Sunday, June 18, 2017

படைத்தலைவனானான் சல்லியன்! - சல்லிய பர்வம் பகுதி – 06

Shalya was offered with leadership of the army! | Shalya-Parva-Section-06 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 06)


பதிவின் சுருக்கம் : இமய மலையின் அடிவாரத்தில் உள்ள மேட்டுச் சமவெளியில் பதினேழாம் நாள் இரவைக் கழித்த கௌரவர்கள்; படைத்தலைவரை நியமிக்கும்படி துரியோதனனைக் கேட்டுக் கொண்ட படை வீரர்கள்; அஸ்வத்தாமனிடம் சென்று ஆலோசனை கோரிய துரியோதனன்; சல்லியனைப் படைத்தலைவராக நியமிக்கும்படி சொன்ன அஸ்வத்தாமன்; அவ்வாறே ஆகும்படி சல்லியனை வேண்டிக் கொண்ட துரியோதனன்; அதை ஏற்றுக் கொண்ட சல்லியன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இமய மலையின் அடிவாரத்தில், அந்த மேட்டுச் சமவெளியில் இருந்த அந்த வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரின் எதிர்பார்ப்பில் மகிழ்ந்து ஒன்றாகத் திரண்டு அந்த இரவைக் கழித்தனர்.(1) உண்மையில், சல்லியன், சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனி, அஸ்வத்தாமன், கிருபர், சாத்வதகுலத்தின் கிருதவர்மன்,(2) சுஷேனன், அரிஷ்டசேனன், பெரும் சக்தி கொண்ட திருதசேனன், ஜயத்சேனன் ஆகிய இந்த மன்னர்கள் அனைவரும் அங்கேயே தங்கள் இரவைக் கழித்தனர்.(3) வீரக் கர்ணன் போரில் கொல்லப்பட்ட பிறகு, வெற்றியை விரும்பிய பாண்டவர்களிடம் அச்சம் கொண்ட உமது மகன்கள், அந்த இமய மலைகளிலும் அமைதியை அடையத் தவறினர்.(4)


போரிடத் தீர்மானித்த அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னனை {துரியோதனனை} முறையாக வழிபட்டு, சல்லியனின் முன்னிலையில் அவனிடம் {துரியோதனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்.(5) அவர்கள், "உன் படைக்கு யாராவது ஒருவரைத் தலைவராக்கிய பிறகு எதிரியுடன் போரிடுவதே உனக்குத் தகும். அவரால் பாதுகாக்கப்பட்டே போரில் நாம் எதிரிகளை வெல்வோம்" என்றனர்.(6) அப்போது துரியோதனன், தன் தேரில் இருந்து இறங்காமலேயே, தேர்வீரர்களில் முதன்மையானவனும், போர்விதிகள் அனைத்தையும் அறிந்தவனும், போரில் அந்தகனுக்கு ஒப்பானவனுமாi வீரனை (அஸ்வத்தாமனை) நோக்கிச் சென்றான்[1].(7) அழகிய அங்கங்களைக் கொண்டவனும், தலையை நன்கு மறைத்திருந்தவனும், சங்கில் உள்ளதைப் போலக் கழுத்தில் மூன்று கோடுகளைக் கொண்டவனும், இனிய பேச்சைக் கொண்டவனும், முற்றாக மலர்ந்த தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், புலியைப் போன்ற முகத்தைக் கொண்டவனும், மேருவைப் போன்ற மேன்மை கொண்டவனும்,(8) மஹாதேவனின் {சிவனின்} காளைக்கு ஒப்பான கழுத்து, கண்கள், நடை மற்றும் குரலைக் கொண்டவனும், நன்கு இயைந்த, பருத்த, நீண்ட கரங்களைக் கொண்டவனும், நன்கு கட்டமைக்கப்பட்ட அகன்ற மார்பைக் கொண்டவனும்,(9) காற்றில் பறக்கும் கருடனுக்கு இணையான வேகத்தையும், பலத்தையும் கொண்டவனும், சூரியனின் கதிர்களைப் போன்ற காந்தியைக் கொடையாகக் கொண்டவனும், புத்திக்கூர்மையில் உசனசுக்கு {சுக்கிரனுக்குப்} போட்டியாளனும் {இணையானவனும்},(10) அழகு, வடிவம் மற்றும் முகத்தின் கவர்ச்சி ஆகியவற்றில் சந்திரனைப் போன்றவனும், எண்ணற்ற தங்கத் தாமரைகளால் அமைந்ததைப் போன்ற உடலைக் கொண்டவனும், இயைந்து பொருந்தும் மூட்டுகளைக் கொண்டவனும்,(11) நன்கு கட்டமைக்கப்பட்ட தொடைகள், இடை மற்றும் குறுக்கைக் கொண்டவனும், அழகிய பாதம், அழகிய விரல்கள், அழகிய நகங்கள் ஆகியவற்றைக் கொண்டவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, படைப்புகள் அனைத்தின் நற்பண்புகள் மற்றும் அழகு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நினைத்துப் பார்த்த பிறகு, படைப்பாளனால் பெருங்கவனத்துடன் படைக்கப்பட்டவனாகத் தெரிந்தான்.(12)

[1] நோக்கிச் சென்றான் என்ற இந்த சொற்கள் 17ம் ஸ்லோகத்தில் வருகின்றன என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

நற்குறிகள் அனைத்தையும் கொண்டவனும், ஒவ்வொரு செயலிலும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, கல்வியில் பெருங்கடலாவான். எப்போதும் தன் எதிரிகளைப் பெரும் வேகத்துடன் வெற்றிக் கொண்ட அவன், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(13) நான்கு பாதங்கள் மற்றும் பத்து அங்கங்களைக் கொண்ட ஆயுத அறிவியலின் அனைத்து விவரங்களையும் அறிந்தவனாக அவன் இருந்தான்[2]. நான்கு வேதங்களையும், அதன் அங்கங்களையும், ஐந்தாவதாக ஆக்யானங்களையும்[3] அறிந்தவனாக அவன் இருந்தான்.(14) பெரும் தவத் தகுதியைக் கொண்டவரும், பெண்ணிடம் பிறக்காதவருமான துரோணர், பெருங்கவனத்துடனும், தவ நோன்புகளுடனும் முக்கண் தேவனை வழிபட்டு, {அவரைப் போன்றே} பெண்ணிடம் பிறக்காத தன் மனைவியிடம் {கிருபியிடம்} அவனை {அஸ்வத்தாமனைப்} பெற்றெடுத்தார்.(15)

[2] பாதம் என்பது ஒரு குறிப்பிட்ட அறிவுத் தொகுப்பின் பெரும் பிரிவு என்பதாகும். அங்கம் என்பது உப பிரிவு அல்லது சிறு பிரிவு என்ற பொருளைக் கொண்டதாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். நான்கு பாதங்கள் என்பது 1. சூத்ரம் = சாத்திரக் கல்வி, 2. சிக்ஷை = பயிற்சி, 3.ப்ரயோகம் = காலத்திற்குத் தகுந்தபடி பயன்படுத்துவது, 4. ரஹஸ்யம் = காரணக் காரியங்களின் தொடர்பை அறிவது. பத்து அங்கங்கள் 1. ஆதானம் = அம்பறாத்தூணியில் இருந்து கணையை எடுப்பது, 2. ஸந்தானம் = தொடுப்பது, 3. மோக்ஷணம் = நாணிலிருந்து விடுவது, 4. நிவர்த்தன் = எதிரி ஏவுவதை விலக்குவது, 5. ஸதானம் = வில்லாளியின் நிலை. 6. முஷ்டி = பிடி [அ] பற்றுவது, 7.ப்ரயோகம் = இலக்கை அடித்தல், 8. பிராயச்சித்தம் = தவறைத் திருத்திக் கொள்வது, 9. மண்டலம் = சுற்றித் திரிவது {நடப்பது}, 10. ரஹஸ்யம் = ஒலியைக் கொண்டு இலக்கை அடிப்பது.

[3] கும்பகோணம் பதிப்பில், "அங்கங்களுடன் கூடினவையும், இதிஹாஸத்தை ஐந்தாவதாகக் கொண்டவையுமான நான்கு வேதங்களையும் நன்குணர்ந்தவரும்" என்றிருக்கிறது.

அப்படிப்பட்ட ஒப்பற்ற சாதனைகளையும், புகழையும் கொண்டவனும், பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவனும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் கற்றறிந்தவனும், சாதனைகளில் பெருங்கடலும், களங்கமற்றவனுமான அஸ்வத்தாமனை அணுகிய உமது மகன் {துரியோதனன்}, அவனிடம், "ஓ! ஆசான் மகனே {அஸ்வத்தாமரே}, நீரே இன்று எங்களது உயர்ந்த புகலிடமாக இருக்கிறீர். எனவே, இப்போது எவரை நமது படைத்தலைவராக நியமிப்பது? யாரைத் தலைமையாக்கிக் கொண்டு, ஒன்று சேர்ந்திருக்கும் நம் அனைவராலும் பாண்டவர்களை வெல்ல முடியும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக" என்றான் {துரியோதனன்}.(16-18)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, "சல்லியர் நமது படையின் தலைவராகட்டும். குலம், ஆற்றல், சக்தி, புகழ், அழகு மற்றும் பிற அனைத்து சாதனைகளிலும் அவரே மேன்மையானவராக இருக்கிறார்.(19) தமக்கு அளிக்கப்பட்ட சேவைகளால் மனம் நிறைந்த அவர் {சல்லியர்}, தன் சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களைக் கைவிட்டுவிட்டு, நமது தரப்பை அடைந்திருக்கிறார். தாமே ஒரு பெரிய படையை வைத்திருக்கும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர், தேவர்ப்படையின் இரண்டாம் தலைவனை (கார்த்திகேயனை {முருகனைப்}) போன்றவராவார்.(20) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, அம்மன்னரை {சல்லியரை} நமது படைத்தலைவராக்கினால், வெல்லப்பட முடியாத ஸ்கந்தனை {முருகனைப்) படைத்தலைவனாக்கிய தேவர்களைப் போலவே நம்மால் வெற்றியை ஈட்ட முடியும்" என்றான் {அஸ்வத்தாமன்}.(21)

துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொன்னதும், சல்லியனைச் சூழ்ந்து கொண்ட மன்னர்கள் அனைவரும், அவன் வெற்றியடைவானென {வெற்றி} முழக்கமிட்டனர். போருக்குத் தங்கள் மனத்தை ஆயத்தம் செய்து கொண்ட அவர்கள் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர்.(22) அப்போது கரங்களைக் கூப்பியபடியே தன் தேரில் இருந்து இறங்கிய துரியோதனன், போரில் துரோணர் மற்றும் பீஷ்மருக்குப் போட்டியாளனும் {இணையானவனும்}, {அப்போது} தன் தேரில் இருந்தவனுமான சல்லியனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(23) "ஓ! நண்பர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவரே, நண்பர்களின் வடிவத்தில் இருக்கும் மனிதர்கள் உண்மையான நண்பர்கள்தானா? இல்லையா? என ஞானியர் சோதிப்பது போன்ற அப்படிப்பட்ட நேரம் இப்போது உமது நண்பர்களுக்கு வந்திருக்கிறது.(24) துணிச்சல்மிக்க நீரே எங்கள் படைத்தலைவராகி, எங்கள் படையின் முன்னணியில் இருக்க வேண்டும். நீர் போரிடச் செல்லும்போது பாண்டவர்களும், அவர்களது நண்பர்களும் உற்சாகத்தை இழப்பார்கள், பாஞ்சாலர்களோ தளர்வடைவார்கள்" என்றான் {துரியோதனன்}.(25)

சல்லியன், "ஓ! குருக்களின் மன்னா {துரியோதனா}, நீ என்னிடம் நிறைவேற்றச் சொல்வதை நான் நிறைவேற்றுவேன். உயிர்மூச்சு, நாடு, செல்வம் ஆகிய நான் கொண்ட அனைத்தும் உன் சேவைக்காகவே {உனக்காகவே} இருக்கின்றன" என்று பதிலுரைத்தான்.(26)

துரியோதனன், "ஓ! அம்மானே {தாய்மாமனே}, என் படையின் தலைமைப் பொறுப்பை அடைய நான் உம்மை வேண்டி நிற்கிறேன். ஓ! போர்வீரர்களில் முதன்மையானவரே, போரில் தேவர்களைப் பாதுகாக்கும் ஸ்கந்தனை {முருகனைப்} போலவே ஒப்பற்றவகையில் எங்களைக் காப்பீராக.(27) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, பாவகனின் {அக்னியின்} மகனான கார்த்திகேயன் {முருகன்}, தேவர்களின் (படை) தலைமையை ஏற்றதுபோலவே, நீரே உம்மைத் தலைமைப்பொறுப்பில் நிறுவிக் கொள்வீராக. ஓ! வீரரே, தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல, போரில் நமது எதிரிகளைக் கொல்வீராக" என்றான் {துரியோதனன்}."(28)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 28


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்