Friday, March 24, 2017

சுகேதுவைக் கொன்ற கிருபர்! - கர்ண பர்வம் பகுதி – 54

Kripa killed Suketu! | Karna-Parva-Section-54 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சிருஞ்சயர்களைக் கொன்ற கிருபர்; கிருபரை எதிர்த்த சிகண்டி; சிகண்டியைத் தேரிழக்கச் செய்த கிருபர்; சிகண்டியைக் காக்க விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தடுத்த கிருதவர்மன்; சிகண்டியின் கேடயத்தை வெட்டிய கிருபர்; கிருபரை எதிர்கொண்ட பாஞ்சால இளவரசன் சுகேது; பின்வாங்கிய சிகண்டி; சுகேதுவைக் கொன்ற கிருபர்; கிருதவர்மனின் சாரதியை வீழ்த்தி வென்ற திருஷ்டத்யும்னன் கௌரவர்களைத் தடுக்கத் தொடங்கியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மன், கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சூதன் மகன் {கர்ணன்}, உலூகன், சுபலன் மகன் (சகுனி), தன்னுடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய மன்னன் {துரியோதனன்} ஆகியோர்,(1) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அச்சத்தில் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் உடைந்த மரக்கலமொன்றைப் போல ஒன்றாக நிற்க முடியாத நிலையில் இருக்கும் (குரு) படையைக் கண்டு, பெரும் வேகத்துடன் அதை மீட்க முயன்றனர்.(2) மீண்டும் நடந்த போரானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒரு குறுகிய காலத்திற்கு மிகக் கடுமையானதாகவும், மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் இன்பத்தையும் அதிகரிக்கும் வண்ணம் நடந்தது.(3) அந்தப் போரில் கிருபரால் ஏவப்பட்ட அடர்த்தியான கணை மாரியானது, அடர்த்தியான விட்டிற்பூச்சிகளைப் போலச் சிருஞ்சயர்களை மறைத்தது.(4)


அப்போது சினத்தால் நிறைந்த சிகண்டி, கௌதமர் மகனுக்கு {கௌதமரின் பேரனும், சரத்வானின் மகனுமான கிருபருக்கு} எதிராக வேகமாகச் சென்று, அந்தப் பிராமணக் காளையின் மேல் தன் கணைமாரியை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பொழிந்தான்.(5) உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான கிருபர், அந்தக் கணைப்பொழிவைத் தடுத்து, அந்தப் போரில் கோபத்துடன் பத்து கணைகளால் சிகண்டியைத் துளைத்தார்.(6) அப்போது சினத்தால் நிறைந்த சிகண்டி, நேரானவையும், கங்க இறகுகளைக் கொண்டவையுமான ஏழு கணைகளால் அம்மோதலில் கிருபரை ஆழத் துளைத்தான்.(7) பிறகு, பெரும் தேர்வீரரும், இரு பிறப்பாளருமான {பிராமணருமான} அந்தக் கிருபர், அந்தக் கூரிய கணைகளால் ஆழத் துளைக்கப்பட்டு, சிகண்டியை அவனது குதிரைகள், சாரதி மற்றும் தேர் ஆகியவற்றை இழக்கச் செய்தார்.(8) குதிரைகளற்ற தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (சிகண்டி), ஒரு வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு அந்தப் பிராமணரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(9) அம்மோதலில் அந்தப் பாஞ்சால இளவரசன் {சிகண்டி} முன்னேறிச் செல்கையில் அவனை நேரான கணைகள் பலவற்றால் கிருபர் மறைத்தது பெரும் ஆச்சரியம் நிறைந்ததாக இருந்தது.(10) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வாறு தாக்கப்பட்ட) சிகண்டி, முற்றிலும் செயல்பாடின்றியிருக்கும் பறக்கும் (மிதக்கும்) பாறைகளைப் போல இருந்த காட்சியை அந்தப் போரில் நாங்கள் மிக அற்புதம் நிறைந்ததாகவே கண்டோம்.(11)

ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிருபரால் (கணைகளைக் கொண்டு) மறைக்கப்பட்ட சிகண்டியைக் கண்ட திருஷ்டத்யும்னன், கிருபரை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(12) எனினும் பெரும் தேர்வீரனான கிருதவர்மன், மூர்க்கமாக விரைந்து சரத்வான் மகனை {கிருபரை} எதிர்த்துச் செல்லும் திருஷ்டத்யும்னனை எதிர்கொண்டான்.(13) சரத்வான் மகனின் {கிருபரின்} தேரை நோக்கித் தன் மகன் மற்றும் துருப்புகளுடன் விரைந்த யுதிஷ்டிரனைத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} தடுத்தான்.(14) உமது மகன் துரியோதனன், கணைமாரியை ஏவி கொண்டு, பெரும் வேகத்தைக் கொண்டவர்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரையும் எதிர்கொண்டு தடுத்தான்.(15) வைகர்த்தனன் என்று வேறு பெயரில் அழைக்கப்படும் கர்ணனும், ஓ! பாரதரே, அந்தப் போரில் பீமசேனன், காருஷர்கள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களைத் தடுத்தான்.(16)

அதேவேளையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சரத்வான் மகன் {கிருபர்}, பெரும் சுறுசுறுப்புடன், சிகண்டியை எரிக்கும் நோக்கோடு, அவன் மீது கணைகள் பலவற்றை ஏவினார்.(17) எனினும் அந்தப் பாஞ்சால இளவரசன் {சிகண்டி} தன் வாளை மீண்டும் மீண்டும் சுழற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை நோக்கிக் கிருபரால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் அனைத்தையும் வெட்டினான்.(18) அப்போது கௌதமர் மகன் {கிருபர்}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பிருஷதன் மகனுடைய {சிகண்டியுடைய} கேடயத்தைத் தன் கணைகளால் வேகமாக வெட்டினார்.(19) ஓ! ஏகாதிபதி, தன் கேடயத்தை இழந்து கிருபருடைய சக்தியின் ஆளுகைக்குள் இருந்த சிகண்டி, காலனின் கோரப் பற்களுக்கிடையே சிக்கிய நோயாளியைப் போல (கிருபரை நோக்கி) கையில் வாளுடன் விரைந்து சென்றான்.(20)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்திரகேதுவின் மகன் சுகேது [1], அவ்வாறு கிருபரின் கணைகளால் தாக்கப்பட்டுத் துயரில் மூழ்கியிருந்த வலிமைமிக்கச் சிகண்டியை நோக்கிச் சென்றான்.(21) உண்மையில் அளவிலா ஆன்மா கொண்டவனும், இளைஞனுமான அந்த இளவரசன், கௌதமரின் தேரை நோக்கி விரைந்து, அந்தப் பிராமணரின் மீது பெருங்கூர்மை கொண்ட எண்ணற்ற கணைகளை அந்தப் போரில் பொழிந்தான்.(22) நோன்புகள் நோற்கும் அந்தப் பிராமணர், போரில் (வேறொருவனுடன்) ஈடுவதைக் கண்ட சிகண்டி, ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அந்த இடத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கினான்.(23) அதே வேளையில் சுகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்பது கணைகளால் கௌதமரின் மகனைத் {கிருபரைத்} துளைத்து, மேலும் எழுபதாலும், அதன் பிறகு மீண்டும் மூன்றாலும் துளைத்தான்.(24) ஓ! ஐயா, அதன் பிறகு அந்த இளவரசன் {சுகேது} கிருபரின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்து, மற்றொரு கணையால், பின்னவருடைய {கிருபருடைய} சாரதியின் முக்கிய அங்கத்தைக் கடுமையாகத் தாக்கினான்.(25)

[1] இவனும் ஒரு பாஞ்சால இளவரசனே.

சினத்தால் நிறைந்த கௌதமர் மகன் {கிருபர்}, மிக உறுதியான புதிய வில் ஒன்றை எடுத்துக் கொண்டு, முப்பது கணைகளால் சுகேதுவின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் தாக்கினார்.(26) அங்கங்கள் அனைத்தும் மிகப் பலவீனமடைந்த அந்த இளவரசன் {சுகேது}, நிலநடுக்கத்தின் போது நடுங்கும் ஒரு மரத்தைப் போலத் தன் சிறந்த தேரில் நடுங்கினான்.(27) அப்போது, கத்தி தலை கணையொன்றை எடுத்த கிருபர், அவ்விளவரசன் நடுங்கிக் கொண்டே இருக்கையில், சுடர்மிக்கக் காதுகுண்டலங்கள், தலைப்பாகை மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது {சுகேதுவின்} தலையை, அவனது உடலில் இருந்து வீழ்த்தினார்.(28) அதன்பேரில் அந்தத் தலையானது, பருந்தின் நகங்களில் இருந்து விழும் இறைச்சித் துண்டைப் போலப் பூமியில் விழுந்ததும், ஓ! பெரும் புகழ் கொண்டவரே, அவனது உடலும் கீழே விழுந்தது.(29) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுகேதுவின் வீழ்ச்சியின் பேரில் அச்சமடைந்த அவனது துருப்புகள் கிருபரைத் தவிர்த்துவிட்டு, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.(30)

வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனைச் சூழ்ந்து கொண்ட கிருதவர்மன், அவனிடம் உற்சாகமாக, “நில், நிற்பாயாக” என்றான்.(31) அந்த விருஷ்ணி மற்றும் பாஞ்சாலப் போர்வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது, ஓர் இறைச்சித் துண்டுக்காக இரு பருந்துகளுக்கிடையில் நடைபெறுவதைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது.(32) சினத்தால் நிறைந்த திருஷ்டத்யும்னன் அந்தப் போரில் ஒன்பது கணைகளால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தாக்கி, அவனைப் பெரிதும் பீடிப்பதில் வென்றான்.(33) பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} இவ்வாறு ஆழத் துளைக்கப்பட்ட கிருதவர்மன், அந்தப் போரில் தன்னைத் தாக்குபவனுடைய குதிரைகள், தேர் மற்றும் அவனது கணைகள் ஆகியவற்றை {தன் கணைகளால்} மறைத்தான்.(34) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு தேரோடு மறைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், மழைநிறைந்த மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலக் கண்ணுக்குப் புலப்படாதவனாக ஆனான்.(35) பிறகு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்த திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா, அந்தப் போரில் தன் காயங்களோடு பிரகாசமாகத் தெரிந்தான்.(36)

பாண்டவப் படைத்தலைவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சினத்தால் நிறைந்து, கிருதவர்மனை அணுகி, கடும் கணைமாரியை அவன் மீது பொழிந்தான்.(37) எனினும் ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, அந்தப் போரில் தன்னை நோக்கிப் பெரும் மூர்க்கத்துடன் வந்து கொண்டிருந்த அந்தக் கடுங்கணை மாரியை பல்லாயிரக்கணக்கான தன் கணைகளால் அழித்தான்.(38) தாங்கிக் கொள்ள முடியாத தன் கணைமாரியானது அந்தப் போரில் கிருதவர்மனால் தடுக்கப்பட்டதைக் கண்ட பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் எதிராளியை அணுகி அவனைத் {கிருதவர்மனைத்} தடுக்கத் தொடங்கினான்.(39) விரைவில் அவன் {திருஷ்டத்யும்னன்}, பெரும் கூர்மை கொண்ட அகன்ற தலை கணை ஒன்றால் கிருதவர்மனின் சாரதியை யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(40) வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தன் எதிராளியை வீழ்த்திய பிறகு, ஒரு கணமும் தாமதிக்காமல் தன் கணைகளால் கௌரவர்களைத் தடுக்கத் தடுங்கினான்.(41) அப்போது, ஓ! மன்னா, உமது போர்வீரர்கள், பெரும் சிங்க முழக்கங்களைச் செய்து கொண்டு திருஷ்டத்யும்னனை நோக்கி விரைந்தனர். இதனால், அவர்களுக்கிடையில் மீண்டும் ஒரு போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(42)
--------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -54ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்