Wednesday, July 12, 2017

பாண்டவர்களோடு மோதிய சல்லியன்! - சல்லிய பர்வம் பகுதி – 15

Shalya encountered the Pandavas! | Shalya-Parva-Section-15 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 15)


பதிவின் சுருக்கம் : துரியோதனனைப் பீடித்த திருஷ்டத்யும்னன்; கிருபர் மற்றும் கிருதவர்மனுடன் போரிட்ட சிகண்டி, சாத்யகியுடன் மோதிய சல்லியன்; சல்லியனின் ஆற்றல்; தாய்மாமனைக் கொல்ல விரைந்த மருமக்கள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனும், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னனும், அபரிமிதமான கணைகளையும், ஈட்டிகளையும் பயன்படுத்தி ஒரு கடும்போரைச் செய்தனர்.(1) அவர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி, மழைக்கால மேகங்கள் பொழியும் மழையைப் போலக் கணைமாரியை ஏவினர்.(2) (குரு) மன்னன் {துரியோதனன்}, துரோணரைக் கொன்றவனும், கடுங்கணைகளைக் கொண்டவனுமான பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் துளைத்தான்.(3) பெரும் வலிமையும், உறுதியான ஆற்றலும் படைத்த திருஷ்டத்யும்னன், துரியோதனனை அந்தப் போரில் எழுபது கணைகளால் பீடித்தான்.(4) மன்னன் இவ்வாறு பீடிக்கப்படுவதைக் கண்டவர்களான அவனுடன் பிறந்த சகோதரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு பெரும் படையின் துணையுடன் அந்தப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(5)


அனைத்துப் பக்கங்களிலும் அந்த அதிரதர்களால் சூழப்பட்ட அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தன் வேகத்தை வெளிப்படுத்தியபடியே அந்தப்போரில் திரிந்து கொண்டிருந்தான்.(6) சிகண்டி, பிரபத்ரகர்களால் ஆதரிக்கப்பட்டவனானக் கிருதவர்மன் மற்றும் பெரும் தேர்வீரரான கிருபர் ஆகிய இரு குரு வில்லாளிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.(7) மேலும், ஓ! ஏகாதிபதி, போர்வீரர்கள் அனைவரும் தங்கள் உயிரை விடத் தீர்மானித்துத் தங்கள் உயிரையே பணயம் வைத்துப் போரிட்டுக் கொண்டிருந்ததால், அந்தப் போரானது கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(8) சல்லியன், அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரிகளை ஏவியபடி, சாத்யகி மற்றும் விருகோதரனோடு {பீமனோடு} கூடிய பார்த்தர்களைப் பீடித்துக் கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, பொறுமையும், பெரும் பலமும் கொண்ட அந்த மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, ஆற்றலில் அந்தகனுக்கு ஒப்பானவர்களான இரட்டையர்களுடனும் (நகுலன் மற்றும் சகாதேவனோடும்) அதே நேரத்தில் போரிட்டுக் கொண்டிருந்தான்.(10)

அந்தப் பெரும்போரில் சல்லியனின் கணைகளால் சிதைக்கப்பட்ட பாண்டவப் பெருந்தேர்வீரர்கள், ஒரு பாதுகாவலனை அடையத் தவறினர்.(11) அப்போது மாத்ரியின் மகனான வீர நகுலன், பெரிதும் பீடிக்கப்படும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, தன் தாய்மாமனை {சல்லியனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(12) அந்தப் போரில் (பலகணைகளால்) சல்லியனை மறைத்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன் சிரித்துக் கொண்டே, முழுக்க இரும்பாலானவையும், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தன் வில்லில் இருந்து பெரும் வேகத்துடன் ஏவப்பட்டவையுமான பத்து கணைகளால் அவனது {சல்லியனின்} நடு மார்பைத் துளைத்தான்.(13, 14) சிறப்புமிக்கத் தன் மருமகனால் பீடிக்கப்பட்ட சல்லியன், நேரான கணைகள் பலவற்றால் பதிலுக்குத் தன் மருமகனை {நகுலனைப்} பீடித்தான்.(15)

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், சாத்யகி, மாத்ரியின் மகனான சகாதேவன் ஆகியோர் அனைவரும் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தனர்.(16) எதிரிகளை வீழ்த்துபவனான அந்தக் குரு படையின் தலைவன் {சல்லியன்}, தேர்களின் சடசடப்பொலியால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளை நிறைத்து பூமியை நடுங்கச் செய்தபடியே தன்னை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்த வீரர்கள் அனைவரையும் அந்தப் போரில் வரவேற்றான் {எதிர்த்தான்}.(17) யுதிஷ்டிரனை மூன்று கணைகளாலும், பீமனை ஏழாலும் துளைத்த சல்லியன், அந்தப் போரில் சாத்யகியை நூறு கணைகளாலும், சகாதேவனை மூன்றாலும் துளைத்தான்.(18) பிறகு அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்}, உயர் ஆன்ம நகுலனின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்தான்.(19) பெரும் தேர்வீரனான அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சிறகுள்ள கணைகளால் மத்ரர்கள் ஆட்சியாளனை வேகமாக மறைத்தான்.(20)

யுதிஷ்டிரன், சகாதேவன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! ஐயா, அந்த மத்ரர்களின் ஆட்சியாளனுடைய மார்பை பத்து கணைகளால் துளைத்தனர்.(21) பீமசேனன் மற்றும் சாத்யகி ஆகியோர் இருவரும், மத்ரர்களின் ஆட்சியாளனை நோக்கி விரைந்து, கங்க இறகுகளாலான சிறகுகள் படைத்த கணைகளைக் கொண்டு முன்னவன் {பீமன்} அறுபதாலும், பின்னவன் {சாத்யகி} ஒன்பதாலும் அவனைத் தாக்கினர்.(22) இதனால் சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்து மீண்டும் எழுபது நேரான கணைகளால் அவனைத் துளைத்தான்.(23) பிறகு அவன் {சல்லியன்}, ஓ! ஐயா, சாத்யகியின் கணை பொருத்தப்பட்ட வில்லின் பிடியை அறுத்து, பின்னவனின் {சாத்யகியின்} நான்கு குதிரைகளையும் யமனின் உலகத்திற்கு அனுப்பி வைத்தான்.(24) சாத்யகியைத் தேரற்றவனாகச் செய்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், அனைத்துப் பக்கங்களிலும் ஒரு நூறு கணைகளால் அவனை {சாத்யகியைத்} தாக்கினான்.(25) அடுத்ததாக அவன் {சல்லியன்}, மாத்ரியின் இரு கோபக்கார மகன்கள், பாண்டுவின் மகனான பீமசேனன், யுதிஷ்டிரன் ஆகியோர் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(26)

பார்த்தர்கள் ஒன்று சேர்ந்தும் கூட அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனை அணுக முடியாத அளவுக்கு மிக அற்புதமான அவனது ஆற்றலை அப்போது நாங்கள் கண்டோம்.(27) மற்றொரு தேரில் ஏறிக் கொண்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான அந்த வலிமைமிக்கச் சாத்யகி, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} அடங்கிப் பீடிக்கப்படும் பாண்டவர்களைக் கண்டு அவனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(28) சபைகளின் ரத்தினமான சல்லியன், மதங்கொண்ட யானையொன்று மற்றொரு யானையை எதிர்ப்பதைப் போலச் சாத்யகியின் தேரை எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(29) சாத்யகிக்கும், மத்ரர்களின் வீர ஆட்சியாளனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் அசுரன் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் இடையில் நடைபெற்றத்தைப் போலக் காண்பதற்குப் பயங்கரமானதாகவும், அற்புதமானதாகவும் இருந்தது.(30) அந்தப் போரில் தன் எதிரே நின்ற மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட சாத்யகி, பத்து கணைகளால் அவனைத்துளைத்து, "நில்லும், நில்லும்" என்றான்.(31)

அந்த உயர் ஆன்மப் போர்வீரனால் ஆழத்துளைக்கப்பட்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அழகிய இறகுகளுடன் கூடிய கூரிய கணைகளால் பதிலுக்குச் சாத்யகியைத் துளைத்தான்.(32) பெரும் வில்லாளிகளான அந்தப் பார்த்தர்கள், சாத்யகியால் தாக்கப்படும் மத்ரர்களின் மன்னனைக் கண்டு, தங்கள் தாய்மாமனான அவனைக் {சல்லியனைக்} கொல்ல விரும்பி அவனை நோக்கி வேகமாக விரைந்தனர்.(33) போராடிக்கொண்டிருந்த அந்த வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலானது, குருதியின் பெரும்பாய்ச்சலால் அடையாளங்காணப்பட்டு, முழங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்களுக்கு இடையில் நடைபெறும் மோதலைப் போல மிகப் பயங்கரமாக இருந்தது.(34) அந்தப் போராட்டமானது, ஓ! ஏகாதிபதி, முழங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்கள், இறைச்சிக்காகத் தங்களுக்குள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதற்கு ஒப்பாக இருந்தது.(35) அவர்களால் ஏவப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் பூமியானது முற்றிலும் நிறைந்து, ஆகாயமும் கணைகளின் ஒரே திரளாக ஆனது.(36)

அந்தக் கணைகளால் களத்தைச் சுற்றிலும் இருள் உண்டானது. உண்மையில், அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் ஏவப்பட்ட கணைகளால், மேகங்களால் உண்டாவதைப் போன்ற நிழல் உண்டானது.(37) அப்போது, ஓ! மன்னா, போர்வீரர்களால் ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், சட்டை உரித்த பாம்புகளைப் போலத் தெரிபவையுமான சுடர்மிக்கக் கணைகளுடன் திசைப்புள்ளிகள் எதிர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(38) எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சல்லியன், தனியனாக, ஆதரவற்றவனாக அந்தப் போரில் பல கணைகளை ஏவிப் போரிட்டு அடைதற்கரிதான சாதனையை அடைந்தான்.(39) கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்டவையும், மத்ரர்களின் ஆட்சியாளனுடைய கரங்களில் இருந்து ஏவப்பட்டுப் பாய்ந்தவையுமான அந்தக் கடுங்கணைகளால் பூமியானது மறைக்கப்பட்டது.(40) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் அசுரர்களின் அழிவின்போது இருந்த சக்ரனின் {இந்திரனின்} தேரைப் போல அந்தப் பயங்கரப் போரில் சல்லியனின் தேரானது திரிந்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்" {என்றான் சஞ்சயன்}.(41)
---------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 41


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்