Wednesday, March 22, 2017

பலவீனமடைந்த கௌரவப் படை! - கர்ண பர்வம் பகுதி – 52

The Kaurava army became strenghless! | Karna-Parva-Section-52 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : இரு படைகளுக்கும் இடையில் நடந்த கடும்போர்; உயிரினங்களின் ருத்ரசூனைக்கு ஒப்பான பயங்கரத்தை அடைந்த போர்க்களம்; நால்வகைப் படைகளும் தங்களுக்குள் மோதிக்கொண்ட விதம்; பலவீனமடைந்த கௌரவப் படை...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் எதிர்த்துப் பகை உணர்வுகளை வளர்த்து வந்தவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான க்ஷத்திரியர்கள், அந்தப் போரில் ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(1) ஓ! மன்னா, தேர்க்கூட்டங்கள், குதிரைகளின் பெரும்படைகள், காலாட்படைப்பிரிவுகள், பெரும் எண்ணிக்கையிலான யானைகள் ஆகியவை அந்தப் போரில் ஒன்றோடொன்று கலந்தன.(2) அந்தப் பயங்கரப் போரில், ஒருவர் மீதொருவர் வீசிக்கொண்ட கதாயுதங்கள், முள் பதித்த தண்டங்கள் {பரிகங்கள்}, குணபங்கள் {சக்திகள்}, வேல்கள் {பராசங்கள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, ஏவுகணைகள் {முசுண்டிகள்} ஆகியவை விழுவதை நாங்கள் கண்டோம்.(3) காணப் பயங்கரமான கணைமாரிகள், விட்டிற்பூச்சிகளைப் போலப் பறந்தன. யானைகளை அணுகிய யானைகள், ஒன்றையொன்று முறியடித்தன.(4)


அந்தப் போரில் குதிரைவீரர்களோடு மோதிய குதிரைவீரர்கள், தேர்வீரர்களோடு மோதிய தேர்வீரர்கள், காலாட்படை வீரர்களோடு மோதிய காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்களைச் சந்தித்த காலாட்படைவீரர்கள்,(5) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள் மற்றும் யானைகளைச் சந்தித்த காலாட்படைவீரர்கள், யானைகள் மற்றும் குதிரைவீரர்களைச் சந்தித்த தேர்கள், பிற மூன்று வகைப் படைகளைப் பெரும் வேகத்தோடு சந்தித்த யானைகள் ஆகியன ஒன்றையொன்று நசுக்கிக் கலங்கடிக்கத் தொடங்கின.(6) அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, தங்கள் குரல்களின் உச்சியில் கூச்சலிட்டதன் விளைவால், அந்தப் போர்க்களமானது உயிரினங்களின் (உயிரினங்களைக் கொல்லும் ருத்ரனின்) சூனைக்கு {இறைச்சிக் கொட்டிலுக்கு} ஒப்பான அச்சத்தைத் தருவதாக இருந்தது.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குருதியால் மறைக்கப்பட்ட பூமியானது, மழைக்காலங்களில் செம்பட்டுப்பூச்சிகளால் {இந்திரகோபங்களால்} மறைக்கப்பட்ட பரந்த நிலத்தைப் போல அழகாகத் தெரிந்தது.(8) உண்மையில் பூமியானது, செக்கச்சிவந்த சாயம் பூசப்பட்ட வெண்ணிற ஆடைகளை உடுத்தியிருக்கும் பேரழகு இளங்கன்னிகையின் குணங்களையே அப்போது ஏற்றிருந்தது.(9) சதை, குருதி ஆகியவற்றால் பன்னிறங்கொண்ட அந்தப் போர்க்களமானது, எங்கும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதைப் போல இருந்தது. உடலிலிருந்து அறுக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சிரங்களும், ஓ! பாரதரே, கரங்கள், தொடைகள், காதுகுண்டலங்கள், போர்வீரர்களின் உடல்களில் இடம்பெயர்ந்திருந்த பிற ஆபரணங்கள்,(10) கழுத்தணிகள், மார்புக்கவசங்கள், துணிவுமிக்க வில்லாளிகளின் உடல்கள், கவசங்கள், கொடிகள் ஆகியனவும் தரையில் சிதறிக் கிடந்தன.(11)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யானைகளை எதிர்த்து வந்த யானைகள், தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று கிழித்துக் கொண்டன. எதிராளியின் தந்தங்களால் தாக்கப்பட்ட யானைகள் மிக அழகாகத் தெரிந்தன.(12) குருதியில் குளித்த அந்தப் பெரும் உயிரினங்கள் {யானைகள்}, தங்கள் சாரல்களில் ஓடைகளாகப் பாயும் தாதுக்களால் அலங்கரிக்கப்பட்ட அசையும் மலைகளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(13) குதிரைவீரர்களால் வீசப்பட்ட வேல்கள், அல்லது பகை போராளிகளால் பக்கவாட்டில் கொள்ளப்பட்டவற்றை {வேல்களைப்}, பிடித்துக் கொண்ட அவ்விலங்குகளில் பல, அவ்வாயுதங்களை வளைத்து முறித்தன.(14) கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்ட பல யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குளிர்காலத்தின் தொடக்கத்தில் மேகங்களற்றுக் காணப்படும் மலைகளைப் போலத் தெரிந்தன.(15) பல முதன்மையான யானைகள், தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகளால் துளைக்கப்பட்டு, ஓ! ஐயா, சுடர்மிக்கப் பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட சிகரங்களைக் கொண்ட மலைகளைப் போல மிக அழகாகத் தெரிந்தன.(16) மலைகளைப் போலப் பெரியவையாக இருந்த அவ்வுயிரினங்களில் சில, பகையானைகளால் தாக்கப்பட்டு அந்தப் போரில் சிறகு படைத்த மலைகளைப் (சிறகு படைத்த மலைகள் தங்கள் சிறகுகள் வெட்டப்பட்டதும் விழுவதைப்) போலக் கீழே விழுந்தன.(17) கணைகளால் பீடிக்கப்பட்ட இன்னும் பிற {யானைகள்}, தங்கள் காயங்களால் மிகவும் வலியை உணர்ந்து, தங்கள் மத்தகம், அல்லது தங்கள் தந்தங்களுக்கு இடையிலான பகுதிகளால் பூமியைத் தீண்டி கீழே விழுந்தன {தலைகுப்புற விழுந்தன}.(18) வேறு சில யானைகளோ சிங்கங்களைப் போல முழங்கின. இன்னும் பலவோ, பயங்கர ஒலிகளை வெளியிட்டபடியே அங்கேயும், இங்கேயும் ஓடின, மேலும் பல, ஓ! மன்னா, வலியால் கதறின.(19)

தங்க இழைகளுடன் கூடிய குதிரைகளும், கணைகளால் தாக்கப்பட்டு, கீழே விழவோ, பலவீனமடையவோ, அனைத்துத் திசைகளிலும் ஓடவோ செய்தன.(20) கணைகள் மற்றும் வேல்களால் தாக்கப்பட்டு, அல்லது, கீழே இழுக்கப்பட்ட வேறு சில {குதிரைகள்}, பூமியில் விழுந்து, பல்வேறு வகைகளிலான அசைவுகளைச் செய்து, வலியால் வேதனையுடன் நெளிந்தன.(21) ஓ! ஐயா, மனிதர்களும் பூமியில் விழுந்து, வலியால் பல்வேறு கூச்சல்களையிட்டனர். தங்கள் உறவினர், தந்தைமார், மற்றும் பாட்டன்மார்,(22) மற்றும் வேறு சிலரைக் கண்ட பிறர், தங்கள் எதிரிகள் பின்வாங்குவதைக் கண்டு, அவர்களுக்கு நன்கறிந்த பெயர்களையும், அவர்களது குலப் பெயர்களையும் சொல்லி ஒருவருக்கொருவர் உரக்கக் கதறினர்.(23) தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட போராளிகள் பலரின் கரங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் வெட்டப்பட்டு, பல்வேறு வகை அசைவுகளைச் செய்தபடி தரையில் நெளிந்தன.(24) இப்படி ஆயிரக்கணக்கான கரங்கள் கீழே விழுந்து, மேலே எழுந்தன, மேலும் பல, ஐந்து தலை பாம்புகளைப் போல முன்னோக்கி நகர்வதாகத் தெரிந்தது.(25) சிறுத்துச் செல்லும் பாம்புகளின் உடல்களைப் போலத் தெரிந்தவையும், சந்தனத்தால் பூசப்பட்டவையுமான அக்கரங்கள், ஓ! மன்னா, குருதியில் நனைந்த போது, தங்கத்தாலான சிறு கொடிமரங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(26) அனைத்துப் பக்கங்களிலும் போரானது மூர்க்கமாகவே நடைபெறுவதே இயல்பாக மாறியதும், போர்வீரர்கள் தாங்கள் போரிடுவோருடனோ, தாக்குவோருடனோ தனித்த உணர்வுகள் ஏதும் இல்லாமல் போரிட்டு ஒருவரையொருவர் கொன்றனர்.(27)

போர்க்களத்தில் புழுதி மேகம் பரவி, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அடர்த்தியான மழையாகப் பொழிந்தன. இவ்வாறு காட்சி இருளடைந்ததும், போராளிகளால் அதற்கு மேலும் நண்பர்களிடமிருந்து எதிரிகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(28) உண்மையில், கடுமையானதும், அச்சத்தை உண்டாக்குவதுமான அந்தப் போரானது இவ்வாறே நடந்தது. விரைவில் குருதிப் புனல்களால் அங்கே பெரும் ஆறுகள் பல பாயத் தொடங்கின.(29) தங்கள் பாறைகளாக அமைந்த போராளிகளின் தலைகளால் அவை {அந்த ஆறுகள்} நிறைந்திருந்தன. போர்வீரர்களின் மயிர், அவற்றின் மேல் மிதக்கும் பாசிகளாகவும், புற்களாகவும் அமைந்தன. எலும்புகளே அவற்றின் மீன்களாகின. விற்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியன அவற்றைக் கடக்கும் தெப்பங்களாகின.(30) சதையையும், குருதியையும் அவற்றின் சேறாகக் கொண்டவையும், பயங்கரமானவையும், அச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்த ஆறுகள், அங்கே இவ்வாறு உண்டான குருதியோடையால் பெருகி,(31) மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தின. அச்சத்தைத் தரும் அந்த ஆறுகள் யமனின் வசிப்பிடத்திற்கு வழிகாட்டிச் சென்றன. க்ஷத்திரியர்களை அச்சமடையச் செய்த பலர் அந்த ஓடைகளில் மூழ்கி மாண்டனர்.(32)

ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஊனுண்ணும் பல்வேறு உயிரினங்களின் முழக்கம் மற்றும் ஊளையின் விளைவால், அந்தப் போர்க்களமானது, இறந்தோரின் மன்னனுடைய {யமனுடைய} ஆட்சிப்பகுதிகளை {நரகத்தைப்} போலப் பயங்கரத்தை அடைந்தது.(33) அனைத்துப் பக்கங்களிலும் தலையற்ற முண்டங்கள் எண்ணற்றவை எழுந்து நின்றன. பயங்கரமான உயிரினங்கள், ஓ! பாரதரே, சதை மற்றும் குருதியைக் கழுத்துவரை உண்டு, குருதி மற்றும் கொழுப்பைக் குடித்துச் சுற்றிலும் ஆடத்தொடங்கின.(34) காகங்கள், கழுகுகள், நாரைகள் ஆகியன, கொழுப்பு, மஜ்ஜை மற்றும் பிற விலங்குகளின் சதை ஆகியவற்றால் நிறைவடைந்து, மகிழ்ச்சியாகத் திரிவது தெரிந்தது.(35)

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்களாக இருந்த உம்மவர், விடுவதற்குக் கடினமான அச்சங்கள் அனைத்தையும் விட்டு, போர்வீரர்களின் உறுதியை நோற்று, அச்சமற்ற வகையில் தங்கள் கடமைகளைச் செய்தனர்.(36) உண்மையில், எண்ணற்ற கணைகளும், ஈட்டிகளும் காற்றில் எங்குப் பாய்ந்தனவோ, ஊனுண்ணும் பல்வேறு வகை உயிரினங்கள் எங்கு நிறைந்திருந்தனவோ அந்தக் களத்தில், துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், அச்சமில்லாமல் திரிந்து தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.(37) ஓ! பாரதரே, ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட அவர்கள், தங்கள் பெயர்களையும், குடும்பங்களையும் அறிவித்தனர். தங்கள் தந்தைமார் மற்றும் குடும்பங்களை அறிவித்துக் கொண்ட அவர்களில் பலர், ஓ! தலைவா, ஓ! மன்னா, ஈட்டிகள், வேல்கள் மற்றும் போர்க்கோடரிகளால் ஒருவரையொருவர் நொறுக்கத் தொடங்கினர்.(38,39) கடுமையானதும், அச்சத்தை ஏற்படுத்துவதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்த போது கௌரவபடையானது, பெருங்கடலின் ஆழத்தில் நொறுக்கப்பட்ட மரக்கலம் ஒன்றைப் போல அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையை அடையும் வகையில் பலவீனமடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(40)
---------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -52ல் உள்ள சுலோகங்கள் : 40

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்