Thursday, January 05, 2017

உயிரோடு எஞ்சிய போர்வீரர்கள்! - கர்ண பர்வம் பகுதி – 07

Remnant warriors yet alive! | Karna-Parva-Section-07 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : குருக்களில் இன்னும் உயிரோடு இருக்கும் வீரர்கள் யாவர் என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன சஞ்சயன்; துயர் தாளாமல் மீண்டும் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, என் போர்வீரர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் அழிந்த பிறகு, என் படையில் எஞ்சியிருப்போரும் அழிந்துவிட மாட்டார்கள் என்று நான் நம்பவில்லை.(1) வலிமைமிக்க வில்லாளிகளும், குருக்களில் முதன்மையானோரும், வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும் கொல்லப்பட்ட பிறகும், நான் இன்னும் உயிரோடு இருப்பதால் என்ன பயன்?(2) போர்க்கள ரத்தினமும், பத்தாயிரம் யானைகளின் பலத்துடன் கூடிய பெரும் கர வலிமை கொண்டவனுமான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} மரணத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(3) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே, ஓ! சூதா {சஞ்சயா}, முதன்மையான வீரர்கள் அனைவரும் இறந்த பிறகு எனது படையில் இன்னும் உயிரோடு எஞ்சியிருப்போரைக் குறித்து இப்போது சொல்வாயாக.(4) வீழ்ந்தவர்களின் பெயர்களை நீ எனக்குச் சொன்னாய். எனினும், இன்னும் உயிரோடு எஞ்சியிருப்போர் அனைவரும் கூட ஏற்கனவே இறந்துவிட்டதாகவே எனக்குத் தெரிகின்றனர்" என்றான் {திருதராஷ்டிரன்}.(5)



சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிராமணர்களில் முதன்மையான துரோணர், சுடர்மிக்க, தெய்வீகமான, வலிமைமிக்க நால்வகை ஆயுதங்கள் [1] பலவற்றை எந்த வீரனுக்கு வழங்கினாரோ, திறனும், கரநளினமும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், உறுதியான பிடியும், வலுவான ஆயுதங்களும், பலமிக்கக் கணைகளும் கொண்ட அந்த வீரன், நெடுந்தொலைவுக்கு {ஆயுதங்களை} ஏவவல்லவனான அந்த உயர்ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, உமக்காகப் போரிட விரும்பி களத்தில் இன்னும் நிற்கிறான்.(6,7) ஆநர்த்த நாட்டுவாசியும், ஹிருதிகனின் மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், சாத்வதர்களில் முதன்மையானவனும், போஜர்களின் தலைவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமான அந்தக் கிருதவர்மன், போரிட விரும்புபவனாக இன்னும் களத்தில் இருக்கிறான்.(8) ஆர்த்தாயனன் மகனும், போரில் அச்சமற்றவனும், போர்வீரர்களில் முதல்வனும், உம் தரப்பில் உள்ள அனைவரிலும் முதன்மையானவனும், தன் வார்த்தைகளை மெய்ப்பிப்பதற்காகத் தன் சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களான பாண்டவர்களைக் {நகுல சகாதேவர்களை} கைவிட்டவனும், போரில் கர்ணனின் உற்சாகச் செருக்கைக் குறைப்பதாக யுதிஷ்டிரனின் முன்னிலையில் உறுதியளித்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட வீரனும், வெல்லப்பட முடியாதவனும், சக்தியில் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானவனுமான சல்லியன், உமக்காகப் போரிட விரும்பி இன்னும் களத்தில் இருக்கிறான்(9,10)

[1] நால்வகை ஆயுதங்கள் பின்வருமாறு: 1. த்ருடம் {திடம்} = உறுதியாகத் தாக்குவது; 2. தூரம்: தொலைவிலுள்ளதைத் தாக்குவது; 3. ஸூக்ஷமம் = நுட்பமானதைத் தாக்குவது; 4. சப்தவேதி = ஒலி வழியே சென்று தாக்குவது. "சித்ரம், சுப்ரம், திவ்யம், லிகிதம்" என்றும் கொள்ளலாம்.

ஆஜநேயர்கள், சைந்தவர்கள், மலைவாசிகள், வடிநிலப் பகுதிவாசிகள் {ஆற்றுப்படுகைவாசிகள்}, காம்போஜர்கள், வனாயுகள் ஆகியோரைக் கொண்ட தன் படையின் துணையுடன் கூடிய காந்தாரர்களின் மன்னன் {சகுனி}, உமக்காகப் போரிட விரும்புபவனாகக் களத்தில் இருக்கிறான்.(11) ஓ! மன்னா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், பல்வேறு அழகிய வழிகளில், பல்வேறு ஆயுதங்களுடன் போரிடவல்லவரும், கௌதமர் என்று அழைக்கப்படுபவருமான சரத்வான் மகன் {கிருபர்}, பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், பெரியதுமான ஓர் அழகிய வில்லை எடுத்துக் கொண்டு போரிட விரும்பி களத்தில் நிற்கிறார்.(12) ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், நல்ல குதிரைகளுடனும், கொடிமரத்துடனும் கூடிய நல்ல தேரில் ஏறியவனுமான கைகேயர்கள் ஆட்சியாளனுடைய மகன், உமக்காகப் போரிடுவதற்காகக் களத்தில் நிற்கிறான்.(13) 

ஓ! மன்னா{திருதராஷ்டிரரே}, உமது மகனும், குருகுலத்தின் போர்வீரர்களில் முதன்மையானவனுமான புருமித்ரன், சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட தன் தேரில் ஏறிக்கொண்டு, மேகமற்ற ஆகாயத்தில், பிரகாசமாக ஒளிரும் சூரியனைப் போலவே களத்தில் நிற்கிறான்.(14) பெரும் சக்தி கொண்ட துரியோதனனும், ஒரு யானைப்படைக்கு மத்தியில், போராளிகளில் முதன்மையான பலரின் துணையுடன் போரிட விரும்பி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் நிற்கிறான்.(15) மன்னர்கள் பலருக்கு மத்தியில், தாமரையின் காந்தியைக் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {துரியோதனன்}, சற்றே புகையுடன் கூடிய நெருப்பைப் போலவோ, மேகங்களில் இருந்து வெளிப்படும் சூரியனைப் போலவோ, தனது அழகான தங்கக் கவசத்துடன் பிரகாசமாகத் தெரிந்தான்.(16)

சித்திரசேனனுடன் சேர்ந்து, வாள் மற்றும் கேடயத்துடன் கூடிய சுஷேணன், வீர சத்யசேனன் ஆகிய உமது மகன்களும், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன், போரிடும் விருப்பத்துடன் நிற்கின்றனர்.(17) பெரும் பலம் கொண்டவர்களும், பணிவுடன் கூடியவர்களுமான பாரத இளவரசர்கள் சித்ராயுதன், சுருதவர்மன், ஜயன், சலன், சத்யவிரதன், துச்சலன் ஆகியோர் அனைவரும் போரிட விரும்பி களத்தில் நிற்கின்றனர்.(18) கைதவ்யர்களின் ஆட்சியளானும், தன் துணிவில் செருக்குக் கொண்டவனும், போரில் அச்சமற்றுத் திரியவல்லவனுமான அந்த இளவரசன் {கைதவ்ய ராஜகுமாரன்}, காலாட்படை, குதிரைப்படை, யானைகள் மற்றும் தேர்களைக் கொண்ட தன் எதிரிகளைக் கொன்றபடியே, உமக்காகப் போரிட விரும்பி களத்தில் நிற்கிறான்.(19) வீரம் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், திறம்படத் தாக்கவல்லவர்களும், துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான சுருதாயு, சுருதாயுதன், சித்திராங்கதன், சித்திரவர்மன் ஆகியோரும் போரில் விருப்பத்துடன் களத்தில் நிற்கின்றனர்.(20)

கர்ணனின் மகனான உயர் ஆன்ம சத்யசந்தன், போரிடும் விருப்பத்துடன் களத்தில் நிற்கிறான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர்ந்த ஆயுதங்களின் அறிவையும், பெரும் கரநளினத்தையும் கொண்டவர்களான கர்ணனின் வேறு இரண்டு மகன்களும், அற்ப சக்தி கொண்ட போர்வீரர்களால் துளைக்க முடியாதபடியே, உமக்காகப் போரிடும் விருப்பத்துடன் பெரும் படைகளுக்குத் தலைமையில் நிற்கிறார்கள்.(21) இவ்வீரர்கள் மற்றும் அளவற்ற வலிமை கொண்ட இன்னும் பல முதன்மையான போர்வீரர்கள் ஆகியோரின் துணையுடன் குரு மன்னன் (துரியோதனன்) இரண்டாவது இந்திரனைப் போல வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டு தன் யானை படைப்பிரிவுக்கு மத்தியில் நிற்கிறான்" {என்றான் சஞ்சயன்}.(22)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "நமக்கும் எதிரிக்கும் மத்தியில் உயிரோடு இருப்பவர்கள் அனைவரையும் நீ முறையாக எனக்குச் சொல்லிவிட்டாய். இதிலிருந்தே வெற்றி எந்தப்பக்கம் சேரும் என்பதை நான் தெளிவாகப் பார்க்கிறேன். உண்மையில் அஃதை இந்த உண்மைகளில் இருந்தே அனுமானிக்கலாம்" என்றான்.(23)

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், "தன் முதன்மையான வீரர்கள் அனைவரும் இறந்துவிட்டதால், தன் படையின் சிறு பகுதி மட்டுமே உயிரோடு இருப்பதை அறிந்த அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன், இதைச் சொன்ன போது, துயரத்தில் மிகவும் கலக்கமடைந்ததாகத் தன் இதயத்தை உணர்ந்தான். {அப்படியே, அந்த} மன்னன் {திருதராஷ்டிரன்} மயங்கிப் போனான். பிறகு ஓரளவுக்குத் தன் உணர்வுகள் மீண்ட அவன், சஞ்சயனிடம், "ஒருக்கணம் பொறுப்பாயாக" என்றான்.(24,25) மேலும் அந்த மன்னன், "ஓ! மகனே {சஞ்சயா}, இந்தக் கொடிய பேரிடரைக் கேட்ட பிறகு, என் இதயம் பெரிதும் கலங்குகிறது. என் புலன்கள் மயங்குகின்றன, என் அங்கங்களும் முடங்குகின்றன" என்றான்.(26) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், அம்பிகையின் மகனும், பூமியின் தலைவனுமான அந்தத் திருதராஷ்டிரன், தன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்"{என்றார் வைசம்பாயனர்}.(27)
------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 7-ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்