Thursday, January 19, 2017

பீமனோடு மோதிய அஸ்வத்தாமன் - கர்ண பர்வம் பகுதி – 15

Aswathama encountered Bhima! | Karna-Parva-Section-15 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பீமசேனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த போர்; மயக்கமடைந்து விழுந்த இருவரும்; அவர்கள் இருவரையும் பாராட்டிய சித்தர்களும், பிறரும்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கர நளினத்தை வெளிப்படுத்தியபடியே ஒரு கணையால் பீமனைத் துளைத்தான்.(1) உடலின் முக்கிய அங்கங்களுடைய அறிவனைத்தையும் கொண்டிருந்ததால், வேகமான கரங்களைக் கொண்டவனான அந்த அஸ்வத்தாமன், அவனது {பீமனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் குறிபார்த்து, தொண்ணூறு {90} கணைகளால் மீண்டும் அவனைத் {பீமனைத்} துளைத்தான்.(2) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கூரிய கணைகளால் எங்கும் துளைக்கப்பட்ட பீமசேனன், அந்தப் போரில் கதிர்களுடன் கூடிய சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, நன்கு செலுத்தப்பட்ட ஓராயிரம் {1000} கணைகளால் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மறைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) அந்தப் போரில் தன் கணைகளால் தன் எதிரியின் கணைகளைக் கலங்கடித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே, ஒரு துணிக்கோல் கணையால் {நாராசத்தால்} அந்தப் பாண்டவனின் {பீமனின்} முன்நெற்றியைத் தாக்கினான்.(5) ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, காட்டில் ஒரு காண்டாமிருகம் அதன் கொம்பைச் செருக்குடன் தாங்கிக் கொள்வதைப் போலவே அந்தக் கணையைத் தன் முன்நெற்றியில் தாங்கிக் கொண்டான்.(6)


பிறகு அந்தப் போரில் சிரித்துக் கொண்டே இருந்த வீரப் பீமன், போராடிக் கொண்டிருக்கும் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} நெற்றியை மூன்று துணிக்கோல் கணைகளால் {நாராசங்களை} தாக்கினான். அந்தப் பிராமணன் {அஸ்வத்தாமன்}, தன் நெற்றியில் ஒட்டியிருந்த அந்த மூன்று கணைகளுடன், மழைக்காலங்களில் நீரால் கழுவப்படும் மூன்று சிகரங்களைக் கொண்ட மலை ஒன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(8) அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் அந்தப் பாண்டவனைப் {பீமனை} பீடித்தாலும், காற்றால் அசைக்கப்பட முடியாத மலையைப் போல இருந்த அவனை {பீமனை} அசைக்கத் தவறினான்.(9) அதே போலவே, மகிழ்ச்சியால் நிறைந்திருந்த அந்தப் பாண்டுவின் மகனாலும், மலையை அசைப்பதில் தவறும் மழைத்தாரைகளைப் போலவே, தன் நூற்றுகணக்கான கணைகளால் அந்தப் போரில் துரோணர் மகனை அசைக்க முடியவில்லை.(10)

பயங்கரக் கணைமாரியால் ஒருவரையொருவர் மறைத்தவர்களும், வலிமையும், கடுமையும் கொண்டவர்களுமான அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், தங்கள் முதன்மையான தேர்களில் அப்போது பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(11) உலகத்தின் அழிவுக்காக உதித்த சுடர்மிக்க இரு சூரியர்களைப் போலத் தெரிந்த அவர்கள், சிறந்த கணைகளாலான தங்கள் கதிர்களால் ஒருவரையொருவர் எரிப்பதில் ஈடுபட்டனர்.(12) அந்தப் பெரும்போரில் மற்றவரின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்ற பெருங்கவனத்துடன் முயன்றவர்களும், உண்மையில் மிகவும் அச்சமற்றவகையில் கணைமாரியால் செயலுக்குப் பொருத்தமான செயலில் ஈடுபட்டவர்களும்,(13) மனிதர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் அம்மோதலில் இரு புலிகளைப் போலவே திரிந்தனர். வெல்லப்பட்ட முடியாதவர்களும், பயங்கரமானவர்களுமான அவ்விருவரும் கணைகளையே தங்கள் நச்சுப்பற்களாகவும், விற்களையே தங்கள் வாய்களாகவும் கொண்டிருந்தனர்.(14)

மேகத்திரள்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்து சூரியனையும், சந்திரனையும் போல, அனைத்துப் பக்கங்களிலும் கணை மேகங்களால் மறைக்கப்பட்ட அவர்கள் (கண்களுக்குக்) காணப்பட முடியாதவர்களானார்கள்.(15) பிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் இருவரும், மேகத்திரைகளில் இருந்து விடுபட்ட செவ்வாயையும், புதனையும் போலச் சுடர்விட்டபடி விரைவில் தோன்றினார்கள்.(16) அச்சந்தரும் வகையிலான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, விருகோதரனை {பீமனைத்} தன் வலப்பக்கத்தில் நிறுத்திய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்},(17) மலையொன்றின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல, நூற்றுக்கணக்கான கடுங்கணைகளை அவன் {பீமன்} மீது பொழிந்தான்.

எனினும், பீமனால் தன் எதிரியின் அந்த வெற்றிக் குறியீட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(18) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அஸ்வத்தாமனின் வலப்பக்கத்தில் நின்றபடியே, பின்னவனின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கினான். (நிலைமையின் தேவைக்குத் தகுந்தபடி) முன்னேறவும், பின்வாங்கவும் செய்த அவர்களது தேர்கள், பல்வேறு வழிகளில் திரிவதைத் தொடர்ந்த நிலையிலேயே,(19) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையிலான அந்தப் போர் மிகவும் மூர்க்கமடைந்தது. பல்வேறு பாதைகளில் திரிந்து, (போரிடுவதில்) வட்டமாகச் சுழன்ற அவர்கள்,(20) தங்கள் விற்களை முழுமையாக வளைத்துக் கணைகளை ஏவியபடியே ஒருவரையொருவர் தாக்குவதைத் தொடர்ந்தனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவனை அழித்துவிடவும் பெருமுயற்சி செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அந்தப் போரில் மற்றவனைத் தேரற்றவனாகச் செய்ய விரும்பினர்.(21)

பிறகு, அந்தப் பெரும் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றை அழைத்தான். எனினும், அந்தப் போரில் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியின் அந்த ஆயுதங்கள் அனைத்திற்கும் தன் கணைகளால் எதிர்வினையாற்றினான்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது, கோள்களுக்கிடையில் நடக்கும் பயங்கர மோதலைப் போலப் பயங்கரமான ஆயுத மோதல் அப்போது அங்கே நிகழ்ந்தது.(23) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஒன்றோடொன்று மோதி திசைப்புள்ளிகள் அனைத்திற்கும், சுற்றிலும் இருந்த உமது துருப்புகளுக்கும்கூட ஒளியையூட்டின.(24) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது வீழும் விண்கற்களால் மறைக்கப்பட்டதைப் போலவே, கணைக்கூட்டங்களால் மறைக்கப்பட்ட ஆகாயம், பயங்கரத் தோற்றத்தை ஏற்றது.(25) ஓ! பாரதரே, கணைகளின் மோதலால் பொறிகளுடனும், சுடர்களுடன் கூடிய தழல்களுடனும் நெருப்பு அங்கே உண்டானது. அந்நெருப்பு இரு படைகளையும் எரிக்கத் தொடங்கியது.(26)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே திரிந்த சித்தர்கள், “போர்கள் அனைத்திலும் இந்தப் போரே முதன்மையானது. (இதற்கு முன் போரிடப்பட்ட) போர்கள் அனைத்தும் இதன் பதினாறின் ஒரு பங்கிற்கும் ஆகாது. இதுபோன்றதொரு போர் இனி நேராது. பிராமணனும், க்ஷத்திரியனுமான இவ்விரு மனிதர்களும் ஞானம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(29) இருவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், கடும் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். பீமனின் வலிமை பயங்கரமானதாக இருக்கிறது. அடுத்தவனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதத்திறன் அற்புதமானதாக இருக்கிறது. இவர்களது சக்தி எவ்வளவு பெரியதாக இருக்கிறது? இவ்விருவரும் கொண்ட திறன் எவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது?(30) யுகத்தின் முடிவில் அண்டத்தை அழிக்க நிற்கும் இரண்டு யமன்களைப் போலவே இவ்விருவரும் இந்தப் போரில் நிற்கின்றனர். இவர்கள் இருவரும் இரண்டு ருத்திரர்களைப் போலவோ, இரண்டு சூரியர்களைப் போலவோ பிறந்திருக்கின்றனர்.(31) பயங்கர வடிவங்களைக் கொண்ட இந்த மனிதர்களில் புலிகள் இருவரும், இந்தப் போரில் இரு யமன்களைப் போலவே இருக்கின்றனர்” என்ற சித்தர்களில் இத்தகைய வார்த்தைகளே ஒவ்வொரு கணமும் {அங்கே} கேட்கப்பட்டன. மேலும் அங்கே கூடியிருந்த சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் சிங்க முழக்கம் எழுந்தது.(32)

அந்தப் போரில் அவ்விரு போர் வீரர்களாலும் செய்யப்பட்டவையும், அற்புதமானவையும், நினைத்துப் பார்க்கவும் முடியாதவையுமான சாதனைகளைக் கண்டு, சித்தர்கள் மற்றும் சாரணர்களின் நெருக்கமான கூட்டங்கள் ஆச்சரியத்தால் நிறைந்தன.(33) அவ்விருவரையும் புகழ்ந்த தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர் மகனே {அஸ்வத்தாமா}, நன்று. ஓ! பீமா, நன்று” என்றனர்.(34) அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒருவருக்கொருவர் காயங்களைச் ஏற்படுத்திய அந்த வீரர்கள் இருவரும், சினத்தால் கண்களை உருட்டியபடியே ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்தனர்.(35) சினத்தால் சிவந்த கண்களுடன் கூடிய அவர்களது உதடுகளும்கூடச் சினத்தால் நடுங்கின. கோபத்தால் தங்கள் பற்களை அரைத்த அவர்கள், தங்கள் உதடுகளையும் கடித்துக் கொண்டனர்.(36)

அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், ஆயுதங்களின் பளபளப்பைத் தங்கள் மின்னலாகக் கொண்டு, கணைத்தாரைகளை மழையாகப் பொழியும் மேகங்கள் இரண்டைப் போல அந்தப் போரில் தங்களைக் கணை மாரியால் மறைத்துக் கொண்டனர்.(37) அந்தப் பெரும்போரில் மற்றவரின் கொடிமரத்தையும், சாரதியையும், குதிரைகளையும் துளைத்த அவர்களில் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கியபடியே இருந்தனர்.(38) பிறகு, ஓ! ஏகாதிபதி, அந்தப் பயங்கர மோதலில் சினத்தால் நிறைந்த அவர்கள் ஒவ்வொருவரும், மற்றவனைக் கொல்ல விரும்பி, இரு கணைகளை எடுத்துக் கொண்டு விரைவாக அவற்றை எதிரியின் மீது ஏவினர்.(39) தடுக்கப்படமுடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான அந்தச் சுடர்மிக்கக் கணைகள் இரண்டும், ஓ! மன்னா, தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் நின்று கொண்டிருந்த அவ்விரு வீரர்களையும் வந்தடைந்து {அவர்களைத்} தாக்கின.(40)

அந்தக் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் போராளிகள் இருவரில் ஒவ்வொருவரும், மற்றவனின் சக்தியால் {கட்டுண்டு} தங்கள் தங்கள் தேர்களின் தட்டுகளில் மூழ்கினர் {விழுந்தனர்}.(41) துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} நினைவிழந்ததை அறிந்த அவனது சாரதி, ஓ! மன்னா, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைப் போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்.(42) அதேபோல, ஓ! மன்னா, மீண்டும் மீண்டும் மயக்கமடைந்தவனும், எதிரிகளை எரிப்பவனுமான பாண்டுவின் மகனையும் {பீமனையும்} அவனது சாரதி போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(43)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்