Thursday, March 23, 2017

நாகாஸ்திரம் ஏவிய அர்ஜுனன்! - கர்ண பர்வம் பகுதி – 53

Arjuna sped a weapon called Naga! | Karna-Parva-Section-53 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களோடு போரிட்ட அர்ஜுனன்; நெருக்கமாகப் போரிட்ட அந்தப் போர்வீரர்கள் அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் பிடித்துக் கொண்டது; நாகாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அதனால் கட்டுண்ட சம்சப்தகர்கள்; கருடாஸ்திரத்தை ஏவிய சுசர்மன்; சம்சப்தகர்களின் கட்டுகள் விலகியது; ஐந்திராயுதத்தை ஏவி சம்சப்தகர்களை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அச்சம் நிறைந்ததாக அமைந்த போர்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் பலர் மூழ்கிக் கொண்டிருந்த அந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, ஓ! ஐயா, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஆரவாரத்திற்கும் மேலாகக் காண்டீவத்தின் உரத்த நாணொலியானது, சம்சப்தகர்கள், கோசலர்கள், மற்றும் நாராயணப் படைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எங்குக் கொன்று கொண்டிருந்தானோ, அங்கே கேட்டுக் கொண்டிருந்தது.(1,2) சினத்தால் நிரம்பியும், வெற்றிக்கான விருப்பத்துடனும் இருந்த சம்சப்தகர்கள் அந்தப் போரில் அர்ஜுனனின் தலையில் கணைமாரியைப் பொழியத் தொடங்கினர்.(3) எனினும், பலமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, அந்தக் கணைமாரியை வேகமாகத் தடுத்து, அந்தப் போரில் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொல்லத் தொடங்கினான்.(4) அந்தத் தேர்ப் படைப்பிரிவுக்குள் மூழ்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, கூராக்கப்பட்டதும், கங்க இறகுகளைக் கொண்டதுமான கணைகளின் உதவியுடன் கூடியவனாகச் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருந்த சுசர்மனிடம் வந்தான்.(5)


அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனோ {சுசர்மனோ}, அர்ஜுனன் மீது அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தான். அதே வேளையில் சம்சப்தகர்களும் தங்கள் கணைகளால் அர்ஜுனனை மறைத்தனர்.(6) அப்போது பத்து கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்த சுசர்மன், மூன்றால் ஜனார்த்தனனின் {கிருஷ்ணனின்} வலக்கரத்தைத் துளைத்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அர்ஜுனனின் கொடிமரத்தையும் துளைத்தான்.(7) அதன்பேரில், பெரும் வடிவிலானதும், தெய்வீகத் தச்சனின் கைவண்ணத்தில் உருவானதுமான அந்த முதன்மையான குரங்கு, பேரொலிகளை வெளியிடத் தொடங்கி, மிக மூர்க்கமாக முழங்கி உமது துருப்பினரை அச்சுறுத்தியது.(8) குரங்கின் முழக்கங்களைக் கேட்ட உமது படை அச்சமடைந்தது. உண்மையில், பேரச்சத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்த அந்த வியூகமே {படையே} முற்றிலும் செயலற்றுப் போனது.(9) அப்படிச் செயலற்று நின்ற உமது படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு மலர்களால் பூத்துக் குலுங்கும் சைத்ரரதக் காடு போல அழகாகத் தெரிந்தது.(10)

பிறகு, ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் உணர்வுகள் மீண்ட அந்தப் போர்வீரர்கள், மலைகளை நனைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரியால் அர்ஜுனனை நனைத்தனர்.(11) அப்போது அவர்கள் அனைவரும் அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} பெருந்தேரைச் சூழ்ந்து கொண்டனர். அவனைத் {அர்ஜுனனைத்} தாக்கிய அவர்கள், எப்போதும் கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டாலும் கூடப் பெருமுழக்கங்களைச் செய்து கொண்டே இருந்தனர்.(12) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவனது {அர்ஜுனனின்} குதிரைகள், தேர்ச்சக்கரங்கள், தேரின் ஏர்க்கால், மற்றும் அந்த வாகனத்தின் பிற அங்கங்கள் ஆகியவற்றைப் பெரும்பலத்தோடு தாக்கியபடியே அவர்கள் சிங்க முழக்கங்கள் பலவற்றைச் செய்தனர்.(13) அவர்களில் சிலர் கேசவனின் {கிருஷ்ணனின்} பருத்த கரங்களைப் பற்றினர், மேலும் அவர்களில் வேறு சிலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் நின்று கொண்டிருந்தவனான பார்த்தனை {அர்ஜுனனைப்} பெரும் மகிழ்ச்சியோடு பிடித்தனர்.(14) அப்போது, அந்தப் போர்க்களத்தில் தன் கரங்களை அசைத்த கேசவன் {கிருஷ்ணன்}, தன் முதுகில் உள்ள சாரதிகள் {பாகர்கள்} அனைவரையும் உடல் குலுக்கிக் கீழே தள்ளும் பொல்லாத யானையொன்றைப் போலத் தன்னைப் பிடித்த அனைவரையும் கீழே வீசினான்.(15) பிறகு அந்தப் பெரும் தேர்வீரர்களால் சூழப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தேர் தாக்கப்படுவதையும், கேசவன் தாக்கப்படும் அந்த முறையையும் கண்டு, சினத்தால் நிறைந்து, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களையும், காலாட்படைவீரர்களையும் தூக்கி வீசினான்.(16)

மேலும் அவன் {அர்ஜுனன்}, நெருக்கமான போருக்குத் தகுந்தவாறு, தனக்கு நெருக்கமாக இருந்த போராளிகள் அனைவரையும் கணைகள் பலவற்றால் மறைத்தான். கேசவனிடம் பேசிய அவன் {அர்ஜுனன்},(17) “ஓ! கிருஷ்ணா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஆயிரகணக்கில் கொல்லப்பட்டாலும், ஒரு பயங்கரக் காரியத்தை நிறைவேற்றுவதில் ஈடுபடுபவர்களும், எண்ணற்றவர்களாய் இருப்பவர்களுமான இந்தச் சம்சப்தகர்களைப் பார். (18) ஓ! யதுக்களில் காளையே {கிருஷ்ணா}, தன் தேரில் இத்தகைய நெருக்கமான தாக்குதலைத் தாங்கிக் கொள்ளக்கூடியவன் என்னைத் தவிர இவ்வுலகில் வேறு எவனும் இல்லை” என்றான்.(19) பீபத்சு {அர்ஜுனன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுத் தன் சங்கை முழக்கினான். அப்போது கிருஷ்ணனும் தன் சங்கை முழக்கி, அதன் முழக்கத்தால் ஆகாயத்தை நிறைத்தான்.(20) அம்முழக்கத்தைக் கேட்ட சம்சப்தகர்களின் படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்கத் தொடங்கிப் பேரச்சம் கொண்டது.(21) பிறகு, பகைவீரர்களைக் கொல்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி, நாகம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை {நாகாஸ்திரத்தை} அழைத்து, சம்சப்தகர்களின் கால்களை மீண்டும் மீண்டும் முடக்கினான்.(22) கால்களைக் கட்டும் அந்தப் பட்டைகளை {நாகாஸ்திரக் கணைகளைக்} கொண்டு, அந்த உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} இவ்வாறு கட்டப்பட்ட அவர்கள் அனைவரும் கல்லாகிப் போனவர்களைப் போல அசைவற்றிருந்தனர்.(23) பிறகு, பழங்காலத்தில் தாரகனுடனான போரில் அசுரர்களைக் கொன்ற இந்திரனைப் போல, அசைவற்றிருந்த அந்தப் போர்வீரர்களை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} கொல்லத் தொடங்கினான்.(24) போரில் இவ்வாறு கொல்லப்பட்ட அவர்கள், அந்தத் தேரை விட்டுவிட்டுத் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கீழே வீசத் தொடங்கினர்.(25) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கால்கள் முடக்கப்பட்ட அவர்களால், ஓர் அடியேனும் நகர முடியவில்லை. அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, தன் நேரான கணைகளால் அவர்களைக் கொன்றான்.(26) உண்மையில் அந்தப் போரில், காலைக் கட்டும் ஆயுதத்தை அழைத்துப் பார்த்தன் {அர்ஜுனன்} எவர் மீது குறி வைத்து ஏவினானோ, அந்தப் போர்வீரர்கள் அனைவரும், தங்கள் கீழ் அங்கங்களில் பாம்புகளால் கட்டப்பட்டனர்.(27)

அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான சுசர்மன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் படை இவ்வாறு முடக்கப்பட்டதைக் கண்டு, சுபர்ணம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை {கருடாஸ்திரத்தை} விரைவாக அழைத்தான்.(28) அதன்பேரில் எண்ணற்ற பறவைகள் கீழே வந்து, அந்தப் பாம்புகளை விழுங்கத் தொடங்கின., அந்த வானுலாவிகளைக் கண்ட பின்னவையும் {பாம்புகளும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடத் தொடங்கின.(29) கால்களைக் கட்டும் அவ்வாயுதத்தில் இருந்து விடுபட்ட அந்தச் சம்சப்தகப் படையானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகங்களில் இருந்து விடுபட்டு அனைத்து உயினரங்களுக்கும் ஒளியைத் தரும் சூரியனைப் போலத் தெரிந்தது.(30) இவ்வாறு விடுபட்ட அந்தப் போர்வீரர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்கள் கணைகளை மீண்டும் ஏவி, அர்ஜுனனுடைய தேரின் மீது தங்கள் ஆயுதங்களையும் வீசினர். அவர்கள் அனைவரும் பார்த்தனை எண்ணற்ற கணைகளால் துளைத்தனர்.(31) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த வாசவன் மகன் {இந்திரனின் மகனான அர்ஜுனன்}, அந்த வலிமைமிக்க ஆயுதங்களைத் தன் கணைமாரியால் அறுத்து, அந்தப் போர்வீரர்களையும் கொல்லத் தொடங்கினான்.(32)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சுசர்மன்,  நேரான கணை ஒன்றால் அர்ஜுனனின் மார்பைத் துளைத்து, மேலும் மூன்று பிற கணைகளாலும் அவனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(33) அதனால் ஆழத்துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த அர்ஜுனன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தான். அப்போது துருப்புகள் யாவும், “பார்த்தன் கொல்லப்பட்டான்” என்றே உரக்கக் கூச்சலிட்டன.(34) இதனால், சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் முழக்கங்களும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலியும், உரத்த சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(35) அளவிலா ஆன்மா கொண்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டவனுமான பார்த்தன், தன் உணர்வுகள் மீண்டு, வேகமாக ஐந்திர ஆயுதத்தை அழைத்தான்.(36) ஓ! ஐயா ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},, அவ்வாயுதத்தில் இருந்து வெளிப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால், மன்னர்களும், யானைகளும் கொல்லப்படுவது அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டது.(37) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணகான குதிரைகள், தேர்கள் ஆகியவையும் அவ்வாயுதத்தால் அந்தப் போரில் கொல்லப்படுவதும் (அழிக்கப்படுவதும்) காணப்பட்டது. அத்துருப்புகள் இவ்வாறு கொல்லப்பட்டபோது, ஓ! பாரதரே ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},, சம்சப்தகர்கள் மற்றும் கோபாலர்கள் ஆகியோர் அனைவரின் இதயங்களிலும் பேரச்சம் நுழைந்தது. அர்ஜுனனோடு போரிட அவர்களில் ஒரு மனிதனும் இருக்கவில்லை.(38,39)

அங்கே, வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அர்ஜுனன் உமது துருப்புகளை அழிக்கத் தொடங்கினான். அந்தப் படுகொலையை அனைவரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தாமல் முற்றிலும் செயலற்றவர்களாகவே நீடித்தனர்.(40) அப்போது, அந்தப் போரில் முழுமையாகப் பத்தாயிரம் {10000} போராளிகளைக் கொன்ற அந்தப் பாண்டுவின் மகன், ஓ! ஏகாதிபதி ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகையற்ற சுடர்மிக்க நெருப்பொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(41) மேலும் அவன் பதினாலாயிரம் {14000} போர்வீரர்களையும், மூவாயிரம் {3000} யானைகளையும் முழுமையாகக் கொன்றான்.(42) பிறகு, மரணத்தையோ, வெற்றியையோ தங்கள் இலக்காக்கிக் கொண்ட சம்சப்தகர்கள் மீண்டும் தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(43) அப்போது, உமது போர்வீரர்களுக்கும், வலிமைமிக்க வீரனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்தப் பாண்டுவின் மகனுக்கும் இடையில் நடந்த போரானது அச்சம் நிறைந்ததாக அமைந்தது” {என்றான் சஞ்சயன்}.(44)
-----------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -53ல் உள்ள சுலோகங்கள் : 44

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்