Friday, July 07, 2017

சல்லியனின் ஆற்றல்! - சல்லிய பர்வம் பகுதி – 13

The prowess of Shalya! | Shalya-Parva-Section-13 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 13)


பதிவின் சுருக்கம் : சல்லியனை எதிர்த்த பாண்டவ வீரர்கள்; அனைவரையும் கலங்கடித்த சல்லியன்; பீமசேனனின் படையும், யுதிஷ்டிரனின் படையும் மட்டுமே தப்பி ஓடாமல் இருந்தது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} பீடிக்கப்பட்டபோது, சாத்யகி, பீமசேனன், பாண்டுவினால் மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் தேர்களுடன் சல்லியனைச் சூழ்ந்து கொண்டு அந்தப் போரில் அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(1) ஆதரவற்றவனாக இருந்த சல்லியன் அந்தப் பெரும் தேர்வீரர்களால் இவ்வாறு பீடிக்கப்பட்டதை (அத்தாக்குதல்களை அவன் வெற்றிகரமாகத் தடுப்பதைக்) கண்டு, உரத்த பாராட்டொலிகள் கேட்கப்பட்டன, மேலும், (அம்மோதலைக் கண்ட) சித்தர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். (அந்தப் போரைப் பார்ப்பதற்காக) அங்கே கூடியிருந்த துறவிகள் அதை அற்புதமானதாக அறிவித்தனர்.(2) அம்மோதலில் பீமசேனன், ஆற்றலில் (அவனது பெயருக்கு ஏற்றபடியே} தடுக்கப்பட முடியாத ஈட்டியாக[1] இருந்த சல்லியனை ஒரு கணையால் துளைத்து, அடுத்ததாக ஏழால் மீண்டும் அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(3) தர்மனின் மகனை {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பிய சாத்யகி, நூறு கணைகளால் சல்லியனைத் துளைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) நகுலன் ஐந்து கணைகளாலும், சகாதேவன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்; அதன் பிறகு பின்னவன் {சகாதேவன்} அதே அளவு கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(5)


[1] ஈட்டி போன்றிருக்கும் சல்லியம் என்ற ஆயுதத்தைப் போலவே

அந்தப் போரில் கவனமாகப் போராடிய மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் இவ்வாறு பீடிக்கப்பட்டதும், கணைகளை ஏவுவதில் பெரும் சக்தி கொண்டதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், உறுதிமிக்கதுமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு,(6) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இருபத்தைந்து கணைகளால் சாத்யகியையும், எழுபத்திமூன்றால் பீமனையும், ஏழால் நகுலனையும் துளைத்தான்.(7) பிறகு ஓர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு, நாணில் கணை பொருத்தப்பட்ட சகாதேவனின் வில்லை அறுத்து, அந்தப் போரில் எழுபத்து மூன்று கணைகளால் சகாதேவனையும் துளைத்தான்.(8) அப்போது சகாதேவன், மற்றொரு வில்லில் நாண்பொருத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கோ, சுடர்மிக்க நெருப்புக்கோ ஒப்பான ஐந்து கணைகளால் தன் தாய்மாமனை {சல்லியனைத்} துளைத்தான்.(9) பெரும் சினத்தால் நிறைந்த அவன் {சகாதேவன்}, அந்தப் போரில் தன் எதிராளியின் சாரதியை ஒரு நேரான கணையால் தாக்கி, மூன்று கணைகளால் சல்லியனையும் மீண்டும் துளைத்தான்.(10)

அப்போது பீமசேனன், எழுபது கணைகளால் அந்த மத்ரர்களின் ஆட்சியாளனைத் துளைத்தான், சாத்யகி ஒன்பதாலும், மன்னன் யுதிஷ்டிரன் அறுபதாலும் அவனைத் துளைத்தனர்.(11) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் இவ்வாறு துளைக்கப்பட்டதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, செஞ்சுண்ண மலையின் சாரலில் ஓடும் சிவப்பு ஓடைகளைப் போல, சல்லியனின் உடலில் குருதி வழியத் தொடங்கியது.(12) எனினும், ஓ! மன்னா, சல்லியன் விரைவாக ஐந்து கணைகளால் அந்தப் பெரும் வில்லாளிகளைப் பதிலுக்குத் துளைத்தது மிகவும் அற்புதமானதாகத் தெரிந்தது.(13) ஓ! ஐயா, மற்றொரு அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} எடுத்துக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, அம்மோதலில் நாண் பொருத்தப்பட்ட தர்மனின் {யுதிஷ்டிரனின்} வில்லை அறுத்தான்.(14) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும், பெரும் தேர்வீரனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனையும், அவனது குதிரைகள், சாரதி, கொடிமரம், தேர் ஆகியவற்றையும் பல கணைகளால் மறைத்தான்.(15)

அந்தப் போரில் தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} கணைகளால் இவ்வாறு மறைக்கப்பட்ட சல்லியன், கூரிய பத்து கணைகளால் முன்னவனை {யுதிஷ்டிரனைத்} தாக்கினான்.(16) அப்போது, தர்மனின் மகன் கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்த சாத்யகி, கணைமேகங்களால் அந்த மத்ரர்களின் வீர ஆட்சியாளனைத் {சல்லியனைத்} தடுத்தான்.(17) சல்லியன், கத்திமுகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் சாத்யகியின் உறுதிமிக்க வில்லை அறுத்து, பிற பாண்டவப் போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மும்மூன்று கணைகளால் துளைத்தான்.(18) அப்போது, ஓ! ஏகாதிபதி, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி, சினத்தால் நிறைந்து, தங்கக் கைப்பிடி கொண்டதும், பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு வேலை சல்லியன் மீது வீசினான்.(19) பீமசேனன், சுடர்மிக்கப் பாம்பொன்றைப் போலத் தெரிந்த துணிக்கோல் கணை {நாராசம்} ஒன்றை அவன் மீது ஏவினான்; நகுலன் அவன் மீது ஈட்டி ஒன்றை வீசினான், அவனைக் கொல்லும் விருப்பம் கொண்டவர்களான சகாதேவன் ஒரு கதாயுதத்தையும், தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} சதக்னி ஒன்றையும் அவன் மீது வீசினர்.(20)

எனினும், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்த ஐந்து போர்வீரர்களின் கரங்களால் வீசப்பட்ட அவ்வாயுதங்கள் அனைத்தும் தன் தேரை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே அந்தப் போரில் அவற்றைக் கலங்கடித்தான்.(21) சல்லியன், பெரும் எண்ணிக்கையிலான அகன்ற தலை கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, சாத்யகியால் ஏவப்பட்ட வேலை அறுத்தான். வீரமும், பெரும் கரநளினமும் கொண்ட அவன் {சல்லியன்}, பீமனால் ஏவப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கணையை இரு துண்டுகளாக வெட்டினான்.(22) மேலும் அவன், நகுலனால் ஏவப்பட்ட தங்கப்பிடி கொண்ட அந்தப் பயங்கரமான ஈட்டியையும், சகாதேவனால் வீசப்பட்ட கதாயுதத்தையும் கணை மேகங்களால் தடுத்தான்.(23) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் அவன் {சல்லியன்}, மன்னனால் {யுதிஷ்டிரனால்} தன் மீது ஏவப்பட்ட சதக்னியை, பாண்டு மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இரு கணைகளால் வெட்டி, உரத்த சிங்க முழக்கம் செய்தான். எனினும், அந்தப் போரில் தன் ஆயுதம் வீழ்த்தப்பட்டதைச் சிநியின் பேரனால் {சாத்யகியால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.(24) சினத்தால் உணர்ச்சியை இழந்த சாத்யகி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, இரண்டு கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளனையும் {சல்லியனையும்}, மூன்றால் அவனது சாரதியையும் துளைத்தான்.(25)

இதனால் சினம் தூண்டப்பட்ட சல்லியன், ஓ! ஏகாதிபதி, வலிமைமிக்க யானைகளைக் கூரிய வேல்களால் துளைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் போல இருந்த அவர்கள் அனைவரையும் பத்து கணைகளால் ஆழத் துளைத்தான்.(26) இவ்வாறு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தடுக்கப்பட்டவர்களான அந்த எதிரிகளைக்கொல்பவர்களால், சல்லியனுக்கு முன்னிலையில் நிற்கவும் முடியவில்லை.(27) சல்லியனின் ஆற்றலைக் கண்ட மன்னன் துரியோதனன், பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதினான்.(28) அப்போது, ஓ! மன்னா, வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் ஆற்றலையும் கொண்ட பீமசேனன், தன் உயிர் மூச்சை விட்டுவிட மனத்தில் தீர்மானித்துக் கொண்டு மத்ரர்களின் ஆட்சியாளனுடன் மோதினான்.(29) நகுலன், சகாதேவன் மற்றும் பெரும் வலிமை கொண்ட சாத்யகி ஆகியோர் சல்லியனைச் சூழ்ந்து கொண்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவன் மீது தங்கள் கணைகளை ஏவினர்.(30)

பெரும் வில்லாளிகளும், பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களுமான அந்த நால்வரால் சூழப்பட்டாலும்கூட, மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்} தொடர்ந்து அவர்களுடன் போரிட்டுக் கொண்டே வந்தான்.(31) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பயங்கரப் போரில் சல்லியனுடைய தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களில் ஒருவனைக் கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் விரைவாக வெட்டினான்.(32) துணிச்சல்மிக்கவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தச் சல்லியனுடைய தேர்ச்சக்கரப் பாதுகாவலன் இவ்வாறு கொல்லப்பட்டதும், பெரும் பலம் கொண்ட சல்லியன், பாண்டவத் துருப்புகளைக் கணைமாரியால் மறைத்தான்.(33) ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் தன் துருப்புகள் கணைகளால் மறைக்கப்படுவதைக் கண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், இவ்வகையில் சிந்தித்தான்,(34) "உண்மையில், மாதவனின் {கிருஷ்ணனின்} அந்த முக்கியத்துவம்வாய்ந்த வார்த்தைகள் எவ்வாறு உண்மையாகப் போகின்றன? சினத்தால் தூண்டப்பட்டிருக்கும் மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியர்} போரில் என் படையை அழித்துவிடமாட்டார் என நம்புகிறேன்" {என்று யுதிஷ்டிரன் சிந்தித்தான்}.(35)

அப்போது, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு கூடிய பாண்டவர்கள், மத்ரர்களின் ஆட்சியாளனை அணுகி, அனைத்துப் பக்கத்தில் இருந்தும் அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(36) பெரும் மேகத்திரள்களை விலக்கும் காற்றைப் போல, அந்தப் போரில் மத்ரர்களின் மன்னன், அங்கே எழுந்த கணைமாரியையும், பல்வேறு வகைகளைச் சேர்ந்த அபரிமிதமான ஆயுதங்களையும் விலக்கினான்.(37) பிறகு, சல்லியனால் ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைமழையானது, வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போல ஆகாயத்தில் செல்வதை நாங்கள் கண்டோம்.(38) உண்மையில், போரின் முன்னணியில் இருந்து மத்ரர்களின் ஆட்சியாளனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், பறவைக்கூட்டங்கள் பாய்ந்து செல்வதைப் போலக் காணப்பட்டன.(39) மத்ர மன்னனின் வில்லில் இருந்து வெளிப்பட்டவையும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் ஓர் அங்குலம் இடம் கூட இல்லாத அளவுக்கு நிரம்பியிருந்தது.(40)

அந்தப் பயங்கரப் போரில், வலிமைமிக்கவனும், அதீத கரநளினம் கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏவிய கணைகளால், அடர்த்தியான இருள் உண்டானபோதும்,(41) பாண்டவர்களின் பரந்த படையானது அந்த வீரனால் இவ்வாறு கலங்கடிக்கப்படுவதைக் கண்ட போதும், தேவர்களும், கந்தர்வர்களும் பேராச்சரியத்தால் நிறைந்தனர்.(42) அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளால் பாண்டவ வீரர்கள் அனைவரையும் சீற்றத்துடன் பீடித்த சல்லியன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் மறைத்து, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(43) அந்தப் போரில் சல்லியனால் இவ்வாறு மறைக்கப்பட்ட பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அந்த வீரனை எதிர்த்துப் போரிட முடியாதவர்களாக ஆனார்கள்.(44) எனினும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்ட பாண்டவர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் வழிநடத்தப்பட்டவர்களும், போர்க்கள ரத்தினமான துணிச்சல்மிக்கச் சல்லியனிடம் இருந்து தப்பி ஓடவில்லை" {என்றான் சஞ்சயன்}.(45)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 45


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்