Tuesday, July 11, 2017

அர்ஜுனன் அஸ்வத்தாமன் மோதல்! - சல்லிய பர்வம் பகுதி – 14

The encounter between Arjuna and Aswaththaman! | Shalya-Parva-Section-14 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 14)


பதிவின் சுருக்கம் : பதினெட்டாம் நாள் போரில் அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அஸ்வத்தாமனைத் தேரற்றவனாகச் செய்த அர்ஜுனன்; பாஞ்சாலத்தின் சுரதனைக் கொன்று அவனது தேரில் ஏறிக் கொண்ட அஸ்வத்தாமன்; தனியொருவனாகப் பலரிடம் போரிட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அதேவேளையில் அந்தப் போரில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அவனைப் பின் தொடர்ந்து வந்தோரும், வீரமிக்கோருமான திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோரின் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்ட அர்ஜுனன்,(1) துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மூன்று கணைகளாலும், பிற வீரர்களில் ஒவ்வொருவரையும் இரண்டு கணைகளாலும் பதிலுக்குத் துளைத்தான்.(2) கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, அந்தக் கணைகள் தங்கள் அங்கங்களின் தைத்திருந்ததன் விளைவால் முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தாலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது துருப்பினர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடாமலிருந்தனர்.(3) துரோணர் மகனைத் தங்கள் தலைமையில் கொண்ட அவர்கள், அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு அவனோடு போரிட்டனர்.(4) ஓ! மன்னா, அவர்களால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகள், விரைவில் அர்ஜுனனின் தேர்த்தட்டை நிறைத்தன.(5)


பெரும் வில்லாளிகளும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அந்த இரு கிருஷ்ணர்களும் கணைகளால் மறைக்கப்பட்டதைக் கண்ட அந்த வெல்லப்படமுடியாத (கௌரவப்) போராளிகள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(6) உண்மையில் அந்நேரத்தில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுடைய தேரின் கூபரம், சக்கரங்கள், ஏர்க்கால், கடிவாளங்கள், நுகத்தடி, அனுஷ்கரம் ஆகியவை கணைகளால் முற்றிலும் மறைக்கப்பட்டிருந்தன.(7) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது உமது போர்வீரர்களால் பார்த்தனுக்குச் செய்யப்பட்டவற்றைப் போன்றவை இதற்கு முன்னர்ப் பார்க்கப்பட்டதோ, கேட்கப்பட்டதோ இல்லை.(8) அழகிய சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகளுடன் கூடிய அந்தத் தேரானது, பூமியில் நூற்றுக்கணக்கான தீப்பந்தங்களால் சுடர்விட்டெரியும் ஒரு தெய்வீக வாகனத்தை {விமானத்தைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(9) அப்போது அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி, மலைமீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல நேரான கணைகளின் மாரியால் பகைவரின் படையை மறைத்தான்.(10)

அந்தப் போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} பெயர் பொறிக்கப்பட்ட கணைகளால் தாக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், காரியங்களின் அந்நிலையைக் கண்டு, போர்க்களம் முழுவதும் பார்த்தனால் நிரம்பியிருப்பதாகக் கருதினர்.(11) அப்போது, கணைகளைத் தழல்களாகவும், காண்டீவத்தின் உரத்த நாணொலியைக் காற்றாகவும் கொண்ட பார்த்த நெருப்பானது, உமது துருப்புகளாலான விறகை எரிக்கத் தொடங்கியது.(12) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீழ்ந்துவிட்ட சக்கரங்கள், நுகத்தடிகள், அம்பறாத்தூணிகள், கொடிகள், கொடிமரங்கள், அவற்றைச் சுமந்திருந்த தேர்கள், அனுஷ்கரங்கள், திரிவேணுக்கள், அச்சுகள், பூட்டுவார்கள், கொறடாக்கள், காதுகுண்டலங்களாலும், தலைக்கவசங்களாலும் அலங்கரிக்கப்பட்ட போர்வீரர்களின் தலைகள், ஆயிரக்கணக்கான தொடைகள், விசிறிகளுடன் கூடிய குடைகள், கிரீடங்கள், மகுடங்கள் ஆகியவற்றின் குவியல்கள் பார்த்தனின் தேர் சென்ற வழித்தடமெங்கும் காணப்பட்டன.(13-16) உண்மையில், ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவரே, அந்தக் கோபக்கார பார்த்தனின் தேர் சென்ற வழித்தடமெங்கும், குருதியால் சகதியான தரையானது, ருத்ரனின் விளையாட்டுக்களம் போலக் கடக்க முடியாததாக இருந்தது. அந்தக் காட்சியானது, கோழைகளை அச்சுறுத்தி, துணிச்சல்மிக்கோரை மகிழ்வித்தது.(17,18) எதிரிகளை எரிப்பவனான பார்த்தன், கூடுகளுடன் கூடிய இரண்டாயிரம் {2000} தேர்களை அழித்து, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய புகையற்ற நெருப்பைப் போலத் தெரிந்தான்.(19) உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தப் பார்த்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றுடன் கூடிய அண்டத்தை (யுக முடிவில்) அழிப்பதற்காகச் சுடர்விட்டெரியும் சிறப்புமிக்க அக்னியைப்போலவே தெரிந்தான்.(20)

அந்தப் போரில் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்டவனும், தன் தேரில் பல கொடிகளைக் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} அவனைத் தடுக்க முயற்சி செய்தான்.(21) வாகனங்களில் வெண்குதிரைகள் பூட்டியிருப்பவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பி விரைவில் ஒருவருடனொருவர் மோதிக் கொண்டனர்.(22) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவ்விருவராலும் ஏவப்பட்ட கணைமாரிகள், கோடையின் நெருக்கத்தில் இரு மேகத் திரள்களால் பொழியப்படும் மழைத்தாரைகளைப் போல அடர்த்தியானவையாகவும், பயங்கரமானவையாகவும் இருந்தன.(23) ஒருவரையொருவர் அறைகூவியழைத்த அந்த இரு போர்வீரர்களும், இரு காளைகள் தங்கள் கொம்புகளால் ஒன்றையொன்று கிழித்துக் கொள்வதைப் போலவே, அந்தப் போரில் நேரான கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(24) ஓ! மன்னா, அவர்களுக்கிடையில் நீண்ட நேரத்திற்குச் சமமான போரே நடைபெற்றது. ஆயுங்களின் மோதல் பயங்கரத்தை அடைந்தது.(25)

அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே, தங்கச் சிறகுகளையும் பெரும் சக்தியையும் கொண்ட பனிரெண்டு கணைகளால் அர்ஜுனனையும், பத்தால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான்.(26) அந்தப் பெரும்போரில் ஆசானின் மகனுக்குச் சிறிது நேரம் கொஞ்சம் மதிப்பைக் காட்டிய பீபத்சு {அர்ஜுனன்}, பிறகு சிரித்துக் கொண்டே, தன் வில்லான காண்டீவத்தைப் பலமாக வளைத்தான்.(27) வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, விரைவில் தன் எதிராளியை குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்து, அதிகப் பலத்தைச் செலுத்தாமலே மூன்று கணைகளால் அவனைத் துளைத்தான்.(28) குதிரைகளற்ற தேரில் நின்று கொண்டிருந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே இரும்பு முள் பதித்த கதாயுதம் {பரிகம்} ஒன்றைப் போலத் தெரிந்த ஒரு கனமான உலக்கையை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது வீசினான்.(29) தங்கத் துணியால் அலங்கரிக்கப்பட்ட அவ்வாயுதம் தன்னை நோக்கி வருவதைக் கண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த வீரப் பார்த்தன் {அர்ஜுனன்}, அதை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(30)

தன் உலக்கை வெட்டப்பட்டதைக் கண்டவனும், பெரும் கோபம் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மலைச் சிகரத்தைப் போலத் தெரிந்ததும், இரும்பு முட்கள் பதிக்கப்பட்டதுமான ஒரு பயங்கரமான கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டான். போரில் சாதித்தவனான அந்தத் துரோணர் மகன் அதைப் பார்த்தன் மீது வீசினான்.(31) அந்த முட்கதாயுதம் {பரிகம்} சினம் கொண்ட அந்தகனைப் போலத் தன்னை நோக்கி வருவதைக் கண்ட பாண்டுவின் மகன் அர்ஜுனன், ஐந்து சிறந்த கணைகளால் அதை வேகமாக வெட்டினான்.(32) அந்தப் பெரும்போரில் பார்த்தனின் கணைகளால் வெட்டப்பட்ட அந்த ஆயுதம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (பகை) மன்னர்களின் இதயங்களைப் பிளப்பதைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(33) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் மூன்று பிற கணைகளால் துரோணரின் மகனைத் துளைத்தான். வலிமைமிக்கப் பார்த்தனால் துரோணரின் மகன் பெரும்பலத்துடன் ஆழத்துளைக்கப்பட்டாலும், ஆண்மையுடன் கூடியவனாக அச்சம் அல்லது கலக்கத்தின் எந்த அறிகுறியையும் வெளிக்காட்டவில்லை.(34)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, க்ஷத்திரியர்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே சுரதனை {ஸுரதனைக்} கணைமாரியால் மறைத்தான்.(35) பாஞ்சாலர்களில் பெரும் தேர்வீரனான சுரதன் அந்தப் போரில் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்ட தன் தேரைச் செலுத்திக் கொண்டு துரோணரின் மகனை எதிர்த்து விரைந்தான்.(36) உறுதியானதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான தன் முதன்மையான வில்லை வளைத்த அந்தப் பாஞ்சால வீரன், நெருப்பின் தழல்களுக்கோ, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கோ ஒப்பான கணைகளால் அஸ்வத்தாமனை மறைத்தான்.(37) கோபத்தில் தன்னை நோக்கி விரையும் பெரும் போர்வீரனான சுரதனைக் கண்ட துரோணரின் மகன், தடியால் தாக்கப்பட்ட பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்தான்.(38) புருவத்தை மூன்று கோடுகளாகச் சுருக்கிக் கொண்டு, தன் நாவால் கடவாயை நனைத்த அவன் {அஸ்வத்தாமன்}, சினத்துடன் சுரதனைப் பார்த்து, தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, யமனின் மரணக்கோலுக்கு {யமதண்டத்துக்கு} ஒப்பான கூரிய துணிக்கோல் கணையொன்றை {நாராசத்தை} ஏவினான்.(39) பெரும் வேகம் கொண்ட அந்தக் கணையானது, சுரதனின் இதயத்தைத் துளைத்து வெளியேறி, வானத்தில் இருந்து வீசப்பட்ட சக்ரனின் வஜ்ரத்தைப் போலப் பூமியைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்தது.(40)

அந்தக் கணையால் தாக்கப்பட்ட சுரதன், இடியால் பிளப்பட்ட மலைச்சிகரம் ஒன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(41) அந்த வீரன் வீழ்ந்த பிறகு, தேர்வீரர்களின் முதன்மையான அந்தத் துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, கொல்லப்பட்ட தன் எதிரியின் {சுரதனின்} வாகனத்தில் வேகமாக ஏறிக் கொண்டான்.(42) பிறகு, ஓ! ஏகாதிபதி, போரில் வெல்லப்பட முடியாத போர்வீரனான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கவசமும், ஆயுதங்களும் தரித்துக் கொண்டு, சம்சப்தகர்களால் ஆதரிக்கப்பட்டு அர்ஜுனனோடு போரிட்டான்.(43) நடுப்பகல் வேளையில் ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்தப் போரானது, யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோரின் எண்ணிக்கையைப் பெருக்கியபடியே மிகவும் கடுமையான நிலையை அடைந்தது.(44) அப்போது அந்தப் போராளிகள் அனைவரின் ஆற்றலையும் கவனித்த அர்ஜுனன், தனியனாக, ஆதரவற்றவனாக ஒரே நேரத்தில் தன் எதிரிகள் அனைவருடனும் போரிட்ட அந்த அற்புதமான காட்சியை நாங்கள் கண்டோம்.(45) அர்ஜுனனுக்கும், அவனது எதிரிகளுக்கும் இடையில் நடைபெற்ற அம்மோதலானது, பழங்காலத்தில் இந்திரனுக்கும், அசுரர்களின் பரந்த படைக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக மிகக் கடுமையானதாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.(46)
--------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 46


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்