Tuesday, January 24, 2017

மனத்தை நிறைத்த வெண்முரசு கலந்துரையாடல்


விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் சார்பாக நேற்று முன்தினம் (22.1.17) நடைபெற்ற இந்த வருடத்தின் முதல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு திரும்பும்போது மிகுந்த மனநிறைவுடன் திரும்பினேன். அங்கு வந்திருந்தவர் ஒவ்வொருவரும் என்னை அறிந்து வைத்திருந்தது பெருமகிழ்ச்சியை அளித்தது. பல ஊர்களில் இருந்து அந்தக் கலந்துரையாடலுக்காகவே வந்த சிலரும் அங்கே இருந்தனர். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வாசகரும் உலக இலக்கியங்களை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். கோவையில் உணர்ந்த அது, என்னுள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.


கலந்துரையாடலில் கலந்து கொள்ளப் போகிறோமே, கிராதம் குறித்துப் படித்துச் செல்ல வேண்டும் என்று மொழிபெயர்ப்பை நிறுத்தி மூன்று நாட்களாக (இரவு நேரத்தில் மட்டும்) கிராதத்திற்குள்ளேயே மூழ்கிக் கிடந்தேன். இருப்பினும், கிடைத்த நேரத்தில், முதல் முப்பத்தைந்து பகுதிகளைத்தான் என்னால் படிக்க முடிந்தது. படித்தது வரை மட்டுமாவது நினைவில் நிறுத்திக் கொண்டு கலந்துரையாடலில் பேசிவிடலாம் என்ற துணிவுடன் சென்ற எனக்கு, ஒன்றிரண்டு வரிகளுக்கு மேல் பேச முடியவில்லை. சட்டைப்பையில் இருந்த சில குறிப்புகளையும் எடுக்க ஏனோ மனம் வரவில்லை. உண்மையில் என்னென்னவோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். விவாதங்களில் பங்குபெறுவதில் அதியாவல் கொண்ட எனக்கு, உரையாகப் பேசும் கலை மட்டும் ஒரு போதும் கைகூடி வருவதில்லை. அதற்காக நான் முயற்சித்ததும் மிக மிகக் குறைவே.

கடந்த திங்கட்கிழமை என்று நினைக்கிறேன், நண்பர் ஜெயவேலன் அவர்கள் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இருந்து அழைப்பு வந்ததாகவும், உடனே அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் தொலைபேசியில் எனக்குத் தெரிவித்தார். நான் தொடர்பு கொண்டபோது, திரு.ராஜகோபாலன் அவர்கள் பேசினார். இவ்வருட முதல் கலந்துரையாடலில் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். நிச்சயம் கலந்து கொள்வேன் என்று சொன்ன நான், பேசுவதுதான் எனக்குச் சற்று சிரமமான காரியம் என்றும் தெரிவித்தேன். கலந்துரையாடலானது உரை நிகழ்த்துவது போல இருக்காது, விவாதம் போலத்தான் இருக்கும் என்று அவர் உற்சாகம் தந்தார். சரி கடினமேதும் இருக்காது என்ற துணிவோடே அங்கே சென்றேன்.

22ம் தேதியன்று மாலை 3.30 மணியளவில் சத்யானந்த யோக மையத்தை அடைந்தேன். ஏற்கனவே கோவை விருது வழங்கும் விழாவில் எனக்கு அறிமுகமாகியிருந்த நண்பர் காளிபிரசாத் அவர்கள் வரவேற்று, வரவேற்பறையில் என்னை அமரச் செய்தார். அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைக் கண்டேன். அனைத்தும் மிகக் கனத்த நூல்கள். தத்துவ அளவிலும், வடிவத்தின் அளவிலும் கனமானவையே. "யோக மையத்தின் நிறுவுனர் திரு.சௌந்தர் அவர்களின் புத்தகங்கள் அவை" என்று காளி அவர்கள் சொன்னார். ஜெயமோகனின் மற்ற படைப்புகள் குறித்தும், வெண்முரசு குறித்தும், நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் குறித்தும் நானும் அவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் சௌந்தர் அவர்கள் அவருடைய யோகா நண்பர்களுடன் வந்தார். மிகச் சாந்தமான மனிதர். யோகாசிரியர் எப்படி இருப்பார் என்பதற்கு இலக்கணமாகத் தெரிந்தார். பிறகு ஒவ்வொருவராக வந்தனர். மேலிருந்த பெரிய அறைக்குச் சென்று அமர்ந்தோம். இராஜகோபலன் அவர்கள் வந்தார். நண்பர் ஜெயவேலனும், அவரது மனைவி திருமதி. தேவகி ஜெயவேலனும் வந்தனர்.

4.30 மணிக்கு நிகழ்வு தொடங்கியது. ஒரு சிறு அறிமுகத்திற்குப் பிறகு, “இனி நேரம் உங்களுடையது, நீங்கள் பேசத் தொடங்கலாம்” என்றனர். பிச்சாண்டவர், வைசம்பாயனன், அத்ரி, சிவ வடிவங்கள், பைலன், சண்டன், அர்ஜுனன், கிருஷ்ணனின் பித்துநிலை, உருவகமாகச் சொல்லப்படும் தேவிகள், யமன், குபேரன் எனத் தனித்தனியாகப் பேச வேண்டும் என்று நான் நினைத்திருந்தவை எதுவும் ஏனோ வெளிப்பட மறுத்தன. என் இயலாமையை மறைக்க ஒன்றிரண்டு வரிகளை மட்டுமே பேசிவிட்டு, கலந்துரையாடலைத் தொடங்குவோமே என்று கேட்டேன். நீங்கள் நினைப்பதைப் பேசலாம் என்று திரு.ராஜகோபாலன் அவர்கள் சொன்னார். கிராதம் 35 பகுதிகள் தான் படித்திருக்கிறேன் என்றேன்.

என் நிலைமையை ஊகித்தறிந்த அவர், என்னைக் குறித்தும், நான் செய்து கொண்டிருக்கும் வேலைகளைக் குறித்தும் என் சார்பாகப் பேசினார். நானே பேசியிருந்தாலும் அவ்வளவு அழகாகப் பேசியிருக்க முடியாது. மஹாபாரதம் குறித்தும், அதன் தேவை குறித்தும், அதன் பலப்பல பதிப்புகள் குறித்தும், ஜெயமோகன் அவற்றை வெளிக்கொணரும் முறை குறித்தும் அருமையாக எடுத்துரைத்தார். அவரைக் கண்டு எனக்குப் பொறாமையாகவே இருந்தது. பிறகு அவரே கேள்வி பதில் வடிவில் கேள்விகளைக் கேட்க, நான் என்னால் இயன்ற பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். மேலும் சிலரும் கேள்விகள் கேட்டனர். முடிந்தவரை விவரமாகவே பதிலளித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. உரையாகப் பேசியிருந்தால் நான் அவ்வளவு நேரம் பேசியிருக்க வாய்ப்பே இல்லை. இடைவேளையின் போது இராஜகோபாலன் அவர்களுடன் தனியாகப் பேசும்போது, “இவ்வளவு இனிமையாகப் உரை நிகழ்த்துகிறீர்களே நீங்கள் கொடுத்து வைத்தவர்” என்று சொன்னேன்.

கேள்விகள் கேட்ட ஒவ்வொருவரும் வெண்முரசில் வரும் பகுதிகள் மகாபாரதத்தில் எவ்வாறு உள்ளன என்பதைக் கேட்பதில் ஆவலாக இருந்தனர். சில இடங்களில் ஜெயமோகன் ஒரு குறிப்பையும் விடாமல் அனைத்தையும் சேர்த்திருப்பதை எண்ணி அனைவரும் வியந்தோம். இடையிடையே நண்பர் ஜெயவேலன் சில கருத்துகளைச் சொல்லும்போது குபீரெனச் சிரிப்பொலி சபையை நிறைத்தது. அது ஜெயவேலன் அவர்களுக்கே உரிய ஆற்றல். இயல்பான பேச்சுக்கு இருக்கும் லயத்தை என்னால் உணர முடிந்தது. பிறகு மீண்டும் கலந்துரையாடல் தொடர்ந்தது. இளையவர் முதல் முதியவர் வரை, ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் அவர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடிந்தது நிறைவை அளித்தது. இரகுராமன் அவர்களும் இடையிடையே கேள்விகளைக் கேட்டு சில கேள்விகளுக்கான பதில்களை முழுமையடையச் செய்தார். முகநூல் நண்பரான அவரை நேரில் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. இறுதியில் நண்பர் ஜெயவேலனும், அவரது மனைவி தேவகி ஜெயவேலனும் பேசினார்கள். மகாபாரத மொழிபெயர்ப்பில் அவர்கள் பங்கேற்க நேர்ந்த விதத்தை இருவரும் உள்ளபடியே சொன்னார்கள்.

நிகழ்ச்சி முடியும் தருணத்தில், மகாபாரத மொழிபெயர்ப்புக்கு உதவும் விதமாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் சார்பாக ரூ.10,000/-க்கான காசோலையை வழங்கினார்கள். அந்த நேரத்தில் ஜெயமோகன் அவர்களின் மகன் அஜிதன் அங்கே வந்தார். மிக அமைதியான இளைஞர். அவர் தனது தந்தையை வைத்து இயக்கியிருந்த காணொளியைக் கண்டு, “அற்புதமாக இயக்கியிருக்கிறாரே” என்று வியந்திருக்கிறேன். “உங்கள் தந்தையின் கீபோர்ட் போலவே என் கீபோர்டிலும் அதே பல் (Button) கிடையாது” என்றேன். காணொளியோடு சேர்ந்து தட்டெழுதும் ஒலியைச் சேர்த்திருக்கும் விதமும், காட்சி அமைப்புகளும் அருமையாக இருந்தன” என்று பாராட்டி, அவருக்கு வாழ்த்து கூறினேன்.

அடுத்து ஜெயமோகன் அவர்கள் “மாமலர்” எழுதவிருக்கிறார். மலர்கொய்யச் செல்லும் பீமன் அனுமனைத் தரிசித்துக் கந்தர்வர்களை வென்று மலரை அடையும் பகுதியாகவே அது இருக்க வேண்டும். “நளன் தமயந்தி குறித்து அவர் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். எழுதுவாரா? தவிர்த்துவிடுவாரா? என்று தெரியவில்லை” என்று நான் பேசிக் கொண்டிருந்தபோது, “உண்டு. மாமலரிலேயே அது வரக்கூடும்” என்று அஜிதன் சொன்னார். அஜிதனின் வார்த்தைகள் தேனை வார்த்தது போல இருந்தது. பிறகு, நாங்கள் வெளியே வந்தபோது, “விசிஷ்டாத்வைதத்தைப் படைப்புகளில் பொருத்திப் பார்ப்பதில் வல்லவர் அவர்” என்று இராஜகோபாலன் அவர்கள் அஜிதனைக் குறித்துச் சொன்னார். “புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?” என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன்.

அங்கேயே இரவு உணவும் உண்டு முடித்துப் புறப்படும் போது, சௌந்தர் அவர்கள் அவரது அறையில் நான் கண்ட புத்தகங்களில் வேண்டுபவற்றை எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான் வைத்திருக்கும் புத்தகங்களிலேயே இன்னும் படிக்க வேண்டியவை இருப்பது நினைவுக்கு வரவே, அடுத்தமுறை வரும்போது எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டேன்.

ஜெயமோகன் படைப்புகளின் என்சைக்ளோபீடியா இவர்தான் என்று ஒரு நண்பரை அறிமுகம் செய்திருந்தனர். அருமையாகப் பேசினார், என் பதில்களில் பலவை முழுமை பெற இரகுராமனுடன் அவரும் உதவினார். "ஆசான் கிராதம் முடித்திருப்பதால் ‘கிராதனாகவே’ இவர் ஆகிவிட்டார்" என்று ஒரு நண்பரை அறிமுகம் செய்திருந்தனர். அவரும் பல அருமையான கேள்விகளைக் கேட்டார். அவர்கள் இருவரின் பெயரையும் மறந்தது மட்டுமே இதை எழுதும்போது என் மனதுக்கு நெருடலாக இருக்கிறது. நண்பர்கள் மன்னிப்பார்களாக.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தை என் தாய்வீடாகவே உணர்கிறேன். முடிந்த சமயங்களில் எல்லாம் இனி அங்கே செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். சௌந்தர் அவர்களிடம் சில புத்தகங்களையும் பெற வேண்டும்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன் 
24.1.207

குறிப்பு: மனம் திளைப்பில் இருந்ததால், என் அலைபேசியில் ஒரு படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நினைவில்லை. இன்னும்கூட அந்தப் போதையிலேயே இருக்கிறேன். மொழிபெயர்க்க முடியவில்லை. கிராதத்திற்குள்ளேயே இருக்கிறேன்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்