிகள் மற்றும் பிற எதிரிகள் அனைவரையும் அலட்சியம் செய்தான்?(15) அவன் {கர்ணன்}, மூடனும், பேராசை கொண்டவனும், தலைக்குனிவை அடைந்தவனும், அரசில் ஆசை கொண்டவனும், பீடிக்கப்பட்டவனுமான துரியோதனனிடம், "ஒன்றாகச் சேர்ந்திருப்பவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான சாரங்கபாணி {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகிய இருவரையும், போரில் அவர்களது முதன்மையான தேர்களில் இருந்து நான் ஒருவனாகவே கீழே வீழ்த்துவேன்" என்று சொல்வது வழக்கம்.(16,17)

காந்தாரர்கள், மத்ரகர்கள், மத்ஸ்யர்கள், திரிகர்த்தர்கள், தங்கணர்கள், காசர்கள்,(18) பாஞ்சாலர்கள், விதேஹர்கள், குளிந்தர்கள், காசி-கோசலர்கள், சுஹ்மர்கள், அங்கர்கள், நிஷாதர்கள், புண்டரர்கள், கீசகர்கள்,(19) வத்ஸர்கள், கலிங்கர்கள், தரதர்கள், அஸ்மகர்கள், ரிஷிகர்கள் ஆகிய வெல்லப்பட முடியாதவர்களும், வலிமிக்கவர்களுமான எதிரிகளை அவன் {கர்ணன்} அடக்கியிருக்கிறான். துணிவுமிக்க இந்தக் குலங்கள் அனைத்தையும் கங்க இறகுகளைக் கண்ட தன் கூரிய கணைகளால் அடக்கியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக அவர்கள் அனைவரையும் நமக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(20,21) ஐயோ, தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்த போர்வீரனும், படைகளைப் பாதுகாப்பவனும், வலிமையும் சக்தியும் கொண்ட விருஷன் என்று அழைக்கப்பட்டவனும், விகர்த்தனன் மகனுமான அந்தக் கர்ணன், வீரர்களும், வலிமைமிக்கவர்களும், தன் எதிரிகளுமான பாண்டுவின் மகன்களால் போரில் எவ்வாறு கொல்லப்பட்டான்?(22)

தேவர்களில் முதன்மையானவனான இந்திரனைப் போல, கர்ணன் மனிதர்களில் முதன்மையானவனாக இருந்தான். இந்த மூவுலகிலும், இவர்களைப் போல வேறு மூன்றாவது நபரை நாம் கேள்விப்பட்டதிலை.(23) குதிரைகளில் உச்சைஸ்ரவம் முதன்மையானது; யக்ஷர்களில் வைஸ்ரவணன் {குபேரன்} முதன்மையானவன்; தேவர்களில் இந்திரன் முதன்மையானவன்; தாக்குபவர்களில் கர்ணனே முதன்மையானவன்.(24) பெரும் வீரமிக்கவர்களும், மிக வலிமையானவர்களுமான ஏகாதிபதிகளால் கூட வெல்லப்பட முடியாதவனாக இருந்த அவன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகத்தையும் அடக்கினான்.(25) மகத ஆட்சியாளன் {ஜராசந்தன்}, நல்லிணக்கம் மற்றும் கௌரவங்களின் மூலம் கர்ணனைத் தன் நண்பனாக அடைந்து, கௌரவர்களையும், யாதவர்களையும் தவிர்த்து உலகின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவி அழைத்தான்.(26)

{அப்படிப்பட்ட} அந்தக் கர்ணன், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, நடுக்கடலில் உடைந்த மரக்கலத்தைப் போலத் துயரக் கடலில் நான் மூழ்குகிறேன்.(27) உண்மையில், மனிதர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் சிறந்தவனுமான அவன் {கர்ணன்}, தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, கடலில் தெப்பம் இல்லாத ஒருவனைப் போலத் துன்பக்கடலில் நான் மூழ்குகிறேன்.(28) ஓ! சஞ்சயா, இவ்வளவு துயரத்திலும் சாகாமல் இருப்பதால் என் இதயம் பிளக்க முடியாததாகவும், வஜ்ரத்தைவிடக் கடினமானதாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.(29) ஓ! சூதா, சொந்தங்கள், உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோரின் தோல்வியையும், அவமானத்தையம் கேட்ட பிறகும், இவ்வுலகில் என்னைத் தவிர வேறு எவன் உயிரை விடாமல் இருப்பான்?(30) நஞ்சுண்ணவோ, நெருப்பில் விழவோ, மலைச்சிகரத்தில் இருந்து விழவோ நான் விரும்புகிறேன். ஓ! சஞ்சயா, {இந்தத்} துயரத்தின் பெருங்கனத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை" {என்றான் திருதராஷ்டிரன்}.(31)
--------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 8-ல் உள்ள சுலோகங்கள் : 31

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்